அறிவியல் ஆயிரம்:கொசுக்களின் மாற்றம்
கொசுக்கள், விலங்குகளை விட மனிதர்களை கடிப்பது தற்போது அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் காடுகள் அழிவதால், கொசு இனங்கள் உணவு தேவைக்கு விலங்குகளுக்குப் பதிலாக, மனிதர்களை நெருங்குகிறது.
50 வகையை சேர்ந்த 1700 கொசுக்களின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் விலங்கு, பறவைகளை விட மனிதர்களின் ரத்தம் அதிகம் இருந்ததை கண்டறிந்தனர். கொசுக்களின் இந்த மாற்றத்தால், குறிப்பாக வனப்பகுதி அருகே வாழ்பவர்களுக்கு டெங்கு, மலேரியா பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெவாழ்பவர்களுக்கு டெங்கு, மலேரியா பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்:உலக நன்செய் தினம்
PUBLISHED ON : பிப் 02, 2026 12:26 AM
அதிகம் நீர் வசதி உள்ள விவசாய பகுதிகள் நன்செய், ஈர நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. மக்களுக்கும், பூமிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'நன்செய் நிலமும் பாரம்பரிய அறிவும்: கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 8ல் ஒருவர், வாழ்வாதாரத்துக்கு நன்செய் நிலத்தை நம்பி உள்ளனர். கடற்கரையோரம் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேரை புயல், சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது.