உ
இன்று மாசி அனுஷம் (09-03-2026) ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்!
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - மோஹனம்
தாளம் - ரூபகம்
பல்லவி
தரிசனம் கண்டவர்க்கு இனிப் பிறவி இல்லையாம்
அனுபல்லவி
பங்கயக் கரம் உயர்த்தி அபயம் நல்கிடும் காஞ்சி மாமுனி
( தரிசனம் கண்டவர்க்கு )
சரணம்
உள்ளக் கமலத்தில் என்றும் உறைபவரை
கள்ளத்தனம் நீக்கி வெள்ளமென அருள்பவரை
இன்பம் அளிக்கும் ஈடில்லா பெருந்தகையை
துன்பம் களையும் துரிய நிலை கடந்தவரை
( தரிசனம் கண்டவர்க்கு )
விழுப்புரத்தில் பிறந்த விழுப்பொருளை
மழுவேந்தி அருளும் முழுமுதலை
வேதம் காத்திடும் ஊழி முதல்வனை
பாதகம் நீக்கிடும் ஒப்பிலா மூர்த்தியை
( தரிசனம் கண்டவர்க்கு )
https://youtu.be/jd_8rsDVXUE