வினாக்கள்:
01) மிகப்பெரும் ஸ்ரீ ராமபக்தரான தியாகப்ரம்மம் -ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது செய்த "ஸ்துதியின்" பெயரென்ன ?
02) மஹான் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் பெற்றோர் யாவர் ?
03) ஆதிசங்கர பகவத்பாதர் கைலாசம் சென்று ஈஸ்வரனிடம் இருந்து பெற்று வந்த ஐந்து லிங்கங்களில், "மோக்ஷ லிங்கம்" பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயம் எது ?
04) திருவண்ணாமலையின் உயரம் மற்றும் சுற்றளவுகள் ?
05) பழங்காலத்தில், "பூதபுரி" என்ற புகழ் பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ க்ஷேத்ரம் தற்போது என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது ?
06) திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் உள்ள சிவபெருமான் அளித்த பொற்கிழியை - சுந்தரர் எந்த இடத்தில் இட்டு - எவ்விடத்தில் பெற்றுக்கொண்டார் ?
07) ஸ்ரீ ராமானுஜருக்கு - திருக்கோஷ்டியூர் நம்பிகள் சூட்டிய திரு நாமம் என்ன ?
08) முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களை கட்டி நிர்மாணம் செய்த ஆழ்வார் பெருமான் யார் ?
09) ஸ்ரீரங்கம் மூலவர் சன்னதியின் மேல் காணப்படும் "ஸ்வர்ண விமானம்" எந்த ஊரில் இருந்து யாரால் கொண்டுவரப்பட்டது ?
10) மஹாபாரத யுத்தத்தில் கௌரவர் பக்கம் நின்று போராடிய முக்கிய சேனாதிபதிகள் நால்வர் யாவர் ?
11) பிறந்த உடன் "குதிரையைப்போல" கனைத்து, அதனால் காரணப்பெயர் கொண்ட கதாபாத்திரம் யார் ?
12) மஹாபாரத காவியத்தில், "முன் ஜென்மம் - புனர் ஜென்மம்" ஆகிய இரு பிறவிகளாக - பங்கு கொள்ளும் கதாபாத்திரம் யார் ?
13) ஸ்ரீ ராமாயண காவியத்தில், இந்திரஜித்தால் - ஸ்ரீ ஹநுமானை கட்டுப்பட வைத்த பிரம்மாஸ்திரம் "சக்தி" இழந்ததேன் ?
14) ஸ்ரீ ராமாயண காவியத்தில், தசரத மகாராஜன் "கற்றிருந்த - சாபம் பெற காரணமாகவும் இருந்த " ....தனுர் வித்தையின் பெயர் என்ன ?
15) ஆலயத்தில், கம்பரால் அருளப்பட்ட கம்பராமாயணத்தை அரங்கேற்ற - அருள் புரிந்து சாக்ஷியாக நின்ற மூர்த்தி யார் ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
MATCH YOUR ANSWERS ON THE NEXT SUNDAY.
(இதிஹாசமயம் வீ.சீதாராமன்)