மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி தங்கமென சிவந்த தணலடுப்பில் வைத்த புதுப்பானை நீரூற்றி
அங்கமழ பாடுபட்டு உழுவர் நிலம் புலந்த் புத்தரிசி செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும் எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா