நாமக்கல் ஹனுமான்

11 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Feb 28, 2026, 5:58:20 AM (5 days ago) Feb 28
to amrith...@googlegroups.com

ஒரு நரசிம்ம பக்த ஹனுமான் - நங்கநல்லூர்  J K  SIVAN 

கண் நிறைந்த  உருவம். ஒரே கல் வடிவம். 18 அடி  உயரம்.  
''எனக்கு மேல் கூரை வேண்டாம். என் கண் எதிரே  தெரியும்  என் ப்ரபு  ராமனின் முந்தைய  அவதாரமான
 சாந்த நரசிம்ம மூர்த்தி மடியில் லக்ஷ்மியோடு  அமர்ந்த திருக்கோல திருவடிகளையே  பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்.  இதற்கு எந்த தடையும் இருக்க கூடாது. இப்படி பார்த்து அனுபவிக்கவேண்டும்'' 
இப்படி பார்க்கும்  ஹநுமானுக்கு மூன்று கண்கள்.  இரு  கை  கூப்பி வணங்கும்  அழகிய நரசிம்ம பக்த ஹனுமான்.நாமக்கல்லில் நிற்கிறார். 

130 மீட்டர் தூரத்தில் நரசிம்மர். ஹனுமான் கண்களும்  நரசிம்மன் திருவடியும் ஒரே நேர்கோட்டில்.  இடையில் வாள். கரத்தில் சாளக்ராம மாலை. 7-8ம் நூற்றாண்டு  பல்லவ ராஜா  மஹேந்திர வர்மன் காலத்து ஹனுமான் சிலை என்கிறார்கள். எவ்வளவோ பக்தர்கள்  ஹனுமான் தலைக்கு மேல் கோபுரம் கட்ட முயன்று கடைசியில் தோல்வி தான். இன்றுவரை அவர் தலைக்கு மேல் வானம் தான் கூரை.

''என் ப்ரபு எதிரே  குகையில் கோபுரமின்றி நிற்கும்போது எனக்கு   எதற்கய்யா கோபுரம்?  
இன்னொரு விஷயம். இந்த ஆஞ்சநேயர்  வளர்ந்துகொண்டே இருக்கிறாராம்..
 
நாமக்கல்லில் சாளக்ராம மலை  உள்ளதற்கு ஒரு கதை.  நேபாளத்தில் கண்டகி நதிக்கரையிலிருந்து  சாயந்திரம்  ஹனுமான் ஓர் சாளக்ராம கல்லை  நாமக்கல்லுக்கு கொண்டுவந்தார். அஸ்தமன நேரம் என்பதால்  ராம  தியானத்தில் ஈடுபடும்போது  மஹா லக்ஷ்மி  அந்த சாளக்ராம கல்லை தனது கரங்களில் வாங்கி பிடித்துக் கொண்டு தரையில் வைத்தாள். அது நாமமலை , நாமகிரியாக வளர்ந்து விட்டது.  ஹனுமான் கண் திறந்து பார்க்கும்போது நாமகிரி மலை மேல் நரசிம்ம மூர்த்தி ஹநுமானுக்கும்   லட்சுமிக்கும் தரிசனம் தந்தார்.  ஹநுமானுக்கு வடைமாலை  அணிவித்து பக்தர்கள் மகிழ்வார். ஹனுமத் ஜெயந்தி அன்று ஒரு லக்ஷம் +எட்டு  வடைமாலை ஹனுமானுக்கு சாத்துவது வழக்கம்
.
நாமக்கல் நரசிம்மன் உள்ளங்கைகள் சிவப்பு வண்ணம்.  ஹிரண்ய வதத்தின் போது  பீறிட்ட ரத்தக்கறை இயற்கையாக  உள்ளங்கையில் கல்லில் சிவப்பாக அமைந்துள்ளது.

வாயு புத்ரன் ஹனுமான் முகம்  ஒரு குளிர்ந்த முழு நிலவு. தாமரைத் திருவடிகள். பீதாம்பர வஸ்திரம். மார்பில் யக்னோபவீதம். செவிகளில் குண்டலம்.
''ஆஞ்சநேயா, நான் வைகுண்டம் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?''
''அங்கே நீங்கள் என் ராமனாகவே காட்சி தருவீர்களா?
''ஹனுமா, ராமாவதாரம் என் அவதாரங்களில் ஒன்று தான். நான் நாராயணனாகவே உனக்கு காட்சி தருவேன்..
''அப்படியென்றால் நான் இங்கே பூமியில் பாரத தேசத்தில் இருந்து விடுகிறேன். ராமனாக நீங்கள் இருந்த இடைமிங்கும் செல்வேன். உங்கள் சரித்திரத்தை பக்தர்கள் சொல்லும்போது தாகம் தீராமல் கேட்பேன். உங்கள் ராம உருவச்சிலைகள் உள்ள கோவில்களில் உங்கள் முன் நின்று கொண்டே இருக்கிறேன். இதுவே எனக்கு வைகுண்டம் ப்ரபு''
''சிரஞ்சீவியாக இங்கேயே இரு  ஆஞ்சநேயா.'' இதோ நாமக்கல்லில் நமக்கு அப்படி காட்சி தருகிறார். வால் வளைந்து நிமிர்ந்து தலைக்கு பின்னால்  உயர்ந்து சிரம் மேல் சாய்ந்து எதிரே நோக்குகிறது.
ஹனுமனை நினைக்கும்போதே என்னையறியாமல்  எல்லோரும் அறிந்த இந்த ஸ்லோகம் என் வாயிலிருந்து ஒலிக்கிறதே.
यत्र यत्र रघुनाथकीर्तनं  तत्र तत्र कृतमस्तकाञ्जलिम् ।  बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்  தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்   பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்  மாருதிம் நமத ராக்ஷசாந்தகம்.  

எந்த மூலை  முடுக்கிலும் ஹிந்துக்கள் வாழும் பூமியில் எங்கெல்லாம்  ஸ்ரீ ராமன்,ரகுநாதன்,புகழ் பாடப்படுகிறதோ  அங்கெல்லாம்   கரங்களை கூப்பி, ஹஸ்தாஞ்சாலியோடு, தலை குனிந்து வணங்கிக் கொண்டிருக்கும், ராமன் பெயர் செவியில் கேட்டாலேயே  தானாகவே   கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, திடகாத்ரனாக, மஹா புத்திசாலியாக, நவ வ்யாகரண பண்டிதனாக, ராக்ஷர்களுக்கு எமனாக  விலகும் ஹனுமான் நமக்கு தைர்யம் அளித்து, பயமற்று வாழ, நோய்கள் நெருங்காமல் இருக்க,  அருள் பாலிக்கிறான்.  
Reply all
Reply to author
Forward
0 new messages