அறிவியல் ஆயிரம்: பூமி - செவ்வாய் தொடர்பு
பூமி - செவ்வாய் தொடர்பு
செவ்வாய் கோளில் ஆய்வு செய்யும் 'நாசா'வின் விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவரின் பூமியுடனான தொடர்பு தற்காலிகமாக தடைபட்டுள்ளது. இதற்கு காரணம் 'சூரிய சேர்க்கை'. 2 ஆண்டுக்கு ஒருமுறை இது ஏற்படும். இச்சமயத்தில் சூரியனுக்கு ஒருபுறம் பூமி, மற்றொரு புறம் செவ்வாயும் நேர் எதிராக அமையும். இதனால் நாசாவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள், விண்கலத்துக்கு அனுப்பும் 'கட்டளையை', இரு கோளுக்கும் நடுவில் உள்ள சூரியன் தடுத்து விடும். 2026 ஜன. 9க்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். விண்கலம் ஆய்வில் எந்த சிக்கலும் இருக்காது.
தகவல் சுரங்கம்: தேசிய நுகர்வோர் தினம்
தேசிய நுகர்வோர் தினம்
வியாபாரத்தில் நுகர்வோரே எஜமான். நுகர்வோர் உரிமை பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு சார்பில் டிச., 24ல் தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அனைவருமே ஒரு விதத்தில் நுகர்வோர் தான். நுகர்வோரை வைத்து தான் வியாபார சந்தையே நடக்கிறது. நுகர்வோர் தங்களது அடிப்படை உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாறுவது தடுக்கப்படும். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமை பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும். குறைபாடுகளை எதிர்த்து போராடினால் தான் தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும்.