காலயவன் பெற்ற பரிசு -- நங்கநல்லூர் J K SIVAN
மஹா பாரதத்தில் வரும் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சொன்னாலும் படித்தாலும் யாருக்காவது சே வேண்டாம் என்று வெறுக்க தோன்றுமா? ஏன் அப்படி? அதில் இழையோடும் உயிரோட்டம், நிதர்சனம், நமது பண்பாடு, முன்னோர்களின் திறமை, வாழ்க்கை முறை, குணாதிசயங்கள், அற்புத கற்பனை இதெல்லாம் வேறே எங்கே ஒரே இடத்தில் கிடைக்கும்?
நல்லது செய்பவர்களுக்கு, நல்லவர்களுக்கு, துன்பமும், கஷ்டமும் சோதனையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நமக்கு இறைவனை நினைக்க அவன் அருள் பெற துன்பம் அவசியமாகிறது. இப்போது தானே குந்தி கதை சொன்னேன்.
கடவுளே மனிதனாக வந்து பிறந்த போதும் இந்த சோதனை கிருஷ்ணனுக்கும் பிறந்த கணம் முதல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. குழந்தையாக இருந்ததிலிருந்தே மரணம் அவனை ராக்ஷஸர்கள் வழியாக துரத்தியது. இல்லை, தப்பு தப்பு. அவன் மரணத்தை ராக்ஷஸர்களுக்கு, தீயவர்களுக்கு, பிறந்தது முதல் தந்து கொண்டே இருந்தான். அவன் எதிர்கொண்ட இன்னல்களை ஏற்று, தீயவர்களுக்கு அவர்கள் தனக்குத் தர விரும்பிய மரணத்தை அவர்களுக்கே தந்து அழித்தான்.
கிருஷ்ணன் மதுராபுரி ராஜ்யத்தை அரசாள முன்வந்தபோது நாலா பக்கத்திலும் எதிரிகள் பெருகி, வலுக்கவே, ராஜ்யத்தை மேற்கே துவாரகைக்கு மாற்றினான். கிருஷ்ணன் எதிரிகளைக் கண்டு அஞ்சி, பயந்து மதுரையிலிருந்து ஓடவில்லை. யாதவர்களைக் காப்பாற்றவே இந்த மாற்றம். அங்கே கடற்கரையில் ஒரு நகரம் உருவாகியது. துவாரகை நமக்கு கிடைத்தது.
கர்க மஹரிஷி புத்திரன் மகன் காலயவன் மூலம் யாதவர்களுக்கு ஆபத்து என்று கண்ணனுக்கு நன்றாக தெரியும். . யாதவர்களால் காலயவனைக் கொல்ல முடியாது என்பது சிவன் கொடுத்த வரம். ஆகவே துவாரகைக்கு குடியேறினார்கள்.
ஜராசந்தன் கிருஷ்ணனை வெல்லவோ, கொல்லவோ, முடியாமல், சிசு பாலன் மூலம் சால்வனின் நண்பனாகி அவனோடு இருந்த காலயவன் மூலம் யாதவ குலத்தையும் கிருஷ்ணனையும் அழிக்க திட்டம் தீட்டினான்.
மதுராவிலிருந்து காலயவன் துவாரகைக்கு வந்துவிட் டான். அவனை எப்படி முடிப்பது என்று கிருஷ்ணன் ஏற்கனவே தீர்மானித்து விட்டு அந்த திட்டம் நிறைவேறக் காத்திருந்தான்.
காலயவனை யாதவ குல கிருஷ்ணன் கொல்ல முடியாது. ஆகவே காலயவனிடமி ருந்து தப்பி ஓடுவது போல் கிருஷ்ணன் ஓடி, காலயவன் தன்னைப் பின் தொடரச் செய்து, ஒரு மலைக் குகை அருகே சென்றான். அந்த குகையில் பல யுகங்களாக முசுகுந்தன் தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் தூக்கத்தை யாராவது கெடுத்தால் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அக்கணமே அவனை எழுப்பியவன் மரணமடைவான் என்று இந்திரனிடம் வரம் பெற்றவன் முசுகுந்தன்.
இது கிருஷ்ணனுக்குத் தெரியாதா? காலயவன் தன்னைத் துரத்திக்கொண்டு வந்த போது பயந்தவன் போல் கிருஷ்ணன் நடித்து முசுகுந்தன் இருந்த குகைக்குள் ஓடி இருட்டில் ஒளிந்து கொண்டு தனது பீதாம்பரத்தை தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் மேல் போர்த்தி விட்டான். கிருஷ்ணனைத் துரத்திக் கொண்டே பின்னாலே ஓடிவந்த காலயவன், இருண்ட குகையில் கிருஷ்ணன் தான் தனது மஞ்சள் வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு படுத்து ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தான்.
''பேடிப் பயலே , கிருஷ்ணா, இங்கேயா வந்து தூங்குபவன் போல் பாசாங்கு பண்ணுகிறாய். உன்னை என் கையால் கொல்லும் முன் அச்சாரமாக முதலில் பலமாக ஒரு உதை வாங்கிக் கொள், இந்தா '' என்று காலால் பலமாக , தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை உதைத்தான்.
முசுகுந்தன் துவாபர யுகத்தில் கிருஷ்ணனின் வருகைக்காக காத்திருந்து அவனை சதுர் புஜனாக தரிசித்துவிட்டு விண்ணுலகம் போக காத்திருந்தவன் அது வரை எவர் தொந்தரவும் இல்லாமல் இந்த குகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
காலயவன் தன்னை பலமாக காலால் உதைத்ததும் முசுகுந்தனுடைய உறக்கம் கலைந்தது. கடுங்கோபமாக, ''யாரது என்னை உதைத்து அவமதித்து எழுப்பியது?'' என்று காலயவனை உற்றுப் பார்த்தான். இந்திரன் கொடுத்த வரம் அந் கணமே பலித்தது.
ஒரு பெருந் தீ முசுகுந்தன் கண்ணில் இருந்து புறப்பட்டு காலயவனை விழுங்கி அவன் எரிந்து அந்த ஸ்தலத்திலேயே சாம்பலானான்.
தீயின் ஒளியில் முசுகுந்தன் அந்த குகையில் இன்னொருவன் இருப்பதைப் பார்த்தபோது அங்கே சதுர்புஜ நாரயணன் தரிசனம் அவனுக்கு கிடைத்து மகிழ்ந்தான். சந்தோஷ மாக கிருஷ்ணனை வணங்கி விண்ணுலகம் திரும்பினான்
வாழ்க்கை சக்ர விசேஷங்கள்; நங்கநல்லூர் J K SIVAN
ஒரு பிராமணன் பிறந்தது முதல் பல வித சடங்குகள் செய்வது சம்ப்ரதாயம். பழக்கம். பாரம்பரிய வழக்கம்.
அதில் முக்கியமான சிலவற்றை சொல்கிறேன்.
ஜாதகர்மா என்பது பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு. குழந்தையின் மூக்கில் நெய் வைத்து , காதில் ஓம் சொல்கிறோம். உயிர் மூச்சு உறுதிப்படுத்தப்ப டுகிறது. அதை தொடர்ந்து நாமகரணம். அது குழந்தை பிறந்த 10, 11, 12 நாட்களில் அவரவர் வழக்கப்படி செயகிறோம். குழந்தைக்கு பெயர் சூட்டுவது. குலதெய்வத்தின் பெயர், தாத்தா பாட்டிகள் பெயர், இஷ்ட தெய்வத்தின் பெயர் வைக்கும் சடங்கு.
குழந்தைக்கு 6 மாதம் ஆன உடன் அன்ன ப்ராசனம். கோவிலில் துலாபாரம் போட்டு காணிக்கை கொடுத்து அங்கே அன்னப் ப்ராசனம் அப்பா அம்மா பண்ணுவதை குருவாயூர் கோவிலில் கூட பார்க்கலாம். பலர் வீட்டிலேயே பண்ணுகிறார்கள். குழந்தை முதன் முதலாக அரிசி சாதம் கொடுக்கப்படும் நாள்.
கர்ணபூஷணம், கர்ணவேதனம் என்பது காது குத்துவது. முதல் வயது அப்த பூர்த்தி ஆன அன்று செய்வது. ஆண் பெண் குழந்தைகளுக்கு பொதுவானது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தாய்க்கு எட்டாம் மாசம் சீமந்தம் நடைபெறுகிறது தெரிந்த விஷயம் தானே. நல்ல மன நிலை குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று செய்யப்படும் சடங்கு.
ஆண் குழந்தைக்கு அந்தக் காலத்தில் ஐந்து வயதிலேயே உபநயனம். இப்போது அதிக பக்ஷம் 11 வயதுக்குள் உபநயனம் நடப்பது, , பூணல் போடுகி றோமே. ( கல்யாணம் ஆகும் போது ஒரு சில நிமிஷங்கள் மாப்பிள்ளை பூணல் போட்டுக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது. சட்டை மேலே பூணல் போட்டு பார்த்திருக்கிறேன்)
காயத்ரீ மந்திரம் பிரம்மோபதேசம் அப்பா மூலம் வாத்யார் உபதேசிப்பார். அந்த கணம் முதல் பிராமணன் ரெண்டாவது பிறவி எடுக்கிறான். அதனால் தான் “த்விஜன்” (இரண்டாவது பிறப்பு) எனப்படுகிறான்.
ஆரம்ப காலத்தில் அப்புறம் தான் சிறுவன் குருவின் வீட்டுக்கு கல்வி வேதம் கற்பதற்கு அனுப்பப்படுவான். குருகுலவாசம் தான் பள்ளிக்கூடம் அப்போது. பிரம்மச் சரியம் எனும் வாழ்க்கை நிலை இது.
கல்வி கற்றபின் விவாகம். திருமணம். பெற்றோர் தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து கன்யாதானம், மங்கலஸூத்ர தாரணம் எல்லாம் கிரமமாக சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தோடு நடக்கும். பிறகு குடும்ப வாழ்க் கை இது தான் க்ரஹஸ்தாஸ்ரமம் எனப்படும் ரெண்டாவது நிலை. இதில் நித்ய கர்மா, தேவ கடன்,பித்ரு கடன், ரிஷிகளுக்கு செய்யவேண்டிய கர்மமாக்கள் செயகிறான்.
பிள்ளை பேரன் பேத்தி எடுத்த பிறகு அவன் வாழ்க்கை நிலை வானப்ரஸ்தம்: இப்போதெல்லாம் காட்டுக்கு போவதில்லை, அதிக பக்ஷம் OLDAGE HOME , முதியோ ரில் லம் தான் வானப்ரஸ்தம். இங்கு தான் ஆன்மீக வாழ்க்கை வளர்கிறது.
காட்டுக்கு போய் தவமிருக்கும் சந்யாசிகள் இப்போது இல்லை. குடும்பத்தில் ஈடுபாடு கொள்ளாமல் தனித்து இருப்பதே தான் இப்போதைய ஸந்நியாசம்: உலக ஈடுபாடுகள் கவர்ச்சிகள் துறந்து முழுமையாக ஆன்மிக வாழ்வு. மனது த்யானம், தத்வம் எல்லாம் தேடும் புரிந்துகொள்ளும் பருவம்
.
கடைசி நிலை பற்றி சொல்லப்போவதில்லை.
வாழும்போது வயது ஏற ஏற சில சடங்குகள் செயகி றோமே அதைப் பற்றி சொல்கிறேன்.
ஹிந்துக்களின் வாழ்க்கையில் பிறந்தது முதல் ஒருவருஷம் கழித்து கொண்டாடுவது அப்த பூர்த்தி
55வது வருஷ ஆரம்பத்தில் பீம சாந்தி
60வது வயசு ஆரம்பத்தில் உக்ர ரத சாந்தி.
60 வயது முடிந்து 61 ஆரம்பத்தில் ஷஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 ஆரம்பத்தில் பீம ரத சாந்தி. பீம என்றால் பெரிய, நீண்ட, ரதம் என்றால் வாழ்க்கை தேர். அது பீமனின் ரதம் போல் பலமுள்ளதாக வரும் நோய் நொடிகளை, எதிர்த்து தாங்கக்கூடியதாக முன்னோக்கி எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக நடத்த ஓடவேண் டும் என்று வேண்டிக்கொள்ளும் சடங்கு. பீமா என்றால் வாழ்க்கை எனும் பொருளில் LIC க்கு கூட பீமா என்ற வார்த்தை நிறைய பிடிப்பதால் பல பாலிஸிகளை இந்த பெயரோடு கொடுக்கிறார்கள்.
இது அதிக விமரிசையாக கொண்டாடப்படுவதில்லை. வீட்டோடு உறவினர்கள், நண்பர்களுடன் திருப்தியாக கொண்டாடுபவர்கள் அதிகம்.
72 ஆரம்பத்தில் ஏக சாந்தி
77 வருஷம் 7 மாசம், 7 நாள் முடிந்ததும் விஜயரத சாந்தி.
80 முடிந்து 8 மாதங்கள் ஆனதும் : சதாபிஷேகம்.85 சதாயுஷ்ய பூர்த்தி ஸதாயுஷ் ஹோமம் 85 வயது முடிவு. 90 நவதி பூர்த்தி 90வயது முடிந்தவுடன் செய்வது.
100 வருஷம் முடிந்தபின் ஸதாயுஷ் ஹோமம் (Sadayush Homam) சதாயுஷ்ய பூர்த்தி – சத பூர்த்தி சாந்தி. பூர்ணாபிஷேகம் எனும் கனகாபிஷேகம்.
ஒரு முக்கிய விஷயம். இவை எல்லாமே இங்கிலிஷ் வருஷம் சம்பந்தமே இல்லாதது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பே பாரத தேசத்தில் வேதகாலத்தி
லிருந்து வழக்கத்தில் இருந்த சடங்குகள்.
ஹிந்துக்களுக்கு, தமிழினத்துக்கு, அறுபது ஆண்டுகள் ஒரு வட்டம். பிறந்ததிலிருந்து, அந்த ஜென்ம தினத்தி லிருந்து 60 வருஷங்கள் முடிந்து மீண்டும் அதே ஜென்ம நக்ஷத்ரம் வரும் தினம் அன்று கொண்டாடப்படுவது
ஷஷ்டி அப்த பூர்த்தி.வீட்டோடு உறவினர்கள், நண்பர்களுடன் திருப்தியாக கொண்டாடுபவர்கள் அதிகம்.
சதாபிஷேகம் (80வது ஆண்டு நிறைவு ) 80வருஷம் + 8 மாதம் + 8 நாள் கணக்கு இதையே ஆயிரம் பிறை காண்பது . ஸஹஸ்ர சந்திர தர்சனம் என்பது.
நூறு வயது முடிந்தால் கனகாபிஷேகம். சதம் ; நூறு அபிஷேகம்; ஸ்னானம்.. சதாபிஷேகம் ஒரு பெரிய ஹோமம், ஆயுள் விருத்திக்காக செய்யப்படும்.
யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்ததின் காரணம் அங்கே நிச்சயம் கிருஷ்ணன் வருவார் தரிசித்து வணங்கலாம் என்பதற்கு தான். ஆனால் கிருஷ்ணனோ அங்கு வந்திருந்த பெரியவர் களுக்கு பாத நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்.
”கிருஷ்ணா, நாங்கள் உன்னை நமஸ்கரிக்க வந்தால் நீ வேறு யாரையெல்லாமோ வணங்கிக் கொண்டிருக் கிறாயே ஏன்?”
முனிவர்களுக்கு கிருஷ்ணனின் பதில்;.
” நான் ஆறு பேரை முக்கியமாக நமஸ்கரிக்கிறேன். :
1. .தினசரி அநேகருக்கு உணவு அளிப்பவன்,
2. இளம் வயதிலேயே யாக யஞம் பண்ணுபவன்,
3. உலகியலில் சிக்கிக்கொள்ளாதவன்,
4. தியாகிகளாக வாழும் சிறந்த பெண்மணிகள்,
5. ப்ரம்ம ஞானிகள்,
6. ஆயிரம் பிறைக்கண்ட 81 வயதான முதியவர்கள்..
முக்கிய நோக்கம்: வாழ்ந்த நூறு ஆண்டுகளுக்காக பகவானுக்கு நன்றியுடன் நிவேதனம் செய்வது, வாழ்வின் றைவுபுள்ளியை சாந்தியாக மாற்றுவது.
இது ஒரு முக்கிய வைதிக சடங்கு. ஹோமம் வளர்த்து வேத மந்த்ரம் சரியாக சொல்லி தேவதைகளுக்கு, த்ரிப்தியடைய நன்றியோடு ப்ரீதி செய்யும் பூஜை. வாழ்க்கையில் தொடர்ந்து இடையூறுகள் நிகழாமல் பாதுக்காக்க , தேஹ ஆரோக்யம் பெற இறைவனை வணங்கும் பூஜை. தம்பதிகளில் வயதில் 70 நெருங்கியவர் கணவனாகத் தான் இருப்பார் என்றாலும் தம்பதிகள் இருவரும் இந்த சடங்கில் பூஜையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
குடும்பத்தார், நண்பர்கள், மற்ற உறவினர்கள் அநேகமாக கலந்துகொள்வார்கள். சிறியவர்களுக்கு தம்பதிகள் ஆசி வழங்கி மந்த்ர அக்ஷதை ப்ரோக்ஷிப்பார்கள். தங்களை விட பெரியவர்களிடம் சென்று அக்ஷதை கொடுத்து ஆசி பெறுவார்கள். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் எல்லாம் பெற்ற குழந்தைகள் பெற்றோர்க்கு ஆசையாக சநதோஷமாக நடத்தி வைக்கும் விழாக்கள் என்பது நமது ஹிந்து சமூகத்திற்கு ஒரு தனிப் பெருமை.
பீமரத சாந்தி ஹோம பூஜையில் பிரதானமாக வழிபடுவது ஆயுள் தேவதை, ஸாத் குண்ய தேவதா , சப்த சிரஞ்சீவிகள் ஹனுமான், விபீஷணன், மஹாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயன், வேதவியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகியோரை வணங்கி ஆசிபெறுவது. குடும்ப லோக க்ஷேமத்துக்கு வேண்டுவது.
இந்த ஹோம பூஜைகளில் நவகிரஹ ஹோமம், கணபதி ஹோமம், ஆயுஷுஹோமம், தவிர முக்கியமாக ஏகாதச ருத்ர ஜபம் அவசியம் பண்ணுவது வழக்கம். பணம் செலவழித்து ஊர் கூட்டி கோலாகல
மாக பண்ணினாலும் வீட்டோடு பண்ணினாலும்
ஹோம பூஜை, மந்த்ரங்கள், ஜபம் இருந்தே ஆகவேண்டும்.சிலர் கோயில்கள் புண்ய க்ஷேத்ரங் களில் இதெல்லாம் பண்ணிக் கொள்கிறார்கள்.
ராஜசூய யாகம். - நங்கநல்லூர் J K SIVAN
ஒரு வாரம் முன்பு காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் க்ஷேத்ரத்தில் பாண்டவ தூத பெருமாளை தரிசித்தோம். அதிலிருந்து கிருஷ்ணனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது. அவர் எப்படி நம்மைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டிருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். கிருஷ்ணனும் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவதரித்தவன் தானே.
அவன் தெய்வம் என்று அவனுக்கே தெரியும். அவனுக்கு நம்மைப் போல் கர்மா எதுவும் இல்லை. அவனைப் போல் நாம் வாழ முடியவே முடியாது. அவனை வணங்கலாம் வழி படலாம் அவ்வளவு தான். நரகாசுரனை வதம் செய்து அவன் சிறையில் அடைத்திருந்த பதினாறாயிரம் ராஜகுமாரிகளை மீட்ட போது அவனை விட்டு பிரிய அவர்கள் மறுத்து அவனே கணவனாக இருக்க வேண்டியபோது தன்னைப் பலவாக பிரித்துக்கொண்டு அவர்களுக்கு தனித்தனியாக அடைக்கலம் கொடுத்ததை வேறு யார் பின் பற்ற முடியும்? ஒவ்வொரு நாளும் விடிகாலை ப்ரம்மமுகூர்த்ததில் எழுந்து குளித்து, அமைதியாக அமர்ந்து கிருஷ்ணன் தியானத்தில் ஈடுபடுவான் என்று பாகவதம் சொல்கிறதே. எல்லாமே அவராகவே இருக்கும்போது பரமாத்மா தன்னைத் தவிர வேறு யாரை தியானம் பண்ணி இருப்பார் ! நாம் நம்முள் ஆத்மாவாக இருக்கும் அந்த பரமாத்வை ஒரு கணமாவது தியானம் செய்கிறோமா? ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ்ரிஷ்டி ஸ்திதி ஸம்ஹார மூர்த்தியாக தன்னையே மூன்றாவதாக பிரித்து வெவ்வேறு நாமங்களில் ரூபங்களில் பக்தர்களை மகிழ்விக்கிறார். எல்லாம் ஒன்றே.
கிருஷ்ணன் துவாரகை மன்னனாக இருந்தபோது ஒரு காட்சி மனதில் ஓடுகிறது.
கிருஷ்ணன் 13084 பசுக்களை துவாரகையில் பிராமணர்களுக்கு தானம் பண்ணினார் ள். ஒவ்வொரு பசுவுக்கும் பட்டு வஸ்திரம், முத்து மாலை, கொம்புகளுக்கு தங்க கவசம், கால் கொளம்புகளுக்கு வெள்ளி பூண். அவை அத்தனையும் வறட்டு, மலட்டு பசுக்கள் அல்ல. ஒவ்வொரு வேளையும் பல படிகள் கள்ளிச்சொட்டு பால் கறக்கும் கறவைப் பசுக்கள். அத்தனையும் கன்றுக்குட்டிகளோடு. இப்படிப்பட்ட பசுக்களைத் தவிர பிராமணர்களுக்கு வஸ்திரங்கள், தானியங்கள், பொற்காசுகள் வேறு. கிருஷ்ணனோ மஞ்சள் பீதாம்பர வஸ்திரம், கௌஸ்துப, வனமாலை. மயில்பீலி, சந்தனம் தரித்தவாறு. ஒவ்வொரு நாள் காலையிலும் ரிஷிகளும் ப்ராமணர்களும் கிருஷ்ணன் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள். கிருஷ்ணன் பிராமணர்கள் மட்டுமல்ல மற்ற எல்லோருக்குமே பாரபக்ஷமின்றி வாரி வழங்குவார்.
வெளியே போகவேண்டும் என்றால் தேரோட்டி தாருகன் கைகட்டி தேரை ரெடியாக அரண்மனை வாசலில் நிறுத்தி பவ்யமாக கிருஷ்ணனை வணங்கி காத்திருப்பான்.
கிருஷ்ணனோடு சாத்யகி, உத்தவர் ஆகியோர் அநேகமாக கூடவே இருப்பார்கள். அவர்களோடு வருவார் கிருஷ்ணன். அந்தப்புர ராணிமார்கள் மற்ற பெரியவர்கள் அனைவரும் கிருஷ்ணனை வழியனுப்ப வரிசையாக நிற்பார்கள்.
கிருஷ்ணன் அரசவை சுதர்மம் என பெயர் கொண்டது. அதில் நுழைந்த எவருமே பசி தாகம், நோய் நொடி, துன்பம் துக்கம், முதுமை, மரண பயம் எதுவுமே இன்றி சதானந் தத்தில் ஆழ்ந்து காணப்படுவார்கள். யதுகுல ஸிம்ஹாஸனத்தில் கிருஷ்ணன் அமர்வார்.
பூரண சந்திரனை சுற்று நக்ஷத்திரங்கள் போல் அரசவையில் மற்றவர்கள். கிருஷ்ணன் வந்து அமர்ந்ததும் வேத கோஷங்கள் முழங்கும். வாத்தியங்கள் ஒலிக்கும். தேவலோக பெண்கள் நடனம் ஆடுவார்கள்.
ஒருநாள் வாசலில் எவருமறியாத அந்நியர் ஒருவர் வந்து நின்று, கிருஷ்ணனால் உள்ளே அனுமதிக்கப்பட்டார். வந்தவர் ஜராசந்தனால் சிறைபிடிக்கப்பட்ட ராஜாக்களின் பிரதிநிதி.
''மஹா ப்ரபு , நீங்கள் கொடியவரை அழித்து தீயவரைக் கொன்று நல்லோரை காப்பவர். ஜராசந்தனால் துன்புறும் சக்தியற்றவர்களை நீங்கள் தான் காத்து உயிர்ப்பிச்சை வழங்கவேண்டும். உங்களை சரணடைந்தோரை காக்கும் தெய்வம் நீங்கள். உங்களுக்கு தெரியும் ஜராசந்தன் பதினாயிரம் யானை பலம் கொண்டவன். அழிக்க முடியாதவன். பதினேழு முறை ஜராசந்தனை நீங்கள் வென்று விரட்டி இருக்கிறீர்கள். உங்களை அவன் வெல்ல முடியாது. நீங்கள் தான் அவனை வென்று சிறைப்பட்டிருக்கும் ராஜாக்களுக்கு உயிர் பிச்சை அளிக்க வேண்டும். இது அவர்களின் சரணாகதி வேண்டுகோள் என் மூலம்''.
இந்த நேரம் பார்த்து நாரத முனிவர் கிருஷ்ணன் அரண்மனைக்குள் வந்தார். கிருஷ்ணன் நாரதரை எழுந்து வணங்கி வரவேற்று அருகே ஆசனத்தில் அமரச் செய்தார்.
''திரிலோக சஞ்சாரி மகரிஷி நாரதரே, எங்கெல்லாம் சென்றீர்கள்? பாண்டவர்களை பார்த்தீர்களா என்ன செய்கிறார்கள்?''
'ப்ரபு, தாங்கள் அறியாததையா நான் சொல்வேன்? இருந்தும் என்னை மதித்து கேட்கிறீர் கள். அது என் மேல் உங்களின் கருணை. யுதிஷ்த்ரனை பார்த்தபோது ''கிருஷ்ணனின் ஆசியோடு, ராஜசூய யாகம் நடத்தவேண்டும்'' என்ற ஆசையை தெரிவித்தான்.
கிருஷ்ணனின் உத்தவரைப் பார்த்தார்.
''உத்தவா, நீ என் நண்பன், சீடன், நீ ஞானி, அறிவாளி, ஆகவே நீ என்ன நினைக்கிறாய் சொல்? என கேட்டார்.
''மஹா ப்ரபு , குருநாதா, நாரத மகரிஷி சகலமும் அறிந்த திரிகால ஞானி, அவர் விருப்பம் போல் தாங்கள் ஹஸ்தினாபுரம் சென்று யுதிஷ்டிரர், மற்ற பாண்டவர்களுக்கு ராஜசூய யாக நடத்த வேண்டிய அறிவுரைகளை வழங்க வேண்டும். எல்லா அரசர்களையும் வென்ற பின் தான் சக்ரவர்த்தியாக ராஜ சூய யாகம் புரியவேண்டும்.ஜராசந்தனை வெல்லாமல் அது நிறைவேறாது. அவனை வென்றதோடு நில்லாமல் அவன் சிறைபிடித்த அரசர்களை
விடுவித்து அவர்களின் ஆதரவையும் யுதிஷ்டிரனுக்கு பெற்று தரவேண்டும். நீங்கள் தான் அதற்கு வழி காட்டவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது'' என்றார் உத்தவர்.
ஸ்ரீமத் பாகவதம் நீளமானது. அதை சுருக்கி கொடுக்கும்போது ஒரு நிலையில் நிப்பாட்ட வேண்டும் அல்லவா? அது தான் இது. அடுத்த பதிவில் கிருஷ்ணனின் ஹஸ்த்தினாபுர
பயணம் பற்றி சொல்லலாம் என்று எனக்கு எண்ணம். சர்வம் க்ரிஷ்ணார்ப்பணமஸ்து.
சாம்பார், ரசம், கூட்டு, பொரித்த அப்பளம், ஊறுகாய், முட்டைகோஸ் காய், என்று மாறி மாறி அயிட்டங்கள் வயிறு நிரம்ப பரிமாறப்பட்டு உண்டோம். கோவிலுக்கு ஓடி அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரத்தை ரசித்தோம். அபிஷேகத்தின் போது , சுந்தரேசன், கங்காதீஸ்வரன், கணேசன், நான் ஆகியோரும் ஸ்ரீ ருத்ரம் சமகம் பாராயணம் பண்ணினோம். அர்ச்சகர் மகன்கள் தந்தைக்கேற்ற தனயர்கள். அற்புதமாக அலங்காரம் அபிஷேகம் பண்ண தெரிந்தவர்கள். அம்பாளும் அரனும் எங்களுக்கு கண்கொள்ளா காட்சி அளித்தார்கள்.