அல்லாஹ் என்பது அரபிக்கடவுளா இல்லை கடவுளுக்கான அரபி வார்த்தையா?

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Mar 2, 2025, 3:15:16 AMMar 2
to அறம் கற்க கசடற
முதலில் பதிலளிக்கப்பட்டது: அல்லாஹ் என்பது அரபிக்கடவுளா? இல்லை கடவுளுக்கான அரபி வார்த்தையா?
பதாகையை அகற்றுக

நல்ல கேள்வி.

அல்லாஹ் என்பது கடவுளுக்கான அரபி வார்த்தை ஆகும். எப்படி?

1) தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - திருவாசகம்

எந்நாட்டவர் என்பதில் அரேபியா விடுபடாது.

2) சிவன், அல்லாஹ் சொற்களுக்கான இலக்கணம்

தேவாரம் திருவாசகம் மற்றும் திருமந்திரம் சிவனுக்கு உரிய பண்பாக கூறும் பொழுது,

  • அவன் ஏகன்,
  • அனேக பண்புகளை உடையவன்,
  • ஆண் பெண் அலி போன்ற பாலினமற்றவன்,
  • படைத்து காத்து அழிக்கும் முத்தொழிலையும் செய்பவன்,
  • உம்பரில் (சுவர்க்கத்தில்) இருப்பவன்
  • நந்தி தேவர் மூலம் மக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாதர்களுக்கு வேதம் வழங்குபவன்.

போன்ற செய்திகள் அல்லாஹ்வின் வரைவிலக்கணத்துக்கு முரண்படவில்லை

மேலும் வாசிக்க தமிழர் தெய்வம் - சிவன் யார்?

3) சொல் அடிப்படையில், தமிழர் அறங்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் அல்லாஹ் என்பது உலக சமயங்கள் கூறும் கடவுளின் பெயர்.

ஆய்வாளர் விகடரின் நூல் இதற்கான பதிலை தரும்.

4) இயேசு கடவுளை கர்த்தர் என்றோ GOD என்றோ கூறவில்லை, அல்லாஹ் என்றுதான் அழைத்தார்.

Follow அறம் கற்க கசடற (Learn Virtues) and Upvote for more.

199 பார்வைகள்
2 பகிர்வுகள்
62 பார்வைகள்
ஆதரவு வாக்கு
6
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக
கருத்துகள்

ஏலீ க்கும் அல்லாவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லையே.இயேசு அல்லா என்ற வார்த்தையே ஒரு போதும் உச்சரித்ததாக புதிய ஏற்பாட்டில் இல்லையே.குரான் என்பதே இடைச்செருகல்தானே.அதை எப்படி ஆதாரமாக காட்டலாம்?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

இயேசு பேசிய மொழி என்ன?

அராமைக்!

அராமைக் மொழியில் பைபிளை படித்து உள்ளீர்களா? ஆம்! என்றால் என்ன பெயர்களை உபயோகித்து கடவுளை இயேசு அழைத்தார்? வசன ஆதாரம் தருக! இல்லை! என்றால் அவர் கடவுளை அப்படி அழைக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொன்னீர்கள்?

அல்லாஹ் என்றோ அதற்கு இணையான அல்லது அதன் உச்சரிப்போடு ஒத்துப்போகும் சொல்லையோ இயேசு பயன்படுத்தி உள்ளார் என்று அறிந்தால், நீங்கள் அல்லாஹ்வையும் முகமது நபியையும் ஏற்று கொள்வீர்களா? இல்லை! ஏன்?

உங்களுக்கு வேண்டியதெல்லாம் சத்தியம் அல்ல, நீங்கள் எதிரியாக கருதுவொரிடம் போட்டி - அதில் வெற்றி. போட்டியில் முடிஞ்சா தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு வெறுப்பை கக்க வேண்டும். இது கேள்வி, இது பதில், இது ஆதாரம் என்று நீங்க பேசியது வெகு குறைவு. அவ்வாறு அல்லமால் பேசப்படும் பதிலும் கமெண்டும் நீக்கப்படும்.

ஏலீ என்று இயேசு கூறினாரா? நீங்க எந்த வார்த்தையை உச்சரிக்கிரீர் என்று தெரியவில்லை. வசனத்தையும் அதன் என்னையும் கொடுங்க. உண்மையை அறிய வேண்டும்? மேலுள்ள காணொளியை காணவும்.

குர்ஆன் இடைச்செருகல்? இல்லை என்று எல்லாம் உங்களிடம் விளக்கவெண்டிய அவசியம் இல்லை! ஏனென்றால் பைபிள் ஆதாரங்களையே மதிக்காதவர் நீங்கள்! சத்தியம் சொல்லப்படும் பொழுது சொந்த விருப்பு வெறுப்பை ஓரம் கட்டி அதை ஏற்க்க வேண்டும், அல்லது முறையான வேத ஆதாரம் சொல்லி மறுக்க வேண்டும். அவன்தான் நேர்மையானவன், ஆன்மீகவாதி, விசுவாசி, வீரன். உங்களிடம் இது எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை.

பதில் அளியுங்கள்

இயேசு அராமைக் மொழியில்தான் அல்லா என்று அழைத்தார்.அப்படினா அல்லா என்கிற வார்த்தையையும் முகமது காப்பிதான் அடித்தாரா.இதை கூட விட்டுடலாம் ஆனா இயேசு அல்லானு சொன்னாருனு சொல்லிக்கிட்டு இயேசுவை முஸ்லிம்னு உங்க முஸ்லிம் கூட்டம் சொல்லிக்கிட்டு திரியுதே அதைதான் தப்புனு சொல்றோம்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஒரே கடவுள் என்கிற பொழுது வேறு வேறு பெயரை ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த தீர்க்கதரிசிகள் சொல்லவே வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி அறிவுள்ள செயலாகும்? செமிட்டிக் மொழிக்குடும்பம் என்றால் என்ன என்று வாசிக்கவும்! மோசஸ் கடவுளை எப்படி அழைத்தாரோ? அப்படிதான் ஏசுவும் அழைத்தார்! அப்போ இயேசு காப்பி அடித்தாரா? என்று கேட்டால் எப்படி அறிவிலியின் கேள்வி போல தெரியுமோ அபப்டித்தான் இருக்கிறது நீங்க கேட்பதும்.

முஸ்லீம் என்றால் என்ன? கடவுளுக்கு கட்டுப்பட்டவன் என்று பொருள். யாரெல்லாம் இறைவன் சட்டத்தையும் அவனது இலக்கணங்களையும் அறிந்து செயல்படுகிறாரோ அவர் ஒரு முஸ்லீம்.

காபீர் என்றால் இறைவனை மறுப்பவன் என்று பொருள். யாரெல்லாம் இறைவனை அவன் சொன்ன இலக்கணப்படி அறிந்திராமல், அவனது வரையறைகளுக்குக்கு மாற்றமாக அவனை புரிந்து கொள்கிறார்களோ, அல்லது இறைவனை இல்லையே என்கிறீர்களா அவர்கள் காபீர்கள்.

இந்த வரையறைப்படி உலகம் தொடங்கியது முதல் இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர். மொழியும் அதன் சொல்லும் மாறலாம் ஆனால் ஆன்மீகத்தில் மக்களின் இரண்டு வகைக்கு வரையறை இதுதான். அதில் இயேசு இறைவனுக்கு கட்டுப்பட்டவர். எனவே சில அவரை முஸ்லீம் என்று அழைக்கின்றனர். அதில் என்ன பிழை?

இயேசு அல்லா என்று அழைத்தாரோ, அவரின் இலக்கணத்தையும், முகமது நபி அல்ஹ என்று அழைத்தாரோ அவரின் இலக்கணத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றா அலல்து வேறா என்று முடிவு செய்வதுதான் சரியான அணுகுமுறை!

பதில் அளியுங்கள்

தாடி வச்சவன் எல்லோரும் தாஹூர்னு நினைப்பவர்கள் நீங்கள்.கிபி ஏழாம் நூற்றாண்டில் முகமது என்ற மனிதரால் தோற்றுவிக்கபட்ட ஒரு மதத்தை நிலைநிறுத்த முகமதுவால் செருகபட்டவைதான் இஸ்லாம் ஆதிமதம், ஆதாம் ஆபிரகாம் மோசே இயேசு அனைவரும் முஸ்லிம்கள் போன்ற அபத்தங்கள்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

தாடி வைப்பவன் எல்லாம் தாகூர் என்று நினைப்பதென்றால், எந்த ஆய்வும் செய்யமல் எடுத்த எடுப்பில் அலல்து முன் முடிவை அடிப்படையாக கொண்டு ஒரு விடயத்தை அணுகுவது என்று கூற வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதாவது யூகத்தில் பேசுவதை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஐயா யூகத்தில் பேசுபவர் நீரா? நானா? எமது கருத்துக்கள் அனைத்தும் வேத வாக்கியங்களை அடிப்படியாக கொண்டுள்ளது.

நீங்க தான் ஒரு steriotype-ஐ மனதில் வைத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லிக்கொண்டு உள்ளீர்.

ஏமாற்று பேர்வழிகள் வழக்கமாக தனது என்னென்ன சுயலாபத்துக்காக ஒரு காரியத்தை செய்வார்கள்?

மாளிகை, உணவு, பணம், தூக்கம், புகழ் போன்றவைகளுக்கத்தான். இதில் எதையும் முகமது நபி அனுபவிக்கவில்லை.

மாளிகை

ஏறக்குறைய முழு அரேபிய தீபகர்ப்பமும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தும் இறுதிவரை ஒரு குடிசையில் வாழ்ந்த்தார்.

உணவு

தனது வாழ்நாள் முழுவதும் தனது கைகளால் உழைத்து உண்டார்,

மூன்று நாள்களுக்கு மேல் அவர் வீட்டு அடுப்பு தொடந்து எரிந்தது இல்லை. ஏறக்குறைய ஒரு மாதத்தில் 20 நாட்கள் நோன்பில் இருந்தார், ஆட்சி அதிகாரம் கைக்கு கிடைத்த பிறகும்.

பணம்

ஒரு நாளின் இறுதியில் தன்னிடம் உள்ள பொருளை தானம் செய்துவிட்டு வெறுங்கையோடு உறங்க செல்வார்,

மக்கள் கொடுக்கும் தான தர்மத்தில் ஒரு தீனாரை கூட தனது சொந்த தேவைக்கு செலவு செய்யாதவர்,

தூக்கம்

இரவின் மூன்றில் இரண்டு பகுதி இறைவணக்கத்தில் ஈடுபடக்கூடியவராக இருந்தார். அவர் தூங்கியது நேரம் வெகு குறைவு.

புகழ்

ஈஸாவை மக்கள் வரம்பு மீறி புகழ்ந்தது போல என்னை புகழக்கூடாது, நான் வரும்போது எழுந்து நிற்க தேவை இல்லை, எனது மண்ணறையை உயரமாக கட்டாதீர்கள், தீர்க்கதரிசிகளின் மண்ணறையை மக்கள் வணங்கும் இடமாக ஆக்கிக்கொண்டது போல எனது இடத்தையும் ஆக்கிவிடாதீர்கள் என்று கூறினார்.

மேலும்

யாரையும் கடுமையான வார்த்தையில் பேசாதவர், கெட்டவார்த்தை பேசாதவர்,

இயேசு திராட்சை ரசத்தில் அற்புதம் செய்தது போல 1000 கணக்கில் அற்புதங்கள் செய்தும், அவைகளை முற்படுத்தாமல் குரானை தான் மிகப்பெரும் அற்புதமாக முன்னிறுத்தியவர்,

இயேசுவை போலவே தனது இறப்பை முன்னறிவிப்பு செய்தவர். இறுதிவரை தன்னை ஒரு இறை அடியான் என்று மட்டுமே கூறியவர்.

இறக்கும் தருவாயிலும் மக்களின் தொழுகை, நல்லொழுக்கம், சமத்துவம் பற்றி உபதேசம் செய்தவர்.

இந்த செய்திகள் எல்லாம் நீங்க அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றல் நீங்க இருபக்க தகவல்களையும் வாசிப்பது போல ஆய்வு செய்வது போல தெரியவில்லை. வீண்விவாதமும் அபத்தமான விமர்சனங்களும் செய்பவர்களை வாசிப்பவர் அல்லது பின்பற்றுபவர் போல தெரிகிறது.

இந்த எல்லா செய்திகளுக்கும் ஆதாரகதகவல்கள் குர்ஆன் மற்றும் ஹஸீஸிலிருந்து ஆதாரங்கள் கொடுக்க முடியும். இதில் எந்த செய்தியும் எனது சொந்த கருத்தோ யூகமோ அல்ல.

இயேசு உட்பட அனைத்து தீர்க்கதரிசிகளையும் கண்ணிய படுத்தியவர் முகமது நபி. உங்க கூட்டம் எவ்வளவு முகமது அவர்களை கேவலமாக விமர்சித்தும், இஸ்லாத்தை பின்பற்றும் ஒருவர் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதை உங்களால் காட்ட முடியாது. இதுதான் முஸ்லீம்கள் சத்தியத்தில் இருப்பதற்கு ஓர் உதாரணம்.

பொதுவாக ஆன்மீக விடயங்களை பேசும் பொழுது, ஆதாரங்களுடன் பேச முற்படுங்கள், அந்த ஆதாரங்களின் நம்பகத்தன்மையை கொஞ்சம் ஆய்வுசெய்யுங்க, இரண்டு பக்க செய்திகளையும் ஆய்வு செய்ய்யுங்க, கொஞ்சம் கண்ணியமா பேசுங்க. இது மேடை பேச்சோ காமெடி ஷோ வோ அல்ல, ஆன்மீக உரையாடல்.

Reply all
Reply to author
Forward
0 new messages