TODAY'S POST- VISHWAVASU-DAKSHINAYANAM-SHARATH-VRUCHIKA-KRISHNA-DWADASIi-SOWMYA-VISAKA

1 view
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Dec 19, 2025, 6:20:05 AM (18 hours ago) Dec 19
to

1112

விநயமும் ச்ரத்தையும் --தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது ச்ரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண் மாதிரி. குரு என்றால் வழி காட்டுபவர், அந்த வழியில் போகணுமென்று திரும்பத் திரும்பப் பார்த்தோமோல்லியோ? கண் இருந்தால்தானே ஒரு வழியில் போக முடியும்? அப்படி நமக்கு இரண்டு கண்களாக இருப்பவை விநயமும் ச்ரத்தையுந்தான். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலே மற்றதும் தன்னால் வந்துவிடும். ஒன்றிடம் நாம் அடங்கிக் கிடக்கிறோமென்றாலே அதுதான் நமக்கு நல்லது செய்யும் என்ற த்ருட நம்பிக்கையில்தானே அப்படிக் கிடக்கிறோம்? அதே மாதிரி, ஒன்றிடம் நாம் அதுவே பரம ப்ரயோஜனம் தருமென்றால் த்ருட நம்பிக்கை வைக்கிறோமென்றால் அந்த ப்ரயோஜனத்தைப் பெற அதனிடம் அடங்கிக் கிடக்கத்தானே செய்வோம்?

கீதையில் பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், ச்ரத்தையையும் சொல்லியிருக்கிறார். முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம், 'பரிப்ரச்னம்' என்பதாக நன்றாகக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது, 'ஸேவை' என்பவற்றை சிஷ்ய லக்ஷணமாகச் சொன்னார். ஸேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு, பலவிதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை ஸ்வீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. அப்புறம் "ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்" 'சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்ன ப்ரணிபாத -பரிப்ரச்ன - ஸேவைகள் விநயத்தின் கீழ் வருகிறவையே. ப்ரணிபாதமும், அதாவது நமஸ்காரமும், ஸேவையும் விநயத்தைக் காட்டுபவை என்று எவருக்கும் புரியும். கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வதான 'பரிப்ரச்னம்' எப்படி விநயத்தில் வரும் என்று தோன்றலாம்.

திருப்பாவை பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

    
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
    
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்
.

2. திருவெம்பாவை

 

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்

பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

MARGAZI PIC

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
 
1112[1].jpg
MARGAZI%20PIC[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages