TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-SISIRA-KUMBA-KRISHNA-NAVAMI-GURU-MOOLA

2 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Mar 13, 2026, 12:21:07 AM (2 days ago) Mar 13
to
39575722_648027262250916_6698611082820321280_n

உடைத் தூய்மை-தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

நீங்கள் போட்டுக் கொள்ளும் உடை அழுக்கு மயமாக இருந்தால் எத்தனை குளித்தும் பிரயோஜனம் இல்லை. துணியில் அழுக்கு இருந்தாலும் சொறி சிரங்கு வரத்தான் செய்யும். சலவைக்குத் துணியைப் போட்டால் நன்றாக வெளுத்துத் தருவார்கள். அதைவிட நீங்களே உங்கள் உடைகளை நன்றாகத் துவைத்துக் கொள்ளுவது சிறந்தது. துணியைத் துவைத்துப் பிழிவது உங்கள் தேகத்துக்கே ஓர் ஆரோக்கியப் பயிற்சியாக இருக்கும். நாமே நம் துணியை இவ்வளவு நன்றாகச் சுத்தப்படுத்தி வெள்ளை வெளேரென்று ஆக்கியிருக்கிறோம் என்றால் உங்களுக்கே அதில் ஒரு பெருமை, திருப்தி, சந்தோஷம் இருக்கும். உங்கள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். சலவைச் செலவும் இதனால் குறையும்.

உடம்பைத் தேய்த்துக் குளிப்பது, உடுப்பைத் துவைத்துக் கட்டுவது – இவை இரண்டாலும் அழுக்கிலிருந்து, சொறி சிரங்கிலிருந்து விடுபட வேண்டும்.


உள்ளத் தூய்மை

உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும் காரியம் என்று வந்து விட்டால் நல்லதைச் செய்கிறபோதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிற போது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணறுவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வது தான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
1
39575722_648027262250916_6698611082820321280_n[1].jpg
1[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages