சுடச்சுட அக்காரவடிசல் -- ஜே.கே. சிவன் மார்கழி 7வது நாள்
'நாராயணன் மூர்த்தி கேசவன்''
''கோதை கோதை, எங்கேம்மா இருக்கே நீ?''
''இதோ வந்துட்டேன் பா,''
''என்ன பண்ணிண்டு இருக்கே''
''ஒரு புது ரோஜா மொட்டு இன்று காலை மலர்ந்திருக்கிறதே. அதோடு பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு ரங்கம்மா என்று பேர் வைத்தேன்''.
முகத்தில் சந்தோஷத்தோடு உள்ளே நுழைந்தாள் கோதை. இன்று மழையில்லை, அவ்வளவாக குளிரும் தெரியவில்லை. காற்று சக்தி குறைந்து வீசியதில் அதிக குளிரை தன்னோடு தூக்கி வந்து வீசவில்லை.
நந்தவனத்தில் என்றுமில்லாத அளவுக்கு குண்டு மல்லிகை நிறையவே பூத்திருந்து மணத்தை வாரித் தெளித்தது. கோதை கை நிறைய மல்லிகை
அடர்த்தியாக தொடுத்து ரங்கனுக்கு மாலை தயார். .
''இன்னிக்கி மார்கழி 7வது நாளாச்சே. அந்த கிருஷ்ணன் மேல் என்னம்மா பாடப்போறே?''
அந்த அதி காலையிலேயே அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை அவரது செல்லப்பெண், அந்த புண்யவதி, கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.நந்தவனத்திலிருந்து வந்த கோதையின் மேனியிலிருந்து ஒட்டிக்கொண்டு வந்த மல்லிகை மணம் ஆஸ்ரமம் பூரா வீசியது.
''இதோ பாருங்கள் அப்பா. உங்களால் படிக்க முடியாது. நெருக்கி நேருக்கு ஓலைச்சுவடியில் எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''.
ஓலைச்சுவடியை வாங்கிப் பார்த்து தலையாட்டினார் சித்தர். பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள். பிறகு அதை ராகமாக பாடினாள் .
""கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.''
கண்களை மூடிக்கொண்டு இந்த பாவைப்பாடலில் வரும் காட்சியை ஆயர்பாடியில் மனக்கண்ணால் கண்டு களித்தார் பெரியாழ்வார் என்று பின்னால் உலகம் போற்றப்போகின்ற விஷ்ணு சித்தர்.
இவர்களை அப்படியே விட்டுவிட்டு ஆயர்பாடி சென்று அங்கே நடப்பதை பார்க்கவேண்டாமா?
++
பொழுது விடிந்து விட்டதே. ஆண்டாள் தான் வேக வேகமாக வருகிறாள். தோழிகளைத் தேடுகிறாள்.
அதுக்குள்ள, இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய் கதவை தட்டினால் தான் இந்த பெண்கள் எழுந்திருப்பாளோ ! சரி வீடு வீடாக ஏறி கதவைத் தட்டுவோம் ''
"ஏ பெண்களே எழுந்து வாருங்களடி சீக்கிரமாக . மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம், எல்லா வீட்டிலேயும் கை வளை குலுங்க சர் சர் னு கயிற்றை மத்தில் கட்டி தயிர் கடைகின்ற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா? வாங்கடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கள் , கதவை சீக்கிரம் திறவுங்கள். சீக்கிரம் “ ஆண்டாள் சிறந்த பொறுப்பான தலைவி அல்லவா. நோன்புக்கு ஆள் சேர்க்கிறாள்.......
+
வில்லிப்புத்தூரில் ...பாசுரமும் அதன் காட்சியும் கோதையின் குரலில் தேனினிக்கும் பாடலாக வெளிவந்து முடிந்தது.
''அப்பா அப்பா '' கோதையின் குரல் சித்தருக்குக் காதில் நுழையவில்லை. கண்ணை மூடி ரங்கனின் சிலை முன்னே அமர்ந்திருக்கிறார். அவர் தான் ஆயர்பாடியில் வீடு வீடாக போய் ஆண்டாளோடு சேர்ந்துகொண்டு மனதளவில் ஒவ்வொருவீடாக சென்று கதவைத் தட்டுகிறாரே .
நேரம் நழுவியது. கண் திறந்த விஷ்ணுசித்தர் கோதையை கண்ணாரக் கண்டு இரு கை தூக்கி வாழ்த்தினார். அமைதி நிலவும் அந்த விடியற்போதிலே விஷ்ணு சித்தர் வெளியே சென்று அன்று மலர்ந்த அந்த ரோஜா செடியின் எதிரே கைகட்டி யோசிக்கிறார். பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அலசுகிறார்.
''கிருஷ்ணனை துதிக்க எல்லாப் பெண்களையும் எழுப்புகிறாள் ஆண்டாள்.
''எதுக்குடி ஆண்டாள் இவ்வளவு சீக்ரம் எழுப்பறே. ஒரு பெண் புலம்புகிறாள்
'ஏய் எழுந்திருடி, வெளிச்சமே வந்துட்டுது. வலியன் குருவி கீச் கீச் என்று கத்தறதே கேக்கலையா உனக்கு. ஆகாரம் தேட கிளம்பிட்டுதே. பகவானைக்காட்டிலும் பாகவதர்கள், பக்தர்கள் உயர்ந்தவர்கள். நமது கிராம ஆய்ச்சியர் தயிர் கடைய ஆரம்பிச்சாச்சு. எல்லோருடைய கை வளை, மத்து சத்தம், தலையை அசைக்கும்போது கழுத்தில் மணி மாலைகள் அசைகின்ற சத்தம் எல்லாம் ஒண்ணாக சேர்ந்து வினோதமாக கேட்கலையா உங்களுக்கு . வெண்ணை வாசனை மூக்கை துளைக்கவில்லையா. இவ்வளவு பாலும் வெண்ணையும் எப்படி சேர்கிறது தெரியுமா. அந்த மாயக்கண்ணன் ஆயர்பாடி வந்ததிலிருந்து பசுக்களுக்கு கொண்டாட்டம். மடி நிறைய பால் சொரிந்து தருகின்றன . அது சரி ஒரு விஷயம் சொல்றேன். கேளு. கேசின்னு ஒரு ராக்ஷசன் குதிரையா வந்து நம்ம கிருஷ்ணனை கொல்ல வந்தது நினைவிருக்கிறதா? பாவம் அந்த முட்டாள் ராக்ஷசன். யாரைக் கொல்லவந்தானோ அவனிடமே தன உயிரை விட்டான். நம்முடைய கிருஷ்ணன் கையால் மரணம் சம்பவிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?''
"அப்படியா'' என்று குதித்து எழுந்தாள் ஒரு ஆயர்குலச் சிறுமி.
''அப்பறம்?''
''எழுந்து யமுனைக்கு வா. மீதியை அங்கு சொல்றேன்'' --- ஆண்டாள்..
MAARGAZHI 8TH DAY
8 தேவாதி தேவன்
வாழ்க்கையில் சில விஷயங்கள் அலுப்பு தட்டுவதில்லை. காரணம் மனம் தான். பிடித்ததையே பேசுகிறது, பாடுகிறது, நினைக்கிறது, பார்ப்பது. இது போலவே படிப்பதும் தான். ;ஏற்கனவே தெரிந்தது தானே, புதிதல்லவே என்று அப்போது நினைப்பதில்லை. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் இப்படிப்பட்டவை. எண்ணற்றோர் எத்தனையோ முறை, எத்தனை வருஷங்களாகவோ பக்தியோடு படித்திருக்கிறோம், இன்னும் அதில் படிக்க நிறைய இருக்கிறது. முப்பது பாசுரத்தில் மூன்று லோக விஷயங்களையும் அடைத்து வைத்திருக்கிறாள் அந்த சிறுமி ஆண்டாள்.
இன்றும், ஆமாம் மார்கழி 8 வது நாளும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, மலை,அங்கே தான் யாரும் செல்வதில்லையே!
''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினா தான் நோன்புக்கு வரது என்று ஒரு வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வருவார்கள் போலிருக்கிறது" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்
''அதனால் என்ன, வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்
''எழுந்திருங்கோ, உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்தாகி விட்டது. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமா அசைந்து மேச்சலுக்கு வந்துவிட்டனவே. . சிலது காத்திருக்கிறது. எங்களைப் போல!! நாம் எல்லோரும் விரதமிருந்து அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம். எழுந்து வாருங்களேன்.நேரமாகவில்லையா?''
ஆண்டாள் மற்ற சில பெண்களுக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் நேரத்தில் நாம் பொடி நடையாக வில்லிபுத்தூர் வந்து விடுவோம்.
ஆஸ்ரமத்தில் வழக்கம் போலவே வாயிலில் பெரிய கோலம் போட்டு வைத்திருக்கிறாள் கோதை. அதன் அருகே மான் விழியோடு ஒரு இளம் பொன்னிற பசுங் கன்றுக்குட்டி அம்மா என்று நின்றுகொண்டு அம்மாவைத் தேடுகிறது. ஆயர்பாடியில் எருமையும் இங்கே பசுவுமா? ''பலே பலே''
உள்ளே விஷ்ணு சித்தர் முகம் அந்த சிறிய அகல் எண்ணெய் விளக்கொளியிலும் மலர்ந்து காண்கிறதே. தலை ஆடுகிறதே அவ்வளவு சுகமாக ரசிக்கிறார் அன்று அவர் மகள் கோதை எழுதிய பாசுரத்தின் அர்த்தத்தையும் அவள் பாடும் இனிமையும் சேர்த்தே.
ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சானூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.
''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:
ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட பரமனிடம் சரணாகதி அடைவதைப்பற்றி யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. தூக்கத்தை விட்டு எழுந்திரு என்பதே உலகமாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். வெளிச்சம் வந்துவிட்டது என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன். மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி. ஆஹா பிரமாதம். அந்த பாடலை மனதிற்குள் தானே அசை போட்டு ரசித்தவாறு அவர் பூக்குடலையைத் தேடினார். ரங்கனுக்கு மாலை தயாராக வேண்டுமே. பாமாலையோடு பூமாலையும் சூட்டவேண்டுமே.
9. மாமாயன் மாதவன்
ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற்காலையில் வீடு வீடாக ச்சென்று பெண்களைத் திரட்டினாள்
''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.
‘’அடியே! செவிடு, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே, காத்துக்கொண்டிருக்கோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறானே , கேட்டு அருள்வதற்கும் தான்!
அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய் கண்ணில் படுகிறாள். அவள் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.
''மாமி மாமி, கொஞ்சம் அவளை எழுப்புகிறீர்களா? பாருங்களேன் எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்''
வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.
விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில் மகிழ்ந்து போனார்.
''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''
அப்படி என்ன கோதை எழுதினால் அன்று -- ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான நிகழ்ச்சி தான் அந்தச் சிறு பாசுரம் .
''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''
பூக்களைப் பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தித்தார்.
இந்த தூங்கும் பெண், ஏன் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாள் என்ற உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாள்.
கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள் ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப்பற்றி குறிப்பிடுவது அந்தப்பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.
விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது.
10. நாற்றத் துழாய் முடி நாராயணன்
ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை. மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து விரதம் இருக்க அவள் முனைந்தாள். மற்ற பெண்களையும் அவ்வாறே அவன் அருள் பெற வழிகாட்டிய பெருந்தகை அந்தச் சிறு பெண் .
''மார்கழி பத்து .அல்லவா இன்று. வாருங்கள் பெண்களே, செல்வோம் உடனே. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம். துயில் கொண்ட பெண்களை எழுப்பி விரதத்தில் பங்கேற்க வைப்போம்.'' ஆண்டாளுடன் பெண்கள் சென்றனர்.
''ஆண்டாள் இன்று எங்களுக்கு நீ இயற்றிய பாடலைச் சொல்கிறாயா?
ஆஹா சொல்கிறேனே. பெண்களே, உங்களுக்கு ராமனைத் தெரியுமா?
''ரொம்பத் தெரியாதும்மா ஆண்டாள்? பாட்டி சொல்வாளே கதை. அதில் வருகிற ராமன் தானே? கோவிலில் வில் வைத்துக்கொண்டு நிக்கிறவர்? ''
''சொல்றேன் கேளுங்கள். போன ஜன்ம புண்யத்தாலே நாம் பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து ஒரு நல்ல வேலை செய்தான். என்ன தெரியுமா? ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் கோபத்தோடு வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த வீராதி வீரன், பொல்லாத ராமன், தன்னிடம் சண்டையிட்டு கும்பர்கணன் இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!
சில பெண்கள் இன்னும் தூங்குவதை வேடிக்கையாக இவ்வாறு ஆண்டாள் கேலி செய்வது, கூட இருந்த பெண்களை கலீர் என்று சிரிக்க வைத்தது. ஆண்டாள் கதவைத் தட்டி உள்ளே தூங்கியவளை
''சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு மார்கழி 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!'' என்றாள்.
இதைக்கேட்டு இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாய கிருஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர்.
''துளசி கமகமக்க, மாலையை போட்டுக்கொண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேட்பதற்கு காத்துக்கொண் டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.''
உற்சாகம் பொங்க அவர்கள் வழக்கம்போலவே அந்த விடியற் காலையில் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராடி நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.
ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த உறக்கம் பிடித்த பெண்ணை எழுப்பினர், என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள், என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம். இது அவள் சிறப்பாக இயற்றிய, ஈடிணையற்ற , என்றும் பெருமையுடன், கோடானு கோடி மக்கள் பூஜித்து பாடிய, பாடும் திருப்பாவை பாசுரம்
' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை தனக்குள் ஒரு முறை பாடினார்.
சொல்லாமல் சொல்லி, ஆண்டாளாக மாறி, கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது
''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது.
''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள்? ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா?
நாம் உடுத்துகின்ற உடைக்கும் 'கலம்' என்று ஒரு பொருள் உண்டே . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணனி ன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடையோ ?
அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?
விஷ்ணு சித்தரின் கேள்விக்கு 'ஆமாம் ஆமாம்' என்று மலர்கள் நந்தவனத்தில் தென்றல் காற்றில் பதிலாக தலையாட்டின
9. மாமாயன் மாதவன்
ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற்காலையில் வீடு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டினாள்
''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.
‘’அடியே! செவிடு, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே, காத்துக்கொண்டிருக்கோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறானே , கேட்டு அருள்வதற்கும் தான்!
அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய் கண்ணில் படுகிறாள். அவள் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.
''மாமி, மாமி, கொஞ்சம் அவளை எழுப்புகிறீர்களா? பாருங்களேன் எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்''
வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.
விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில் மகிழ்ந்து போனார்.
''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''
அப்படி என்ன கோதை எழுதினால் அன்று -- ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான நிகழ்ச்சி தான் அந்தச் சிறு பாசுரம் .
''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''
பூக்களைப் பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தித்தார்.
இந்த தூங்கும் பெண், ஏன் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாள் என்ற உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாள்.
கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள் ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப்பற்றி குறிப்பிடுவது அந்தப்பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.
விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது.
10வது விருந்து:
ற்றத் துழாய் முடி நாராயணன்
ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை. மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து விரதம் இருக்க அவள் முனைந்தாள். மற்ற பெண்களையும் அவ்வாறே அவன் அருள் பெற வழிகாட்டிய பெருந்தகை அந்தச் சிறு பெண் .
''மார்கழி பத்து .அல்லவா இன்று. வாருங்கள் பெண்களே, செல்வோம் உடனே. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம். துயில் கொண்ட பெண்களை எழுப்பி விரதத்தில் பங்கேற்க வைப்போம்.'' ஆண்டாளுடன் பெண்கள் சென்றனர்.
''ஆண்டாள் இன்று எங்களுக்கு நீ இயற்றிய பாடலைச் சொல்கிறாயா?
ஆஹா சொல்கிறேனே. பெண்களே, உங்களுக்கு ராமனைத் தெரியுமா?
''ரொம்பத் தெரியாதும்மா ஆண்டாள்? பாட்டி சொல்வாளே கதை. அதில் வருகிற ராமன் தானே? கோவிலில் வில் வைத்துக்கொண்டு நிக்கிறவர்? ''
''சொல்றேன் கேளுங்கள். போன ஜன்ம புண்யத்தாலே நாம் பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து ஒரு நல்ல வேலை செய்தான். என்ன தெரியுமா? ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் கோபத்தோடு வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த வீராதி வீரன், பொல்லாத ராமன், தன்னிடம் சண்டையிட்டு கும்பர்கணன் இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!
சில பெண்கள் இன்னும் தூங்குவதை வேடிக்கையாக இவ்வாறு ஆண்டாள் கேலி செய்வது, கூட இருந்த பெண்களை கலீர் என்று சிரிக்க வைத்தது. ஆண்டாள் கதவைத் தட்டி உள்ளே தூங்கியவளை
''சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு மார்கழி 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!'' என்றாள்.
இதைக்கேட்டு இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாய கிருஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர்.
''துளசி கமகமக்க, மாலையை போட்டுக்கொண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேட்பதற்கு காத்துக்கொண் டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.''
உற்சாகம் பொங்க அவர்கள் வழக்கம்போலவே அந்த விடியற் காலையில் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராடி நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.
ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த உறக்கம் பிடித்த பெண்ணை எழுப்பினர், என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள், என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம். இது அவள் சிறப்பாக இயற்றிய, ஈடிணையற்ற , என்றும் பெருமையுடன், கோடானு கோடி மக்கள் பூஜித்து பாடிய, பாடும் திருப்பாவை பாசுரம்
' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை தனக்குள் ஒரு முறை பாடினார்.
சொல்லாமல் சொல்லி, ஆண்டாளாக மாறி, கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது
''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது.
''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள்? ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா?
நாம் உடுத்துகின்ற உடைக்கும் 'கலம்' என்று ஒரு பொருள் உண்டே . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணனி ன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடையோ ?
அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?
விஷ்ணு சித்தரின் கேள்விக்கு 'ஆமாம் ஆமாம்' என்று மலர்கள் நந்தவனத்தில் தென்றல் காற்றில் பதிலாக தலையாட்டின
11வது விருந்து: (26,12.2016)
முகில் வண்ணன்
வானகம் வேறு வையகம் வேறு. அதை இங்கு காணமுடியாது. முடியும் என்கிற வகைCயில் பூலோகத்தில் சில இடங்கள் தேவ லோகங்களாக காட்சியளிப்பது விந்தையிலும் விந்தை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று ஆயர்பாடி . ஆயர்பாடி எப்போதும் கோலாகலமான ஒரு பூலோக வைகுண்டம் அல்லவா?
ஏற்கனவே அது ஒரு அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் போட்டி போட்டுக்கொண்டு நிறைய புஷ்பங்களை வாரி வழங்க, என் பங்குக்கு நான் சும்மா இருப்பேனா என்று தென்றல் அந்த அழகிய மலர்களின் நறுமணத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போகுமிடத்தில் எல்லாம் எங்கள் கிருஷ்ணனுக்கு எங்களது அன்புக் காணிக்கை என நறுமணத்தைப் பரப்ப, நான் என்ன இளைத்தவளா என்று யமுனை அழகாக தன்னுடைய குளுமையை அந்தக் காற்றுக்கு கொடுக்க ஆனிரைகளும், பறவைகளும் தங்கள் பொறுப்பாக இனிமையாக அந்த சிற்றூருக்கு தத்தம் அழகையும் சங்கீத ஓசையும், வளமையும் சேர்த்தன.
இந்தச் சூழ்நிலையில், எந்த ஒரு சிறு நிகழ்ச்சியும் அனைவரும் பங்குகொள்ளும் வைபவமாக ஆகி விடுவதில் என்ன அதிசயம்? ஆயர்பாடி சிறுமிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த புத்திசாலி சிறுமி ஆண்டாளோடு மார்கழி முப்பது நாளும் பாவை நோன்பு நோற்கிறார்கள் என்பது ஆயர்பாடி மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. அனைவரும் அந்த சிறுமிகளுக்கு நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள்.
இன்று மார்கழி 11ம் நாளை அவர்கள் ஆவலாக எதிர் கொண்டார்கள். ஆண்டாள் தலைமையில் அனைத்து சிறுமிகளும் சேர்ந்து தினமும் காலை நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனை போற்றி ராக பாவங்களோடு பாடி ஆடி பரவசமாக வீடு வீடாக சென்று பெண்களை எழுப்பி நோன்பில் பங்கு கொள்ள செய்வதல்லவோ வழக்கம் கடந்த பத்து நாட்களாக?. இன்று ஒரு செல்வ மிக்க கோபனின் பெண்ணுடைய வீட்டு வாசலில் ஆண்டாள் மற்றவர்களோடு நின்று குரல் கொடுத்தாள்.
அவளை எழுப்ப வேண்டுமே. ஆண்டாள் தன்னுடைய குரலில் மிக அழகாக பாடுவாளே. அந்த பாட்டிலேயே அந்த பெண்ணை ''உடனே நீ எழுந்திரு'' என்ற கட்டளையும் இருக்குமே.
"உன்னைத்தானடி அழகிய பெண்ணே, தங்கக் கொடியே, படிப் படியாய் பால் கறக்கும் எண்ணற்ற ஆனிரை உள்ள செல்வனின் மகளே, எதிரிகளைப் பொடிக்கும் வீரன் மகளே, எழுந்து வாடி, உனக்காக உன் வீட்டு முன் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். உன்னோடு சேர்ந்து நாம் அனைத்து பெண்களும் அந்த கார்மேக வண்ண கண்ணன், மாதவன் கேசவன் மேல் வாயினிக்க செவியினிக்க பாடுவோம் . உன் குரலும் இதில் சேர வேண்டாமா? இன்னும் என்னடி தூக்கம்? வா வெளியே".
ஆண்டாளின் இனிய குரல் கேட்ட அந்தப் பெண் எழுந்து மெதுவாக வெளியே வந்தாள்,அவர்களோடு சேர்ந்தாள். அனைவரும் யமுனையில் வழக்கம்போல நீராடி விரதமிருந்து அன்றைய நோன்பை ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்து வேண்டி சந்தோஷத்தோடு வீடு திரும்பினர்.
மேற்கண்ட பாசுரத்தை ஆண்டாளின் குரலில் தவழவிட்டு பாடிக்கொண்டிருந்தவள் கோதை என்கிற சிறுபெண். ஆயர்பாடியில் கேட்ட குரலின் உரிமைக்கு உடையவள் வில்லிபுத்தூர் கோதை.
இடைச்சிறுமிகள் ஆயர்பாடியில் ஆண்டாளோடு வீடு திரும்பும்போதுதான் விஷ்ணு சித்தரும் அருகில் இருந்த ரங்க மன்னார் ஆலயத்தில் திருப் பல்லாண்டு பாடிவிட்டு அரங்கன் பிரசாதத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
விஷ்ணு சித்தர் வீட்டில் நுழையுமுன்பே கோதையின் கணீர் என்ற வெண்கலக்குரல் அன்றைய திருப்பாவையின் முக்ய இடமான "சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி '' என்ற வார்த்தைகளை ஆலாபனம் பண்ணி பாடிக்கொண்டிருந்தது கேட்டு சிலையாக நின்றார் ஆண்டாளாக ஆகிவிட்ட கோதை முழுமையாக தான் அன்று எழுதிய பாசுரத்தை மீண்டும் முழுசாக பாடினாள். அது தான் இது:
''கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்''
ஆண்டாள் தன்னையே அந்த முகில் வண்ணனின் செல்வப் பெண்டாட்டியாக மனத்திலிருத்திக் கொண்டிருக்கிறாளோ?
இது ஒரு பக்கம் அவள் பக்தியை செய்தாலும், அவளது அரங்கன் பித்து அவரைத் திக்குமுக்காடவும் வைத்தது. இது நடக்கக்கூடியதா என்கிற அச்சம் வேறு உள்ளே அந்த முதியவரை உலுக்கியது.
ராமன் பிறந்தபிறகு முதியவன் தசரதன் மீண்டும் உடலிலும் உள்ளத்திலும் இளைஞனானான் என்று சொல்வது வழக்கம். ஆயர்பாடியில் ஆண்டாள் குரல் கேட்டு, கண்ணன் மேல் உள்ள அபிமானத்தில் கிழப்பசுக்களும் மீண்டும் இளமை பெற்று நிறைய பால் கரந்தனவாம். ஆழ்வார்களும் வைணவர்களும் நாராயணன் பெயரைச் சொல்லும் போதும், பாடும்போதும், நினைக்கும்போதுமே தன்னை மறந்த நிலையில் மகிழ்வோடு திளைத்தார்கள் என்பது நாம் எல்லாரும் அறிந்ததல்லவா?
இந்த களிப்போடு மார்கழி 12வது பாசுரத்தைச் சந்திப்போமே!
12வது விருந்து: (27.12.2016) J.k.sivan
மனத்துக்கு இனியன்
யாரோ எங்கோ கணக்கிட்டு பார்த்ததில் உலகிலேயே அதிகமாக பரிச்சியமான ஒரு இந்து கடவுள் கிருஷ்ணன் தான். அதற்குப்பிறகு ராமன் என்று சொல்கிறார்கள். அவர்கள் வாக்கிலே சந்தேகமே வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்றபடி பார்த்தாலே இங்கேயே நமக்குத் தெரிந்தவர்களிடையே அதிகம் பேசப்படும் தெய்வம், இஷ்ட தெய்வம் கிருஷ்ணன் தானே.
ஆயர்பாடியில் வழக்கம் போலவே நிறைய சிறுமிகள் ஆண்டாளை மொய்த்துக்கொண்டு அந்த அதிகாலையிலும் வீதியில் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஆண்டாள் மற்றும் சிலரை எதிர்பார்த்து காத்திருந்தாள். காற்று சில்லென்று வீசியதையும், பனி எங்கும் சூழ்ந்திருந்ததையும் அவர்கள் லக்ஷியம் பண்ணவே இல்லை.
'ஆண்டாள், பாடு. நீ தான் நிறைய தானாகவே இட்டுக்கட்டி நன்றாக படுவாயே. என்னவோ அம்மா. உனக்கு இயற்கையாகவே வெகு நன்றாக பாட்டும் வருகிறது அழகாக பாடவும் முடிகிறது. . அந்த கிருஷ்ணன் உனக்கு நல்ல குரலையும் கற்பனை வளத்தையும் வேறு பிரசாதமாக அளித்திருக்கிறான். கொடுத்து வைத்தவள் நீ. இன்று என்ன பாடப்போகிறாய் என்று காத்திருக்கிறோம்'.
'இதோ பாடுகிறேன்' என்று ஆண்டாள் சொன்னபோதும் அவள் எதையோ நினைத்துக்கொண்டிருந்தாள் என்று ஒரு பெண்ணுக்குத் தோன்றியது.
“ஆண்டாள் என்னடி இன்று ஒருமாதிரி இருக்கிறாய்?”
“ஒண்ணுமில்லை. தினமும் இவர்களை நாம் போய் எழுப்பி, கிளப்பி, நோன்பில் பங்கேற்க வைக்க வேண்டியிருக்கிறதே. அப்படி என்ன தினமும் நாம் அவர்களை எழுப்பும் கடிகாரம் போல் ஆகி விட்டோமே என்று யோசித்தேன். ஆனால் இப்படி இவர்களை துயிலெழுப்பும் போதும் அந்த மாயகிருஷ்ணனின் நினைவோடும் அவன் பெருமை பாடும் பாசுரங்களை பாடிக்கொண்டும் இவ்வாறு செய்வது மனதிற்கு இனிக்கிறது. ஒரு வேடிக்கை பார்த்தாயா?''
“ இதோ அந்த கோபாலனின் நண்பன் சுதாமாவின் வீட்டு வாசலில் நிற்கிறோமே. இன்று மார்கழி 12 இந்த வீட்டுக்கும் நம்பர் 12, என்ன பொருத்தம்!. இந்த வாசல் முன்புறத்தில் மேலே கூரையில்லை. மார்கழி பனி நம் தலை பூரா மழையென நனைத்து குளிர் காற்றில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. கீழே பார்த்தீர்களா?. இதென்ன அதிசயம்! சுதாமாவின் வீட்டு செழுமையான எருமைகளில் ஒன்று என்ன செய்கிறது பாருங்கள் பெண்களே! அதன் கன்று மெதுவாக அருகில் வர, பரம ஆனந்தத்தோடு அந்த தாய் எருமை அதன் மடியில் வெள்ளம் போல் தானாகவே சுரக்கும் பாலை எல்லாம் கீழே விழ வைத்து இங்கு நிற்கும் நம் கால்களை நனைத்து நம் கால்களுக்கு பால் அபிஷேகம் நடக்கிறதே!
மேலே பனிநீர், பன்னீருக்கு பதிலாக, கீழே பால்! இரண்டு அபிஷேகம் ஒரே சமயத்தில்!! ஏன் தெரியுமா?
அந்த கிருஷ்ணனை நாம் பாடிக்கொண்டே நிற்பதால் தான்.
''கோபாலனின் தங்கையே, உன்னைத் தானடி பெண்ணே, நாங்கள் வாசலில் பாடி நிற்பது தெரிந்துமா இன்னும் கதவு தாள் திறக்கவில்லை நீ? எங்கள் பாட்டைக் கேட்டு அண்டைஅசல் வீட்டு வாசலில் கூட எல்லாரும் எங்களை வரவேற்று பால், பூ, பழங்களோடு நிற்க நீ என்னடி இன்னும் படுக்கையில் கண் மூடி கிடக்கிறாய்? சீக்கிரம் வந்து சேர்ந்துகொள். இன்று உனக்கு பிடித்த ராவண சம்ஹார மூர்த்தி ராமனைத்தான் போற்றி பாடுகின்றோம். வா, சீக்கிரம் வெளியே”.
இது பாட்டாக வெளிவந்தது. ஆண்டாள் மிக நன்றாக பாடுவாள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. அவள் பாடியதை மற்ற பெண்கள் ஒரே குரலில் திருப்பி சொன்னது அண்டை அசல்வீடுகளில் இருப்போரை எல்லாம் எழுப்பிவிட்டது. தூங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்ணும் வந்து விட்டாள்,
அனைத்து பெண்களுமாக சென்று வழக்கம்போல் யமுனையில் அமிழ்ந்து நீராடி கண்ணனைப்பாடி மனம் உடல் தூய்மையுடன் தங்களது அன்றைய பாவை நோன்பை இனிது முடித்து வீடு திரும்பினார்கள் என்பது இந்த 12 நாட்களாக திரும்பத் திரும்ப சொல்வது வழக்கமாகி விட்டதல்லவா?
அதேபோல் நாம் வழக்கமாகச் செல்லும் வில்லிபுத்தூர் கிராமத்தில் ஒரு ஆஸ்ரமத்தில் என்ன நடக்கிறது என்றும் அறிவோம்
விடியற்காலை நிசப்தம். பட்சிகள் கூட இந்த அரை இருட்டில் வெளியே வர தீர்மானிக்க வில்லை. மரங்களில் இலைகள் சல சல வென்று காற்றில் ஆடி மலர்ந்த மலர்கள் கீழே விழுந்து வண்ண வண்ணப் பாய் விரித்தன. சாதாரணப் பாயை விட மென்மையானது மட்டுமில்லை, வாசனையும் சேர்ந்த அதிசயப் பாய்.
''அந்த தீபத்தைச் சற்று பெரிதாக தூண்டி விடு கோதை, என்னால் இந்த ஓலையைப் படிக்க முடியவில்லை.''
'நீங்கள் எதற்கப்பா சிரமப்படுகிறீர்கள். நானே பெரிதாக இன்று மாக் கோலத்தில் வாசலில் அந்த பாசுரத்தை எழுதியிருக்கிறேன் பாருங்கள். விஷ்ணு சித்தர் சுவற்றை பிடித்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றார். இருட்டிலும் வெள்ளை வெளேரென்று மாவில் கோலம் அதன் நடுவே பாசுரம் பெரிய எழுத்தில் ...
விஷ்ணு சித்தர் ஆர்வமுடன் அந்த பாசுரத்தைப் பார்த்து படித்தார்.
''கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்''
''அடாடா, இந்த கோதை எவ்வளவு பக்குவப்பட்டவள். கண்ணனும் ராமனும் ஒன்றே. அவர்களுள் என்ன வித்யாசம் என்பதை ஒரே வார்த்தையில் ஆணி அடித்தாற்போல் சொல்லி விட்டாளே ! ராமன் தனது எதிரிகளாலும் விரும்பப்படுபவன். கிருஷ்ணனும் அவ்வாறே எதிரிகளாலும் மதிக்கப்படுபவன். கண்ணனை கண்ணுக்கினியான் என உணர்த்தும்போது ராமனை மனத்துக்கினியான் என்றல்லவோ அலங்கரிக்கிறாள்!
நெஞ்சம் உருகி கண்ணீராக வெளிவந்ததை ''ஹே ரங்கா, ரங்கா'' என்று உச்சரிப்போடு துடைத்துக்கொண்டு உள்ளே திரும்பினார் பெரியாழ்வார்
13 வது விருந்து: (28.12.2016)--J.K.SIVAN
புள்ளின் வாய் கீண்டான்
திருப்பாவையின் சிறப்பு அதை எழுதியவள் ஒரு சிறு பெண்.
படிக்காதவள் என்று சொல்வது தவறு. பீஸ் கட்டி பள்ளியிலோ காலேஜிலோ முதுகில் பொதி சுமந்து பொருத்தமில்லாத ஒரு வர்ணத்தில் ஒரு உடையை யூனிபாரம் என்று அணிந்து விஷயமே தெரியாதவர்களிடம் தெரிந்து கொள்வது தான் படிப்பு என்று நாம் எண்ணினால் அது கிருஷ்ணனால் கூட மன்னிக்க முடியாத ஒரு தவறு.
கல்வி புத்தகத்தில் இல்லை. அனுபவத்தில் உள்ளது. அதை உணர்விப்பவர் பொறுப்போடு, விருப்போடு தனக்குத் தெரிந்ததை புரியும்படியாக பாலாடையில் புகட்டுவது போல் உள்ளே செலுத்தினால் தான் படிப்பு. முன்னோர் எந்த தேசத்திலும் அப்படித்தான் கற்றனர். ஆண்டாளின் திருப்பாவை தமிழ் யாப்பு இலக்கணத்தில் அளவான சீர் வரிசைகளோடு மிளிர்கிறது. ஆண்டாள் எங்கே இதை பயின்றாள் ?.
பெரியாழ்வாரிடமிருந்து என்றால் அங்கே அவர் பாசுரங்களில் நெருடுகிறதே?. எளிதில் புரியும்படியாகவும் அமைய வேண்டும், அர்த்தம் பலமுள்ளதாகவும் இருக்கிறது. பெரிய அளவில் சிந்திக்க வைக்கும சிறு சங்கதிகள். பாடுவதற்கு எளியதானவை.
M L வசந்தகுமாரி , அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், அவர்களைத் தொடர்ந்து காலம் காலமாக எத்தனையோ பேர் இன்று சயந்திரம் வரை பாடுகிறார்களே, ஒருவராவது திருமுருகாற்றுப்படையை இப்படி பாட முடிகிறதா? உபமானம் உபமேயம் எத்தனை அழகாய் எல்லோருக்கும தெரிந்ததாக கொடுத்திருக்கிறாள் ஆண்டாள். அதனால் தான் வருஷத்தில் குறைந்தது ஒரு மாதம் முழுதுமாகவாவது நம்மை குளிர்விக்கிறாள்.
விஷ்ணு சித்தர் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார். இது அந்த மாயன் ரங்கனின் அருள். தாயாரையே அவன் தன்னிடம் அனுப்பி தமிழில் விளையாட விட்டிருக்கிறான். என்னே அவன் கருணை.
''இன்னிக்கி என்னம்மா பாடப்போறே.?''
அதி காலையிலேயே அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை அந்த புண்யவதி கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.
''இதோ பாருங்கள் அப்பா. இந்த அகலமில்லாத சிறு ஓலையில் எழுத்தாணியால் தாராளமாக எழுத்துக்களை வடிவமைக்க இயலாதல்லவா?. உங்களால் படிக்க முடியாது. ரொம்பவுமே நெருக்கி நெருக்கி எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''. பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள்
'' புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.''
இந்த பாசுரம் விஷ்ணு சித்தரின் மனதில் ஆயர்பாடி நிகழ்ச்சியை, கண்கள் மூடியிருந்தும் தெளிவாக மனத்திரையில் பளிச்சிட்டது. அவள் பாடும்போது அவர் வைகுண்டத்தில் இருந்தாரா வில்லிப்புத்தூரிலேயே இருந்தாரா என்றால் ரெண்டிலுமே இல்லாமல் இரண்டும் கலந்த தெய்வீக ஆயர்பாடியில் ஆண்டாள் அருகே தான் இருந்தார். இடைச்சிறுமிகள் அங்கே ஆண்டாளுடன் பேசுவது காதில் விழுகிறதா?.
“இன்று என்ன கிழமை ஆண்டாள்? வெள்ளிக்கிழமைதானே?''
''தாமோதர கிழமை''
''அப்படி ஒரு கிழமை இருக்கா என்ன?''
“எல்லா நாளும் கிருஷ்ணன் நாள் தான் எனக்கு என்று சொல்லி மேலே பார்த்தாள் ஆண்டாள்.
''என்ன பார்க்கிறே?''
''அதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது, மார்கழி 13வது நாள் என்று எடுத்து கொள்ளேன்? சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்கு போய் எழுப்பி கூப்பிட்டு கூட்டிச செல்வோம். நல்லவேளை, இந்த பெண்ணின் வீடு நாம் வழிபடும் யமுனை நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே. வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற கொக்கு ராக்ஷசன் பகாசூரன் தான் ஞாபகத்துக்கு வருகிறான். அவன் கிருஷ்ணனை மோதி வாய் கிழிந்து வசமாக மாட்டிகொண்டு வதமானதையே இன்று பாடுவோம்.
தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா, அற்புதமாக பறவைகளின் கானம் மரங்களில் கேட்க, குளிர் நீரில் சுகமாக முகம் கை கால் உடம்பு பூரா சில்லென்று புத்துணர்ச்சி அளிக்க எங்களுடன் சேர்ந்து வந்து நீராடு, நமது பாவை நோன்பு இன்று நன்றாக நடக்கட்டும் .
ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:
“ஆனாலும் இந்த ஆண்டாள் ஒரு ராணி தான்டீ. என்னமாய் நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை நடத்த செய்கிறாள்."
மேலே சொன்ன காட்சி எளிதாக ஓடினாலும் பெரியாழ்வார் அந்த சிறிய எளிய பாசுரத்தின் உட்பொருளில் மூழ்கினார்.
ராமனும் கிருஷ்ணனும் ஒருவரே. ராவணனின் 10 தலைகளையும் நொடியில் கிள்ளி எறிந்தான் ராமன். பகன் என்னும் நாரை வடிவில் வந்த அசுரனையும் கிருஷ்ணன் அவ்வாறே எளிதில் வாயைக் கிழித்து கொன்றான். என்ன சொல்கிறாள் ஆண்டாள்?
. உலக ஆசா பாசங்கள் என்னும் அலைமோதும் உலகம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளிக்கிறோம் .
இந்த கடலில் ஒரு சிறு தீவு நாம் எல்லோரும். ஆண்டாள் ஏன் ராமனை நினைக்கிறாள் தெரிகிறதா? இந்து மகா சமுத்ரத்தில் இலங்கை ஒரு துக்குணியூண்டு தீவு. அதற்கு சர்வாதிகாரி இராவணன் எனும் அரக்கன். உலக சமுத்ரத்தில் நாம் ஒரு கொசு தீவு. நம்மை ஆட்டுவிப்பவன் மனம் எனும் ராவணன். அந்த தீவில் சிக்குண்டு தவிக்கும் சீதை தான் நமது மனத்தின் தளைகளால் கட்டுண்டு தவிக்கும் ஜீவாத்மா. நிர்கதியான சீதைக்கு ஒரு ஹனுமான்.நமக்கு வழிகாட்டுபவள் ஆண்டாள். இலங்கையை அடைந்து ராவணனைக் கொன்று சீதையை காப்பாற்றினவன் ராமன். சிக்குண்டு தவிக்கும் நமது ஆன்மாவுக்கு தெம்பு அளிப்பது கிருஷ்ணனின் மூல மந்த்ரம்.
'' ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'
ராமன் வந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்டது போல் நாம் அவன் தாளையே சரணாகதி என்று அடைந்தால் நம்மை சம்சார சாகரத்திலிருந்து மீட்டு கண்ணன் மோக்ஷ பதவி பெற வைப்பவன்.
இந்த எண்ணம் பெரியாழ்வார் சிந்தனை மூலம் நம்மில் வேலை செய்யட்டும்.
14வது விருந்து: (29.12.2016)
பங்கயக் கண்ணான்
கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய் விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை கொழிக்கிறதே அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆயர்பாடி கிராமம் எவ்வளவு தெய்வலோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே அங்கே வாழ்ந்தபோது!
இத்தகைய கிராமியச் சூழ்நிலையிலே மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டது. .
ஆண்டாள் எப்போதுமே ஒரு இயந்திரம் மாதிரி.
சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள்.
அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. வழக்கம்போலே ஒரு சிலரைத்தவிர.
ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.
''ஆண்டாள் இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக்குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "
ஆண்டாள் சிரித்துக்கொண்டே தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டி எழுப்புகிறாள்.
''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் செல்வதை வெளியே வந்து பாரேண்டி? வெள்ளையாக தாடி மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன் மூலம் தான் பெருமாள் முன் நின்று பரவசத்தோடு அவர்கள் சங்கத்தை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப்போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''
ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. வில்லிப்புத்தூரிலும் முதல் நாள் பெய்த மழை இன்னும் முழுதும் நிற்கவில்லை. எனினும் அதிகாலையில் அன்றும் எழுந்த விஷ்ணுசித்தர் ஸ்நானம் முடிந்து பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதை ரசித்து படித்தாகி விட்டது. அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாள் நினைவில் நின்றாள்.
மார்கழி முப்பது நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்றே அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எதற்காக? தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற ஒரு ஆர்வம்!
மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து அந்த வார்த்தைக் கோவையின் அழகைப் படித்தார்.
'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று தென்பட்டாலும் அதன் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது.
ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம் என்றால் அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. என்ன ஞானம் அந்த சிறு வயதிலேயே அவளுக்கு!
நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே .'வா வந்து கிருஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல! அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழிகாட்டுகிறாளே !
''அப்பா'' என்று கோதை அழைக்கும் குல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு விஷ்ணு சித்தர் மனம் வில்லிபுத்தூர் ஆஸ்ரமம் திரும்பவே அவர் தானாகவே கோதையை நோக்கி உள்ளே சென்றார்.
15வது விருந்து: (30,,12.2016) J,K,SIVAN
வல்லானைக் கொன்றான்
ஆயர்பாடியில் மார்கழி மாதம் ஒரு மகோன்னத வைபவமாக காணப்பட்டது. ரொம்ப சிறிய கிராமம். அதில் சில வீடுகளே இருந்தன. எல்லோருமே ஒருவரை ஒருவர் வெகுவாக நெருக்கமாக தெரிந்தவர்கள். அநேக வீடுகளில் இருக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு விரதம் அனுஷ்டிக்கிறார்கள் என்பதில் எல்லா வீட்டு கோப கோபியரும் பெருமிதம் அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு. அந்த ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக உற்சாகமாக கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களையும் விடியற்காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பை பண்போடு செய்ய வைக்கிறாள் என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.
வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். வைதேகி பொல்லாத வாயாடி.
“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!” ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் அவள் பதிலுக்கு குரல் கொடுத்தாள் .
“ஆண்டாள், உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே தான். இவ்வளவு சீக்கிரமே ஏண்டி வந்து எழுப்பறே, எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர்? என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,
“எல்லாருமே வந்தாச்சு. கூட்டமாக யமுனா நதிக்கும் கிளம்பி நடந்தாச்சு. இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பத்தி நீ அடிக்கடி பாடுவாயே அதை எல்லோரும் கேட்கப் போகிறோம். உடனே அதைப் பாட சீக்கிரமா எழுந்து வாடி”
யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகவே தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில் அவளுக்கு நிகர் அவளே தான். இதுவரை தூங்கிக்கொண்டிருந்த அந்தப்பெண் எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள், யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். அவள் நன்றாக பாடக்கூடியவள் . அந்த கிருஷ்ணனே கேட்டு மயங்கினான் என்றால் பாருங்களேன். . அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.
நாமும் இதோ வில்லிப்புத்தூருக்கு திரும்பிவிட்டோம்.
கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். விஷ்ணு சித்தர் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றி அன்றாடம் அருகே இருந்த ரங்க மன்னார் என்ற பெயர் கொண்ட வட பத்ர சாயீ கோவிலில் சொல்வதை அனேக பக்தர்கள் கேட்பார்கள். அவர்கள் பாசுரத்தின் அழகிலும் உட் கருத்தின் திண்மையிலும் ஆச்சர்யம அடைந்தனர். பரம சந்தோஷம். ஆஸ்ரமத்துக்கு அவரைத் தேடி வந்தவரும் தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க வந்துவிட்டார்.
''கோதை அவருக்கும் ஒரு தடவை இன்றைக்கு நீ எழுதிய பாசுரத்தை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கார். அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதை கேட்கிறேனே.''
கோதை அமர்ந்தாள் . எதிரே ஓலைச் சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் இது தான்.
''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு, தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த மகாலட்சுமி தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தோன்றுகிறது. இதிலே உள்ள உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும்.''
''ஒருத்தர்கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும்.'' ஆயர்பாடிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவனாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும். லோக க்ஷேமத்துக்காகவே தான் இந்த பொண்ணு இதை பாடியிருக்கா, சுவாமி.''
முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் தான் அப்பறம் முதல்லே ஆண்டாளோடு நோன்புக்கு வந்தா. இதற்கென்ன அர்த்தம்?
வைஷ்ணவன் என்பவன் யார்? விஷ்ணுவின் அம்சம். விஷ்ணு யார்? யார் என்ன தவறு செய்தாலும் பொருமை யாக அவர்கள் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து, நல்வழி காட்டி, அப்படியும் திருந்தாதவனை தண்டிப்பவன். தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன் உதாரண புருஷன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன்.
ராமன் காட்டுக்கு சென்றதற்கு தன் தாயோ, கூனியோ காரணம் இல்லை, தானே என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி. இதைத்தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.
கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். அவர் தனக்குள் முணுமுணுத்தது காதில் விழுகிறது:
'ஆண்டாள், கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணூரர்களைக் கொன்றதும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள் தெரியுமா? ஒவ்வொருவனுக்குள்ளேயும், காம, க்ரோத, மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணூரர்கள் இருக்கிறார்களே அந்த கிருஷ்ணன் துதி பாடி அவர்களையும் ' கொல்லப்பா என் செல்லப்பா' என்று வேண்டிக்கொள்ளவே.''
16வது விருந்து: (31.12.2016) J.K. SIVAN
''மா மாயன் மணிவண்ணன்''
இன்று விடியற்காலையில் சில பசுக்களும் கன்றுகளும் கூட அல்லவா ஆண்டாளுடனும் அவள் தோழிகளுடனும் சேர்ந்து நடக்கின்றன .
யமுனைக்கு சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள், மற்ற பெண்களையும் எழுப்பி நீராட. வைக்க.
இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே. . இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும் புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் வேண்டும் இச் சிறுமிகள் இப்போது யமுனையில் நீராடி நோன்பிருந்து விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
'ஆண்டாள், இப்போ எங்கேடி போகிறோம்?''
'நந்தகோபன் அரண்மனை போன்ற வீட்டுக்கு.
'' இன்று என்ன விசேஷம்.?
''என் கூட வாருங்கள், தானாகவே தெரியும்.''
இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?
ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக்கொண்டிருக்கிறான்.
யாரும் உள்ளே நெருங்க முடியாது. ''கண்ணனை''க் ''கண்'' போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். ஏன்? நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் எந்த நேரமும் அணுகுகிறதே அதனால் தான்.
''சிறுமிகளா, யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த வேளையிலே? இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு?''.
''அய்யா, வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய உங்களது பெரிய கோட்டை மணிக்கதவை திறவுங்கள். எங்களை உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்
'' சிறு பெண்களா முதலில் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள், யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''
''இந்த தெய்வீக மார்கழி மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அல்லவா அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் குறுக்கிடாது தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''
''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''
''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"
''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.
''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோப குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள். புரிகிறதா?''
''இங்கேயே சற்று இருங்கள். பொறுங்கள். நான் கிருஷ்ணனிடம் சென்று அனுமதி தருகிறானா என்று கேட்டுத்தான் உங்களை உள்ளே விடமுடியும்'' என்ற காவலாளி உள்ளே சென்றான். அவர்கள் அங்கேயே பாடிக்கொண்டு நின்றார்கள்.
உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே விட்டான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.
ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் அதே நேரம் தான் வில்லிப்புத்தூரில் ஆஸ்ரமத்தின் தட்டி வாயிற் கதவைத் திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள்.
அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டி ருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு நகர்த்தி இனிமையான குரலில் அன்று இயற்றிய பாசுரத்தைப் பாடினாள். மேலே கண்ட காட்சி அவள் செய்த அற்புதக் கற்பனையாக, தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக, பக்தி சொட்ட வெளிப் பட்டது.
'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்''
''அம்மா, கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''
''அப்படி என்னப்பா எழுதினேன் ?'' சிரித்தாள் கோதை.
''சொல்கிறேன் கேள்: முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' -- விஷ்ணு சித்தர் கேட்டார்..
''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?''
''கிருஷ்ணனை வேண்டித் தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் (15 நாள்) ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம். பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் ஆழ்வார்.
எவ்வளவு ஆழமான அர்த்தம் பார்த்தீர்களா!
17வது விருந்து: (1.1.2017) j.k. sivan
17. உலகளந்த உம்பர் கோமான்
நேற்றைய விருந்தாகிய திருப்பாவை பாசுரத்தில் என்ன பார்த்தோம்?
ஆண்டாள் மற்ற ஆய்ப்பாடி பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் பற்றிய நமது இந்த குட்டிக் கற்பனை மார்கழி 17வது நாளாகிய இன்று இடம் பெறுகிறது.
உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.
நந்த கோபன் படுக்கையிலிருந்து எழுந்தவர் முதன் முதலாக இந்த சிறுமிகளின் முகத்தில் தான் விழித்தார் என்றே வைத்துக் கொள்ளலாம்.
ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :
''குழந்தை, யாரம்மா நீ, நீங்கள் எல்லாம் எதற்கு இங்கே அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''
''ஐயா, மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி வழங்கி அன்போடு அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.''
இதற்குள் யசோதை அங்கு வந்துவிட்டாள் . இக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தித்தாள்
அருகில் அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள்
''எங்களின் தாய், அம்மா, யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம், அவற்றை கண்காணிக்கும் எங்கள் ஆயர் பாடி கோபர்கள் மற்றும் வீட்டில் உள்ள கோபியர் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். உங்களைத் துயில் எழுப்ப திருவுள்ளம் கொண்டு வந்தோம் தாயே. எங்களை ஆசிர்வதிப்ப்பீர்களாக''
இதற்குள் கிருஷ்ணனைக் கண்டு விட்டாள் ஆண்டாள். அருகே துயில் கொண்டிருந்த பலராமனையும் பார்த்துவிட்டவள் வணங்கினாள்.
''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.!
''எங்கள் தலைவனின் சகோதரா, அழகிய வீர பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.''
''எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''
இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது. ஞாபகம் வந்தபோது சொல்கிறேன் !!)
ஆண்டாள் அழகாக அன்று அவர்கள் அனைவரையும் வணங்கி போற்றி ஒரு அழகான பாசுரம் பாடுகிறாள். தோழியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ரகலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.
ஆண்டாள் பாடியது எங்கோ தென்கோடியில் உள்ள வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் காதிலும் விழுந்தது.
இதை யார் பாடுகிறார்கள்?
ஆண்டாளா கோதையா?
ஆஹா! ஆண்டாள் கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடையென பாசுரம் ஒன்று பாடுகிறாள்.
இல்லை, இல்லை, ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் மற்றொரு இளம்பெண் கோதை அல்லவோ ஆண்டாளாகி இதைப் புனைகிறாள்.
ஏட்டில் எழுத்தாணி விரைகிறது.
வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை நிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. இனி காலம் காலமாக அந்தக் காணற்கரிய நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் எழுத்துச் சிலையாக என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.
இதோ அந்த அற்புத பாசுரம்.
''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்'
தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இது வரை நூறு தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை படித்து வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.
இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியை கீழே வைக்க மனம் வரவில்லையே. எதிரே மலர்களைத் தொடுத்துக்கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.
''பாமாலையில் மகிழ்ந்த அரங்கா உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் சூடிக்கொள்''.
18 வது விருந்து: J.K. SIVAN
'' உந்து மத களிற்றன்''
அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி. அடடா! எவ்வளவு புண்யசாலி. சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண். இல்லவே இல்லை. மிக உயர்ந்த படிப்பான ஞானத்தில் பிறக்கும்போதே தேர்ந்த உயர்ந்த பெண். சாதி உடம்புக்கு தானே. உள்ளத்திற்கேது?
சாக்ஷாத் பரமாத்மன் நாரயணனே, தான் வளர, ஆயர்குலத்தைதானே தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தான்,
உலகில் உத்தமமான, பூஜிக்கத் தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்குலம் (higher குலம் )என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. ஆண்டாள் நினைத்ததை சாதிப்பவள்.
நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேலையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை இங்கே துயில் எழுப்பாமல் விட்டு விட்டேன் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா, இவளை விடலாமா என்று அவர்கள் அனைவரும் அவளை ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.
''அழகிய நப்பின்னையே (நீளா தேவி) , கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.
அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது. அனேக பசுக்கள், எருமைகள்,கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவர்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே.
அதோ பார், மல்லிப் பந்தல் முழுதும் குயில் கூட்டம் என்னமாக சூழ்ந்து கொண்டு பேசுகின்றன. மல்லிகை மலர்ந்து மணம் வாரி வீச அவற்றை அனுபவித்து தென்றலில் விடியலின் குளுமையில் லயித்து குயில்கள் கூவ, அவைகளின் இனிய குரலோசை, குழலோசையாக துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே தினமும். பந்து விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற. உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.''
நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.
அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.
சூர்ப்பனகை சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.
ஆண்டாளின் இந்த இந்த பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிகொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு. அதை சுருக்கமாக சொல்கிறேன்.
ஸ்ரீ ராமானுஜருக்கே திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர். பெயரை வைத்ததே அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள். என்ன காரணம் ?
ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும் அனுபவமாயிற்றே. அடிக்கடி ஆண்டாள் பாசுரங்களை பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம்.
அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் இந்த 18வது திருப்பாவை ''உந்து மதக் களிற்றின்''
ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் ''உந்து மதக்களிற்றின்'' பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் நின்ற சமயம் அவரது ஆசார்யனின் பெண் வாசல் கதவை திறந்த அந்த நேரம், ராமானுஜர் பாசுரத்தின் மற்றொரு அடியான ''செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்'' என்ற வரியை பாடிக்கொண்டிருந்தார். '' வளை ஒலிப்ப'' என்று சொல்லும் போது தான் தற்செயலாக அந்தப் பெண் கையில் வளைகள் அணிந்து வந்து, கதவைத் திறந் தாள்
கை வளை ஒலிக்க ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றியதாக ராமானுஜருக்கு மனதில் பட்டது. அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர் மூர்ச்சையானார். பெரிய நம்பி ஆச்சர்யருக்கு விஷயம் சென்றது.
''வாசலில் என்ன சத்தம், என்னம்மா அத்துழாய் நடந்தது?''
''வாசலில் பிக்ஷைக்கு யாரோ வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். உங்கள் சீடர் ராமானுஜர் தான் நின்றார். என்னைகண்ட அடுத் த வினாடி அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ஏன் எதற்கு விழுந்தார் என்று தெரியவிலையே ''
அப்போது அவர் என்னபண்ணிக்கொண்டிருந்தார்?.
''ஏதோ சீரார் வளை ஒலிப்ப '' என்று உச்சரித்துக்கொண்டிருந்தார்.''
''ஓஹோ ராமானுஜன் உந்து மதக்களிற்றன் பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக்கரங்களோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வரும் காட்சியை நினைவூட்டி இருக்கும். ஆண்டாளே நேரில் வந்து கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்'. அந்த ஆனந்தானுபவத்தில் தன்னை இழந்திருக்கிறான்' என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு ''திருப்பாவை ஜீயர்'' என்ற பெயரும் இட்டார்.
அது சரி ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? . காரணம், ஆண்டாள் பூமி தேவி. அவளது சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிவது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!! இதோ அந்த பாசுரம்:
''உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''
மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம் வில்லிப்புத்தூரில். எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப்பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணத்தோடு கலந்து மேலும் இன்ப மூட்டியது. கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி மேலே காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.
''அம்மா கோதை, நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி. நான் இப்போதெல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டாக கட்டித் தூக்கி ஆயர்பாடியிலே வைச்சுட்டியே. நான் கேக்கறதெல்லாம், '' என்னை ஆயர்பாடியிலேயே வச்சுடு. அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் அவள் எங்கெல்லாம் போறாளோ அவள் கூடவே போறேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிற காரணம் என்ன என்பது உனக்கு தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள் :
''நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே நீதான் ஆண்டவள் ''
19வது விருந்து J.K. SIVAN
'' மலர் மார்பா''
மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளான். எனவே மார்கழி ஒரு உன்னதமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் உண்டே. அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் நாம் ஆயர்பாடி செல்வோம்.
இதுவரை நமது பயணம் சுகானுபவமானதற்கும் நன்றி சொல்வோம்.
அன்று, 19வது நாளில் ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது நமது கட்டுரையின் இன்றைய பகுதி அல்லவா?
அந்த கிராம சிறுமிகள் கள்ளம் கபடமில்லாத கல்மிஷமில்லாத தூய மனம் கொண்டவர்கள். உள்ளே சுத்தமாக இருப்பினும் புறமும் சுத்தமாக இருக்க யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணன், நாராயணன் என்ற திருநாமங்களே நிரம்பி வழிய, இந்த தனுர் மாதம் பூரா தங்களை பகவத் சிந்தனையில் ஈடுபடுததிக் கொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே?
திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் வேறு எங்கு செல்ல வழி இருக்கிறது ?
ஆண்டாளும் அவள் இடைச்சிறுமி தோழிகளும் ஆயர்பாடியிலே மிகப்பெரியதான -- ''பெரிய கடவுள்'' -- உள்ளே இருக்கும், நந்த கோபன் மாளிகைக்கு இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு? சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு சுற்றாதா? வழக்கம் போல்கண்ணனைத் துயிலெழுப்பவே!!
நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை அந்தப் பெண் ஆண்டாள் எவ்வளவு விவரமாக வர்ணிக்கிறாள் பாருங்கள். அவள் குரல் அந்த விடியற் காலையில் எங்கும் சஞ்சரித்து, அருகே யமுனையின் நீர் பரப்பின் மேல் மோதி எதிரொலிக்கிறதே காது கேட்கிறதா? அதைத் தொடர்ந்து பின் பாட்டு பாடுவது போல் எண்ணற்ற பறவைகளும் உயர்ந்த குரலில் இன்னிசை கீதம் இசைக்கின்றனவே.ஆண்டாளின் குரல் கணீரென்று எப்போதும் முழங்குமே .
'குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்''
+++
இங்கே வில்லிப்புத்தூரில் ......
விஷ்ணுசித்தர் மனம் ஆயர்பாடியில் இருக்கிறது. உடல் ஆஸ்ரமத்தில், வில்லிப்புத்தூரில் ஒரு தூணில் சாய்ந்தவாறு விளக்கொளியில் தெரிகிறது.
அந்த விடியற்காலை நேரத்திலும் அருகே கோவிலில் அர்ச்சனை செய்யும் பட்டாச்சார்யர் அவரைத் தேடி ஆஸ்ரமத்தில் நுழைகிறார். உள்ளே கோதை அன்றைய மேற்கண்ட பாசுரத்தை பாட ஆரம்பித்து விட்டாள் . இருவருமே உட்கார்ந்து கோதை பாடிகொண்டிருக்கும் பாசுரத்தின் இனிமையிலும் அவள் பாடிய இனிய குரல் இன்பத்திலும் லயித்து சுகானுபவம் பெறுகிறார்கள்.
''மைத்தடம் கண்ணினாய் நீ'' என்கிற இடத்தில் கோதை வெகு அனாயாசமாக ஆத்மபூர்வமாக ஆலாபனம் விஸ்தாரமாக பண்ணி அவர்களை வைகுண்டத்திற்கே கொண்டு செல்கிறாள்.
பட்டாச்சார்யர் விஷ்ணு சித்தரைக் கண்டு வணங்கினார்
''விஷ்ணு சித்தர் சுவாமிகளே, சமீபத்தில் உங்களை அடியேன் தரிசிக்க நேரவில்லை. நேற்று சாயங்காலம் ஊரிலிருந்து வந்ததிலிருந்து உடனே உங்களை தரிசித்து பாவை நோன்பு பாசுரங்களின் விளக்கம் கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறது. இதோ இப்போது கோதை பாடினாளே அதன் விளக்கம் எனக்கு உங்கள் வாயிலாக அளிப்பீர்களா?
''சுவாமின், என் பெண் என்பதற்காக சொல்லவில்லை. மற்ற சில பாசுரங்களை விட என் கோதை அருளிச்செய்கிற இந்த திருப்பாவை பாசுரங்கள் புரிந்துகொள்ள அவ்வளவு கடினமில்லை.
எதையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் சூக்ஷ் மம் இருக்கிறது. அவரவர் மனத்திற்கு, எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் விளங்கும்'' என விஷ்ணு சித்தர் நெஞ்சம் தழு தழுக்க சொன்னார்.
வில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவில் பட்டாச்சார்யார் பரம சந்தோஷத்தோடு விஷ்ணுசித்தர் வாயிலாக என்ன அறிந்து கொண்டார் என்பதை நாமும் தெரிந்து கொள்ளவேண்டாமா ?
''குத்து விளக்கு சாதாரண பெட்ரூம் விளக்கோ, அகலோ, அல்ல. பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமன் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கமகமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
மெதுவாக ஆண்டாள் கதவைத் தட்ட நப்பின்னை விழித்துகொண்டு கிருஷ்ணனை பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது?
வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது---
‘ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயை திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே, கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்துவிடுவானோ'' என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ நாங்கள் அவனை எழுப்ப விடமாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும். நீ செய்வது தகுமா, ஞாயமா, முறையா? இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தானே அம்மா ! '' என்றவாறு அவளை வணங்கிவிட்டு அந்தப் பெண் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது''
இது தான் அந்த பாசுரத்தின் சாராம்சம் என்று ஆண்டாள் பாடியதாக அமைந்துள்ளது இந்த அழகிய கற்பனை வளம் நிறைந்த பாசுரம்.
'' நாராயணனின் காருண்யத்தைச் சோதிக்க ஒரு முறை தாயார் என்ன சொன்னாள் என்று நினைவிருக்கிறதா?
''உங்கள் பக்தன் என்றுசொல்லிக்கொள்கிறீர்களே, இவனைப் பாருங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறான் என்று ஒருவனைச் சுட்டிக்காட்ட, பெருமான் சிரித்துக்கொண்டே ‘’என்னைத் தூய மனத்தோடு வேண்டும் எனது பக்தன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான், எந்தத் தவறுக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான். அப்படி அவன் செய்யும் எந்தச் செயலாவது தவறாகத் தென்பட்டாலும் அது யாரோ ஒருவரின் நன்மைக்காகவோ செய்ததாகவே இருக்கும்'' என்றான் நாராயணன்.
.
விஷ்ணு சித்தரை நமஸ்கரித்து பட்டர் கோயிலுக்கு மீண்டார்
20வது விருந்து
J.K. SIVAN
''கப்பம் தவிர்க்கும் கலியே''
காற்று வீசும்போதெல்லாம் குறிப்பாக அந்த மூங்கில் காட்டில் இருந்து விசேஷமான காந்த சக்தி யுடைய சப்தம் வரும் என்று ஆயர்குடி கோப கோபியர் நன்றாக அறிவார்கள். வித வித மான இசையோடு காற்றில் கலந்து வரும் அதை ரசிப்பார்கள். யமுனையின் மறு பக்க கரையில் தான் மூங்கில் காடுகள் இருந்தன.
கண்ணன் அங்கிருந்து தான் ஒரு மூங்கில் குழாயில் தனது புல்லாங்குழல் தயார் செய்து கொண்டான். மற்ற மரங்களுக்கெல்லாம் அந்த மூங்கில் கொத்து மரங்களின் மீது இயற்கையாகவே பொறாமை இருக்க இதற்கு மேல் என்ன காரணம் தேவை? .
எல்லா மரங்களுக்கும் ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது. அனைவரும் விரும்பும் கண்ணன் அந்த மூங்கில் குழாய் மீது தனிப் பிரேமை வைத்ததால் அவை அடிக்கடி காற்று வீசாதா அது மூங்கில் காட்டிலிருந்து இன்னிசை எழுப்பாதா என்று எங்கும்.
காற்று தாங்கிக்கொண்டு வந்த இன்னிசை ஒரு பாட்டாகவே அந்த வ்ரஜ பூமி எங்கும் எதிரொலித்தது.
''புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே''
மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர்.
யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு சுலபமாக தெரியுமே. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர் ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும் கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.
ஆண்டாள் பாடினாள். தனது பாடலிலே கண்ணனை வேண்டினாள்: அதன் சாராம்சம்:
''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா. நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.''
அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர். கை நிறையபுஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.
மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!
எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவெடுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ கர்ணாம்ருதமாக வில்லிப்புத்தூர் நந்தவனம் பூரா எதிரொலிக்கிறது.
''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''
வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை.
செடி கொடிகளை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம், அந்தப் பசு. கோதை வர்ணம் தீட்டி வரைந்திருந்த செடிகொடிகளை நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நாவால் நக்கி தின்ன முயற்சித்ததில் கோலம் கலைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே!. ஆனந்தமாக சிரித்தாள். பசுவை அணைத்தாள் . மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ ஏமாந்து போகலாமா? பாவம் உனது ஆசை நிறைவேற வேண்டாமா? நிஜமாகவே உனக்கு இலை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . ( வைதேகி யின் கண்களில் இருந்து வெளிப்பட்ட நன்றியை யும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லையே . வார்த்தை தேடியும் கிடைக்கவில்லையே . நான் ஒரு சாதாரணன் என்னால் அதை எப்படி அழகாக எழுத முடியும். மன்னிக்கவும்.- சிவன்)
இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச் சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
21. ஊற்றம் உடையாய் பெரியாய்
இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை ஊகித்து நான் சொல்லட்டுமா?
புலி, சிறுத்தை, மான், என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது, யாரோ ஒருவர் ...." நாய்''!!. மன்னிக்கவும் . இது எதுவுமே இல்லை. ''நேரம், நாள்'' இது தான் எதைக்காட்டிலுமே அதி வேகமாக ஓடுகிறது என்பேன்.
விஷ்ணு சித்தரும் இதைத்தான் உரக்க செடிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
''மார்கழி ஆரம்பித்ததே தெரியவில்லை. நழுவிக்கொண்டே இன்று 21 நாள் ஓடி விட்டதே. என்ன அற்புதமான அனுபவம் இத்தனை நாளும். கோதையின் பாசுரங்கள் எனக்குப் புத்துயிர் அளித்து வருகிறதே, இன்னும் ஒன்பது நாள் மட்டுந்தானா இந்த இன்பம் ! வேகமாக ஓடும் நாளே, நீ ஏன் மார்கழிக்கு மட்டும் குறைந்தது இருநூறு நாட்களாவது இருக்கக்கூடாது ! '
ரோஜாப்பூ, சண்பகம், மல்லிகை எல்லாமே இதைக்கேட்டு குபீர் என்று சிரித்தன.
''ஏன் சிரிக்கிறீர்கள்'' என்று அவற்றைப்பார்த்து பெரியாழ்வார் கேட்டார்?
''ஆழ்வாரில் பெரியவர் எனப் பெயர் பெற்றவரே, சிறந்தவரே, கோதையின் அப்பாவே, இந்த மார்கழிக்கு முப்பது நாள் போதாது என்றே குறைப்பட்டுக் கொள்கிறீர்களே, எங்களைப்பற்றி ஒரு கணமாவது சிந்தித்தீர்களா? காலையில் மலரும் நாங்கள், மாலையில் மடிகிறோமே, எங்கள் வாழ்வு சோகமானதல்லவா? ''
''ஆஹா !ரோஜாக்களே, நீங்கள் சொல்வது என் மனத்தில் உங்களிடம் உள்ள முள்ளைப்போல் சுரீர் என்று தைக்கிறதே!''
''அது தான் இல்லை! நாங்கள் பரம திருப்தியாக இருக்கிறோம், பரம்பரை பரம்பரையாக. காலையில் மலர்ந்தோமா, எங்களை யாராவது உங்களைப்போல் உள்ளவர்கள், ஆசையாக வளர்த்தார்களா, எங்கள் அழகை ஸ்லாகித்து பேசி, பாடி, பறித்து, மாலையாக்கி, தங்களுக்கோ, இறைவனுக்கோ சூட்டி மகிழ்ந்தார்களா , அது போதுமே. எங்கள் வாழ்வின் லட்சியம் அதோடு முடிந்ததே! இது அல்லவா பேரின்பம். சிறிதும் துன்பமே இல்லையே. பிறந்தோம், வளர்ந்தோம், மகிழ்ந்தோம், மகிழ்ச்சியளித்தோம், முடிந்தோம். எல்லாம் சிறிது நேரத்திலேயே. போதுமே! இதற்கு மேல் என்ன வேண்டும்?
பயனற்று பலகாலம் வாழ்ந்து தானும் வருந்தி, பிறரையும் வருத்தி வாழ்வது நல்லதா, சுகமான சொல்ப வாழ்வு சிறந்ததா? நீங்களே முடிவெடுங்கள்!'' என்றது ரோஜா.
பெரியாழ்வார் கண்களை மூடி ''ரங்கா, ரங்கா, வட பத்ர சாயி'' என்றார். அது தான் முடிவு, அதில் தான் எல்லாம் அடக்கம்!
கற்பனை உலகம் ஒன்றில் தான் யாருமே நினைத்த நேரத்தில் எங்கு வேணுமானாலும் கண் மூடி திறப்பதற்குள் சென்று விடலாம். அங்கு RAC கிடையாது.
வழக்கம்போல் தினமும் யமுனையில் நீராடி கிருஷ்ணன் வளர்ந்து வாழும் ஆயர்பாடியில் நந்தகோபன் மாளிகைக்கு தினமும் சென்று கிருஷ்ணனை துயிலெழுப்புவது எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமா? சாத்தியம் தானா?. அந்த சிறுமி ஆண்டாளுக்கும் , அவளால் மற்ற சிறுமிகளுக்கும், இது வரப்ரசாதமாக அமைந்ததே! அதி புத்திசாலியான ஆண்டாளின் வர்ணனைக்கு ஈடு இணை இல்லை.
நந்தகோபன் வீட்டு பசுக்கள் மந்தையாக மலை போன்று பருத்துப் பெரிதாக நிற்கின்றன அந்த அதிகாலையில். கோபர்கள் பெரிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அந்த கறவைப் பசுக்களை அணுகி பால் கறக்க அந்த பாத்திரங்களை மடிக்கருகில் வைத்த கணத்திலேயே, தானாகவே பால் வெள்ளம் பொங்கி பாய்கிறது பாத்திரத்தில். கண்ணிமைக்கும் நேரத்தில் பாத்திரம் பொங்கி வழிகிறது இடமில்லாமல்!!
ஒரு வள்ளல் என்பவன் அவனைத்தேடி பலமுறை படையெடுத்து, அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால் மட்டுமே பணமோ பொருளோ கேட்டு கொடுப்பவனல்ல. கேளாமலேயே வாரி கொடுப்பவன் பேர் தான் வள்ளல். நந்த கோபன் பசுக்கள் ஒவ்வொன்றுமே பால் வள்ளல்கள்.
'கிருஷ்ணா, உன் வீட்டு பசுக்களே இப்படி வள்ளல்கள் என்றால் எண்ண வொண்ணா சகல உயிர்களையும் ஊட்டி வளர்க்கும் நீ எத்தனை பெரிய வள்ளல்? உன்னை "பெரிய கடவுள்" '' பெரும் ஆள் ' பெருமாள் 'என்பது எத்தனை பொருத்தம். உன்னை எதிர்த்தவர்கள் பின்னர் தம் தவறை உணர்ந்து உன்னைச் சரணடைந்ததும் உன் பேரருளுக்கல்லவோ?. உலக மாயை இருளகற்றும் பேரொளியே! துயிலெழு!, உன்னைத் தேடி வந்த இந்த சிறுமிகளுக்கும் வழிகாட்டு. எங்கள் பாவை நோன்பின் கருப்பொருளாக வந்து எங்களை எப்போதும் உன் நினைவிலேயே போற்றி புகழ்ந்திட அருள்வாய்.'' -- அருமையாக பாடுகிறாள் ஆன்டாள்
இப்படி அந்த இடைச்சிறுமி ஆண்டாள் பாடுவதாக கோதை அபூர்வமாக ஒரு பாசுரம் எழுதினாள் . காலத்தால் அழியாத சிறிய காவியம். அது இதோ:
''ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்''
வில்லிப்புத்தூரில் கோதை மேலே சொன்ன பாசுரத்தை எழுதியிருந்த ஓலைச்சுவடியை இதுவரை குறைந்தது பத்து முறையாவது வழக்கம்போல் விஷ்ணுசித்தர் படித்து மகிழ்ந்தார். அருகிலிருந்தோரிடம் எல்லாம் அர்த்தத்தை விளக்கினார்.
'அம்மா, கோதை, என் செல்வமே, பல்லாண்டு பல்லாண்டு என்று பெரிய பாசுரங்களை எல்லாம் எழுதினேன்.அந்த நாராயணனை விடியலில் எழுப்பி வாழ்த்தினேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்தார்கள். நான் எழுதிய பல்லாண்டுக்கு ஈடு இணை இல்லை என்று புகழ்ந்தார்கள். இன்று தோட்டத்தில் நந்தவனத்தில் ஒரு சிறு ரோஜாப்பூ எனக்கு உணர்த்திய உண்மை இதற்கும் பொருந்தும் தாயே. ஒரு சிறிய பாசுரத்தில் நீ துயிலெழுப்பின அழகுக்கு எடைக்கு எடை என் பெரிய பாசுரம் தாங்குமா தெரியவில்லை என் தெய்வமே!''
Jan 06, 2017 2:13am
மார்கழி முப்பது நாள் விருந்து - இன்று 22வது
J.K. SIVAN
22 ''செங்கண் மாலே''
இறைவன் எங்கும் உள்ளான். அவனை எப்பெயரிலும் எவர் வேண்டுமானாலும் அறியலாம் என்பதால் தான் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற பரந்த நோக்கம் நம்மிடம் உண்டு. எனினும் ஒரு தாயைப் பொறுத்தவரை எல்லாக் குழந்தைகளும் பிடிக்கும் என்றாலும் ''என் குழந்தை'' என்று நோக்கும்போது அதன் மீது அலாதி பிரியமும் பாசமும் வைப்பவள்.
கிருஷ்ணன் அவ்வாறே நம் இதயத்தில் குடிகொண்டவன். இந்த மார்கழி முப்பது நாளும் அவன் விடியற்காலை ஒவ்வொருநாளும் ஆயர்குடிப் பெண் ஆண்டாளால் துயிலெழுப்பப்பட்டு நம் அனைவரையும் வந்தடைகிறான் என்று உணரும்போது மனம் மகிழ்கிறது.
ஆண்டாளின் திருப்பாவை 21 பாசுரங்களை இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில், என் மனத்தையும், ஆர்வத்தையும் சேர்த்துக் கலந்து மிக்க மகிழ்வோடு பகிர்ந்து வருகிறேன்.
இது உங்களை திருப்தி கொள்ளச்செய்து, ஒரு கணம் அந்த இளம் சிறுமியை நினைக்கச் செய்தால் என் முயற்சிக்கு அதுவே அன்பர்களே, நீங்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு, சன்மானம்.
இன்னும் என்னை திருப்திப்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆண்டாளை அறிமுகம்செய்யுங்கள். மார்கழி மாதம் கோவிலுக்குக் கூட்டிச் செல்லுங்கள். ஆண்டாள் சந்நிதி இருக்கும். அங்கே ''இதோ உள்ளே இருக்கும் உம்மாச்சி பத்தித் தான் உனக்கு தினமும் சொன்னேன்'' என்று ஞாபகப்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறு சொல்ல நேரிட்டால் நீங்கள் நினைவில் நிற்பீர்கள்!
இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலை யிலேயே கூட்டிக்கொண்டு யமுனை நதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாமனாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள்.
இதோ இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.
கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட் பெண்ணல்லவோ ஆண்டாள்.
அவள் என்ன சொல்லிப் பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, எனக் கோதையின் எழுத்து வடிவில் பார்ப்போமா:
''அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்''
“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி, தோற்று, உன் அருமை பெருமை அறிந்து, தம் தவறை உணர்ந்து, கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, பணிவோடு, உன் அடிமையாக நின்றி ருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே. பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக்கண் சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே".
இதோ இங்கே பார்த்தீர்களா?
வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி ஆலயத்தின் வாசலில் நிற்கும் இருவரும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள் தான். கோவில் பட்டாசார்யர் சுவாமி விஷ்ணுசித்தரை நோக்கி தலையாட்டி உள்ளன்போடு என்ன சொல்கிறார்:
"சுவாமின் என்ன ஆழ்ந்த பக்தி உங்கள் அருமைப் பெண்ணுக்குப் பார்த்தீர்களா?. தனது தூய பக்தியை அந்த ஆயர்பாடிச் சிறுமி மேல் புகுத்தி அவள் கிருஷ்ணனை நேரில் கண்டு வணங்கியது போல் சித்திரம் தீட்டியிருக்கிறாளே . உண்மையிலே இன்று உங்கள் பெண்ணுக்கு ரங்கன் காட்சி தந்தானோ என்னவோ.? அதால் தான் இப்படியெல்லாம் எழுத வருகிறதோ?''
அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் வழக்கமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி நடைபெறும். அங்கிருக்கும் பக்தர்களுக்கும், எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதையெல்லாம் நினைத்து பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி இன்றைய பாசுர பகுதி விடை பெறுகிறது.
23வது விருந்து
J.K. SIVAN
23. பூவைப் பூவண்ணா
ஒவ்வொரு நாளும் நமக்கு புத்தம் புதிதாகத் தான் அமைகிறது.
புதிய எண்ணங்கள், புதிய எதிர்பார்ப்புகள். சில புதிய நம்பிக்கைகள். இதை முன்னேற்றம் என்று சொல்லலாமா? முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்வது.
இந்தச் சிறு பெண் ஆண்டாள், எப்படி முதலில் மற்ற ஆயர்பாடி இடைச்சிறுமியர்களை அழைத்தாள். கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள் வீடெல்லாம் சென்று அவர்களை தட்டி எழுப்பினாள் . அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராட வைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்க வைத்தாள் . பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள் . அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை, நப்பின்னையை, எழுப்பினாள். எழுப்பியும் எழுந்திராத கண்ணனையும் எழுப்பிவிட்டாள்
கிருஷ்ணனை அவன் கட்டிலுக்கருகிலேயே நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று பார்வை தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமேன்று சரணாகதி அடைந்தனர் என்பது இதுவரை நாம் அனுபவித்த மார்கழி விருந்து.
இன்று மார்கழி 23ம் நாளில் இருக்கிறோம். இதோ இன்று ஆண்டாள் பாடும் அருமையான பாசுரம்.
''மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் அறிந்து அருளேலோர் எம்பாவாய்''
ஆண்டாள் சாதித்து விட்டாள். அவள் விரதம் பலன் கொடுக்கத் துவங்கிவிட்டதே. (நர) சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து விட்டாளே.
இந்த சந்தோஷம் நம்மை அப்படியே தூக்கி வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அல்லவா போட்டு விட்டது. இதோ நமக்குத் தெரிந்த குரல் பேசுவதும் கேட்கிறதே.
ஆம், விஷ்ணுசித்தர் தான், தனது அருமை மகள் அன்று எழுதிய பாசுரத்தைப்பற்றி வடபத்ர சாயீ ஆலய பட் டாச்சாரியாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களோடு பட்டாச்சாரியாரின் பாரியாளும் கையைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறாள். மேலும் சில வைஷ்ணவர்களும் அவர்களோடு இருப்பதும் காண்கிறோம். விஷ்ணு சித்தர் அவர்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்?
ஆயர்பாடியில் ஆண்டாள் சொன்னதையே தான் விஷ்ணு சித்தரும் சொல்கிறார். ஆண்டாள் அன்று காலை நந்தகோபன் அரண்மனையில் கண்ணனைச் சந்தித்த விவரங்களைத் தான் சொல்கிறார். நாமும் தெரிந்துகொள்வது நாம் செய்த பாக்கியம்.
கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுபவளா அந்த குட்டி ஆண்டாள். எவ்வளவு சமயோசிதம் தெரிந்தவள்.
''கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனம். அதில் ஒரு பெரிய மலை. அதன் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரிய குகை. அந்த குகையில் தனது ராணியுடன் ஒரு சிங்கம் வசிக்கிறது. மழை காலம் எனவே, அடக்கமாக ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் உறங்குகின்றன. கொஞ்சம் மழை விட்டது. சூரிய வெளிச்சமும் கொஞ்சம் குளிரை விரட்டியடித்துவிட்டது. எனவே சிங்கராஜா எழுந்து விட்டார். தலையை அசைக்கிறார். கம்பீரமான அவரது மஞ்சள் விழிகள் சிவந்த நிறத்தை அடைந்து விட்டன. நெருப்பு உமிழ்கின்றன. எல்லாபக்கமும் நோட்டம் விடுகின்றன. அடர்ந்த பிடரியை அனாயாசமாக ஒரு உலுக்கு உலுக்குகிறார் சிங்க ராஜா. தலையைத் தூக்கியவாறு கம்பீரமாக ராஜா குகைக்கு வெளியே வருகிறார். ஒரு பெரிய பாறை எதிரே தெரிகிறதே அதன் மேல் ஏறி நின்றதும் தனித்துவமான சிம்ம கர்ஜனை ஒன்று அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வனாந்திரமேல்லாம் அது கர்ஜித்து எதிரொலிக்கிறது.
காயாம்பூ வர்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கம் நீயே! . உன் தலையை நிமிர்த்தி, உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த அழகிய ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு '' பெண்களே, எதற்காக என்னை வந்து எழுப்பினீர்கள்?'' என்று நீ கேட்பாயானால் நாங்கள் நீ கேளாமுன்னரே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயனை உன் தரிசனத்திலே அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களை ரட்சிக்க வேண்டும். ''
ஆண்டாள் இப்படி வக்கணையாக பேசுவது நமது நன்மைக்காகவும் தான். இந்த பாசுரத்தில் ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பாவிப்பது அபூர்வம். என்ன வளமான கற்பனை அந்த சிறிய இடைப்பெண்ணுக்கு!
சிங்கம் இந்த இடத்தில் நரசிம்மனாக ஸ்ரீமந் நாராயணன் அவதாரமெடுத்து ப்ரஹலாதனைக்காக்க ஹிரண்யனை வதம் செய்ததை நினைவு கூர்வதாக அமைகிறது. வழக்கமாக இன்றைய தினம் வில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம். மனதாலேயே நாம் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம்.
மார்கழி விருந்தில் இன்று 24வது விசேஷ விருந்து:
J.K. SIVAN
24. குன்று குடையாய் எடுத்தாய்
மார்கழி என்றாலே நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. இருந்தும் ஆயர்பாடியில் ஆண்டாளும் அவளுடைய தோழியர்களும் சிறு பெண்களாயிருந்தாலும் விடாப்பிடியாக தங்களது பாவை நோன்பை ஸ்ரத்தையோடு நிறைவேற்றி வருகிறார்கள். கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் அருளட்டும். அவர்களுக்கு நல்ல கணவன்மார்கள் கிடைக்கட்டும். ஆண்டாளுக்கு அவள் தேடும் கிருஷ்ணனே கிடைக்கட்டும்.
ஆண்டாள் உரக்க ப்பாடுகிறாள். விடியற் காலை அமைதியில் அவள் வெங்கலக் குரல் கோவில் மணி போல் தனக்கே உரித்தான நாதத்தால் உள்ளத்தைத் தொடுகிறது. எங்கும் எதிரொலிக்கிறது.
''அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்''
தெய்வத்திடம் நாம் வைக்கும் நமது பூரண பக்தி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விட அவரை நம்மிடம் கொண்டு வந்து விடும் என்பது இந்த சிறு ஆயர்பாடி பெண்ணிடமிருந்து தெரிந்து கொள்வோம்!!
நேற்று மார்கழி 23ம் நாள் நடந்ததை நினைவு கூர்வோம். அவள் பாடுவதின் பொருள் என்னவாக நமக்குப் படுகிறது?
“அழகிய சிங்கமே வீறு நடை போட்டு உன் சிம்மாசனத்துக்கு வா, கம்பீரமாக எங்களை உன் காந்த விழியில் நோக்கி “என்னடி பெண்களா எதற்கு என்னை எழுப்பி இங்கு உட்கார சொல்லுகிறீர்கள்?. என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்கச்செய்யும் அளவுக்கு பரந்தாமன் கிருஷ்ணன் மீது அந்த ஆண்டாளுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவளது பக்தி எத்தனை ஆழமானது என்று புரியும் . கிருஷ்ணன் அவ்வாறு கேட்டதும் அவளும் அந்த பெண்களும் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்படியே ஆண் டாளும் அவள் கூட்டமும் கண்ணன் காலடியில் சரணாகதி என விழுந்தனர்.
''கண்ணா, உன் திருவடிகளே சரணம். இந்த பாதங்கள் தானே மண்ணுலகும் விண்ணுலகும் அளந்தவை. இவையல்லவோ தென்னிலங்கை சென்று ராவணாதியரை அழித்தவை. இவை தானே சகடாசுரனை உதைத்தவை. வத்சாசுரனை கன்று வடிவத்தில் வந்தவனை உதைத்து கொன்றவை. இவை தானே உன்னை சுமந்து சென்று கோவர்தன கிரியை தூக்க வைத்து குடையாக்கி இந்திரனின் சீற்றத்திலிருந்து எங்களை யெல்லாம் காத்தவை.
“கண்ணா, உன் கையில் இருப்பதென்ன கூர்வேலா? அது தானே உனக்கு சென்ற விடமெல்லாம் வெற்றியையும் சிறப்பையும் தருவது. எங்களுக்கு எது கவசம் தெரியுமா? உன்னை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பது. அதுவே எங்கள் மூச்சு. எங்களை என்றும் காக்கும் சுலபமான மந்திரம்.''
“அம்மா, ஆண்டாளே அழகிய ஆயர்பாடி சிறுமியே! உன் வழியையே நாம் இந்த மார்கழி 24ம் நாளை வில்லிப்புத்தூரிலும் அனுபவிக்க வேண்டாமா?
''எவ்வளவு அழகாக உங்கள் பெண் கோதை, இந்த ஆண்டாள் என்ற சிறுமியை ஆயர்பாடியில் உருவாக்கி அவளையும் அவள் தோழிகளையும் அந்த சாக்ஷாத் கிருஷ்ணனையே தரிசிக்க வைத்திருக்கிறாள்.'' தத்ரூபமாகவே காட்சியைச் சித்தரித்திருக்கிறாளே'' என்றார் வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோயில் பட்டாச்சார்யர்.
விஷ்ணு சித்தர் ஆனந்தத்தில் லயித்திருந்தார்.
''சுவாமி, எல்லாம் என் ரங்கனின் வரப்ரசாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனது பாக்கியம் அவள் என் பெண்ணாக அவதரித்தது. இந்த மார்கழி எனக்கு வைகுண்ட வாசமாக இருக்கிறது இந்த அருமையான பாசுரங்களைக் கேட்டு மகிழ்வதற்கு நான் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.'' என்கிறார் விஷ்ணு சித்தர்.
''விஷ்ணு சித்த சுவாமி, இன்றைய பாசுரத்தைப் படித்துக்காட்டினீர்களே .அதன் அர்த்தத்தை விளக்குங்கள். கேட்க ஆவலாக உள்ளேன்'' என்றார் பட்டாச்சார்யர்.
''கோதை எழுதிய அருமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.''.
''அந்த ஆண்டாளும் ஆயர்குடிச் சிறுமியரும் கிருஷ்ணனைச் சந்தித்ததும் எதற்காக அவனைப் பார்க்க வந்தோம் என்பது மறந்து, அவனை வாழ்த்தி பல்லாண்டு பாடினர். உலகளந்த அவன் திருவடி போற்றினர்,
தசரதர் எப்படி ராமனைப் புகழ்ந்து அவன் ராக்ஷசர்களை அழிக்க வாழ்த்தினாரோ அதுபோல் ஆண்டாளும் அந்த ராமன் சேது பாலம் கட்டிய பராக்ரமத்தையும், சிவ தனுசு ஓடித்ததையும் புகழ்ந்தவள், கிருஷ்ணன் ஒருவேளை எங்கு தன்னைப் புகழாமல் இவள் ராமனைப் புகழ்கிறாளே என்று நினைத்துக்கொள்வானோ என்று மனதில் தோன்றியதால் உடனே சகடாசுரனையும் வத்சாசுரனையும் கிருஷ்ணன் வதைத்தது பற்றியும் புகழ்கிறாள்.
விடாமல் ஏழு நாள் கோவர்தனகிரியை ஒரு சிறு விரலால் சுமந்து ஆயர்பாடியைக் காத்ததையும் போற்றுகிறாள்.
அந்த சிறு பெண்ணுக்கு எவ்வளவு அற்புத ஞானம். எல்லாம் அந்த அரங்கன் செயல் தான்'' என்றார் விஷ்ணுசித்தர்.
பெருமாள் பிரசாதம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் தனது நந்தவனத்திற்கு நடந்தார்.
வழியெல்லாம் அடுத்த நாள் என்ன பாசுரம் எப்படி வரும் என்ற ஆவலுடன் நடந்ததால் வழிநடந்த களைப்பும் இல்லை. கோதையை வாழ்த்தி அவளுக்கு வட பத்ர சாயியின் பிரசாதம் அளிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் மட்டும் அவரை துளசி வன ஆஸ்ரமத்தை நோக்கி வழி நடக்கச் செய்தது.
25
26
27வது விருந்து.
J.K. SIVAN
27. கூடாரை வெல்லும் கோவிந்தா
இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ''ட்ரிப்ளிகேன்'' ஆனமாதிரி.
''கோதையே, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் எள்ளளளவும் எனக்கு சந்தேகமில்லை என்று பூரிக்கிறார் விஷ்ணுசித்தர்.
இதையே எதிரொலிக்கிறார் சுவாமி தேசிகன் கோதா ஸ்துதியில்.''துளியும் எனக்கும் கூட சந்தேகமில்லை பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னது வாஸ்தவம் தான் என்று பறை சாற்றுகிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன். இதோ அந்த ஸ்லோகம்:
''ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!
''கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்த , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி. அரங்கன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).
ஆண்டாள் என்று ஒவ்வொரு பெருமாள் கோவில் சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் வாங்கியவள். பூமாதேவியின் அவதாரம்.கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில், விஷ்ணு சித்தரின் (பிற்காலத்தில் பெரியாழ்வார்) திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை. வேதத்தின் வித்து. திருப்பாவையை கோதோபநிஷத் என்று ஆங்கிலத்தில் தமிழ் அறியாத குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு புத்தகத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறேன். விரைவில் கோதை ஆங்கிலத்தில் பேசுவாள்-- சிவன்)
மார்கழி 27ம் நாள் நம் எதிரே தோன்றுவது இந்த இருபத்தாறு நாட்களாக கண்டு மகிழும் நீண்ட அழகிய கண்ணைக்கவரும் யமுனை ஆறு. இதோ கேட்கிறதே ஆண்டாளின் குரல் இந்த விடியற்காலையில். அவள் பாடும் அற்புதப் பாடல் நம் காதில் தேனாகப் பாய்கிறது. உண்மையில் ''தேன்'' என்பது பொருத்தமே. இன்று இனிய சுவையான அக்கார அடிசில் பற்றியல்லவோ ஆண்டாள் பாடுகிறாள்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் இப்போது இடைச்சிறுமியா? அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள். இந்தத் ''திருப்பாவை'' யில் கண்ணன் ஆண்டாளின் ''கைப்பாவை'' ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.
''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும் நிலையில், உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு அவற்றைப் பெற்று, நோன்பின் பயன் அடைந்தோமே, இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தர வேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த தருணத்தில் அவர்கள் நல்ல புத்தாடைகள் உடுத்தி, கை, கால், கழுத்து நிறைய நகைகள் அணிந்து (அந்த கால நகைகள் பெயர்கள் தோள்வளை, செவிப்பூ -- நெக்லஸ் வராத காலம்) மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கம கம வென மணக்கும் நெய் , பால்,சர்க்கரை கலந்து உனக்கு ''நெய்' வேத்யம் கொண்டு வந்திருக்கிறார்களே, வாசனை மூக்கைத் துளைக்க வில்லையா உனக்கு ?
உடனே வந்து அக்கார அடிசில் கை நிறைய எடுத்துக் கொள். இதை உண்ணும்போது உன் கையிலிருந்து முழங்கை வழியாக நெய் கீழ் நோக்கி ஓடி வழிய வழிய ருசித்து உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! நாம் எல்லோரும் கூடி இருந்து மனம் குளிர களிப்போமே.'' நீ நல்லவர்களோடு (இருக்கக் ) கூடாதவர்களை, ''வென்று'' அவர்களையும் திருந்தக் ''கூடிய'' வர்களாகப் பண்ணுபவனாச்சே . எங்களோடு ''கூடி'' உண்ண வா'' என்று அழைக்கிறாள் கோதை வில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கிற இடைச்சிறுமியாக கற்பனை உருவெடுத்து!.
ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. கோதை ஆண்டாளாக சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
இதுவரை நாம் ரசித்த, ருசித்த, திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு நோற்க வேண்டுகின்ற தோழியரே, காத்யாயனி விரதத்தில் பங்கு கொள்ள வாருங்களேன். இன்னுமா தூக்கம்? என்று மற்ற பெண்களை ஆண்டாள் தூக்கத்திலிருந்து எழுப்புவது போன்று அமைகிறது. ஆஹா, என்னே இந்த விந்தை. நம்மை அஞ்ஞான இருளில், தாமச குணத்திலிருந்து மீட்டு உயர் சத்வ குணம் அடைய, உள்ளும் புறமும் தூய்மை பெற, ''யமுனை நதி நீராட்டலை'' உதாரணமாக காட்டி ''நோன்பு நோற்பது'' என்கிற ஏகாக்ர விடா முயற்சியில் ஈடுபட்டு அந்த பரமனை அடையச் செய்து, அவன் அருளாகிய '' அக்கார அடிசிலை'' அவனுடனேயே ''கூடி 'மனம் குளிர்ந்து '' இனிமையாக அனுபவிக்கும் சுகானுபவத்தை அல்லவோ போதிக்கிறது அந்த சிறுமியின் பாசுரம். கோதை வாக்கு உபநிஷத் தான் என்பதில் இன்னுமா சந்தேகம்?
28
29
கோதை அளிக்கும் 30 வது விருந்து J.K. SIVAN
செல்வத்திருமால்
''வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.''
மேலே கண்டது கோதை நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையின் முடிவுக்கான கடைசி பாசுரம். இதை பலஸ்ருதி என்று சொல்வது வழக்கம். இந்த ஸ்லோகத்தை, இந்த மந்திரத்தை, இந்த உச்சாடனத்தை சொன்னால் இன்ன பலன் கிடைக்கும் என்று பல முக்ய பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள் அளிக்கும் உறுதி.
''சுலோகம் சொல்லுங்கள் ஸார் , பாராயணம் பண்ணுங்கள் மாமா , அதன் பிரகாரம் நடக்கவும்'' என்று ஒன்றை ஒருவரிடம் சொன்னால், '' ஓஹோ அப்படியா, இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன்?'' என்று கேட்பவர்கள் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறாள். அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த அவள் கொடுத்த வாய் மொழி இது .
மார்கழி முடிந்தவுடன் தான் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த முப்பது ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றி யிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள். பாடிக்கொண்டும் வந்திருக்கிறார்கள் நேற்று மாலை வரை.
இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பெரிய விஷயங்களை தொடுகிறது என்பதைத் தவிர என்னுடைய இந்த மார்கழி விருந்து கட்டுரைகள் பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை எளிதில் அறிமுகம் செய்ய என்னாலான ஒரு சிறிய முயற்சி என்று தான் சொல்வேன் .
முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட பட்டாச்சார்யர் என்னவோ கேட்கிறாரே, அது என்ன ?
''சுவாமி, நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழிக்கான கடைசி பாசுரம் என்று அறியும்போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது ' என்றார் '
' அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ''க '' என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ''ஈசா'' என்பது சிவனைக்குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை. மாதவா என்பது மஹாலக்ஷ்மி .தாயாரை உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மகா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)
முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயிலெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச்செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவதையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச்சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மணி மாலையாக அந்த பட்டர்பிரான் வளர்த்த கோதை கோர்த்து அளித்திருக்கிறாள்.
திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். 'வாரண்டி, கேரண்டீ' இதுதான்.
இந்த பாசுரம் திருப்பாவையை பூர்த்தி செய்கிறது. ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந்தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டுவோர்க்கு பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.
திருப்பாவை 30 பாடல்கள் முடிந்து விட்டது என்பதால் இத்துடன் எனது தடாக்கள் காலியாகவில்லை. இனிமேல் தான் அக்கார அடிசலே வருகிறது. ஆண்டாள் அரங்கனை அடையப் போகிறாள். பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன. திருமண அழைப்பு உங்களை அடையப்போகிறது. அதிகமாக பொங்கல் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டால் ஆண்டாள் கல்யாண சாப்பாடு நிறைய சாப்பிடமுடியாதே. நாளை வயிற்றை காலியாக வைத்துக்கொண்டு காத்திருக்கவும்.
சுடச்சுட அக்காரவடிசல்: மார்கழி விருந்து
மார்கழி 7வது நாள்.