காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ
['மாலை தனில்'- திருப்புகழ்]
(2) வழிபாடு தொடங்கும்போது
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம
எம்பெருமானே நமோ நம
ஒண்டொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே
['கொம்பனையார்'- திருப்புகழ்]
(3) வெளியே புறப்படும்போது
சேய அன்பு உந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்தில்சேய!
வன்பு உந்து இகல் நிசாசராந்தக! சேந்த! என்னில்
சேயவன், புந்தி, பனிப்பானு, வெள்ளி, செங்கதிரோன்,
சேயவன், புந்தி தடுமாறவே தரும் சேதமின்றே.
"வள்ளி மணாளனே! அசுரர் குலாந்தகனே! சேந்தனே! என்று துதிப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் வக்ரோதயங்களால் ஆகும் தீமையில்லை."- [கந்தர் அந்தாதி]
(4) ஒரு செயலைத் தொடங்கும் போது
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல் கொடு பொடித் தூளதா எறி
நினைத்த காரியம் அனுக்கூலமே புரி பெருமாளே
['விலைக்கு மேனி'- திருப்புகழ்]
"அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து
அலைவாயுகந்த பெருமாளே."
['விறல் மாரன்'- திருப்புகழ்]
தகவல் சித்ரா மூர்த்தி.
[கிருபானந்த வாரியார் எழுதிய 'குமரனும் கோசலை குமரனும்' எனும் புத்தகத்திலிருந்து]