அறிவியல் ஆயிரம் : மலை உருவாவது எப்படி
PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM
மலை உருவாவது எப்படி
தண்ணீருக்கு ஆதராமாக இருப்பது மலைகள். பூமியின் உள்ளே இருந்து வெளியே வருவது தான் மலைகள். இதில் கற்கள் பகுதி என்றால் கற்கள் நிரம்பி இருக்கும். இமயமலைபோல கடலின் அடியிலிருந்து உருவாகிறது என்றால் கடலடி மண், கற்கள், மீனின் புதைபடிவங்கள் இருக்கும். நீரில் மிதக்கும் கப்பலைப் போல, பூமியின் மேலோடு அதற்குக் கீழே குழம்பு நிலையில் இருக்கும் அடுக்கின் மீது அங்கும் இங்கும் நகர்கிறது. மேலோடு, பல்வேறு சில்லுகளாக உடைந்துள்ளதால் சில சமயம் பக்கவாட்டில் உரசிக்கொண்டு எரிமலை, பூகம்பத்தை ஏற்படுத்தும்.
தகவல் சுரங்கம் : அதிக ஏரிகள் உள்ள நாடு
PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM
அதிக ஏரிகள் உள்ள நாடு
பூமியின் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமவெளி, மலைப்பகுதி, பாலைவனம், கடலோரம் உட்பட பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏரிகள் அமைந்துள்ளன. உலகில் 0.1 சதுர கி.மீ., அளவுக்கு மேல், மொத்தம் 14 லட்சம் ஏரிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக 62 சதவீத ஏரிகள் கனடாவில் தான் உள்ளன. இதற்கடுத்து ஏரிகள் அதிகமுள்ள நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன் உள்ளன. கனடாவில் உள்ள ஏரிகளில் பெரியது 'கிரேட் பீர்' ஏரி. பரப்பளவு 31,130 சதுர கி.மீ. சராசரி ஆழம் 235 அடி. இது உலகில் 8வது பெரிய ஏரி.