pandurangan story

689 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Apr 27, 2013, 12:18:01 AM4/27/13
to sivan
        

Inline image 3
J.K. SIVAN 9840279080

Please stay connected with Sri Krishna by visiting http://youiandkrishna.blogspot.in/ it  contains  very  valuable and interesting information you may wish to know.  Please visit the website and post your comments

 

                                  குழந்தையும்  தெய்வமும் 

ரொம்ப  சின்ன  பெண்.    அவள் யார்?   அவள் பெற்றோர்  யார்?   எங்கிருந்து வந்தவள்?  
இது  போன்ற கேள்விகளுக்கு  எல்லாம்  பதிலே  தெரியாது.  பின்  என்ன தான்  தெரியும்  என்றால்  அவள்  பண்டரிநாதன்  சந்நிதியிலேயே  வாழ்ந்தாள்.    அவன்  பிரசாதத்திலேயே  உயிர்  வாழ்ந்தாள். அங்கு ஒலிக்கும்   விட்டலன்  பஜனையில்    தனை மறந்து ஆடுவாள்.    கூட  சேர்ந்து பாடுவாள். இது   பல நாள்  நடந்தும்  ஒருவரும்  அவளைப்   பற்றி  எந்த  அக்கறையும் ஆதரவும் விருப்பு  வெறுப்போ  காட்டவில்லை. 

 நாம தேவர்  அடிக்கடி பண்டரிபுரத்தில்  விட்டலனை தரிசித்துவிட்டு   விட்டல நாம சங்கீர்த்தனத்தில்  ஈடுபடுபவர்.  அவர்  எப்போதெல்லாம்  ஆலயத்தில்  இருக்கிறாரோ  அன்றெல்லாம்  அப்போதெல்லாம்  கூட்டம்  நிரம்பி  வழியும்.  பக்தர்கள்  ஆனந்த  பரவசமாக  அவரது  நாமசங்கிர்த்தனத்தில்,  அபங்கத்தில்  தன்னிலை  மறந்து  சுகானுபவத்தில்  வாழ்வார்கள்.

மிக சிறப்பாக  அமைந்தது  அன்று  நாமதேவரின்  விட்டல் பஜன்.  மணிக்கணக்காக   நடந்த அந்த  பஜனை முழுதும்   தாளத்துக் கேற்ற  வகையில்  அந்த  சிறுமி  ஆடினாள்.  கூடவே  வாங்கி  பாடினாள். அவள்  பக்தி பூர்வமான  ஈடுபாடு  நாமதேவரை ரொம்பவே ஈர்த்தது.

பஜனை  முடிந்ததும்   தன்   கையாலேயே  அந்த குழந்தையின்  சிரசை  தடவி  அவளுக்கு  விட்டலன் பிரசாதம்  வழங்கினார் 

"குழந்தே  நீ  எந்தவூர்?"
"பாண்டுரங்கன்  இருக்கும்  இடமெல்லாம்  என்  ஊர்.  தனியாக  எந்த  ஊரும்  இல்லை"
"உனது  பெற்றோர்கள்  யார்  எங்கிருக்கிறார்கள்?". 
"என்னை பெற்றவன்  பாண்டுரங்கன்.  அவன்  இந்த    ஊரில் தான் இருக்கிறான்!" 
"உனது வீடு  எங்குள்ளது.  யாருடன்  வசிக்கிறாய்?".
"வீடு  இந்த   கோவிலே.  பாண்டுரங்கனுடன்  தான்  வசிக்கிறேன்".
"உன் பெயர்  என்ன  குழந்தே?" 
"பாண்டுரங்கன் வைத்த  பெயர்  ஜனா பாய்"
 
இந்த சிறு வயதில்  இத்தனை  பக்தியா??.  பிரமித்தார்  நாமதேவர்.

"என்னோடு  வருகிறாயா? .  உனக்கு  நிறைய  நாமசங்கிர்த்தனமேல்லாம்  சொல்லித்  தருகிறேன்."        
"தாரளமாக" 
அன்றுமுதல்  ஜனா பாய்  நாமதேவர்  மகளாக  வளர்ந்தாள் 

நாமதேவருடன்  சேர்ந்து  பூஜை செய்தாள். அவருடன்  பாடினாள்   அவர் பஜனைக்கு  ஆடினாள். அவரது  நிழலாக  தொடர்ந்தாள்.  அவருக்கு  எல்லா  பணிவிடைகளும் செய்தாள். அவளது  நினைவு,  மூச்சு,  கனவு  எல்லாமே  பாண்டுரங்கன், பாண்டுரங்கன்,  பாண்டுரங்கனே!  .    இயற்கையிலேயே  அந்த  இளம் வயதிலும்  முதிர்ந்த விட்டல பக்தி  கொண்ட  அந்த  சிறுமியை  போற்றினார்  நாமதேவர்.  அவளுக்கு   தன்னுடைய பக்தி பூர்வ  அபங்கங்கள், பஜனைகள்  எல்லாம்  சொல்லி  கொடுத்தார்.  விட்டலன்  அந்த  இருவரையும்   தன்னிரு கண்களாக பாவித்ததில்  என்ன  ஆச்சர்யம்?.  

ஒரு நாள்  கொட்டும்  மழை  நிற்கவேயில்லை.  நாமதேவர்  இருந்த  மண் வீடு  வெள்ளத்தில்  மூழ்கி கரையும்  நிலை.  பாண்டுரங்கனே  கொட்டும் மழையில்  அவர்கள்  இருவரும் வசித்த  மண் குடிசைக்கு  வந்தான்.  நாமதேவர்  ஸ்ரீமத்  பாகவதம்  ரசித்து  படித்து கொண்டிருந்தார்.  ஜனா பாய்  அதை  ஆனந்தமாக கேட்டு கொண்டே  ஒரு  கல்  இயந்திரத்தில்   மாவு  அரைத்து கொண்டிருந்தாள்.  அன்று  இரவு  அந்த மாவில்  செய்த  ரொட்டியே  விட்டலனுக்கு  நெய்வேத்யமான பிறகு  அவர்களது  உணவு. வேறொன்றுமே   இல்லை அன்று.  

விட்டலன்  வரவால்  மண் வீடு  கரையாமல்  வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்படாமல்  தப்பித்தது.  

"வா  பாண்டுரங்கா  வா  எதற்கப்பா  இந்த  கொட்டு மழையில்  நனைந்து  வந்தாய்?"
 
"என்னவோ  உங்களை  பார்த்து  அளவலாவலாமே  என்று  ஒரு ஆர்வம்.  மழையை  லட்சியம் செய்யவில்லை."

ஒரே ஒரு வஸ்த்ரம்  தான்  இருந்தது  நாமதேவரிடம்.  அதை கொடுத்தார்.  அதால்  தன்னை  துடைத்து கொண்ட  விட்டலன்    தனது ஈர உடையை  களைந்து  மாற்றுடை ஏதாவது  இருக்கிறதா  என்று   தேடியதில்  ஜனாபாயுடைய  உடை  ஒன்று 
கண்ணில்  பட  அதையே  உடுத்திக் கொண்டான்.  ஜனா பாய்  மிக்க மகிழ்ந்தாள்.  விட்டலனும் நாமதேவரும்  வெகுநேரம்  பேசிக்கொண்டிருந்தனர்.  ஜனா  பாய்   விட்டலன்   தன்னோடு பேசமாட்டானா  என்று  ஏங்கினாள்.  அவள்  மனதை  புரிந்து கொண்டவன்  போல  விட்டலன் எழுந்து  அவளிடம்  சென்றான்.  அவளருகில்  தரையில்   அமர்ந்து அவளிடமிருந்து   அந்த  கல்  இயந்திரத்தை  விலக்கி  தானே   மாவை  அரைத்தான்.   எல்லா  மாவும்  அரைத்து  தீர்த்த பிறகு  மூவரும்  ரொட்டி  தயார் செய்து  மிக்க  மகிழ்ச்சியோடு பாண்டுரங்கன்  அவர்களோடு  உணவை  பகிர்ந்து கொண்டான்.  
விட்டலன் அடிக்கடி  அவர்கள்  இல்லம்  வந்தான்.  ஜனா பாய்  இப்போதெல்லாம்  மிக  அழகாக  பக்தி பூர்வமான  அபங்கங்கள் இயற்றினாள்.  அவள்  மனம்  எப்போதும்  பாண்டுரங்கனோடு ஒன்றி   இருந்ததாலும்  நாமதேவரின்  அருளாலும்  பயிற்சியாலும்  சிறந்த  காவியங்கள் உருவாயின.     விட்டலனே அவள்  சொல்ல  சொல்ல  அவற்றை  எழுதினான் சில சமயம்.

ஜனா பாய்  தனது  வாழ்க்கையினால்  நமக்கு  சொல்லாமல்  சொல்லும்  அறிவுரை  என்னவாக  இருக்க முடியும்?   எல்லாம்   அவனே,  அவனன்றி  ஒரு  அணுவும்  இல்லை,  இருந்தாலும்  அது  அவனன்றி இம்மியும்  அசையாது, அவனிருக்க  ஏன்  என்னால்  தான்  எதுவும்  நடக்கும்  என்ற  எண்ணம்? --அவன் நினைப்பதே  என்  செயல்   என்ற  சரணாகதி தத்வமே அந்த அறிவுரை 
 





 


 
  




 

 


image.png

Sivan Krishnan

unread,
Apr 29, 2013, 11:07:13 PM4/29/13
to sivan

Sivan Krishnan

unread,
May 2, 2013, 12:16:12 AM5/2/13
to sivan
                                                                          ஏக்நாத் கோபம் 

சீட்டாடுவது  அந்தக்காலம்  மட்டும்    அல்ல  எந்த காலத்திலும்  எல்லா  ஊர்களிலும்  எல்லா மக்களிடமும் காணப்பட்ட   ஒரு பழக்கம்.  காசு வைத்து  ஆடுவது  அதில்  ஒரு  கெட்ட விஷயம்  என்பது  தெரிந்தாலும்   அது என்னவோ இன்றுவரை  தொடர்கிறது. 
காசு  வைத்து  இழப்பது,  சிலநாள்  ஜெயிப்பது.  ஜெயித்தவர்  மகிழ்வது.  இழந்தவர்    மற்றவர் அவர்களை  உசுப்பி விடுவது  எல்லாம்  நாம்  அறிந்த  விஷயம்.  இது    பாண்டுரங்க பக்தர் ஏக நாத் காலத்திலும்  இருந்ததே 
 
நமது கதையில்  ஒரு  சிலர்  அவ்வாறு  அடிக்கடி சந்தித்து கொள்வது மட்டுமல்ல  பேச்சும்  வளரும்!!  .  ஒருநாள்  அவர்கள்  சீட்டு விளையாடும்போது  எவனோ  தோற்று விட்டான்.   அவனுக்கு  கோபம் பீரிட்டு வந்தது.  தோற்றவனுக்கு  கோபம்  தான்  அதிகம்  வருமே!  . ஏதோ  அவர்கள் பேச்சு  வளர்ந்தது.  சண்டை முற்றியது.   ஒருத்தன் 

"நீ கோப படாமல்  இரேன்!"   என்று  அட்வைஸ் கொடுத்தபோது  அந்த  கோப  பட்டவன்    "டேய்  நான்  என்ன  ஏக நாதரா  பேசாமல்,  கோபப்படாமல்  இருக்க? "   என்று சொன்னான் .    பேச்சு  திசை  திரும்பியது. 

"அப்படி என்ன ஏக நாதர்  கோப படாமல் இருப்பதற்கு,  என்ன  பயந்தாங் கொள்ளியா?" ஏக்நாத்  மனிஷன்  தானே,.  கோபபடாத  ஒருத்தனை காட்டு?"   

"சூடு  சுரணை  இல்லையோ  என்னவோ"   என்று  ஒருவன் கேலி செய்தான்.
" ஏக நாதருக்கு  கோபமே  கிடையாது" 
 "அதெல்லாம்  கிடையாது  மனிதன்  என்றால்  கோவம்   இல்லாதவனே கிடையாது  
 " நிச்சயம்   அப்படியில்லை   எனக்கு  தெரியும்  ஏகனாதரை பற்றி   நான்   அவரை பார்த்திருக்கறேன் அவர்  கோபப் பட்டதே இல்லை".
" நான்  இல்லை  என்கிறேன். அவருக்கும்  கோபம்  வரும்"
" அவருக்கு  கோபமே  கிடையாது."
சீட்டாட்ட  குழு  அல்லவா.  அந்த  தோரணையிலேயே பேச்சு  தொடர்ந்தது 
" என்ன  பெட் வக்கிறே  அவருக்கு கோபம்  வரும் நான்  வரவழைக்கிறேன்?"
" உன்னால்  தலை கீழே  நின்றாலும்  முடியாது!" 
" சரி, ஆளுக்கு  நூறு  நூறு  ரூபாய் வையுங்கடா.  நான்  தோத்ததை  இதிலே எடுக்கிறேன்!!" 

எல்லோரும்  ஒப்புக்கொண்ட பிறகு  பெட்  வைத்தவன் மறு  நாள் காலை  அவர்கள்  திட்டப்படியே  நேரே ஏகநாதர்  வீட்டுக்கு  அருகேநின்றான் .  மற்றவர்   அருகே  நின்று அவனை பார்த்துக்கொண்டே இருக்க,     ஏகநாதர்     வீட்டை விட்டு  அதிகாலை  கோதாவரி ஆற்றங்கரைக்கு  ஸ்நானத்துக்கு வழக்கம்போல புறப்பட்டார். அவர்  வாயினின்றும்    விட்டல  நாமம்  தேனாக  பொழிய  நேராக நேராக  கோதாவரி ஆற்றங்கரைக்கு  சென்றார்.  ஸ்னானனம் முடிந்து  ஏக்நாத் வீடு திரும்பினார்  

வீட்டுக்குள்  அவர்  நுழையுமுன்பு   வாயில் தாம்பூலம்  குதப்பி   தயாராக  இருந்த அந்த   சீட்டாட்ட கும்பல்  ஆள்  ஒருவன்  அவர்  முகத்தில்  எச்சிலோடு  தாம்பூலத்தை  உமிழ்ந்தான்.  ஒரு நிமிஷம்  அதிர்ந்து போன  ஏக்நாத்  மீண்டும்  பேசாமல்   கோதாவரிக்கு திரும்பி  மறுபடியும் ஸ்நானம் செய்துவிட்டு  திரும்பினார். 
 மறுபடியும்  அதே  நடந்தது.  மீண்டும்  சளைக்காமல்  அவர்  கோதாவரி ஸ்நானம் தொடர்ந்தது. 
 இது போல்  மூன்று நான்கு முறை  நடந்தும்   துளிக்கூட  பதட்டப்படாமல்,  உணர்ச்சி வசப்படாமல்,  விட்டல நாமம்   உச்சரித்துக் கொண்டே  ஏகநாதர்  திரும்ப திரும்ப  ஸ்நானம் செய்து  திரும்பினதைக்    கண்டதும் அந்த  கும்பல்  அப்படியே  அவர்  காலில்  விழுந்து  மன்னிப்பு  கேட்டது.  

ஏக்நாத்   அவர்களை கட்டி  தழுவி   "உங்களில்  யாரப்பா  என் மீது  தாம்பூலம்  உமிழ்ந்த   மகான்"   என்று  பதவிசாக  கேட்டதும்   அந்த மனிதன்  துடித்து  போய் விட்டான்.   கைகளை  தலைமேல்  கூப்பி   அவர்  காலில்  கண்ணீர் மல்க  தடால்  என்று  விழுந்தான்.  
" சுவாமி  நான்  மகா பாவி. தங்களுக்கு  எவ்வளவு பெரிய  தீங்கை  இழைத்து விட்டேன்.  இனி   இந்த ஜன்மத்தில்   யாருக்குமே தீங்கு செய்ய மாட்டேன் "  என்றான்.  அவன்  குரலில்  தெளிவு  இருந்தது.  
 ஏக்நாத்     என்ன  சொன்னார் தெரியுமா? 
"அப்பா  மகானுபாவா,   உனக்கு  கோடி  புண்யம் உண்டப்பா. கவலை  படாதே. நீ  அவ்வாறு  செய்ததால்  இன்று  ஏகாதசி, விட்டலனை  நான்   நான்கு  ஐந்து முறை  புண்ய  நதி  கோதாவரி ஸ்நானம்  செய்து வழிபட  வழி ஏற்பட்டது.   நன்றி  நான்  சொல்லவேண்டியவன்"   என்று  அவன்  காலை தொட்டு  வணங்கினார் 

பெட்  வைத்தவன்  பணம்  வென்றானா?  மற்றவர்கள் அவனுக்கு தத்தன் தத்தம்  பங்கு  பணம்  தந்தார்களா?  என்று  ஆராய்ச்சி செய்து  எழுதினால் ஏக்நாத்  துடைய சிறந்த  குணத்தை  பற்றி  பேசாமல்  சீட்டாட்டம்  ஆடுவதில்  புத்தி போய்விடும்   ஏக்நாத்  மகிமையை  இகழ்ந்ததாகும்  அல்லவா. அவர்கள்  சீட்டாட்டம்  விட்டு  சீராகி  அவர்   பக்தர்களானார்கள் என்று  முடிவு  கொள்வது  சால  சிறந்தது! 

   



Sivan Krishnan

unread,
May 4, 2013, 2:05:10 PM5/4/13
to sivan

                                                                    அபூர்வ  விட்டல தரிசனம் 

இன்று  ஒரு சுவாரசியமான  கதை காத்திருக்கிறது. பண்டரி புரத்தில் ஒரு பிராமணர்.  அவர்  ஒரு  தீவிர விட்டல  பக்தர்.  குடும்பம்  பெரியது  என்பதால்   அவருக்கு  பணத்தை  தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது. ஏழை  பிராமணர்களுக்கு எப்போவுமே  யார் கிட்ட  போனால்  நிறைய  தக்ஷிணை கிடைக்கும் என்ற ஆவல்,  தீராத  எதிர்பார்ப்பு  உண்டே? ஒரு நாள்  யாத்திரைக்கு  கிளம்பிவிட்டார். போகும் வழியில்  விட்டல பஜனையும்  ஆச்சு  கையில் ஏதோ கொஞ்சம்  திரவியமும்  கிடைத்தது  குடும்பத்திற்கு.  வித்யா நகர்  என்று ஒரு  ஊர்  வந்து  சேர்ந்தார். அந்த ஊருக்கு  ராஜா  ராமராஜா என்பவர். சிறந்த  பக்திமான்  மேலும்  நிறைய  தான தர்மங்கள் செய்பவர்  என்று  கேள்விப்பட்டு  அவரை  பார்க்க அவர்  அரண்மனை வந்தார். அப்போது  ராஜா  பூஜை செய்யும்  நேரம்.

.காவலாளி " யார்  நீங்கள்?"  என்றான் 
"நான்  பண்டரிபுரத்திலிருந்து  ஒரு  விட்டல பக்தன் வந்திருக்கிறேன்.என்று  ராஜாவிடம் சொல்லு"
உள்ளே  சென்று திரும்பிய காவலாளி  அவரை  ராஜாவிடம் அழைத்து சென்றான். .ராஜா  அவரை  உபசரித்தான்.  " நான்  அருகே இருக்கும்  அம்பிகையின்  ஆலயம் சென்று தரிசனம் அங்கு  அம்பாளுக்கு தானே பூஜை  செய்து விட்டு  புசிப்பது  வழக்கம்.  தாங்களும்  தரிசனத்துக்கு  வாருங்கள்"  என்று அவரை  அழைத்து சென்றான்.
இருவரும்  செல்லும்  வழியில்  ஒரு  பெரிய  நந்தவனம்  தென்பட்டது.  
"இதோ  இந்த  நந்தவனத்தில்  தான்  அம்பிகைக்கு  தேவையான  பூஜைக்குகந்த  புஷ்பங்கள்  தரும் செடி   கொடி  மரம்  எல்லாம் வளர்க்கிறேன் "   இது போன்ற  நந்தவனம்  செழிப்பாக  இருப்பது  அபூர்வமானது  அல்லவா?
"ஆமாம்  ராஜா"
"இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்'.  தக தக பள பள வென்று.  முழுதும்  வெள்ளியாலேயே  சுவர்கள் கட்டப்பட்டு   பிரம்மாண்டமாக    அம்பிகை கோவில்  காணப்பட்டது.   உள்ளே  நிறைய  பிராமணர்கள்  வேதகோஷம்.  பூஜைக்கு  எல்லாம்  ரெடியாக  இருந்தது.  அம்பாள்  விக்ரஹம்  உயரமாக இருந்தது.  நிறைய  ஆபரணங்கள்  அலங்கார  பட்டு  வஸ்திரங்களோடு  அம்பாள்  ஜக  ஜோதியாக தரிசனம் தந்தாள் 
ராஜா  பூஜைக்கு  அமர்ந்தார்  விஸ்தாரமாக  பூஜை நடந்து  நெய்வேத்யம் முடிந்து அனைவருக்கும்   கை நிறைய  பிரசாத  விநியோகமும் ஆனது.  ராஜாவும்  பிராமணரும்   சாப்பிட்டு முடிந்தபிறகு   ராஜா  பிராமணரை  கேட்டான்.  " இது  போல  உசத்தியான  கோவில்,  அம்பாள், அலங்கார  பூஜைகள்  எல்லாம்  எங்காவது  பார்த்ததுண்டா?
உங்கள்  பண்டரிபுரத்தில்   இப்படி எல்லாம்  சிறப்பாக  விட்டலனுக்கு  பூஜை உண்டா?"
"எதோ  பாவம்  சில  ஏழை பிராமணர்கள்  சேர்ந்து  பூஜை பண்ணி  அங்கே  விட்டல நாம  சங்கீர்த்தனங்கள்  செய்து வருவதால்  இந்த அளவுக்கு  செல்வ  செழிப்பாக  அங்கே  பூஜைகள்  எப்படி நடக்க முடியும் இல்லையா?"
பிராமணருக்கு  ரொம்ப  கோபம்  வந்து விட்டது.  "என்ன?  விட்டலனும்  பண்டரிபுர  ஆலயமும்  அவ்வளவு மட்டமாக  போய்விட்டதா?    பக்தரல்லவா? .  ராஜாவுக்கு பதில் சொன்னார் :
"ராஜா,   நீங்கள்  பண்டரிபுரம்  சென்று  விட்டலனை  தரிசனம்  பண்ணினது உண்டா?
"இன்னும்  இல்லை"
"அதால்  தான்  இவ்வாறு  பேசுகிறீர்கள்.  விட்டலன்  ஆலயம்  பண்டரிபுரத்தில்  தங்கத்தாலேயே  கட்டப்பட்டது.  நீங்கள் கட்டினது போல்  வெறும்  வெள்ளியால்  அல்ல.
இது நீங்கள் கட்டிய  ஆலயம்.    அது  தேவ சிற்பி  விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.   இங்கு நீங்கள்  வழிபட்ட  அம்பிகை  அங்கு  தினமும் வந்து  விட்டலனை தரிசனம் செய்யுமுன்  விட்டலன்  சந்நிதியை  தானே  பெருக்கி  சுந்தம் செய்கிறவள்.  இங்கு  சில  காசு ஆசை  பிடித்த  பிராமணர்கள் தானே? .  அங்கு  இந்திராதி தேவ  முப்பத்தி முக்கோடி   தேவர்களும் வந்து வணங்கி நிற்கும்  புனித ஸ்தலம்.  சந்திர பாகா என்று  ஒரு  நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா?  அதில்  ஸ்நானம் செய்தால்  பல  ஜென்மங்களின்  பாவம்  ஒழியும்.   இங்கு  ஒரு  தோட்டம் போல ஒரு  நந்தவனம்  காட்டினீர்கள் . அங்கே   விட்டலன் ஆலயம் செல்லும் வழியில்  காட்டில்  நினைத்ததை  எல்லாம்  தரும்  கல்ப தருக்களும் மனோபீஷ்ட  செடி கொடி மரங்கள் நிறைய உண்டு.  அங்கு  ஒவ்வொரு  பசுவுமே  காமதேனு.   சந்திர பாகாவில் கிடைக்கும்  ஒவ்வொரு  சாளிக்ராமமுமே  நினைத்ததை தரும்  விசேஷமான மனோபீஷ்ட சித்தி  மந்திர கல். சமுத்ரத்தை பார்க்காதவனுக்கு  அவன்  ஊர்  குட்டை  பெரிய  நீர்  நிலையாகத்தானே  தெரியும்" 

ஏதோ  வெறி வந்தவன் மாதிரி  பிராமணர்  இவ்வாறு பொரிந்து தள்ளினதை  கேட்ட ராஜாவுக்கு  அதிர்ச்சியும்  ஆத்திரமும்  வந்தது.  இந்த  பிராமணனுக்கு  கடுந்தண்டனை  கொடுக்க முடிவெடுத்தான். 
"நீ சொல்வது  உண்மையா"
"நான்  சொன்னது  கொஞ்சம் தான்"
ராஜா  உடனே  மந்திரியை  அழைத்தான்   பண்டரிபுரம்  செல்ல  ஏற்பாடுகள் செய்ய சொன்னான்.  ஒரு  சிறிய  படையே  நிறைந்து விட்டது.  ராஜாவின் பின்னால்  பிராமணன்  அழைத்து செல்லப் பட்டான் 
"நான்  விட்டலன் மீது உள்ள பக்தியால்  விட்டலன்  ஆலயத்தை  குறைத்து  சொன்னதை  தாங்கமுடியாமல்  ஏதேதோ உளறிவிட்டேனே.  விட்டலா!!   நான்  சொன்னது போல்  இல்லையென்று  தெரிந்தவுடன்  என்  கழுத்தை  ராஜா  வெட்ட போகிறான்.  வெட்டட்டும்!,   பரவாயில்லை  உன்னை  குறை கூறி  அதை கேட்டுக்கொண்டிருப்பதை  காட்டிலும்  என்  உயிர் போவதே  சிறந்தது.   இந்த  ராஜாவுக்கு  நீயே  வழிகாட்டு"   வழியெல்லாம்  விட்டலனை  தியானம்  பண்ணிக்கொண்டே  வந்தார்  பிராமணர்.

ராஜாவின்  சேனை  பண்டரிபுரம் வந்து சேர்ந்தது.  யானை  மீது  அமர்ந்திருந்ததால்  தூரத்திலேயே விட்டலன்  ஆலயம்  கண்ணில்  பட்டது.   ராஜா  திகைத்தான்.
"அடாடா!!,   என்ன திவ்ய  தரிசனம்  இது? .  அந்த  பிராமணன் சொன்னது போலவே  இருக்கே!.  தங்கத்தால்  கட்டப்பட்ட  கோவில் கோபுரம்  கண்ணை  குருடாக்குகிறதே!.  சுற்றிலும்  அடர்ந்த  பசுமையான  காடு நிறைய  பூத்து குலுங்கும் வித விதமான  புஷ்பங்கள்,  பழங்கள், வெள்ளி தகடாக  ஓடும்  சந்திரபாகா  நதியில்  எண்ணற்ற  வைஷ்ணவர்கள்  நீரில்  இருந்து  நித்ய கர்மானுஷ்டானங்கள்  செய்கிறார்கள். நதியில்  தேவர்கள்,  கந்தர்வர்கள்,  முனிவர்கள் எல்லாம்  ஸ்நானம் செய்வதையும்  ராஜா பார்த்து  அதிசயித்தான்.".

ராஜா யானைமீதிருந்து கீழே  இறங்கினான்.  பிராமணரிடம்  ஓடி வந்தான்.  "சுவாமி  நீங்கள் சொன்னது  அத்தனையும்  அப்பட்ட  உண்மை.  உங்களால்  தானே  எனக்கு  விட்டலன்  தரிசனம் இன்று கிடைத்தது"

பண்டரிபுரம்  ஆலயம் செல்லுமுன் சந்திரபாகா நதியில்  பிராமணருடன் ஸ்நானம் செய்தான்  ராஜா.  உள்ளே   விட்டலன்  சிரித்துக்கொண்டு  காட்சி தந்தான். " என்ன  அழகு  என்ன  திவ்ய  ஆபரணங்கள்?"  என்ன  அலங்காரம்? .  விட்டலனை  சுற்றி  அஷ்ட  மகா சித்தி தேவதைகளும் ஒன்றாக  கூடி  பூஜை  செய்கிறார்களே!!.  அட,  என்  இஷ்ட  தேவதை  அம்பிகையும்  அவர்களோடு  நின்று  விட்டலனுக்கு  பூஜை  பணிவிடை  செய்கிறாளே!" என்ன பாக்கியம்  எனக்கு!.  இதோ  நாரதர்  தும்புரு  எல்லாம்  நின்று  கானம் பொழிகிறார்களே!"

ராஜா  திணறினான்  ஆனந்தத்தில்.  பக்தனல்லவா? . விட்டலனை  நமஸ்கரித்தான்.  பிராமணரை  இறுக  கட்டிக்கொண்டான்  அவர்  காலில்  விழுந்தான்.

"விட்டலா!,   என்னே  உன்  கருணை? . இந்த  ஏழை  பிராமணனின்  வார்த்தை  பொய்க்க கூடாது என்று  என்னமாக   தரிசனம்  கொடுத்தாய்? .  நான்  பாக்யவான்"  என்று  நெஞ்சுக்குள்ளேயே  கதறினார்  பிராமணர். 

அவர்  காலடியிலேயே ராஜா   உறுதி மொழி எடுத்தான்.  "இனி  நீங்களே  என்  சத்குரு.  இந்த  பாபிக்கு  கண்  திறந்தீர்களே.  நீங்கள்  சொன்னதைவிட  பல மடங்கு  சொல்லமுடியாத   அற்புதங்களை நான்  இன்று  கண்டு  மகிழ்ந்தேன். இந்த  பண்டரிபுரத்தை போன்று  ஒரு  தேவலோக  ஸ்தலத்தை  வேறெங்கு எவர்  காண முடியும்?"  என்றான்  ராஜா 

கடைசியாக  ராஜா  ஊருக்கு  திரும்பு முன்  விட்டலனிடம்  ஒரு வேண்டுகோள்  விடுத்தான்  அது  என்ன என்பதை  அடுத்த  கதையில்  பார்ப்போமா?


 
     

Sivan Krishnan

unread,
May 5, 2013, 2:32:32 AM5/5/13
to sivan
                                                                 
                                                                வித்யாநகர வாசம் 

 விட்டலனிடம்  வித்யாநகர்  ராஜா  என்ன  கோரிக்கை விடுத்தான்?
 இது  நேற்று  எழுதிய  கதையில்   தெரியாமல்  கம்ப்யுட்டரை விட்டு  வெளி வந்தோமல்லவா? 

"விட்டலா  உன்னுடைய  திவ்ய  தரிசனத்தை  அனுபவித்த பிறகு  உன்னை  விட்டு பிரிய மனமில்லையே.  என்னோடு நீ  என்   வித்யனகருக்கு  வந்துவிடேன்.  எனக்கென்னமோ  இங்கேயே  பண்டரி புறத்தில் ஐக்யமாக  ஆசைதான். இருந்தபோதிலும்  எனக்கு  என்று  ஒரு  ஊர்  இருக்கிறதே. அங்கு  ராஜ்ய  பரிபாலனம் செய்யவேண்டிய  கடமை  அழுத்துகிறதே"

"ராமராஜா,  தாராளமாக  நான்  உன்னோடு  வருகிறேன். ஆனால்  ஒன்றிரண்டு கண்டிஷன்கள் உண்டே.   நான்  உன்னோடு வரும்  பட்சத்தில்  வழியில் நீ  எங்கும் எனை  தரையில் வைக்ககூடாது. அப்படி எங்காவது  என்னை தரையில் வைத்தால்  அதுவே  நான்  தங்கும்  இடமாகிவிடும். மற்றொரு விஷயம்.  நான்  உன்னோடு  வித்யாநகரம்  வந்தால் என்று  நீ  ஏதாவது  அநீதி  இழைக்கிறாயோ அன்றே  அக்கணமே  திரும்ப  பண்டரிபுரம் சென்று விடுவேன். கவனம் வைத்துக்கொள். "விட்டலா  விட்டலா"  என்று  நெஞ்சம் குமுருவதைத்தவிர   ராஜா  விட்டலனை  இடம் மாற்றி எடுத்து செல்வதை   ஆலய நிர்வாகிகளோ  பக்தர்களோ  ஒன்றும் செய்ய  வழியின்றி  கையை பிசைந்து நிற்க பாண்டுரங்கன்  வித்யா நகரம்  சென்று விட்டான்.    

ஆடி மாசம்  ஏகாதசியன்று  ஜே ஜே  என்று  கூட்டம்  நெரியும்.  வர்காரிகள்  என்று   அழைக்கப்படும்  விடோபா பக்தர்கள்  மகாராஷ்டிராவிலிருந்தும்    வட  கன்னட தேசங்களிலிருந்தும்  ஏராளமாக  வருவார்களல்லவா?.   பாவம்   அத்தனை பேருக்கும்  பெரும்  ஏமாற்றம். விட்டலன் இல்லையா  என்று  வாடினர்.விஷயமறிந்து  பலர்  வருவதேயில்லை.  பண்டரிபுரம் வெறிச்சோடியிருக்கும்    வர்காரி பக்தர்களில்  சிலர்  கூட்டம் போட்டும்   மன வியாகூலத்தை  சொல்லி  அழுதனர்.  அந்த கூட்டத்தில்  பானுதாசர்  என்ற  விட்டல பக்தரும்  இருந்தார்.  பாண்டுரங்கனை  எப்படியாவது மீட்டு  ராம ராஜாவிடமிருந்து  வித்யானகரிலிருந்து மீண்டும்  பண்டரிபுரம் பெற்று வரவேண்டும்.  யார்  அந்த  பொல்லாத  ராஜாவிடம்  போவது?.  எப்படி  விட்டலனைமீட்பது?      
"நான் இப்போதே  வித்யாநகர்  போகிறேன். ராஜாவை  சந்திக்கிறேன்.  எப்பாடுபட்டாவது  விட்டலனோடு வருவேன்"  என்று  சபதமிட்டு   பானுதாசர்  கிளம்பினார்.  பல நாள்  நடந்து  வித்யாநகர்  அடைந்தார்.  சிலரை கேட்டார்.   ராஜா அரண்மனை  எங்கிருக்கிறது?  விட்டலன்  எங்கு  இருக்கிறான்  என்று எல்லாம்  விசாரித்தார் .விட்டலன்   ராஜா   அரண்மனைக்குள் ஒரு  சிறிய  கோவில் கட்டப்பட்டு  அதில்  இருக்கிறான்.  தினமும்  ராஜாவின்  பூஜை  தரிசனம்  எல்லாம்  ஆனபின்  கதவு  பூட்டப்படும். இந்த விஷயம்  பானுதாசர்  காதில்  ஈயத்தை காய்ச்சி  ஊற்றியது போலானது.  "என்ன    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  எங்கிருந்தெல்லாமோ  வந்து  இரவு  பகல்  தரிசனம்  செய்யப்படும்  விட்டலன்  ஒரு  இருட்டரையிலா?  கோவிலுக்கு  பாதுகாப்பு  அதிகம். யாரும்  நெருங்க முடியாதே. ராஜாவின் அரண்மனைக்கு  அன்று இரவே  பானுதாசர்  சென்றார்.  அவர் அதிர்ஷ்டம்  யாரும்  அறியாமல்  உள்ளே  நுழைந்தார். நடு நிசி.  காவல்காரன்  தூங்கிக்கொண்டிருந்தான்  கோவில் வாசலில்.  அவர் போய் நின்றதும்  கதவு  தானாகவே திறந்து கொண்டது.   தாயைபிரிந்த  கன்று போல  பானுதாசர்  விட்டலனிடம் உள்ளே  ஓடினார்  சீரித்துக்கொண்டு நின்ற அவனை  ஆரத்தழுவிகொண்டார்.  கண்ணீர்  உகுத்தார்  

"ஏன் இப்படி செய்தாய்.  நாங்கள்  எல்லாரும்  என்ன  பாவம்  பண்ணினோம். எங்களுக்கு ஏன் இந்த தண்டனை  சொல்?"
" நானா  வந்தேன்?.  இந்த  ராமராஜா  ஆசையோடு  அன்போடு  என்னை  தூக்கிக்கொண்டு அல்லவோ  வந்துவிட்டான். நானும்  உங்களை எல்லாம்  பார்க்க முடியவில்லையே  என்று  ஏங்கிக்கொண்டு  தான்  இங்கு  நிற்கிறேன்"..
"என்னோடு  வருகிறாயா  உன்னை தூக்கிக்கொண்டு  போகட்டுமா?" 
" நாளை  நான்  உன்னோடு வருகிறேன். நீ  இப்போது  போய் ஸ்ரம  பரிகாரம்  பண்ணிக்கொள்  பானுதாசா!" என்று  விட்டலன்  பானுதாசரை  அனுப்புமுன் தன்   கழுத்தில் இருந்த  ஒரு  விலையுயர்ந்த  வைரமாலையை  அவருக்கு  அணிவித்தான்.  

பானுதாசர்  திரும்பினார்.   ஒரு  சத்திரத்தில்   தங்கினார்.  மறுநாள்  காலை ஒரு  ஆற்றங்கரையில்  ஸ்நானம் செய்துவிட்டு  நதிக்கரையில்  அமர்ந்து   விட்டல த்யானத்தில் ஈடுபட்டார்.  

அன்று  காலை  வழக்கம்போல்  ராஜா  பொழுது விடிந்ததும்  முதல் தரிசனத்துக்கு  விட்டலன் கோவிலுக்கு  வந்தான்.  விட்டலனைக்  கண்ணாரக் கண்டு  மகிழ்ந்தவன் ஆச்சர்யமும்  அதிர்ச்சியும்  அடைந்தான்.  தான்  முதல்நாள்  அணிவித்த  ராஜ பரம்பரையைச் சேர்ந்த  வைரமாலை  விட்டலனின் கழுத்தில்  காணோமே!  . யார்  வந்து  இருக்க முடியும்? .  எப்படி  காணாமல் போனது?.  கீழே  தேடினான்.  சுற்று முற்றும் பார்த்தான்.  காவலாளி  யாரும்  வரவில்லை  என்று  சத்யம்  செய்தான். மின்னல்  வேகத்தில்  வித்யாநகர் முழுதும்  ஆட்கள்  சென்று  விசாரித்தனர்.   ஒரு சிலர்  நேற்று  ஒரு  வெளியூர்  ஆள்  விட்டலன்  கோவில் பற்றியும்  ராஜாவின் அரண்மனையை பற்றியும்  விசாரித்தான்  என்று  சொல்லக்கேட்டு  பானு தாசர்  அங்க  அடையாளங்கள்  விசாரித்து தெரிந்துகொண்டு  அவரைத்  தேடியபோது தான்  அவர்  ஒரு ஆற்றங்கரையில் தியானத்தில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.   அவர் கழுத்தில்  மின்னிய  வைர மாலையைக்  கண்டதும்  அரசனின்  சேவகர்கள்  அவரை  குண்டுகட்டாகக்  கட்டி  ராஜாவிடம் கொண்டு சேர்த்தனர்.

பானுதாசரின்  கழுத்தில்  வைரமாலையைக்  கண்ட அடுத்த கணமே   ராஜா நெருப்பென  கொதித்தான்.  பானுதாசர்   ராஜாவை  பார்த்ததும்   "ராஜா  நான்  ஒன்றுமறியாதவன். இது விட்டலன்  அணிவித்தது.  இதன்  விலையெல்லாம்  எனக்கு தெரியாது....... "  

அவரை  மேலே  பேசவிடாமல்  ராஜா  கடுங்கோபத்தோடு    "இந்த  ஆளை உடனே  கழுவேற்றுங்கள்"  என்று  ஆணையிட்டான்.

"மகாராஜா,   நான்  ஒரு  விட்டல  பக்தன்  உங்களைப்போலவே!"   உங்கள்  தண்டனையை  நிரபராதியான  நான்  ஏற்றுகொள்கிறேன்.  ஆனால் கடைசி கடைசியாக  ஒரே தரம்   விட்டலனை தரிசிக்க அருளவேண்டும்"  என்று  பணிவோடு  பானுதாசர் கெஞ்சியவுடன்  மனம் இளகினான்  ராஜா  .

 விட்டலன் முன்  நின்ற  பானுதாசர்  கண்ணீர் பொங்க  "விட்டலா  இது  உன்  விளையாட்டு  தானே.  உன்னைக்  காண வந்து,  ஏன் நீ  எங்களோடு  பண்டரிபுரத்திலேயே  இருக்ககூடாதா?  என்று  உரிமை கொண்டாடப்  போக  திருட்டுப்பட்டம் கட்டி  என்னை  தூக்குமேடைக்கு  அனுப்புகிறாய்!!.  உனக்கு  அங்கு  வர  விருப்பம் இல்லை,  இங்கே  ராஜ போகத்தில்  தான்  இருக்கவேண்டுமென்றால்  ஏன்  என்னோடு வர  விருப்பம்  என்று சொன்னாய்??.  இனி  யார்  உன்னை  காண வந்தாலும்  உன்னை  அங்கு வருகிறாயா  என்று  அழைத்தாலும்  இப்படி  தான்   மரண தண்டனை  கொடுப்பாயா?
'விட்டலா   நீ  சிரிக்கலாம்.  நான்  சீரியசாக  சொல்றேன்.   எத்தனை ஜன்மம்  எடுத்தாலும்  நான்  உன்னையே  தேடி வருவேன்.  உன்னையே  என் மனசு பூரா  ரொப்பிப்பேன்.    சந்தேகமே வேண்டாம்."

பானுதாசரை   இழுத்து சென்றார்கள் கோவிலிலிருந்து.  கழுவேற்ற தயாராகிவிட்டது.   ராஜாவே கோபமாக  இதை  பார்வையிட வந்தான்.  பானுதாசரை த்   தூக்கி  கழுவேற்றும் தருணம்  அந்த  கழுமரம்  அழகிய   தாமரை மலராக  மாறி  அவரை  ஏற்றுக்கொண்டது.  அதன் மீது  சுகமாக  அமர்ந்தார் பானுதாசர்.   ராஜாவும் மற்றவர்களும்  அசந்து போய்  சிலையாயினர்  என்ன  ஆச்சர்யம்  இது?! .  பானுதாசர்  உண்மையிலேயே  ஒரு  மகான் என்று உணர்ந்த  ராஜா  அவர் காலடியில்  விழுந்தான். 

பானு தாசரும்   ராஜாவும்  விட்டலனை  தரிசிக்க  ஓடினார்கள். "பாண்டுரங்கா,  தீன  ரக்ஷகா, ஆபத் பாந்தவா"  என்று விட்டலனின் கால்களை  அணைத்துக்  கொண்டார்   பானுதாசர். 

விட்டலன்    "வாருங்கள்  பானுதாசரே  நாம்  பண்டரிபுரமே செல்வோம்" என்றான் 
ராஜா  அலறினான்.  "விட்டலா,   என்னை  விட்டு  வித்யா நகரை விட்டு  போகாதே"  என்றான்.   ராமராஜா,  நீ  பூர்வ ஜன்மத்தில்  செய்த  புண்யத்திற்காக  இதுவரை  நான் இங்கு  இருக்க  வேண்டி  வந்தது.  உன் சொல்லை  தட்டமுடியவில்லை.  மேலும்  நீ  மறந்துவிட்டாயா  நமது  ஒப்பந்தத்தை?
"சுவாமி  நான்  என்ன  அபராதம் செய்தேன் எப்போது  வாக்கு மறந்தேன்?"  என்று  அழுதுகொண்டே  ராஜா  கேட்டான்.
"நீ  எப்போது  அநீதி இழைக்கிறாயோ  அப்போதே நான்  பண்டரி புரம்  செல்வேன்  என்று  சொன்னேனே மறந்து விட்டாயா.  பனுதாசர்  தான்  நிரபராதி  என்று  முறையிட்டபோதும் அவருக்கு  மரண  தண்டனை வழங்கி  அதை  மேற்பார்வையிட  நீ  காத்திருந்தாய்.  நான்  குறுக்கிட்டு  அவரை காப்பாற்ற வேண்டியதாயிற்று"  இனி  நான்  பண்டரிபுரம்  செல்ல  தடையில்லை. 

"என்ன  யோசிக்கிறாய்  பானுதாசா!,   என்னை  எப்படி  ஒரு ஆளாக  தூக்கி  செல்வது என்றா ?  கவலைப்படாதே. என்  உருவத்தை  ஒரு சிறிய  விக்ரஹமாக  மாற்றிக்கொள்கிறேன். உன்  பையில்  போட்டு  எடுத்துக்கொண்டு போ"    பானுதாசர்  பண்டரிபுரம்  நடந்தார்  சந்திரபாகா நதி வந்தது.  ஆற்றங்கரையில்  வழக்கம்போல்  பையை  வைத்துவிட்டு  ஸ்நானம் செய்து  விட்டல நாம ஸ்மரணம் செய்தார்  கரைக்கு வந்தபோது  பையிலிருந்த  விட்டலன்  தன்னுடைய  பெரிய உருவத்துக்கு  வந்து  சிலையாக நின்றான்.  
"என்ன  விட்டலா  இப்படி  மாறிவிட்டாய்? எப்படி  நான் உன்னை தூக்கிக்கொண்டு போக முடியும் ?"
பானுதாசரே, நீர்  போய்  கோவிலில்  அறிவித்துவிடும்,  நான்  வந்தாயிற்று என்று,   அவர்கள்  பார்த்து  வேண்டியதை செய்யட்டும்"

கோவில்  அதிகாரிகளும் பக்தர்களும்,  முனிவர்களும்,  வர்காரிகளும்  கோலாகலமாக   பண்டரிநாதனை மேள தாளங்களுடன் அலங்கரித்து  வாண  வேடிக்கைகளோடு  ஊர்வலமாக வந்து  விட்டலன்   யதா ஸ்தானம்  வந்து சேர்ந்தான்!!..
   
 
 
 . 

    

 
  

   

Sivan Krishnan

unread,
May 6, 2013, 10:17:22 AM5/6/13
to sivan
                                           
                                                                   பரிஹாரம் 

இதோ  ஏகநாத் வந்துவிட்டார்  இன்றைய  விட்டலன்  கதையில். 
ஏக்நாத் ஒரு  சிறந்த  பாண்டுரங்க பக்தர் என்பது  உங்களுக்கு  தெரியும். தெரியாத வர்களுக்கும்,  தெரிந்து  மறந்து போனவர்களுக்கும்  மீண்டும்  இதை   ஞாபகப்படுத்துவது எனது கடமையாகிறதே! .  

அவர்  ஒருநாள்  இரவு அகல் விளக்கின்  ஒளியில்  பாகவதம்  படித்துக்கொண்டு ரசித்து ராகத்தோடு பாடிக்கொண்டு  அதோடு  ஒன்றியிருந்தார்.நேரமாகிவிட்டதால் இருள்  கவிந்து விட்டது.  யாரோ கதவை தட்டினது கேட்டு  கதவைத் திறந்து பார்த்தார்.
ஒரு பையன். கச்சலாக  11 அல்லது  12  வயது  ஆகிருதி.  சிவந்த உடம்பில் ஒத்தை  பூணல்.  ஏழ்மை அவனது இடுப்பு துண்டின்  கிழிசலில் தெரிந்தது. 
"யாரப்பா  நீ?  என்ன வேண்டும்?"
பையன் "நீங்கள்  தான்  ஏக்நாத்  ஸ்வாமியா"  என்றான் 
அவர்  தலையாட்டின மறுகணம்   தடால் என்று   அந்த பையன் அவர்  காலடியில்  விழுந்தான் 
"சுவாமி உங்களைப்பற்றி  ஊரில்  கேள்விப்பட்டேன்.  உதவி செய்வீர்கள் என்று  நம்பி வந்திருக்கிறேன்.  எனக்கு  பெற்றோர்  இல்லை. வெளி தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்.  உங்களிடம்  சிஷ்யனாக  இருக்க  ரொம்ப  விருப்பம். தாங்கள்  இந்த  ஏழையை  ஏற்றுக்கொள்வீர்களா?"
"உனக்கு  என்னிடம் கற்றுக்கொள்ள  என்ன இருக்கிறதப்பா?"
"சுவாமி  நீங்கள்  எனக்கு  வேதம் மந்திரம்  எல்லாம்  கற்றுக் கொடுங்களேன்"
"உன்  தாய் தந்தையர் எங்கிருக்கிறார்கள் ?"
"யாருமில்லை இப்போது. நீங்கள் தான் சகலமும்" .
"நீ  எந்த ஊரப்பா?"
"சுவாமி  நான்  துவாரகையை  சேர்ந்தவன்.  என் பெயர்   கண்டீய  கிருஷ்ணன்.  பையன்  அன்று முதலே   ஏக நாதரின் சிஷ்யனானான். இல்லை இல்லை   அவர்  பிள்ளையாகவே ஆனான். அவருக்கும்  அவர் மனைவிக்கும்  வலது கை  அவன்.!   பூ தொடுப்பது,  பூஜைக்கு  ஏற்பாடு செய்வது.  கடைக்கு சென்று  காய்கறி வாங்குவது.  வீடு துடைப்பது, பெருக்குவது,  துணி  துவைப்பது.  கை கால்  பிடித்து விடுவது  சர்வமும்  அவனே.  

அன்று  க்னாதரின்  அப்பா  ஸ்ராத்தம்.  வீட்டில்  ஸ்ராத்த சமையல்  நடந்து கொண்டிருந்தது. தெருவில்  சில குடியானவ  ஜனங்கள்  போய்கொண்டிருந்தனர்.  நல்ல   பசியில் அவர்கள்  உணவு  எங்கே  கிடைக்கும்  என்று  அலைந்து கொண்டிருந்த வேளையில்  கம கம  என்று  சமையல் வாசனை  க்னாதரின்  வீட்டிலிருந்து வந்து  கொண்டிருப்பதை நின்று  ரசித்து  சுவாசித்து கொண்டிருந்தனர்.

" இந்த மாதிரி சாப்பாடு   நமக்கு எந்த  ஜன்மத்தில்  கிடைக்க போகிறது?"  என்று  ஒருவன்  சொன்னான்.  
"ஆமாம்  நாம் எல்லாம்  கொடுத்து வைக்காத  பாவிகள் ஆச்சே  நமக்கு  எப்படி அய்யா  இது கிடைக்கும்" என்று மற்றொருவன் சொன்னது  இது அத்தனையும்  உள்ளே  ஏக நாத்தின்  காதில் விழுந்தது.  "விட்டலா  இது  என்ன சோதனை"  என்று  மனங்கனிந்து வேண்டி  அவர்களை உள்ளே கூப்பிட்டார்.  வயிறு  நிறைய  ஸ்ராத்த சமையல்  பூரா அவர்கள் அத்தனை பேருக்கும்  உபசரித்து  அளித்தார்.  "பகவானே  நீங்கள்  நீடூழி  வாழவேண்டும்". என்று  மனமார  வாழ்த்தி  அவர்கள்  சென்றனர்.

ஸ்ராத்தத்துக்கு  வந்த  பிராமணர்கள் இதைக்கண்டு  கோபித்து  வெளியேறினார்கள்.  ஊரில்  இந்த செய்தி பரவி  ஊர்க்கார பிராமணர்கள்  ஆத்திரங்கோண்டார்கள்.
"எப்படிய்யா,  ஸ்ராத்தம்  பண்றதுக்கு முன்னாடி  பிராமணர்கள்  சாப்பிடறதுக்கு  முன்னாலே  குடியானவர்களுக்கு  அந்த  சமையலை  போட்டே?" இது  சாஸ்திர விரோதம் என்று   தெரியாதா உனக்கு"
"சுவாமிகளே,  பசி என்று  வந்தவர்களுக்கு அன்னதானம்  பண்ண  ஜாதி மத  பேதம்  எல்லாம்கிடையாது. அவர்களை  விட்டல ஸ்வரூபமாகத்தான்   பார்த்தேன்"
"இதெல்லாம்  விதண்டா வாத  பேச்சு" .    
ஊர்க்கட்டுப்பாடு பண்ணி  இனி  எந்த பிராமணரும்  ஏக்நாத் வீட்டில்  தண்ணி  கூட  குடிக்க கூடாது.  அவருக்கு  யாரும்  எந்த வீட்டிலும் அனுமதியோ,  ஆகாரமோ,  பேச்சு வார்த்தையோ வைத்துகொள்ளகூடாது என்று  தண்டித்தனர்.

அன்று  ஸ்ராத்தமாச்சே. பித்ரு கார்யம்  நடந்தாகவேண்டுமே?  மறுபடியும்  எல்லோரும் குளித்து விட்டு  சமையல் தயாராகி விட்டது.  எந்த  பிராமணர்  வருவார்  சாப்பிட?
எப்படி  மூன்று தலைமுறைக்கு  பிண்டம் போட?,  பிராமண ஸ்வரூபமாக  எவருக்கு    உணவு  இடுவது?  ஏகநாதர்  "விட்டலா"   என்று  துடித்தார்  கண்டிய  கிருஷ்ணன் சொன்னான். " குருவே  பேசாமல்  மூன்று  கூர்ச்சங்களை இலைக்கு  எதிரே போடுங்கள் அதுவே  பித்ருக்களாகிவிடும். போஜனம் செய்யும் "  என்றான்.
 "டே  சின்ன பயலே,  உனக்கு  இது  விளையாட  நேரமாடா? "
"இல்லை  குருவே, ஸாஸ்த்ரமே  இதைத்தான்  சொல்கிறது.  மனத்தில்  பித்ருக்களை  வேண்டி  அந்த  கூர்ச்சத்தில் அவர்களை  ஆவாஹனம் பண்ணி  கூப்பிடுங்களேன்"
அவ்வாறே  ஏகநாதர்  தனது  அப்பாவை  நினைத்து  ஒரு  கூர்ச்சம்  இட்டு  வேண்டினார்.  இலையின் முன்னே  விட்டலனே  வந்து  அமர்ந்து  உணவை உண்டான்!! .  மற்ற  கூர்ச்சங்களுக்கு என்று  இந்த்ராதி தேவர்கள்  வந்து  ஏகனாதருடைய  மூதாதைகளாக  ஆவிர்பவித்து  உணவு உண்டு  ஆசீர்வாதம் வழங்கினர். 

 விட்டலனும்  மற்ற  தேவர்களும்  பிராமணர்களாக  வந்து  ஆசிர்வாத மந்த்ரம்  உச்சரித்தது  மற்ற  வீடுகளில்  உள்ள  பிராமணர்களின்  காதிலும்  விழுந்ததே. அவர்கள்  ஏக்நாத்  வெளியூரிலிருந்து  பிராமணர்களை  வரவழைத்து  ஸ்ராத்தம்  நடத்துகிறார்.  ஊர்  கட்டுப்பாடு  தெரியாத அவர்களும்  வந்திருக்கிறார்கள்.  வெளியே  வரட்டும்  பேசிக்கலாம்  என்று காத்திருந்தனர். யாரும்  வரவில்லை என்றறிந்து  கண்டிய  கிருஷ்ணனிடம் " யார்  வந்தார்கள்?" என்று கேட்டனர்  
" ஒருத்தரும்  வரவில்லையே" என்றான்  பையன்.  சரி  குரல் மாற்றி  கிருஷ்ணனும்  ஏக்நாத்தும்  தான்  மந்திரங்களை உச்சரித்தனர் என்று  எண்ணி  அவர்கள் திரும்பினார்கள். 

சில  மாதங்களுக்கு  பிறகு  பிராமணர்கள்  ஏக்நாத் தக்க  பரிஹாரம்  பண்ணினால்  மீண்டும்  ஏக்நாத் பிராமண சமூகத்தில்  எற்றுகொள்ளப்படலாம்  என்று  அபிப்பராயம் தெரிவித்தனர்.  "என்ன  பரிஹாரம்?"
ஒவ்வொரு  பிராமணரும்  ஒரு  லிஸ்ட்  தந்தார்.  அவர்கள்  பரிகாரத்துக்கு  கேட்ட  தானம் அயிட்டங்கள்  என்ன  தெரியுமா? தங்கத்திலே  ஒரு  பசு,  வீடு,  நிலங்கள்,  பணம்,  ஆபரணங்கள்.  இன்னும் பல.  ஏகநாதர் இவற்றுக்கெல்லாம்  எங்கே  போவார்?.  இருக்கும்  வீடு முதலிய  சகலமும்  தர முன்வந்தார்  கண்டிய  கிருஷ்ணன்  தடுத்தான்.  
"இந்த  பிராமணர்கள் உங்களை  ஓட்டாண்டியாக்கி  விட ப்ளான் போட்டிருக்கிறார்கள். நம்பவேண்டாம்.  இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்" .  என்றான். ஏக்நாத்  கிருஷ்ணன் சொல்லை  காதில் போட்டுக்கொள்ளவே  இல்லை.  தனது சொத்து பூரா  தானமாக அளித்து 
பிராமணர்களும்  அவருக்கு  சங்கல்பம்  பண்ண தயாரானார்கள்  கிருஷ்ணன்  இதெல்லாம்  பார்த்துக்கொண்டேயிருந்தான்.   

அந்த நேரம்  பார்த்து  ஒரு  குஷ்ட ரோகி  அங்கு வந்தான் 
" யார் நீ  எதற்கு இங்கு வந்தாய்?"   என்று  பிராமணர்கள் கேட்க  
"இங்கு  ஏக் நாதர் யார்?  அவரிடம்  ஒரு பரிஹாரம்  பண்ணிக்கொள்ள  வந்திருக்கிறேன்"  என்றான்  அவன். 
"ஏக்னாதரே  எங்களிடம்  இப்போது பரிஹாரம் பண்ணிக்கொள்கிறார்!!.  நீ வேண்டுமானால்  எங்களிடம்  பரிஹாரம்  பண்ணிக்கொள்" என்றனர்  
"இல்லை  இல்லை  ஏகநாதர்  ஒருவரால்  தான்  என்  குறையை தீர்க்கமுடியும். த்ரியம்பகேஸ்வரரின்  ஆக்ஞை இது.   உங்களைப்போல  பல பேரிடம் சென்று  தோல்வியும்  பண நஷ்டமும்  தான் மிச்சம். வியாதி  குணமாகவே இல்லை. "

கண்டிய  கிருஷ்ணன் அவர்கள்  காது பட  அந்த  குஷ்டரோகியிடம்  கேட்டான்." " 
"ஏகனாதரிடம்  என்ன பிராயச்சித்தம்  பெறவேண்டும் ?
"ஏக நாதர் பாதத்தை  அலம்பி  அந்த  ஜலத்தை  ப்ரோக்ஷித்துக்கொண்டு  ஒரு  கை  நிறைய   குடித்தால் தான்  என்  உடலை  பாதித்த குஷ்ட நோய் தீரும்.என்று  த்ரியம்பகேஸ்வரர்  கனவில் சொன்னாரே" 
"நான்  இதற்கு  ஒப்புக்கொள்ள மாட்டேன்.  நான்  ரொம்ப  சாதரணமானவன்.  நானே  ஒரு பாபி"  என்றார்  ஏக நாத்.  
"அதெல்லாம் இல்லவே இல்லை.  இது  திரயம்பகேஸ்வரர்  ஆக்ஞை.  மீராதிர்கள்.  என்  வாழ்வை சீராக்க வேண்டியது உங்கள் கடமை"  என்றான்  குஷ்டரோகி. 
"நாங்கள்  இருக்கும்போது ஏகநாதர் பரிஹாரம்  செய்ய  விடமாட்டோம்" என்றனர்  பிராமணர்கள்.
" நீங்கள்  மறுத்தால்  இதோ  இந்த  கோதாவரியில் விழுந்து உயிரை  மாய்த்து கொள்வேன்.  த்ரியம்பகேஸ்வரர் கட்டளையை மீறினது இல்லாமல்,   என் உயிர் போன பாபமும்  உங்களை சேரும்"  என்று  பிராமணர்களை  எச்சரித்தான்  குஷ்டரோகி.

பிராமணர்களும்  மந்திரத்தை நிறுத்தினார்கள். முதலில்  ஏகநாதர் இந்த ஏழை  குஷ்டரோகியை எப்படி நிவர்த்திக்கிறார்  என்று  பார்ப்போம்  என்று  காத்திருந்தனர்.
குஷ்டரோகி,   கண்டிய கிருஷ்ணன் ஜலம் விட   அவர் காலை  பூஜித்து  அலம்பி அந்த  ஜலத்தை  குடித்த  அடுத்த  கணமே  அவன்  உடல்  பொன்னிறமாக  மாறி  அவன் ஒரு அழகிய வாலிபனாக  மிளிர்ந்தான்.  பிராமணர்கள்  இந்த  அதிசயத்தில்  சிலையாயினர் 
"பிராமணர்களே,  அவர் ஏழைகளுக்கு  அன்னதானமிட்டதை  தெய்வங்களே  ஏற்றுக்கொண்டபோது இன்னும்  நீங்கள்  என்  குருநாதருக்கு  பரிஹாரம்  செய்ய  ஏற்றவர்களா  என்று  யோசித்து செய்யுங்கள். உங்களை  பெரும்  பாவம்  பற்றிக்கொள்ளும். விட்டலன்  நிந்தனைக்கு  ஆளாவீர்கள்   ஜாக்ரதை" என்றான்  கண்டிய  கிருஷ்ணன்.
ஆடிப்போய்விட்ட  பிராமணர்கள்  ஏக நாதர் காலில்  விழுந்து வணங்கி  அவர்   மன்னித்தருள வேண்டினர். ஏகநாதர் மீது விதிக்கப் பட்ட ஊர்க்கட்டுப்பாடு  தானாகவே  .  விலகியது.   கண்டிய கிருஷ்ணனும்  தன  வேலை  முடிந்தது  என்று  பண்டரிபுரம் திரும்பினான்.  அவன்  கோவிலில் போய்  இடுப்பில்  கை வைத்து  நிற்கவேண்டாமா?  

Reply all
Reply to author
Forward
0 new messages