அன்பு நண்பர்களே,
நமதன்பு சகோதரியும் இணையப் பாட்டி என மழலைகள்.காம் தள ஆசிரியர்கள் மற்றும் வாசகர்களாலும் போற்றப்பட்ட திருமதி விசாலம் ராமன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். சென்ற சில நாட்களாக சளி, ஜுரம் பிடித்து அவதியுற்றிருந்தார். நேற்று நான் அவருடன் தொலைபேசியில் பேசி தைரியமாக இருக்கும்படி வேண்டிக்கொண்டேன்.
அவரது மறைவால் துயருறும் திரு இராமன் அவர்கள், அவர்களது மகன் மற்றும் பேரன், பேத்தி, உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது மறைவு தமிழுலகுக்கே பெரும் இழப்பாகும். பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தன் ஆயுட்காலம் முழுதும் சிறு குழந்தைகளுக்கெனவே பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனத் தொடர்ந்து அயராது எழுதிவந்த இணையப் பாட்டியின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
ஆகிரா
--
![](https://ci6.googleusercontent.com/proxy/CmsqnpGK8LxDpA8LIjbgza2FRv3gMnctsGqbB7yBIlBCQkvuiHCW_RnCW5fxFmCt8rMPFj_Qcxclxa2SrCU0m7ws8XwNCMY9oEi59qQU30t6_kPf=s0-d-e1-ft#http://www.educationalservice.net/images/2011/december/smiley.gif)
AKR