வாய்மை - நூலின் வடிவமைப்பு

68 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Nov 7, 2022, 9:29:37 AM11/7/22
to அறம் கற்க கசடற

"வாய்மை" என்ற இந்த நூல் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் காரணங்களையும், நம் எதை நோக்கி பயனிக்கிறோம் என்பதையும் அப்பயணத்தில் அனைத்து சமயத்தவருக்கும் பொதுவான விதிகள் என்னென்ன என்பதை ஒப்பிட்டு அறியவும், அதை மீறும் பொழுது தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்று அறிவதும், அதை ஒழுங்கு படுத்ததும்  முறையினையும் பகிர்வது இந்த நூலின் நோக்கம் ஆகும்.

எல்லோருக்கும் சொல்லப்படவேண்டிய மெய்மை அடங்கிய இந்த நூலுக்கு "வாய்மை" என்று பெயரிட்ட காரணங்கள் இரண்டு.

1) இந்த நூலின் மூலம் சாதி மத இன மொழி பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை விளைவதை விரும்புகிறோம்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.  - (குறள் 291)

விளக்கம்: வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திருமந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, தீதில்லாததை கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது. 

2) வாய்மை என்பது பொய் சொல்லாமையைக் குறிக்கும். மனம், சொல் & மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை, வாய்மை & மெய்ம்மை எனக் கூறுவர். சமகாலத்தில் "வாய்மை" என்கிற பதம் இந்த அனைத்து பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஆழமான, வெளிப்ப்டையான & இரகசியமான உண்மையை உலகுக்கு கூறும் இந்நூலுக்கு "வாய்மை" தலைப்பாக பொருந்தும் என்று கருதியதால் வாய்மைஎன பெயரிடப் பட்டது.  

பொய்யும் புரளியும் நிரம்பி வழியும் காலத்தில் "வாய்மை"யை எழுத ஆதார கூறுகளை தேர்ந்தெடுக்க  சில விதிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

முதலாவதாக என்னென்ன ஆதாரங்களை பயன்படுத்தலாம் அதற்கான முறையான காரணம் என்ன என்று முடிவு செய்யவேண்டும். அவையாவன,

  1. தொல்பொருள் ஆய்வு முடிவுகள் 
  2. சமய நூல்கள் & அற நூல்கள்  

ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடிய இவ்விரண்டு விதமான தரவுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றா என்று சிந்திக்கும் பொழுது, இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். 

தொல்பொருள் ஆய்வுகளை அப்படியே ஏன் நம்ப முடியாது? காரணங்களாவன,

  • அரசியல் தலையீடு: உதாரணமாக கீழடி போன்ற புராதான இடங்களை அரசுகள் காழ்ப்புணர்வின் காரணமாக புறந்தள்ளுகிறது.
  • அதிகாரிகளின் சமய நம்பிக்கையும் அரசியல் நிலைப்பாடும் அறிவின் தாரமும் : ஆய்வு முடிவுகளை எழுதிய மற்றும் சரிபார்த்த மனிதர்களின் அறிவுத் தரமும் அரசியல் மற்றும் சமய நிலைப்படும் அவைகளுக்கு பிழையான விளக்கங்களை தந்திருக்க வாய்ப்பளிக்கும் அல்லது அவர்களின் நிலைப்பாட்டிற்கு சார்பாக முடிவுகளை வெளியிட்டு இருக்க கூடும்.
  • விடுபட்ட தரவுகள் : தொல்பொருள் ஆய்வில் கிடைத்தது முழுமையான தரவாக இல்லாமல் இருக்கலாம்.
  • தரவுகளின் விளக்கம்: கிடைக்கப்படும் படிமங்கள் தரவுகள் அதன் முழுப் பொருளை தருவதில்லை.
எனவே இவ்வாறு கடுமையான முயற்சியில் கண்டறிந்த தொல்பொருள் ஆய்வு தரவுகளை பல்வேறு நிலத்தை சார்ந்த சங்க நூல்களில் உள்ள தரவுகளோடு ஒப்பு நோக்கினால் ஆய்வு முடிவு உண்மையை நெருங்கி அமைந்து இருக்கும். இதை வள்ளுவர் கூறும் பொழுது,  
 
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை (அதிகாரம்:அமைச்சு குறள் 636)

பொருளுரை: மனிதன் கடும் முயற்சியால் வளர்த்துக்கொள்ளும் நுட்ப அறிவை நூலறிவோடு. ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன? 

எனவே நூல்களோடு ஒப்பிட எண்ணும் பொழுது எந்த நூல்களோடு ஒப்பிட என்ற பெரும் கேள்வி எழுகிறது. பொதுவாக நூலகள் என்பவைகள் காலம், மொழி, சமையம் மற்றும் துறை போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு முரண்பட்ட கருத்துக்களை மொழிகிறது. இவ்வாறு இருக்கையில் எந்த நூலை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் ஏற்படும் பொழுது, அதை கண்டறிவதற்கான ஒரு விதியை அல்லது ஒரு சூத்திரத்தை யாராவது உண்டாக்கினால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

ஆம், நிச்சயமாக அப்படி ஒரு சூத்திரம் உலகெங்கும் உள்ள வேதங்களில் விரவிக் கிடக்கிறது. அவைகளை ஒப்பு நோக்கி ஆய்ந்து "உண்மை"யை வேலியில் சிக்கிய சேலையை கவனமாக எடுப்பது போல நாம் எடுக்க முயல்வோம். நூல் என்கிற வார்த்தை மறைநூல்களையே அக்காலத்தில் குறித்தது. போலிநூலின் வரையறையும் அதை களையும் முறையினையும் அறிவது மிக மிக அவசியம். 

எனவே வாய்மை என்ற இந்த நூலின் மூலம் நாம் அறிய முற்படுவது என்னவென்றால் 
  • நமது வாழ்வின் இலக்கு எது?
  • அதை அடைவதற்கான வழிமுறை என்ன?
  • நம்மை அந்த இலக்கிலிருந்து தடம்புரள செய்யும் திட்டங்கள் எது & கூட்டங்கள் யார்?
  • இதை புறந்தள்ளுவதால் நமக்கு ஏற்படும் விபரீத விளைவு என்ன?
என ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டிய பல்வேறு கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான அறிவுபூர்வமான விடையை ஆய்ந்து அறிவது ஆகும்.

பல்வேறு சமயங்களின் ஆதார நூல்களை ஒப்புநோக்குவதே இந்நூலின் பிரதான வழிமுறையாக இருக்கும். இதில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் தவிர மற்ற நூல்களுக்கான நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வேதம் புனிதம் என்று நம்பும் இவர்கள் அதை வாசிக்கவோ அதன்படி வணங்கவோ, வழிபடவோ, தனது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதலை பெறவோ முயலவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களின் வேதங்கள் வெகுஜனமயப்படுத்தப்பட்ட நூல்களாக அவைகள் இருக்கவில்லை. 

உதாரணமாக, ஒரு முஸ்லிமிடம் "தர்மம்" எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்டால், தனது வேத வரிகளை முன்மொழிந்து அதன் விளக்கமாக அவர் புரிந்த காரணத்தை அடுக்குவார், அப்படியே கிறிஸ்தவரும். ஆனால் ஒரு இந்து அல்லது தமிழரிடம் கேட்டால் சோதிடரையோ, ஏதுமறியா சாமியாரையோ அல்லது ஆன்மீக மலர் போன்ற வார பத்திரிக்கையை அடிப்படையாக கொண்டோ பேச துவங்குவர். சுருக்கமாக சொன்னால் இந்துக்களும் தமிழர்களும் அவரவர் சமயத்தின் அடிப்படை நூலை கூட அறியாமல் உள்ளனர். அதை மத குரு என்கிற பெயரில் பலரும் பலவிதங்களில் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, தமிழர் அல்லது இந்து சமயத்திலோ புனிதத்தையும் தீட்டையும் தீர்மானிப்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயமே என்று நாம் கருதுகிறோம். அவர்கள் அது சார்ந்த நூல்களை படித்தவர்கள் என்று நம்புகிறோம். ஆனால் நாம் நம்பும் அந்த வகுப்பினர் அதில் எந்த அளவு திறமையயையும் அறிவு ஞானத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதை பற்றியும் நாம் கவலை கொள்வதில்லை, கவலை கொண்டாலும் அதை கற்று அறியாததால் அவர்களின் தரத்தை அளந்து பார்க்க இயலும் இடத்தில் நாம் இல்லை. உலக பயன்பாட்டிற்க்காக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் தரத்தை கவனமாக நோக்கும் நாம், மறுமை வாழ்வில் மாபெரும் பங்களிக்கும் அறம் எது? மறம் எது? என்கிற வரையறை பற்றிய கவனம் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. நாம் எதை செய்தாலும் வீடுபேரு அடையலாம் என்று கருதுகிறோமா அல்லது அதை பற்றிய எந்த அறிவும் உணர்வும் இல்லாமல் இருக்கிறோமா என்று தெரியவில்லை.

இதற்கு முரணாக, இறந்த உடலை அடக்கம் செய்யும் பொழுது, வெட்டியான் சொல்லும் முறையை அப்படியே செயல்படுத்தும் நாம், எந்த கல்வியை கொண்டு அவர் அந்த முறையை செய்கிறார் என்பதை யாரும் ஒரு கேள்வியாக கூட முன் வைக்கவில்லை. வெட்டியான் மட்டுமல்ல தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஒவ்வொருவரும் ஒரு முறையை சொல்லும் நிலையை நீங்கள் அடக்கத்தலங்களில் காணலாம். இறந்த உடலுக்கு செய்யும் முறையான மரியாதையை யார் தீர்மானிப்பது? நாம் செய்வனவெல்லாம் அந்த உடலுக்கு மரியாதை ஆகுமா? அல்லது முறையாகுமா?கற்றவர்களாக கற்பனை செய்யப்படும் பார்ப்பனர்களையே அவர்கள் எதன் அடிப்படையில் இதை செய்கிறார்கள் என்று வினவாமல் இருப்பதே பிழை என்கிற பொழுது எழுதபடிக்க கூட தெரியாத உடலை அடக்கம் செய்யும் மனிதரை ஒரு கேள்வி கூட கேட்க துணிவில்லாமல் அல்லது அறிவில்லாமல் நாம் கடந்து செல்கிறோம். 

மனிதனின் கண்களும் அறிவுக்கும் எட்டாத செய்திகளை கற்பிக்க இறக்கப்பட்ட நூல்கள்தான் மறைநூல்கள் என்பனவாம். விமர்சனம் செய்வதற்காக கிறிஸ்தவ இஸ்லாமிய வேதத்தை வாசிக்கும் வாய்ப்பு இருக்கும் அளவுக்கு கூட நமது வேதம் எதுவென்று அறிந்து அதை வாசித்து அதில் உள்ளதாய் புரியும் வாய்ப்பு கூட நம்மை போன்ற பல சமயத்தவரும் இல்லை. அதற்கான ஆர்வத்தையும் நடப்பு உலகமயமாக்கல் இல்லாமல் செய்துவிட்டது. தமிழர்கள் தங்கள் மறைநூலாக சம்ஸ்கிருத வேதங்களை கருதுவது பரிதாபத்தன் உச்சம். 

"நல்ல செயலை கடவுளின் பெயரால் சொன்னால் மக்கள் கேட்பார்கள் எனவே சாமி பெயரில் சில நல்லவைகளை நல்லோர் சிலர் கூறி உள்ளனர்", ஆனால் கடவுள் என்று ஏதுமில்லை என்ற நாத்தீகர்களின் கருத்தாக்கம் உண்மையில்லை என்பது இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படும். பகுத்தறிவு என்பது நம் தாய்மொழியில் தரப்பட்ட மறை நூற்களை விட மேற்கிலும் வடக்கிலும் உள்ள நவீன நூல்களில் உள்ளது என்று நம்புகிறவர்கள் பேதைகளல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். பகுத்தறிவதற்கு அடிப்படை அறிவு தேவை, அடிப்படை கல்வி தேவை, அது அல்லமால் கட்டப்படும் கோட்டைகள் காற்றில் கட்டப்படுபவைகளாம். அந்த அடிப்படை மறை நூல்களில் தான் உண்டு. 

பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு என்றால், கடவுள் என்கிற கருப்பொருளை மறைநூலுக்கு முரணாக உருவகப் படுத்தும் மக்களின் செயல்பாட்டை வெறுத்து, பொய் குரு, பொய் வேதம், பொய் தெய்வம், பொய் மதம் இவற்றுக்கும் சத்தியத்துக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பகுத்து அறிபவர்கள்தான் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியும். அவ்வாறு எவ்வித முயற்சியும் இன்றி நாத்தீக சார்புடைய நூல்களை மட்டும் வாசித்து நேரடியாக நாத்தீகத்தை ஆதரிப்பதும் ஆன்மீகத்தின் மீது தவறான புரிதல் கொள்வதும் பகுத்தறிவு ஆகாது. எனவே பகுத்தறிந்து சத்தியத்தை அறிய இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

வெவ்வேறு சமயங்களை, அதன் மறைநூல்களை அணுகும் பொழுது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படைகள் உண்டு.
  1. உலகில் மனிதர்கள் அனைவரின் உடலமைப்பும் அதன் செயல்பாடுகளும் ஒரே அமைப்பில் உள்ளது, எல்லோரும் ஒரே வானையும் ஒரே மாதிரியான காற்றையும் ஒரே அமைப்பிலான மழையையும் பகிர்ந்து கொள்கிறோம். எனவே இவைகளை படைத்த தெய்வம் பலவாக இருக்க வாய்ப்பில்லை. 
  2. ஒரே தெய்வம் என்கிற முடிவுக்கு வந்தால், மதம் மொழி மற்றும் இனம் ஆகியவற்றை தாண்டி நம்மை இணைப்பது எது என ஆய்ந்து அறிய முற்படும் பொழுது நமக்கு உள்ள ஒரே ஆதாரம் மறை நூல்கள். 
  3. மறை நூலை அணுகும் முன் ஒரு அடிப்படையை நாம் அறிய வேண்டும் : பாலையும் மில்க்-யும் இருவேறு பொருட்களாக கருத இயலாது. ஏனென்றால் இரண்டு சொற்களின் வரையறையும் ஒன்று என்று நாம் அறிவோம். அதாவது பால் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், மில்க் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், பாலின் பண்புக்கும் மில்க் இன் பன்புக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே இது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு சொற்கள் அல்லது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு மொழிச்சொற்கள் என்று நாம் எளிமையாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். அதே போல இறைவனின் வரையறை மட்டுமல்ல, ஒவ்வொரு அடிப்படை கூறுகளையும் ஒப்பிட்டு சொற்கள் வேறானாலும் வரையறை ஒன்றா இல்லையா என்று ஆய்ந்து அறிய வேண்டும்.
விளைவுகள்: இந்த சில அடிப்படைகளை மறந்தால் ஏற்படும் சில விளைவுகள்  
  1. சமூக கலப்பின் பொழுது அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த வெவ்வேறு பாரம்பரியங்களில் உள்ள ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களை வெவ்வேறு பாத்திரமாக்கி புராணம் எழுதிய துயரம் நமது நாட்டில் ஏராளம்.
  2. இந்த புரிதலின்மை மேலும் பல தீமைகளுக்கு உள்ளாக்க நேரிடும். உதாரணமாக, பாலும் மில்கும் ஒன்று என்று அறியாமல் இருந்தால் சில வேளைகளில் உங்களுக்கு கடுமையான தேவை இருக்கும் பொழுது நீங்கள் அதை நிராகரிக்கலாம் அல்லது தேவை உள்ள பொழுது பாலுக்கு பதிலாக கள் அருந்தலாம். இரண்டுமே விபரீதம்.
  3. ஆனால் இதைவிட மிகமிக ஆபத்தான ஒன்று என்னவென்றால் அறியாமல் அவர்களின் தெய்வத்தை நீங்கள் ஏசினால், அது நீங்கள் வணங்கும் தெய்வமாக இருந்து மொழியின் காரணமாக பெயர் வேறுபாட்டால், உங்கள் நிலை?
  4. ஒருவேலை உங்கள் வேதத்தின் வழிநூலாக அல்லது தொடர்ச்சியாக அந்த செய்தி இருந்து அதை நீங்கள் புறக்கணித்தால் உங்கள் நிலை?
  5. ஒருவேலை அது உண்மையான கடவுளாக இருந்து நீங்கள் பொய்யானவற்றை வணங்கி வந்தால், உண்மை மறை நூலின் ஞானம் உங்களை வந்தடையலாம்.
இதற்காகத்தான் கல்வியை அனைத்து சமயமும் அறநெறி நூல்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தன. கல்வி உங்களை விடுதலை செய்யும், மரணம் வரை உங்களை காத்து நிற்கும். மரணத்துக்கு பிறகு வெற்றியை தரும். ஆகவே இன்று நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பது கல்வி அல்ல, மாறாக இவைகள் வெறும் தொழிற்பயிற்சி மட்டுமே. 

அந்த வரையரையின் அடிப்படையில் கீழ்கண்ட நூல்களை நாம் ஆதாரங்களாக பயன்படுத்த வுள்ளோம்.
இதில் "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" சற்று அந்நியமாக இருக்கும். உண்மைதான், ஆனால் அது நிச்சயமாக பயன்படுத்தப்பட வேண்டிய நூல் ஏனென்றால் அதை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து நூல்களும் மக்களிடையே அறநெறிகளை வளர்ப்பதற்கான வழிகளை சொல்கிறது ஆனால்இந்த குறிப்பிட்ட நூல் மட்டும் மக்களிடையே அறியாமையை வளர்த்து உலக சமூகங்களில் அக்கிரமங்களை எப்படி வளர்த்தெடுப்பது என்கிற திட்டத்தின் செயல்முறை வடிவ நூலக அமைந்துள்ளது. சுருக்கமாக சொன்னால் சமய நூல்கள் மனிதனை பக்குவப்படுத்தும் நூலாகவும் இது மனிதனை மிருகமாக்கும் நூலாகவும் அமைந்துளளது. அதுமட்டுமல்ல இந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று உலகம் வழிநடத்தப் படுகிறது என்பதும் ஒரு முக்கிய காரணம் இந்த நூலை ஒப்பாய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு. 

அறம் என்றால் என்ன? ஒரு நிகழ்கால பிரச்சனைக்கு எப்படி தீர்வு தரப்படுகிறது? எப்படி தரப்படவேண்டும்? என நாத்திகர்களிடம் கேட்டால்,

"மனிதன் தான் விரும்பியதை செய்வதும் பிறருக்கு துன்பம் தராததும் அறம் ஆகும்" என்பர். "பிறருக்கு துன்பம் தராத வழிமுறைகளை நாம் நம் கடந்தகால அனுபவத்தில் படிப்பினை பெற்று அதை சட்டமாக அல்லது நெறியாக முறைப்படுத்தி, அதை நாம் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும்" என்றும் கூறுவர்.

இந்துக்களிடம் கேட்டால்,

வேதமே அறம் என்பர். மனுநீதி என்பது வேதத்தின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக கூறுவர். ஆனால் எந்த வேத வசன அடிப்பையில் அந்த சட்டம் சொல்லப்படுகிறது என்கிற சான்று குறிப்பிட்டு அந்த சட்டம் மனு நீதியில் குறிப்பிடுவதில்லை. மேலும் சமகால இந்து மத அறிஞர்கள் அல்லது பக்தர்கள் இதுபோன்ற எந்த நூலின் வசன ஆதாரம் எதையும் குறிப்பிடாமல் கேட்கப் படும் கேள்விக்கு தான்தோன்றி தனமாக பதில் தரும் நிலை நிலவுகிறது. அதிக பட்சமாக இது ஆகமத்தில் அல்லது வேதத்தில் அல்லது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுவர். எங்கே? என்ன பொருளில்? என்ன சூழ்நிலையில்? கூறப்பட்டுள்ளது என்கிற எந்த ஆதாரமும் அவர்களால் தரப்படாது.

தமிழ் பற்றளர்களை கேட்டால்,

திருக்குறள் தான் அறம் அல்லது வேதம் என்போம். ஆனால் நிகழ்கால பிரச்சனைக்கு நாம் அதை தீர்வுதரும் நூலாக பார்ப்பது இல்லை. கேட்கப்படும் கேள்விக்கு தான் தோன்றித்தனமாக கற்பனையில் பதில் சொல்கிறோம்! தமிழில் குறளை தாண்டி பல பின்பற்ற தகும் அறநூல்கள் உள்ளன என்பதை அறியாததால் "நீயா நானா" போன்ற தொலைக் காட்சி நிகழ்வுகள் நிகழ்கால பிரச்சனைக்கு இரு தரப்பை மோதவிட்ட பணம் பார்க்கிறது.

கிறிஸ்தவர்களை கேட்டால்,

பைபிள் தான் அறம் என்பர். அவர்களும் அதை கொண்டு தீர்வு தரும் பொழுது பெரும்பாலானவர்கள் வசன எண்களை தான் குறிப்பிட்டு அதன் சாரத்தை சுருக்கமாக எழுதுகிறார்கள் தவிர, வசனத்தை முழுவதும் கூறி அவ்வசனத்தை விளக்கி தீர்வை கூறுவதில்லை. மக்களுக்கு bore அடிக்கும் என்று கருதுகிறார்கள் போல.

இஸ்லாமியர்களை கேட்டால்,

திருக்குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு அதன் வசன எண்ணையும் குறிப்பிட்டு அவ்வசனத்தின் விளக்கமாக நபிகள் கூறிய விளக்கம் நிறைந்த ஹதீஸ் நூலை குறிப்பிட்டு அதன் வசன எண்ணை குறிப்பிட்டு அதன் நம்பக தன்மையையும் குறிப்பிட்டு அந்த ஹதீஸ் வசனத்தையும் குறிப்பிட்டு தீர்வு தரும் நிலையை காணலாம்.

இஸ்லாமியர்கள் போல நம்மிடம் இருக்கும் புனித நூல்களை முறையாக கற்று அதில் உணமை பொய்யை பிரித்து அறிந்து அதிலுள்ள உண்மையை கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்ப்பெழுதி அதன் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைக்க வேண்டும், உலகம் நலம் பெற.

முடிவாக, இந்நூல் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதென்றால், தமிழ் பேசும் நல்லுலகில் பிரதான தத்துவங்களாக பின்பற்றப் படும் சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மற்றும் நாத்தீக சிந்தனைகளுக்கு அவர்கள் ஏற்ற தத்துவத்தின் மூல நூல்களை கொண்டு "மெய்" எது என்று விளக்கும் முகமாக முயற்சி செய்யப் பட்டுள்ளது.

Reply all
Reply to author
Forward
0 new messages