அறிவியல் ஆயிரம்
'மெட்ராஸ் ஐ' ஏற்படுவது எப்படி
மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவுகிறது. இது பெரும்பாலும் 'அடினோ' வைரஸ்,
சில நேரம் பாக்டீரியா, அலர்ஜியால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதத்தில்
வேகமாக பரவும். 1918ல் சென்னையில் புதுவித கண்நோய் பரவியது. மருத்துவர்கள்
ஆராய்ந்து அதற்கு காரணமாக இருப்பது 'அடினோ' வைரஸ் என கண்டுபிடித்தனர்.
சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'மெட்ராஸ் ஐ' என பெயரிடப்பட்டது. 'பிங்
ஐ' எனவும் அழைக்கப் படுகிறது. 1969 வரை சென்னை,
மெட்ராஸ் என இருந்தது. கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறி.
தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 13, 2026 12:03 AM
4
உலகப்போர் வரலாறு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 12 நாட்களாக தொடர்கிறது. இது
மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதல் உலகப்போர் 1914 ஜூலை 28 - 1918 நவ. 11ல் ஐரோப்பா, மத்திய கிழக்கு
நாடுகளை மையமாக வைத்து நடந்தது. 90 லட்சம் ராணுவ வீரர்கள், 80 லட்சம்
மக்கள் பலியாகினர். இரண்டாம் உலகப்போர் 1939 செப். 1 - 1945 செப். 2ல்
பெரும்பாலான உலக நாடுகள் இடையே நடந்தது. 7 - 8.5 கோடி பேர் பலியாகினர்.
ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான் தோல்வியடைந்தன. இரண்டு உலகப்போரின் போதும்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது.