பகுத்தறிவு என்றால் என்ன ?

114 views
Skip to first unread message

amritha varshini

unread,
Jan 25, 2015, 8:44:30 PM1/25/15
to amrith...@googlegroups.com
From: Pattabi Raman <vijaya...@gmail.com>
Date: 2015-01-25 8:08 GMT+05:30
Subject: பகுத்தறிவு என்றால் என்ன ?(3)
To: amritha varshini <amrithava...@gmail.com>

பகுத்தறிவு என்றால் என்ன ?(3)

பகுத்தறிவு என்றால் என்ன ?(3)

எந்த ஒரு கொள்கையையும் கோட்பாடுகளையும்
அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை
ஆராய்ந்து பிறகு அதை ஏற்றுக்கொள்வதோ அல்லது
ஏற்றுக்கொள்ளாமல் விடுவதோ பகுத்தறிவு.

இந்து மதத்தில் எந்தகருத்தையும் திணிக்கும்
போக்கு கிடையாது.

கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள
கட்டாயப்படுத்தப்படுவதில்லை

கேள்விகள் கேட்டு, ஐயங்களை முழுவதுமாக
நீக்கிக் கொண்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டுவர
அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அனுதினமும் செய்யவேண்டிய கடமைகளை மட்டும் அதைப் பற்றிய முழு அறிவு பெறாவிட்டாலும். விடாமல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலபோக்கில் அதன் நோக்கத்தையும், பலன்களையும் வாழ்வில் கற்றறிந்த பெரியோர்கள் மூலம் கற்று தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


மற்ற மதங்களில் அந்த சுதந்திரம் வழங்கப்படவில்லை.

ஆனால் நடைமுறையில் பகுத்தறிவு வாதிகள் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து விமரிசனம் செய்கிறார்கள்
இழிவுபடுத்துகிறார்கள். இந்த மதத்தில்உருவ வழிபாட்டை ஏளனம் செய்வதும், வழிபாட்டு தளங்களில்
புகுந்து குழப்பம் விளைவிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்துக்களை பார்த்து கடவுள் இல்லை என்றும் ,கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் கடவுளை வாங்குபவன் காட்டுமிராண்டி என்று காட்டுக் கூச்சல் போடுகின்றனர்.

ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற மதத்தினரை கண்டு கொள்வதில்லை. அவர்களோடு கூடி குலவுகின்றனர்.

அவர்களை கண்டித்தால் அடுத்த நாளைக்கு அவர்களை கண்டிக்க அவர்கள் உடம்பில் தலை இருக்காது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்துக்கள் இந்த நாத்திகவாதிகளையும் சமூகத்தின் அங்கமாக
ஏற்றுக்கொண்டுள்ளதுதான் காரணம்.

ஏனென்றால் அவர்களுக்கு  நன்றாகத் தெரியும் ,அவர்கள்  இறைவனைப் பற்றிய முழு அறிவையும் பெறாமையால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று.

அவர்கள் மீது வெறுப்பு  கொள்வதில்லை, விரோதம் பாராட்டுவதில்லை.

அவர்களை அதிக எண்ணிக்கை கொண்ட கடவுள் நம்பிக்கையுள்ள இந்து மக்கள் அவர்களையும் செயல்பட அனுமதித்துள்ள பெருந்தன்மை மற்ற எந்த மதத்தினருக்கும் கிடையாது.

அவர்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபடும் இந்துக்களுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு கிடையாது இருவரும் ஒன்றே.


சிலைகளை வணங்கும் இந்துக்களை காட்டுமிராண்டி என்று மேடைதோறும்  முழங்கும் இந்த மூளையில்லாக் கூட்டம். இந்துக்கள் சிலைகளுக்கு செய்யும் அதே வழிபாட்டைத்தான் எல்லா இடங்களிலும் செய்வது கேலிக்குரிய செயலாகும்.

கோயிலில் உள்ள சிலைகளுக்கு நடைபெறும் அத்தனை சடங்குகளையும் தங்கள் தலைவரை போற்றுவதாக கூறிக்கொண்டு வெட்கமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

பல கோடி மக்கள் தெய்வமான ஸ்ரீ ராசந்திர மூர்த்தியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவதூறு செய்த இந்த கூட்டம். தங்கள் தலைவரின் சிலையை உடைத்தால் மட்டும் வன்முறையில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர். 

ஆனால் இறைவனை  சிலையிலும் கண்டு வழிபடும் பக்தகோடிகள் . சிலைகள் சேத ப்படுத்தப்பட்டாலோ, திருடு போனாலோ, இந்த கூட்டங்களைப் போல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.

அதுதான் மனிதர்களை துதி பாடும் கூட்டத்திற்கும் மகேசனை வணங்கும் பக்தர்களுக்கும்   உள்ள வேறுபாடு.

நாம் செய்வது அன்பு வழிபாடு  
அதில் வன்முறைக்கு இடமில்லை. 


மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டு நடைபெறும் செயல்களை எல்லாம் இறைவன் செயல் என்று இருக்கும் இந்துக்களை மூடர்கள் என்று கூறும் இந்த கூட்டம். அதற்கான காரணங்களை பகுத்து அறிய இயலாத நிலையில் அவைகளை இயற்கை என்று பிதற்றி திரிகின்றனர்.

இப்படி முரணுக்கு பின் முரண்பாடான கருத்துக்களை கூறி மக்களிடையே பிரசாரம் செய்து ஏமாற்றி திரியும் இவர்களின் கூப்பாடுகள் எடுபடுவதில்லை.

ஆண்டுதோறும் ஆலயங்களும், வழிபாடுகளும், உலகெங்கும் பல்கி பெருகி வருகின்றது.

அனைத்தும் இறைவனின் ஆணையால் தான் இந்த உலகம்
இயங்கிவருகின்றது,அவன் துணையின்றி உள்ளத்தில் அமைதியை பெறமுடியாது என்பதையும் உலக மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.

இன்னும் வரும்

Reply all
Reply to author
Forward
0 new messages