பெரும்பாலும்"இந்துக்கலின் கோவில்களில் ஏன்"காளை"மாடு"சிலை வைக்கபட்டுள்ளது? காளை"மாடுகளை வழிபாடு"எப்படி" வந்தது?

3 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Feb 24, 2025, 1:30:32 PMFeb 24
to அறம் கற்க கசடற

இந்து கோவில் என்று நீங்கள் குறிப்பிடுவது சிவன் கோவிலை என்று நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்து வேறெந்த கோவிலிலும் கர்பகிரகத்திற்கு எதிராக மாட்டின் சிலை வைக்க பட வில்லை. இருந்தால் உங்கள் தகவல்கள் வரவேற்க்கப் படுகிறது, அறிய ஆவலாக உள்ளோம்.

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் தரும் முன், சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த காளை மாட்டை நந்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே நந்தி என்றால் யார்? மக்கள் மத்தியில் நந்தி என்ற பெயருக்கு பொருளாக என்னவெல்லாம் சொல்லப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்ய சில இணைய தரவுகளை காண்போம்.

ஆன்மீகம் : இதில் நந்தியை ஒரு மனிதர் போல சித்தரித்து வயது வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவர் அமரர் அதாவது தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று வேறு சில தகவல்கள் கூறுகிறது.

ஆன்மீகம்.இன்: நந்தியின் நிறம் வெண்மை என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவர் சிவ பெருமானின் வாகனமாக கூறப்படுகிறது அதற்கும் வேதங்களில் ஆதாரமில்லை. "நம்மை வணங்குவோரை" என்று பன்மையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. "ஒருவனே தேவன்" என்று உறுதியாக கூறுவதில் சைவ ஆகமங்கள் பிரதானமாக உள்ளது.

மாலை மலர்: நந்தி அவர்கள் எந்த தடையையும் விளக்க வல்லவர் அல்ல. அவர் திருமூலர் போன்ற முனைவர்களுக்கு ஆசானாக இருக்கும் பணியை செய்பவர். எனவே இவரிடம் நாம் பிராத்தனை செய்யவோ அல்லது அவரை வணங்குவதோ எந்த பலனையும் தராது.

விகடன்: நந்தி என்ற சொல்லுக்கு திருமந்திரம் கூறும் பொருள் வேறு. சிவனை வழிபடும் முறையை சிவனின் அறத்தை ஆகாமத்தை சித்தர்களுக்கு உபதேசிக்கும் வேலையை செய்யும் தேவர் அவர். அவர் தனிமனித வளர்ச்சிக்கு எதையும் செய்ய கூடியவராக திருமந்திரம் கூறவில்லை. நந்திகள் நால்வர் என்று திருமந்திரம் தெளிவாக கூறுகையில் ஐந்தாவது நந்தி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

விக்கி: விக்கியில் சொல்லப்படும் சில செய்திகள் திருமந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காளையாக சித்தரிக்க படுவதாக கூறப்படும் செய்தி திருமந்திரத்தில் இல்லை.

ஆன்மீக மலர்: முற்றிலும் தவறான விளக்கங்கள்.

இவைகள் மட்டுமல்லாமல் பல வகையில் சுவாரஸ்யமாக பல கதைகள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எதார்த்தம் என்னவென்றால் உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எனவே அவரை பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்று முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருமந்திர ஆகம வேதத்தின் படி நந்தி என்பவர் கீழ்கண்ட பண்புகளை உடையவர்.

  1. நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
  2. நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
  3. நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
  4. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன். எனவே நந்தியும் சிவனும் வேறு வேறு.
  5. நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியனாக நந்தி இருந்தார்.
  6. நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

திருமந்திரம் கூறும் நந்தியின் வரையறைக்கு முரணான கருத்துக்களையே மேலே குறிப்பிட்ட அனைத்து இணையங்களும் பேசுகின்றன. அநேகமாக அவர்கள் கூறும் கருத்துக்கள் சிவபுராணம் அல்லது நந்தி புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆனால் இந்த புராணங்கள் அடிப்படையிலேயே ஆகமங்களுக்கு முரன்படக் கூடியவைகள் ஆகும்.

தமிழில் தொல்காப்பியம் முதல் திருவாசகம் வரை வந்த நூல்கள் அனைத்தும் வெவ்வேறு முனைவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆகமங்கள் ஆகும். ஆனால் 18 புராணங்கள் அனைத்தும் ஒரே முனிவரால் எழுதப்பட்டது என்கிற செய்தி அதன் நம்பக தன்மையை கேள்விக்குறியாக ஆக்குகிறது. மேலும் அந்த புராணங்கள் இது போன்ற அடிப்படைகளில் ஆகம வேதங்களுக்கு நேரடியாக முரண்படுகிறது என்கிற செய்தியும் அதை வலுப்படுத்துகிறது. எனவே நந்தி என்பவர் மாடு என்கிற கருத்தை கூறும் புராணங்கள் வாயிலாக நந்தியை கோவிலில் வைக்க எண்ணிய அவர்கள் கோவிலில் கர்பகிரகத்துக்கு எதிராக காளை மாட்டின் சிலை வைத்து இருக்கலாம்.

அது சரி நந்தியின் சிலையை அவர்கள் குறுக்கே வைக்க எண்ணியதன் காரணம் என்ன? நந்தி என்பவர் தான் சிவனுக்கும் திருமூலருக்கும் இடையே இருந்து செய்தி பரிமாறிய வேலையை செய்தவர் ஏனென்றால் மனிதன் நேரடியாக உபதேசங்களை கடவுளிடம் இருந்து பெற முடியாது. அதாவது இறைவனை இவர் மூலம் தான் அறியவும் அடையவும் முடியும் என்று கருதியதால் மனிதர்களுக்கும் சிவனுக்கும் இடையே இந்த நந்தி வைக்கப்பட்டு உள்ளார். இந்த கருத்துக்கள் மீது சந்தேகம் உடையோர் திருமந்திரம் வாசிப்பதொடு பொழிப்புறையை ஆய்வு செய்யத் தொடங்கட்டும். நன்றி.

திருமூலர் போன்ற முனிவர்கள் மட்டுமே நந்தியிடம் இதுபோன்ற உபதேசங்களை பெற முடியும் என்பதும், தமிழர் வேதங்கள் சிலை வழிபாடுகளை அல்லது பல தெய்வ வழிபாடுகளை ஆதரிக்கவில்லை என்பதும் வேறு தலைப்புகள்.

243 பார்வைகள்
2 பகிர்வுகள்
112 பார்வைகள்
ஆதரவு வாக்கு
6
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக
கருத்துகள்

சீவனே சிவனாக இருக்க சீவன் உறையும் இந்த உடலே நந்தி அதுவே சிவ வாகனம்

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

சிவபெருமானும் நந்தியும் வேறுவேறா? ஒன்றா?

ஆன்மீகம் பொறுத்த வரை வேதங்களும் ஆகமங்களும் தன அடிப்படை. அதற்கு முரணாக மனிதர்கள் கருத்து சொல்வது பாவம். எனவே அகாமத்தை வாசித்து அறிவோம் ஆன்மீக அறிவை.

பதில் அளியுங்கள்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

திருமூலர்

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

திருமூலர்//

சீவனே அதாவது உயிர்தான் சிவ லிங்கம் அதாவது சிவனின் குறியீடு (லிங்கம் = குறியீடு) என்பது சரிதான், அதற்கான ஆதாரம் தான் இந்த பாடல். தமிழ் ஆகமங்களில் இருந்து ஆதாரம் கொடுப்பவர்கள் ஒருவரும் இல்லை. எனவே வேத ஆதாரம் கொடுத்தமைக்கு மிக மிக நன்றி.

//சீவனே சிவனாக இருக்க சீவன் உறையும் இந்த உடலே நந்தி அதுவே சிவ வாகனம்//

இதேபோல, மனித உடல் தான் நந்தி என்பதற்கான திருமந்திர பாடலையும் நந்தி என்பது அவனது வாகனம் என்பதற்கான ஆதாரமாக உள்ள திருமந்திர பாடலையும் கொடுக்கப்பட்டால் மிக உதவியாக இருக்கும்.

லிங்கம் என்பது ஆண் குறி அல்ல, ஏனென்றால் சிவன் பாலினமற்றவன். பாலினம் இல்லாதவனுக்கு ஆண்குறி இருக்க வாய்ப்பில்லை. எனவே குறியீடு என்ற சொல்லை ஆண்குறி என்று திரித்து கூறியது தவறு.

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பதில் அளியுங்கள்

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே. - சிவவாக்கிய சித்தர் 14 வெறும் வேதம், உயிர் காக்காது. உள்ளே இறைவன் இருப்பதை ஒரு நொடியாவது அறிந்தால் நோயே வராது. சக்தியும் முக்தியும் சாத்தியமாகும்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஐயா நீங்க குறிப்பிட்ட சிவவாக்கியர் பாடல் சொல்லும் கருத்து என்னவென்றால் வேதத்தை புரியாமல் ஒத கூடாது என்பதாம்.

விளக்கவுரையை இங்கே வாசியுங்கள்.

இறைவன் மனிதனின் உள்ளே இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதாவது அவனது பௌதிக வடிவில் இருப்பதாக கருதுவது பிழை. அவனது ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்து இருக்கிறான். ஆனால் பாவங்கள் அதிகம் செய்யப்படும் பொழுது ஊனுடம்பு அவனது ஆலயமாக இருப்பதில்லை.

ஆனால் நமது உரையாடலில் இங்கே நாம் சரிகன வேண்டிய விடயம்

  • நந்தி என்றால் நமது உடம்பு என்றோ,
  • நந்தி சிவனின் வாகனம்

என்பதற்கு என்ன வேத ஆதாரம்?

வேதத்தை பொருள் அறியாமல் ஓதுவதில் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் வேதம் என்பதுதான் அறம். அறம் என்றால் நமது தினசரி செயல்களில் சரி எது, பிழை எது என்று வரையறுத்து கூறுவதாகும். நீங்க "வெறும் வேதம் உயிர் காக்காது" வேதம் கூறுவது அல்லாத எதுவும் அறம் அல்ல என்கிறது திருமந்திரம்.

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. -
 (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

இந்த வரையறைகள் வெறும் அறத்தொடு நிற்பதில்லை. இது இறைவன் யார் என்றும் வரையறுத்து கூறுகிறது. ஏனென்றால் இறைவனை மனிதர்களால் உரைசெய்ய முடியாது.

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே 
(திருமந்திரம் 2915)

பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன்.

அப்போ சிவன் தன்னை தானே உரைசெய்து உள்ளானா? அதாவது தன்னை தானே வரையறுத்து கூறி உள்ளனா? ஆம்!

தமிழர் தெய்வம் - சிவன் யார்?

சிவனை பற்றி அவனே சொன்ன நூல்கள் மறைநூல்கள் ஆகும், அதில் ஒன்றான திருமந்திரம், சிவனின் வரைவிலக்கணமாக கூறுவது,

  • சிவன் தனித்தவன் - ஈடு இணையற்றவன்
  • மனிதனல்ல, ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல
  • யாரும் படைக்காமல், உருவாக்காமல், பெற்றெடுக்காமல், தானாய் உள்ளவன்
  • அநாதி - மனைவி மக்கள் உறவினர் கிடையாது
  • தனக்கே உரிய உருவுடன் வானத்தில் உள்ளான்
  • உலகில் யாரும் கண்டதில்லை, அவனை கற்பனை செய்யவும் வரையறுக்கவும் முடியாது
  • லிங்கத்திலும் கோயிலிலும் இல்லை
  • அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளான்
  • ஆதியும் அந்தமும் அற்றவன், படைப்புகளின் ஆதியும் அந்தமுமாய் இருப்பவன்
  • பிறப்புமில்லை இறப்புமில்லை
  • அவனே படைத்தவன், காப்பவன், அழிப்பவன் (முத்தொழில் செய்வோன்)

சிவன் ஒருவனே கடவுள்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை (திருமந்திரம் 5)

அவன் தானாக தோன்றியவன்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பொருள்: அவன் தானாக உருவான ஒருவன்

ஆதியும் அந்தமும்

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான்

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே 
(திருமந்திரம் 2915)

எனவே அவனை மனிதன் என்று கூறுவதன் மூலம் அவனுக்கு உரை செய்கிறோம். அதை தவறு.

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

சிவனே முத்தொழிலையும் செய்பவன்

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்

ஒருவனு மேஉல கேழும் அளித்தான்

ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்

ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

சிவனுக்கு மனைவி, மக்கள் உண்டா?

சிவன் என்பவன் சக்தி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற வார்த்தை பிரயோகத்தை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்

சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்

சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்

சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)

பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி;

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம்.

மேலும் சிவனின் பாலின வரையறையும் சத்தி என்ற சொல்லின் வரையறையும் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்று கூறுவதை நாம் உணரவேண்டும்.

Reply all
Reply to author
Forward
0 new messages