இன்று சாப்பாட்டிற்கு முட்டைக்கு #பதில்#காய்கறி வைத்ததானால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் #வருந்துகிறேன்#கவலை வேண்டாம் ,
இது உங்கள் #வீடு .எதையும் எதிர்கொண்டு சமைக்கும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள் .
உங்களுக்காக நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் ,
#விரைவில் இப் பெருந்துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியை அடையச் செய்வேன் .
இது #உறுதி .போர்க்கால அடிப்படையில் கடைக்கு சென்று #முட்டை வாங்கி #இரவு உணவுக்கு தருவேன் .
உங்களுக்கு வரும் துன்பங்கள் மற்றும் உங்கள் பையன் #ஸ்கூல் பேக்கையும் நானே சுமப்பேன் . எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது .
எனக்கு எல்லாமே நீங்கள்தான் . என் பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கும் ஏ ,இந்தா என்ற சொற்களுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து சமைத்து தருவேன்.