அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் கடல் இருக்கிறதா...
செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் கடல் இருந்ததா என்பது பற்றி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2021ல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சீனாவின் 'ஜூராங் மார்ஸ் ரோவர்', பூமிக்கு அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 'கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில், அலையுடன் கூடிய பெரிய நீர்நிலை இருந்திருக்கலாம். இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் இது மேற்பரப்பு புகைப்படங்களுக்குப் பதிலாக, நிலத்தடி இமேஜிங் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்தது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
P
வேகமாக பறக்கும் பூச்சி
பூச்சியினங்களில் வேகமாக பறக்கக்கூடியது தட்டான். இது மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறனுடையது. இதன் இறக்கை 2 - 5 இன்ச். பல வகைகள் உள்ளன. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் பார்க்கும் திறன் வேகமானது. வினாடிக்கு 200 படங்களை பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இது தன் மூளையின் திறனில் 80 சதவீதத்தை, பார்வைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. அதே போல வேகமாக ஓடும் பூச்சியினம் 'ஆஸ்திரேலிய புலி வண்டு'. இது மணிக்கு 9 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு ஆறு கால்கள் இருக்கும். 2500 வகைகள் உள்ளன.