குர்ஆனில் சொல்லும்படி ஒரு ஆண் வாழ்ந்தால் அவனுக்கு சொர்க்கத்தில் 72 கன்னிகள் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பெண்ணுக்கு என்ன கூறப்பட்டுள்ளது?

3 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Nov 16, 2024, 3:35:21 AM11/16/24
to அறம் கற்க கசடற

ஆணுக்கு கொடுக்கப்படும் கன்னிகள் போல பெண்ணுக்கு இல்லை என்பது குறை அல்ல. அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் இயல்புக்கும் ஏற்றார் போல வெகுமதிகள் வழங்கப்படுகிறது. இஸ்லாத்தை இது போன்ற விடயங்களில் எளிதாக விமர்சிப்பதன் காரணம், குர்ஆன் கைக்கு எட்டும் தூரத்திலும், மற்ற வேதங்களை வாசிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதுதான். எனவே வேறு சில சமயங்களின் குறிப்புகள் உங்களுக்காக கீழே.

தமிழர் சமயம்

துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே - புறநானூறு 287

பொருள்:

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள பெண்களை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

மகளிர் - பெண்கள் (பன்மையில்)

இந்து மதம்

Agni, may we, beyond decay, invited, in the third heaven, feast and enjoy the banquet. These women here, cleansed, purified, and holy, I place at rest singly - [Atharva Veda, HYMN CXXII:5]

"அக்னி, சொர்க்கவாசிகளை விருந்துக்கு அழை, அவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடு, அவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும், நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர்கள்" என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இஸ்லாம்

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்" - [திருக்குர்ஆன் 44:51-54]

"மேலும், உன்னதமான விரிப்புகளில் அமர்ந்திருப்பர். நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; தம் துணைவர் மீது பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்" - [திருக்குர்ஆன் 56:34-38]

"அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்" - [திருக்குர்ஆன் 55:56-58]

கிறிஸ்தவம்

அப்பொழுது பேதுரு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோம்; அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னைப் பின்பற்றிய நீங்கள் மறுபிறப்பில் மனுஷகுமாரன் தம்முடைய மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, ​​நீங்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். . என் பெயருக்காக வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, நிலங்களையோ கைவிட்ட எவனும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வான். ஆனால் முதலில் இருப்பவர்களில் பலர் கடைசியாக இருப்பார்கள்; மற்றும் கடைசியாக முதலில் இருக்கும். (மத்தேயு 19:27 – 29)

குறிப்புஇது இம்மையை குறிக்கிறது என்று சிலர் வேறு சில வசனங்களை ஆதாரமாக காட்டுவர். ஒரு மனைவியை கர்த்தருக்காக கைவிட்டு நூறு மனைவியைப் பெற்ற நபரை சம காலத்திலோ, வரலாற்றிலோ அல்லது பைபிலிலோ யாரேனும் உண்டோ? மனைவியை விடுங்கள், அவ்வாறு நிலத்தை பெற்றவர் உண்டோ? எனவே நூறு மடங்கு என்பது இம்மையில் அல்ல, மறுமையில் என்று தெளிவாகிறது.

முடிவுரை

இஸ்லாத்தில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் "ஹூருல் ஈன்".

    • திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பதை புனிதமாக அருளாக வரமாக ஏற்கும் நாம், சுவர்க்கத்தில் அவரவர் தியாகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ப அழகிய பெண்களை மணமுடித்து வைப்பதாக இறைவன் வாக்களிப்பதை ஏன் இழிவாக பேசுகிறோம்.
    • இவ்வுலகில் தான் மணமுடிக்கும் பெண் ஒழுக்கமாக இருக்க விரும்புவோர் அதன் காரணமாக தானும் ஒழுக்கத்தை பேன கருதி (கண், கை, மனம் உட்பட அனைத்து உறுப்புகளும் செய்யும்) விபச்சாரத்தை விட்டு விலகி நிற்கின்றனர்.
    • அவ்வாறு இவ்வுலகில் ஒழுக்கத்தை பேணுபவர்களுக்கு மறுமையிலும் குற்றமற்ற பாசமுள்ள யாரும் அறிந்திராத அழகுள்ள பெண்களை இறைவன் மனம் முடித்து தருவதாக சொல்வது எப்படி கேவலத்துக்கு உரியதாகும்?

ஆனால் இது இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மறைநூல்களிலும், அனைத்து சமயங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.

தமிழர்களோ அல்லது இந்துக்களோ அவரவர் மறைநூல் என்ன வென்று ஆய்ந்து அறியாதிருப்பதும், அறிந்தவர்கள் முயன்று கற்காதிருப்பதும் மற்ற நூல்களை இழித்து பேச வசதி ஏற்படுத்தி தருகிறது.

மேலும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக தங்களை கருதும் சில தத்துவ பின்புலத்தோரும், தனி நபர்களும் அருவருக்கும் வகையில் இதை விமர்சிப்பதற்கான காரணம் அவர்களின் உள்ளத்தில் உள்ள அருவருப்புகளே. இவ்வாறு முற்போக்கு பேசும் நபர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் இருந்து வந்துள்ளனர், அது பிழை என்பதல்ல, அவர்களின் தேவையை அவர்கள் முறையாக தீர்த்து கொள்ளும் வரை. நம் சேகுவேரா, மார்க்ஸ், தந்தை பெரியார் எல்லாம் சில உதாரணங்கள்.

சான்று: மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து..!

Follow அறம் கற்க கசடற (Learn Virtues) and Upvote for more.

187 பார்வைகள்
3 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
6 பகிர்வுகளைப் பார்வையிடுக
16 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
3
7
6
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

உங்கள் பதிலோ, அல்லது கட்டுரையோ, விளக்கங்களேn, இந்த கேள்வியை வைத்த எந்த ஒரு இந்துத்துவவாதி காதுகளிலும் ஏராது, இவர்கள் புத்தியில் விழாது. அது ஏனெனில், இவர்களின் இந்து ராஷ்டாரா என்பது முழுக்க, முழுக்க இஸ்லாமிய வெறுப்பில் மட்டுமே அடங்கி உள்ளது. அதை வெளிப்படுத்த இவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல எந்த வேடத்தையும் தரிக்க ஒருபோதும் யோசிப்பதே இல்லை,

அதற்காக இந்துத்துவ வெறியர்கள், கையில் எடுக்கும் ஆயுதங்கள் ஹிஜாப், மாட்டுகறி, தொழுகை, பள்ளிவாசல், இன்னும் எத்தனையோ , அதில் ஒன்று குரான் வெறுப்பு, சில நேரம் இந்து பெயரில், சில நேரம் கிருத்தவ பெயரில், சில நேரம் முஸ்லிம்கள் பெயரிலேயே,

இவனே முஸ்லீம் பெயரில் பதிவை போடுவான், இவனே , முஸ்லிம் நபர் சொல் வதாக, எழுதுவார்கள் பிறப்பரியாதவர்கள், மூளை ஊணமான இந்துத்துவ பக்தர்கள்,

இவை அத்தனைக்குமான ஒரே காரணம் இந்து ராஷ்ட்ராவின் முழு கருத்தும், முஸ்லீம் வெறுப்பில் மட்டுமே அடங்கியுள்ளது, முஸ்லீம்களை மட்டுமே மிக இலகுவாக இவர்கள் குறி வைக்கிறார்கள்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

சில இடங்களில் நான் வேறு கருத்தை கொண்டுள்ளேன்.

  1. அவர்களின் நிலை அவ்வாறு இருந்தாலும் உண்மையை நம் சக்திக்கு இயன்றவரை சொல்லிக்கொண்டு இருப்போம். குறைந்த பட்சம் அவர்களின் வார்த்தையை வாசிக்கும் பலரில் ஒரு சிலராவது இந்த உண்மைகளை வாசிக்க நேரிடும்.
  2. மனமாற்றம் என்பது இறைவனின் பொறுப்புகளில் உள்ளது. நமது பொறுப்பு பொய்களின் மத்தியில் உண்மையை ஆதாரங்களுடன் சொல்வது மட்டுமே.
  3. அந்த புறத்தில் இருந்து உண்மையை உணர்ந்த இந்த புறத்துக்கு வருவோர் தான் உண்மையை இன்னும் உரக்க சொல்லுவர்.
  4. யாரின் இலக்கு எதுவானாலும், அது இறைவனின் நாட்டம் இல்லாமல் நடைபெறாது. தீமைக்கு எதிரான நனமையின் போராட்டம் நிறுத்தப்பட்டால் இறைவனின் தண்டனைக்கு நாம் ஆளாவோம்.

எனவே நமது முயற்சிக்கு உரிய கூலி நிச்சயம் நமக்கு கிடைக்கும், முயச்சியை தொடர்வோம்.

1
பதில் அளியுங்கள்
ராம், ரஹீம், ராபர்ட். இன் தற்குறிப்பு போட்டோ

புத்தம், சமணம், சீக்கியம், கிருஷ்தவம், முஸ்லிம், ஜோராஷ்டிரம், இங்கு ஏன் எப்படி வந்தது? அடக்கு முறை. ஒடுக்கு முறை, முட்டாள்தனங்களை சகித்து கொள்ள முடியாமல், இந்து என்ற கோட்பாட்டில் இருந்து விலகியவர்கள் இவர்கள், இதை யோசிப்பவன், தன்மானம் சுய அறிவு கொண்டவராகவும், இதை யோசிக்காத எவரும் மதவெறி பிடித்த வஞ்ஜக மனிதர்கள், இவர்கள்தான், தங்களின் பின்பகுதியை பற்றி கவலை படாமல் அடுத்த சூத்தை மோந்து பார்ப்பவர்கள்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

வெளிநாட்டவர்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிக பொருத்தமானவர்கள் அவர்கள்தான்.

வரலாறு-இல் அறம் கற்க கசடற (Learn Virtues)-இன் பதிவு

1
பதில் அளியுங்கள்
ராம், ரஹீம், ராபர்ட். இன் தற்குறிப்பு போட்டோ

எத்தனை விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். ஒருவர்கூட உருப்படியாக பதில் சொல்லவில்லை, பதில் இல்லை, இருந்தால் தானே சொல்வதற்கு, இந்த இடத்தில் சங்கி வந்து மடை மாற்றுவான், வன்மத்தை கக்குவான்... ஆனால் உண்மைகளை ஒருபோதும் நீண்ட நாட்களுக்கு மூடி வைக்க முடியாது, வெளி வந்தே தீரும்.

சனாதன நம்பூதிரிகள் கேரளாவில் கடவுளின் பெயரால் ஆடிய ஆட்டம் ஒன்றே போதும், இவர்கள் எத்தனை கீழ்த்தரமான மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்,

1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஐயா மன்னிக்கவும். சொல்வது நாம கடமை என்பதால் சொல்லப்படுகிறது. இதை ஒருவர் ஏற்கவேண்டும் என்பதை நோக்கமாக வைத்தால், அல்லது இன்னொருவர் முறையாக பதில் சொல்லவேண்டும் என்று நினைத்தால் அல்லது நலலத்தை சொல்வதால் நம்மை யாரும் வசை பாடக்கூடாது என்று நினைத்த்தால் - அது நாம் இயங்குவதை தடை செய்து விடும். விரும்பியவர்கள் வாசிக்கட்டும், இறைவன் அனுமத்தித்தவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

பதில் அளியுங்கள்
Reply all
Reply to author
Forward
0 new messages