அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் கட்டடம்
PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM
கடலுக்கு அடியில் கட்டடம்
தண்ணீருக்குள் மனிதன் வாழ முடியுமா என்ற கேள்விக்கு, ஒரு நீர்மூழ்கி கப்பலில் பல மாதங்கள் தங்கியிருக்கும் கப்பல்படை வீரர்கள், அமெரிக்காவின் பயோமெடிக்கல் இன்ஜினியர் 100 நாட்கள் கடலுக்கு அடியில் தங்கியது உள்ளிட்டவை பதிலாக உள்ளது. இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் (2050க்குள்) கடலுக்கு அடியில் வீடு அமைத்து, அங்கேயே குழந்தை பிறப்பை சாத்தியமாக்குவது பற்றி பிரிட்டனை சேர்ந்த 'டீப்' என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 'வான்கார்டு' என்ற கடலுக்கு அடியில் ஆறு பேர் தங்கக்கூடிய கட்டடத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் சுரங்கம் : விண்வெளி பயணம்
PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM
விண்வெளி வளர்ச்சியின் துவக்கமாக 1957 அக்.4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' விண்ணில் செலுத்தப்பட்டது. உலகில் 1961 ஏப்.12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின். இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தியும் ஏப்.12ல் மனிதர்களின்விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நிலவு, செவ்வாய் கோள்களில்மனிதன் வசிப்பதற்கான சூழல் பற்றி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு விண்வெளி வளர்ச்சி பெற்றுள்ளது.