இந்த வாரம்..."ஏமாற்றியவர்,ஏமாந்தவர்

0 views
Skip to first unread message

mani kandan

unread,
Apr 3, 2011, 12:15:08 PM4/3/11
to
Fwd msg:



Thanks & Regards,

Mani



source: idlyvadai

 

 இந்த வாரம்..."ஏமாற்றியவர்,ஏமாந்தவர்".

செய்தி # 1
ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.

கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?



ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது கருணாநிதி, இவ்வாறு பேசினார்.

"முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.

இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்".என்று "விளக்கம்" அளித்தார் அவர்.

ஆனால், அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஆர்யாள்,பார்ப்பனர் ஆகியோரிடமே இப்போது தஞ்சம் அடைந்து இருக்கிறார் "பகுத்தறிவு தந்தை".

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

இந்த பரிகாரங்களை முன்னின்று செய்தவர்கள் ...பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களே.

கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரிதியங்கரா காளி கோயில் இருக்கிறது. பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள், போர்களத்திற்கு செல்லும்முன் அங்கு சென்று யாகம் செய்துவிட்டு வருவார்கள். ஜெயலலிதா அவர்கள் இந்த யாகத்தை வெளிப்படையாக செய்து வருகிறார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அங்கு சென்று யாகம் செய்து வருகிறார்கள் ரகசியமாய். இந்த முறையும் அவ்வாறே அங்கு சென்று யாகம் செய்து இருக்கிறார்கள்.

இங்கும் யாகத்தை நடத்தியவர்கள்.....பார்ப்பனர்களே.

திராவிட கழக கி.வீரமணி ஏன் இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை. சுயமரியாதை,பகுத்தறிவு போன்றவை எல்லாம் இவர்களுக்கு அரசியல் வியாபாரம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணங்கள் உண்டா??

சமிபத்தில், பத்திரிக்கையாளர் பேட்டியில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?" என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,

"இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்".

இந்த தருணத்தில் யாராவது, சங்கர மடத்திற்கு சென்று, ஜெயேந்திரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று ஆருடம் சொன்னால் , ராவோடு ராவாக 
அதையும் செய்ய பெரியாரின் சீடர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆருடம் சொல்ல தான் ஆள் இல்லை !

 

 







Reply all
Reply to author
Forward
0 new messages