ச்ரத்தை பூர்ணமாகிவிட்டால் குருவிடம் பூர்ண சரணாகதியும் வந்துவிடும். அப்போது அவர் வாய் வார்த்தையாக உபதேசிப்பது, அதை இவன் மூளை மட்டத்தில் இறக்கிக் கொள்வது, நன்றாக இறக்கிக் கொண்டோமா என்று சோதித்துக் கேள்விகள் கேட்பது என்பதற்செல்லாங்கூட அவச்யமே இல்லாமல் போய்விடும். குரு அநுபவத்தை அப்படியே நேராக சிஷ்யனின் ஹ்ருதயத்துக்குள்ளே இறக்கிவிடுவார். மற்றவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அப்போது அவர் மூளை மட்டத்திலும் அவனுக்கு 'எக்ஸ்ப்ளனேஷன்'கள் கொடுத்து உபதேசம் செய்வதாக இருக்கும்.
அந்த சரணாகதியைத்தான் சாஸ்திரம் தலைமையானதாக விதித்திருக்கிறது. ஸ்த்ரீ ப்ரஜைக்குப் பதியிடம் சரணாகதி, புருஷ ப்ரஜைக்கு குருவிடம் சரணாகதி - அதுவே மோட்ச ஸாதனம் என்று சொல்லியிருக்கிறது.
இரு வித சரணாகதிகளும் குரு சிஷ்ய உறவும் -1சரணாகதியில் இரண்டு தினுஸு சொல்வதுண்டு:'மர்கட கிசோர ந்யாயம்' என்றும். மர்கட கிசோரம் என்றால் குரங்குக் குட்டி, மார்ஜார கிசோரம் என்றால் பூனைக்குட்டி. குரங்கு ஜாதியில் குட்டிதான் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். அப்படி பக்தன் தன் முயற்சியால் பகவானைப் போய்ப் பிடித்துக் கொள்ளணும் என்பது மர்கட கிசோர ந்யாயம். பூனை ஜாதியைப் பார்த்தாலோ, குட்டி தன்னை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்ற கவலையே இல்லாமல் அது பாட்டுக்குக் கிடக்கிறது. தாய்ப் பூனைதான் அதை வாயால் கௌவிக் கொண்டு இடம் இடமாக எடுத்துப்போகிறது. இப்படி ஸ்வய ப்ரயத்னம் இல்லாமல் பகவானே பார்த்துக்கொள்ளட்டும் என்று இருப்பதுதான் மார்ஜார கிசோர நர்யம். .இந்த இரண்டில் எது உயர்ந்தது என்ற விவாதம் இப்போது வேணாம். யாருக்கு எப்படிப் பிடிக்கிறதோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டு ந்யாயமும் பகவான் - பக்தன் என்ற ஜோடி விஷயமாகச் சொன்னது. இதை குரு - சிஷ்யன் என்ற ஜோடிக்கு வைத்துப் பார்க்கிற போது சுருக்கமாக ஒன்று மாத்திரம் சொல்லலாமென்று தோன்றுகிறது. முதலில் சிஷ்யன் குருவைத் தேடிப்போய் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவருக்கு இவன் தேவைப்படுவதைவிட இவனுக்குத்தானே அவர் அத்யாவச்யமாகத் தேவைப்படுகிறார்? அதனால் மர்கட கிசோர ந்யாயத்தில் இவனே பிடித்துக் கொள்ளணும். அப்படிப் பிடித்துக் கொண்டால் அவர் மார்ஜார கிசோர ந்யாயத்தை நடத்த அரம்பித்து விடுவார் அதாவது அவரே இவனுக்கு முழுப் பொறுப்பும் எடுத்துக்கொண்டு இவனை நடத்திப்போவார்.
இப்படி இரண்டு 'ந்யாய'மாகப் பிரிக்காமல் இவன்-அவர் இரண்டு பேருமே பரஸ்பரம் ஒருவரையருவர் விடாமல் பிடித்துக்கொண்டே குரு-சிஷ்ய உறவு நடக்கிறது என்றும் சொல்லிவிடலாம்!
7. திருவெம்பாவை
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7
8 திருவெம்பாவை
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
