ராமன் உணர்வு

112 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Feb 17, 2015, 7:46:28 PM2/17/15
to Sivan Krishnan, abiko...@yahoo.com, amrith...@gmail.com, amrit...@yahoo.co.in, ananthi...@yahoo.co.in, aramac...@gmail.com, b_padm...@hotmail.com, bha...@hotmail.co.in, bhavanisur...@yahoo.com, cheec...@gmail.com, devi...@yahoo.co.in, e.nara...@yahoo.com, friendsca...@gmail.com, gana...@gmail.com, ganesh...@yahoo.in, gayathrir...@yahoo.co.in, Geean...@yahoo.com, girija_...@hotmail.com, gops...@yahoo.co.in, ha...@akshayacs.com, harik...@yahoo.co.in, harishm...@yahoo.com, iam...@rediffmail.com, jambu...@yahoo.com, Jayamani VR, jkap...@yahoo.in, jmu...@yahoo.com, kaart...@gmail.com, kannan...@gmail.com, karthik...@rediffmail.com, kesa...@yahoo.com, Kalady Krishna Mani Mani, kkrama...@gmail.com, knk...@yahoo.co.in, kris_c...@yahoo.com, kris...@yahoo.co.in, krishnamu...@gmail.com, krsrin...@yahoo.com, ksethu...@yahoo.com, kvn...@sanmargroup.com, kvsh...@yahoo.co.in, lakshmient...@yahoo.com, lakshminaraya...@gmail.com, latharamac...@yahoo.com, lve...@yahoo.com, madura...@hotmail.com, mathu...@yahoo.com, Guru Moorthi, meera.h...@gmail.com, meera...@yahoo.com, Gnana Shekar, mtv_p...@yahoo.com, muthu...@yahoo.co.in, nbpra...@gmail.com, nee...@yahoo.com, neve...@yahoo.co.in, nsantha...@yahoo.com, Lakshmi Narasimhan Krishnamachari, prabha...@yahoo.com, Prabha Rajagopalan, prab...@yahoo.com, prab...@yahoo.co.in, prem...@yahoo.co.in, prof...@yahoo.com, pr...@sanmargroup.com, rajago...@yahoo.com, S Ramakrishnan IRS commr, ramani_...@yahoo.com, renukana...@gmail.com, Ubilatha, rkb55om...@yahoo.com, rsrini...@hotmail.com, s1...@live.com, Sakr...@yahoo.com, sandhya_...@yahoo.com, sans...@yahoo.com, saradasu...@yahoo.com, sat...@yahoo.com, sekar.m...@gmail.com, selva...@yahoo.co.in, Murugan Anand, Seshadri Viswanath, sesha...@yahoo.com, shanu...@hotmail.com, sirvali...@msn.com, skann...@yahoo.com, smathr...@yahoo.co.in, sneharaj...@yahoo.com, srimat...@yahoo.co.in, sriniva...@yahoo.co.in, srv...@rediffmail.com, subb...@rediffmail.com, subha...@rediffmail.com, sundar2...@yahoo.in, sundaresw...@rediffmail.com, ullag...@gmail.com, ushalakshm...@yahoo.com, vasan...@yahoo.com, vasantharayal...@secova.com, vb_sa...@yahoo.com, Swaminathan Venkatakrishnan, Venkatesh Gopalakrishnan, vg...@yahoo.com, vhkm...@gmail.com, vibh...@hotmail.com, Vidhya.vi...@secova.com, viji...@hotmail.com, visa...@yahoo.co.in, vnata...@rediffmail.com, vrk_c...@yahoo.com, Aarthi Govindharajan, Agri Vadivelmurugan, aishu...@gmail.com, akshaya_t...@yahoo.in, akshay...@gmail.com, akurathi...@gmail.com, amar sabesh, amritha varshini, amrith...@googlegroups.com, Anandakumar Shankar, Anan...@iinterchange.com, ananth k, anantha krishnan, Ananthanarayanan Siva, Anjana Raghavan, annapoorna visalakshi S, Anu Radha, aparajith, apr1818 ., aravindakshan s v, Arvind Ramakrishnan, ashok kumar, AVK Chetan, Ayyappan, BAGAVATHY SUBRAMANIAN MUTHUKUMAR, Bala Janakiraman, BALACHANDAR SUBRAMANIAN, Balachandran Vasudevan, balaji srinivasan, balakumar kuppuswamy, Balasubrahmaniam Manakkal Mahadevan, Balasubramanian Sundaram, Balasubramanian Thyagarajan, Balasubrmnan mmb relation, banu karan, ba...@sakthiscanners.com, Barani prasad, barathi barathi, bbasi...@hotmail.com, BestHomesSridhar, Bharathi Bhaskaran, bhuvanr, boom...@ymail.com, BP tex/Sri Lakshmi Tex, brag...@hotmail.com, Cbi Srinivasa,, cc: 'msnataraj2003@yahoo.com', Chandrasekar Ramaswami, Chandrasekaran Srinivasan, Chandrasekaran Sundaram, chitra. thyag, chittanandam vontivillu, Cub Usha Mngr, D.Krishnamurthy, dhakshina murthy, Dharmaraj T, dharmarajan viswanathan, Dr Jay, Dr Srinivasan, eswar KOTI, G Sivaswamy, ganapathi subramanian, GanapathySubramanian, Ganesan Kuppuswamy, ganesh ab kuwait, ganesh rao, ganesh venkittu, Gayu Vijay, geetha gunasekaran, Geetha P.V, GEETHA SUBHARAM, gita vishwanathan vishwanathan, Gnaan San, Gomathi Sundar, Gopal Krisnhan, Gopalakrishnan Srinivasa, Gopalakrishnan Swaminathan, Gopalakrishnan Vai., Gopi Gopalan, gurunath.neelamani, Hariharan K, Hariharan Kalpathy Vasudevan, Hema Ramesh, Hemalatha Moorthy, hgana...@yahoo.com, impr...@gmail.com, Isvaran Krishnamurthy, J Balaji, Jagath Eesan, Jambunathan R, Jambunat...@shell.com, Jaya Surya, jayanthi venkataraman, jayaram ramaiah, Jayashankaran N, jayashree subramanian, Jayshree Sahasranaman, JB Maharam, Jyoti Ramasubramanian, k. jayaraman co.chartered accts, K. V. Krishnan, kaitharam neelakantan, Kalidoss Ramamurthy, Kamakshi Venkatraman, Kanimozhi Selvarajan, Kanna Kilkattalai, Kannan, Kannan Bala, Kannan Vn, kannana...@gmail.com, Keerthivasan, KGR DOSS, kidambi narayanan, kkar...@ford.com, kmp_p...@yahoo.com, Kokila Ramakrishnan, Kothai Venkatapathy, krishna....@gmail.com, Krishnamoorthy Subramaniam, Krishnan Kavasseri, krishnan raja, krishnan shankarmani, Krishnan Sundararajan, Krishnasamy Natarajan, Krupa Murali, Kuppuswami Thiagarajan, Kuthur Ramadoss, Lakshmanarao Balaji, lakshmi Manoharan, Lakshmi Narayanan S, Lakshmi Nrusimhan Krishna, Lakshmi Tpf, lakshmi v, LAKSHMINARAYAN, Lalitha Ganesan, lalitha subramanian, lalithavenkatNarthaki, latha ramanujam, Lavanya Haridev, M.Krishnaswami, mahadevan balasubrahmaniam, Mahadevan Balasubramaniam, mahesh sankaranarayanan, majorchander, Malathi S, Mani Balakrishnan, mani...@yahoo.com, manis...@gmail.com, Mathangi k kumar, meetm...@gmail.com, Mouli Nr, msr, Murali krishnan, Muthukumar V, MuthuramanTRG'Puram, N Venkateswaran, Nadarajan S, nagarajan ramaswamy, Nalini Seshadri, narasimha arunachalam, Narasimhan Kilkattalai, Narayanan Kuppuswamy, narayanan ss, Narayanan Venkatraman, Narayanan, R Sankara, narayan...@yahoo.com, nath...@hotmail.com, Nellaiyappan Sivashanmugam, nirmal saumya, Nithyameera Hariharan, O V Srinivasan, P. Ramachander, p.sathya Narayanan, Padma Kartik, padmaja rajagopalan, parpadma ., Partha Sarathy Iyengar, PARTHASARATHY SRINIVASAN, PBSsubramani, pee_...@yahoo.com, PlasticChandraREACH, Poova Raghavan Iyengar, pp balaji, prabakar malaikani, PRABAKARAN R, Prakash Balakrishnan, Prasannam Narayanaswamy, Praveen AK, prem kumar, prema venkat, Priya Liz, Priya Markandan, Pss Manian, R,SOWRIRAJAN RAJAN, r.visw...@tvslsl.com, Radha Sundar, Radhakrishnan Jambunatha, Raj, Raj Bharath, Raj Mohan, Rajagopal, rajagopalan srinivasan, Rajagopalan Subramanian, RajaLakshmi Jay, Rajendran Ganesan, Rajeswari C, raji sridhar, raju j, Ram Ramakrishnan, Ram Srinivasan, Rama Ramanan, Rama Rangan, ramachandran ramaswamy, Ramachandran V.G., Ramakrishnan Natarajan, ramanan iyer, Ramanathan SK, Ramani Balasubramanian, ramanujam srinivasan s rinivasan, ramarathnam, ramaswamy iyer, RAMASWAMY VISWANATHAN, Ramesan Visvanathan, Ramesh Rajini, ram...@yahoo.co.in, Ramki Krishnan, ramnath ramnath, Ramnath S, Ramnath Subramaniam, ramsh...@hotmail.com, Ramya Raja, Ravi ON, Rengasamy Ramaswami, responsiblcitizen, Revathi srinivasan, rgchandru n.ganesan, RS Rajan, r...@kpmg.com, Rukmani Sundaram, S Baskaran, s chandrasekaran, S Gurunathan, S Jayaraman, S NEELAKANTAN, S V Raman, S. Shankar, S.R. Sankaran, s_va...@yahoo.com, Sabitha Duraisamy, Sadhu Chandrasekaran, Sahasranam Ananthraman, Saikrishna Vk, Sairam N, Samiappa Palanivelan, Sampath Kumar, Samraj L, Sanjana Venkittu, sanja...@gmail.com, Sankar R, sankar s, Santhanam V, Santharam VJ (RTN), Santhi Lakshmi, saradha vijayasenthil, sarala srinivasan, Saraswathi Ramani, sbal...@yahoo.co.in, Scf prof k sundararajan, Seshan Sankaranarayanan, Shamala Krishnan, shanmugam poopalagan, Shanmuganathan, shanthi krishnakumar, Sharada Krishnan, SHRIKANTH MOHAN, Shyamala, Shylaja Suresh, Siva R, siva ramakrishnan, Sivakumar Ganesan, sivan, Skss Krishnamurthy Cbi, sree krishna, sridharan krishnamoorthy, Sridharan Ranganathan, Srigiri, srinivasan krishnamoorthy, srinivasan M, srinivasan ramanathan, Srinivasan tn, sripriya suresh, Sriraman K, srividhya td@gmail. com, Subbaiah Kakamada, Subbaraman Gopalakrishnan, SubbuMNS, subramaniam dakshina moorthy, Subramaniam S.V., subramanian balakrishnan, Subramanian Krishnaswami, Subramanian R, DM/Valves, Subramanian V, Sudarsan CRG, Sudha Asuri, Sudha Raghavan, Sudha Subramanian, SUDHA VENKATESWARAN, Sudharsan Surya, SUGAVANAM K, sugunda ss, Sukumar Sukumar, Sundar, sundaramrr...@yahoo.com, SundarVINTAGEHERITAGE, suresh, Suresh Sethuraman, sureshmah...@hotmail.com, su...@freightlinksindia.com, Surya Ramesh, suryanarayanan krishna, svs vp, Swami K B Devarajan, Swami Nathan, swarna a, T N BALACHANDER Balachander, thinkof...@yahoo.co.in, Thiruvalluvar T, tk natarajan, TulasiAnuradha, Uma Krishnamoorthy, Uma Maheswar Nakka, UmaGuru, umasister, Usha, V Ganapathy, v ramamurthy, v.lakshmi narasiman, Vaidehi Sundaram, Vaijayanthi Raja, Valli Ramakrishnan, varadarajan c m, Varadarajan Sitaramen, vasans2008 ., Veeramani S, vengatesh waran, VENKAT, venkat -, Venkat Hari, ven...@devcoalindia.com, venkata lakshmi, Venkatesh Ganapathy, vidyaa hari, Vijayaraghavan Gopal, Viswanathan, Vithur Vithur, VRKpushpa
                             மலையாளத்தில்  அத்யாத்ம ராமாயணம்    3     (துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு )

ராமாயணத்தை  எழுதுவதை  விடுங்கள்.  படிப்பதும்  ரெண்டாம்  பக்ஷம்   தான்.  ராமாயணத்தை  கேட்பது மிக  ஸ்லாக்கியம்.  எங்கே  யார்  சொன்னாலும்  கூர்ந்து  கவனியுங்கள்.  ராமாயணம்  என்பது நன்றாக  தெரிந்த கதையாக  இருந்தாலும்  அது  ஒரு   புகுந்து  சொல்லாக  வெளிப்படும்போது புது  உருவத்தைப்  பெற்று விடுகிறது.  ஒரு  அழகு, புதிய  பார்வையில் மிளிர்கிறது.  கேட்போர் மனத்தைக்  கவர்கிறது.  எது  எனது  அனுபவம் மட்டுமல்ல.  கோடானுகோடி  மக்களின் உண்மையான  உணர்வு. 
ராமனிடம்  அப்படிப்பட்ட வார்த்தையால்  வர்ணிக்கமுடியாத  ஒரு  தொட்டிழுக்கும்  கவர்ச்சி  உண்டு.  எழுத்தச்சன்  அபூர்வ  கலைஞர்.  கற்பனா சக்தியில்  எவரும் மிஞ்ச முடியாதவர்.  மலையாளத்தில்  எழுத்து வன்மையால், வண்மை யால் தனி இடம்  பெற்றவர்.  ராமன்  அருள் இன்றி  இதை  எவரும் பெறமுடியாது.   அவரது  அத்யாத்ம  ராமாயணம்  தொடர்ந்து நம்மை  மகிழ்விக்கட்டும். 
 

SArva lokathinnum Kartha bhavan allo,
Sarvathinnum   sakshiyakunnathum bhavan,
Ajnana vigrahanakunnathum bhavan,
Ajnana   nasakan akunnathum bhavan,
Srushti karthavaam Virinchanakunnathum,
Ashta vasukkali ashtamanaayathum,
Lokathinnu  aadhiyum madhyavum, anthavum,
Yekanaam nithya swaroopan bhavanallo,
Karnangalaayathum ASwini devakal,
Kannukal aayathum   AAdhithya chandranammar.

 You are   the beginning , middle and end of the world,You are alone and has the forever  form,Your ears   are the Aswini devas,Your eyes are   the Sun and the moon.

ராமா,  நீயே  சர்வ  லோகமும்  உண்டான  காரணன். எல்லாவற்றிலும்  உள்ளிருந்து கவனிக்கும்  சாக்ஷி. அஞ்ஞான நாசம் செய்பவன். சகல  சிருஷ்டி கர்த்தா. அஷ்ட வசுக்களில் மூலமானவன்.  மூவளுகுக்கும்  ஆதி,  மத்யமம், அந்தம்  ஆகியவன். சோம  சூர்ய நேத்ரமும்,  அச்வீனி தேவதைகள் ஆகிய  காதுகளும்  கொண்டவன். 

Shudhanai  nithyanai  adwayanayoru,
Mukthanakunnathum  nithyam BHavanallo,
Ninnude  mayaayaa moodi kidappavar ,
Ninne manushyan   yennu ullil orthiduvor,
Ninnude  nama  smaranam ullor ullil,
Nannai  prakasikum   athma prabodhavum,
Dushtanaam  Ravanan jnangalude  padham,
Ottu ozhiyathe     adakkinaan nirdhayam,
Nashtanayaan avan innu   ninnal ini,
Pushta soukhyam vasikkam thwal karunayaa.

Pure  , forever   , not possible for division,You are   the one   who gives salvation,Those who are   covered   by your illusion,Think in their mind that you are a man, In the mind in which your name  is there, The  knowledge of soul  shines well.The very bad   Ravana   controlled,Our posts   without leaving   and without mercy.He is today  no more   because  of you,And we can live happily  because  of your mercy.

ஹே  ராமா.  நீ  பரிசுத்தன். நித்யன். இரண்டாக பிரிக்க முடியாதவன்.  முக்தி அளிப்பவன். உன் மாயையில் கட்டுண்டோர் உன்னை  ஒரு  சாதாரண  மனிதன் எனக் கொள்வார்கள். உன் நாமஸ்மரணம் பண்ணுவோர்  உள்ளே  ஆத்ம அனுபவம் பெறுவார்கள். துஷ்ட சம்ஹாரம்  சிஷ்ட பரிபாலனம் செய்பவன் என்பதை  நிருபிக்க நீ  ராவணனை கருணையின்றி கொன்றாய். தேவர் மனிதர்  யாவரும் இன்று நிற்பயமாய் வாழ  நீ அல்லவோ காரணம். 

DEvakal ithan  pugazhthum dasanthare  ,
Devan Virinchanum   Vandhichu vazhthinaan ,
“Vandhe   padam  paramananda dwayam,
Vandhe  padham  asesha   Sthuthi karanam,
Adhyathma   jnanikalaal    pari sevitham  ,
Chithe   sathamathram   avyayam   easwaram,
Sarva   hrudhi sthitham   sarva jagan mayam,
Sarva  loka priyam  sarvagnam   adbutham.”

When the devas  were praising him like this,The god Brahma   saluted   and   praised him, “I salute   your two feet  which gives  immense joy,I salute   you  who  is the best reason to pray,And who  is served   by spiritual  masters,Who is in the minds of good people  , is  non decaying   and is the god, Who is in  the minds  of all , who is all over the universe ,
Who  is liked by all   and  all knowing   and a great wonder.”

தேவர்கள்  இவ்வாறு புகழ, இந்திரன்  ராமனின்  பாதங்களில் விழுந்து வணங்கினான். ''சர்வ  ஹ்ருதய வாசா, பார்க்குமிடம்  எங்கும்  நீக்கமற  நிறைந்தவனே, ரிஷிகள், முனிவர்கள்,  பக்தர்கள்  அனைவராலும் சர்வலோகமும்  பிரியமுடன்  நோக்கும் அற்புதமே'' என்று போற்றினான். 

Rathnakireetam  ravi prabham   Karunya,
Rathnakaram  Raghunadham  Ramavaram,
Raja rajendram  Rajanicharanthakam,
Rajeevalochanam   Ravana nasanam,
Mayaparamajam  Mayamayam  , manu nayakam,
Maya viheenam   Madhu dwisham,
Manavam  Manaheenam  Manujothamam,
Madhurya saram  Manoharam  Madhavam,
Yogi chinthyam  sada  yogi gamyam  maha,
Yoga vidhanam   paripoornam achyutham,
Ramam ramaneeya roopam , jagad abhiramam,
SAdaiva  Sitabhiramam Bhaje “
Itham  vidhathru  Sthuthi  kettu Raghavan,
Chitham  anandichu arulum neram,
Asrayasan jagad asraya bhoothyam,
Asritha  vathsalayaya  Vaidehiye  ,
Kazhchayai  kondu vannasu  vananginaan,
Ascharyam ul kondu  ninnithellavarum.

“He who wears   gem studded  crown , who shines like sun , Who is the gem of mercy,  the lord of Raghu clan ,  the blessing to Lakshmi, King of kings  , the killer   of Rakshasas,Lotus eyed  one  , killer of Ravana  ,Who gives rise to divine  illusion , who is  full of illusion,Who is the  Lord of men,  Who does not have  illusion , who hates  Madhu,
Who  is the man  , who does not have pride , who is best among men,Who is the essence of sweet and  pretty   and is Madhava ,Who is meditated  by sages , who always goes   to sages,Who is an expert in yoga  and is  complete   and is Achyutha,Who is Rama with a pretty form , the prettiest in the world, And   who is  the prettiest to Sita , I  salute him   who is like this.”
When Rama   heard this prayer  of Lord Brahma, And was resting with mind full of divine joy,The fire God brought   Sita   on whom  the world depends, And who loves people who surrender   to her ,As  a royal offering   and saluted   him,
And all people stood there  filled with wonder.

பிரம்மா  சும்மா  இருப்பாரா?  வர்ணிக்க  ஆரம்பித்தார்: கேசாதி  பாதம் வரை,  ரத்ன கிரீடம், சூரிய காந்தி போன்ற ஒளி , கருணா சாகரம் போன்ற  தயை, அன்றலர்ந்த தாமரைக் கண்கள், ராவணனை வதம் செய்த,  அதி பராக்ரம ராஜாதி ராஜன், ரிஷிகளும் முனிகளும்  சதா பூஜிக்கும்  தெய்வம், சீதை போற்றி வணங்கும்  நாயகன், புருஷோத்தமன் ''  ராமன்  இதை எல்லாம்  கேட்டு  புன்னகைத்தார். அக்னி இதற்குள்  தோன்றி  இருகைகளிலும்  சீதையை  ஏந்தியவாறு  ஸ்ரீ  ராமனிடம்  பரிசாக  அளித்து வணங்கினார்.  அனைவரும்  இந்த  அதிசயத்தில்  சிலையாயினர்.  

“Lanka nigrahartham Vipinathil  ninu,
Yengal  aaropithayakiya   deviye  ,
SAnkha viheenam  parigrahicheeduga  ,
Sangadam theernu   jagal thrathingalum”
Pavakane  prathi poojichu Ragnavan,
Deviye  modhaal   parigrahicheedinaan,
Pankeruhakshanum   Janaki deviye  ,
Swange   samavesya  shobhichithu   yethavum.

“For the sake of destroying Lanka    from the forest,You entrusted   this Goddess   to me  ,Without any doubt    accept her from me  ,As  the sorrow of all the three worlds   is now over”,Raghava then   in return worshipped  the   fire god,
And with happiness  made that goddess  his own.That  lotus eyed one  made  the goddess  Sita, Sit   on his lap  and shined  much more.

''ஸ்ரீ  ராமா,  இலங்கையை  நிக்ரஹம்  பண்ணி  ராவண வதம் முடியும் வாய்  ஸ்ரீ  சீதா தேவியை  என்னிடம்  ஜாக்ரதையாக  விட்டு வைத்தாய். மூவுலகின் துன்பம் இப்போது  நிவர்த்தியானதால்  இந்த  இந்த தெய்வத்தை  உன்னிடமே  ஜாக்ரதையாக  ஒப்படைத்து விடுகிறேன் என்று  அக்னி  தேவன்  சொல்லி சீதை ராமனை அடைந்து, அவன்  மடியில்  அமர்ந்தாள் . அக்னியைக்  காட்டிலும்  ஒளி வீசினாள்.  

SAnkrandanan   thadhaa   Ramane  nirjara ,
SAnghena sradham vanangi  sthuthichithu,
“Ramachandra, Prabho, Pahi maam, pahi maam.,
Rama Bhadra   prabho,pahi maam, pahi maam,
Jnangale  rakshippathinnumathu aarullathu,
Ingane ,  Karunya  peeyusha   varidhe  ,
Nin thiru namamrutham  japicheduvaan ,
Santhathm thonnenan yen pothi , manase ,
nIn charithamrutham   cholvanum   yeppozhum,
Yen chevi kondu  kalppanum anu dhanam,
Yogam  varuvan    anugrahicheedenam,
Yoga moorthe  , Janakathmaja vallabha,
Sri Maha devanum  nin thiru namangal,
Rama Ramethi   japikunnthu   anvaham,
Thwal pada  theertham   sirasi  vahikunnithu  ,
Yeppozhum    athma   shuddhikkum  aa vallabhan.”

Devendra   along with   all the devas Saluted Rama with devotion  and prayed,“Oh Ramachandra  , Oh Lord  , save me, save me, Oh Ramabhadra  , oh lord, save me , save  me. Oh  milk ocean of   mercy  who is there , To protect   us like this ,
Let my mind always  wish to   chant  your nectar  like names, praise the lord,Please bless  me to be able   to tell daily,
And also  be able to hear  with my ears Your   nectar  like story  always , Oh personification of Yoga  , Oh consort  of Sita ,
Even lord   Shiva    always  keeps  on chanting , Your name  “Rama, Rama” And that  great one   always  wears   the  water ,That  washes your feet   on his head , For   the purity   of his   soul.”

தேவேந்திரன் தேவர்களோடு சேர்ந்து  எப்படியெல்லாம்  ராமனைப்  பாடுகிறான்? பிரபோ, ராமபத்ரா, ராமச்சந்திரா, காருண்ய மூர்த்தி,  பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா, எங்களை ரக்ஷி.எங்கள் மனம்  சதா  உன்  திருநாம அம்ருதத்தில் ஜபித்து  திளைக்க வேண்டும். காதுகள் கேட்டு  பூரிக்கட்டும். உன் சரிதமாகிய அம்ருதத்தை எல்லோரும்  ருசிக்கட்டும். சீதாமணாளா, உன் பெயரைச் சொன்னாலே  ஆத்மா  பரிசுத்தமாகுமே. அதனால்  அல்லவோ  பரமசிவனும்  ''ராம ராம  என்று உன் தாரக மந்த்ரத்தை  உபதேசிக்கிறார். 

Yevam pala tharam   cholli sthuthichoru,
DEvendranodu   arul cheythithu Raghavan,
“Mruthyu  bhavacha  kapi kula   veerare  ,
Athal kalanju  jeevippikkayaum venam,
Pakwa phalangal  kapikal  bhakshikkumbol,
Okke  madhuramakki   chamacheeduga ,
Vanaranmaarkku  kudippan  nadhikalum,
THenayozhukunam” yennu kettu   indranum,
Yellam arul cheytha vannam    varigennu  ,
Kalyanam ulkkondu   anugrahichedinaan,
Nannai  yurangi  unarnnavare  ppole ,
Mannavan  thanne   thozhuthaar   avargalum.

Hearing several such prayers  , Rama   told   Devendra  ,“You have to give life to all the  monkeys   who died,And when the monkeys eat    ripe fruits , Make   all of them very sweet to them,And  let  all the rivers flow as  honey for them to rink.”
Hearing this Devendra   said, let  all of them be like that ,With auspiciousness  in his mind All monkeys woke up   as if they were  sleeping  ,And went   and saluted   Lord  Rama.

ஸ்ரீ  ராமர்  தேவேந்திரா, உனது  தேவர்களும்  ரிஷிகளும்  தான்  வானரர்களாக வந்தவர்கள்.  முதலில் இறந்த  அந்த  வானரர்களுக்கு  உயிர் திரும்பக்கொடு .இனிக்கும்  கனிகள்  காய்கள், கிழங்குகள் அவர்களுக்கு நிறைய அளிப்பாயாக. அவ்வாறே ஆயிற்று.  தூங்கிஎழுந்தது போல் இறந்த அனைத்து  வானரர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். ராமனை வணங்கி போற்றினர். 

Chandra choodan  Parameshwaranum  Rama,
Chandrane  nokki arul cheythithu anneram,
“Ninnude   thathan Dasaraham vannithaa ,
Ninnu  vimanam amarnnu  ninne kanman,
Chennu vananguka, “ yennu anbodu kettadha,
Mannavan  sambramam poondu vananginaan,
Vaidehi thanum Sumithra thanayanum,
AAdharavode   vandhichu janakane.

At that   time Lord Shiva  , the wearer  of moon,Saw    Ramachandra   and told him.“You  father Dasaratha   has come and is,Sitting in a plane    to see you. Please go and salute him.”As soon   as this was told with love  that king  ,Became   agitated    and went and saluted   him,Sita   as well as the son of Sumithra  ,Also saluted the father with great respect ,

பிறை சூடி, பெம்மான், சிவபெருமான், ராமனைப்  பார்த்து, '' ரகுநந்தனா ,  உன்  அப்பா தசரதரை  அழைத்து வந்திருக்கிறேனே.  பார்த்தாயா? அதோ  அந்தபுஷ்பக விமானத்தில் உனக்காக ஆவலாக காத்திருக்கிறார் பார்.''   ஸ்ரீ  ராமர்  பரபரப்பாக ஓடினார் . அவரைக்காட்டிலும்   வேகமாக சீதையும்  லக்ஷ்மணனும்  ஓடிச்சென்றார்கள். தசரதரின்  கால்களில்  விழுந்து பக்திகலந்த மரியாதை யோடு  நமஸ்கரித்தார்கள்.  

துஞ்சத்து  எழுத்தச்சன்  எப்படி?   ருசிக்கிறதா?  மேலும்  சொல்வார்.....

Sivan Krishnan

unread,
Feb 20, 2015, 9:53:06 PM2/20/15
to sivan
அத்யாத்ம ராமாயணம்   உத்தர காண்டம்  ஸர்கம்  1 

                                                        ராக்ஷச வம்ச  வ்ருத்தாந்தம் 

ராமாயணம்  என்பது  ஸ்ரீ  ராமனுடைய  பட்டாபிஷேகத்துடன்  முடிவதாக  அநேகர்  எண்ணுவது  தவறென்று  கூற முடியாது  அதற்கப்புறமும்  சில  நிகழ்வுகள்  உள்ளன.  அவற்றை  அத்யாத்ம  ராமாயணத்தில்  உத்தர காண்டத்தில்  இனி காணப்போகிறோம்.  

''மகாதேவா,   ஸ்ரீ  ராமர்   ராவண  வதத்திற்குப்பிறகும்  14 வருட  வனவாசத்திற்கும்  பிறகு  அயோத்தி  திரும்பி  பட்டாபிஷேகமும்  முடிந்தபின்  நடந்தது  என்ன என்று  கூறவேண்டும் '' என  ஆவாலாக  உமை  கேட்டதன் பயனாக  நாமும்  நடந்தவற்றை இனி  அறிவோம். 

''சொல்கிறேன்  பார்வதி கேள்.   பட்டாபிஷேகம் முடிந்து  ராஜ்யபரிபாலனம்  பண்ணும்போது  ராமரைக்  காண  பல  முனிவர்களும்  வந்தனர்.   அவர்களில் முக்யமானவர்கள்  விஸ்வாமித்ரர், அசிதர், கண்வர், துர்வாசர், காச்யபர், ஆங்கிரஸ், வாமதேவர், பிருகு, அத்ரி,  சப்த ரிஷிகள், அகஸ்தியர்  ஆவர். அரண்மனை  வாயில் காப்போனிடம்  தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள அவன்  ராமரிடம்  அவர்கள் வருகை பற்றியும்  ஆசி வழங்க வந்ததாகவும்  கூற,  அவர்களை உடனே  உள்ளே  அனுப்ப  ராமர்  ஆணையிட்டார்.

அவர்களைக்  கண்டதும்  எழுந்து வணங்கி  அவர்களுக்கு  தக்க  உபசாரங்கள் செய்து பசுக்களைக்  காணிக்கையாக  கொடுத்தார். அவர்கள்  ஆசனங்களில் அமர்ந்தபிறகு  தானும்  அமர்ந்தார். 

''ஸ்ரீ  ராமா,  உனக்கு  ராவணனைக்  கொல்வதும்   இந்த்ரஜித்  போன்ற  மாயாவிகளைக்கொல்வதும்,  கும்பகர்ணன் போன்ற  மகா பலசாலிகளையும் கூட்டமாகக்  கொண்ட  ராக்ஷச  சேனையையே  அழித்தும்   எங்களைக் காப்பது  ஒரு  அரிய செயல் அல்ல.  ஆனால்  எங்கள் வாக்குக்கிணங்க  மானிடனாக  அவதாரம் பூண்டு  எண்ணற்ற இன்னல்களை  எதிர் கொண்டு   செயற்கரிய செயலைப் புரிந்து  எங்களுக்கு  கொடுத்த  வாக்கை நிறைவேற்றி மகா வீரனாக  திரும்பிய உன்னை மகிழ்ச்சியோடு  கண்டு  நன்றி கலந்த  ஆசி அளிக்க  வந்தோம்.  ஆம்   ராவணனை விட  மாயாவி இந்த்ரஜித்தை கொன்றது  மஹா பெரிய செயல்'' என்றார் அகஸ்தியர்.  

ராமர்  புன்னகையோடு  ''முநிஸ்ரேஷ்டரே,  மேகநாதனை  ச்லாக்கியமாக  கூற  என்ன  காரணம்?''  என்று  வினவ அகஸ்தியர்   ஸ்ரீ  ராமா,  ராவணன்  அவன் மகன் ஆகியோரின்  பிறப்பு  பற்றி  கூறுகிறேன்  புரியும்  '' என்றார். 

''கிருத யுகத்தில் புலஸ்தியர் என்ற ஞானி பிரம்மாவின் புத்ரர்.  மேரு சென்று  திருணபிந்து என்கிற ரிஷியின்  ஆஸ்ரமத்தில் தங்கி தவம் புரிந்தார்.  ஆஸ்ரமத்தின்  அருகே  தேவ கந்தர்வ  கன்னிகைகள் சிலர்  கேளிக்கைகளில்  ஈடுபட்டு அவர்  தவம்  கலைந்தது.  'என் பார்வையில் படுபவள்  கர்ப்பம் அடைவாள்'' என சாபமிட  அவர்கள்  அகன்று விட்டனர். திருணபிந்துவின் மகள் இதை  அறியாமல்  புலஸ்தியர் கண்ணில் பட்டுவிட்டாள்.  அவளுக்கு  சாபம்  பலிதமானது . திருணபிந்துவிடம்  அவள்
விஷயம் கூற   ஞான திருஷ்டியில்  புலஸ்தியரின்  சாபம் அறிந்து அவருக்கே அவளை  விவாகம் செய்வித்தார்.  

 புலஸ்தியர் மூலமாக  அவளுக்கு  விஸ்ரவஸ் என்கிற  மகன் பிறந்தான். விஸ்ரவஸ் வேதங்களை முறையாக  கற்று பெரியோர்களின்  ஆசி பெற்று  நற்  புத்ரனாக விளங்கி அதில் மகிழ்ந்த  பாரத்வாஜ மகரிஷி தனது  மகளை  விஸ்ரவசுக்கு  மணமுடித்தார்.    அவர்களுக்கு  ஒரு  ஆண் மகன்  ஜனித்தான்.  விஸ்ரவஸின் வழித் தோன்றல்  என்ற  பொருள் கொண்ட   ''வைஸ்ரவணன்'' என்கிற  பெயர் அவனுக்கு  நாமகரணம்  ஆயிற்று.  வைஸ்ரவணன் தந்தையை  மிஞ்சுபவனாக தவ வலிமை பெற்று திகழ்ந்தான்.  அவன்  தவ வலிமையை மெச்சி  பிரம்மா  அவனுக்கு  அவன் விரும்பியபடியே  அழிவற்ற  சம்பத்தையும் சக்தியும்  வரங்களாக கொடுத்தார். வரம்  பெற்று மகிழ்ந்த  வைஸ்ரவணன்  புஷ்பக விமானம் ஏறி  தந்தை விஸ்ரவசைக் காண  வந்தார். 

''தந்தையே,  பிரம்மாவிடமிருந்து  எனக்கு  செல்வங்கள்  புஷ்பக விமானம் ஆகியவை  எல்லாம் சேர்ந்துவிட்டன.  ஆனால்  நான்  வசிப்பதற்கான  பிரம்மாண்டமான இடம்  எதையும்  பெறவில்லையே.   ஒரு துன்பமும் ஏற்படாத  ஒரு  பொருத்தமான  நிரந்தரமான  இடத்தை நீங்களே தெரிவித்து அருளவேண்டும்'' என்று வைஸ்ரவணன்  வேண்டினார்.

''மகனே,  ராக்ஷசர்கள்  குடியேறி  வாழ்வதற்கு  என்று  இலங்கை  என்ற  ஒரு  அழகிய  நகரம்  விச்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால்   பகவான் ஸ்ரீ  விஷ்ணுவிடம்  இருந்த  பயத்தினால்  அவர்கள்  அங்கிருந்து ஓடி  ரஸாதலம்  என்கிற  மறைவான  இடம்  சென்றுவிட்டார்கள். 

 இலங்கை  கடல் நடுவே  இருக்கும்  பாதுகாப்பான  இடம்.  பிறரால்  ஆக்ரமிக்க  முடியாதது. நீ  அங்கே சென்று  வசிப்பாய்.   அங்கு  இதற்கு முன்  யாருமே  குடியேறவில்லை''  என்று  விஸ்ரவஸ்  தனது மகன்  வைஸ்ரவணனுக்கு அறிவுரை கூறியதால் திரண்ட  செல்வத்தோடு  வைஸ்ரவணன்  இலங்கை சென்று வாழ்ந்தான். 

ஒரு காலத்தில் சுமாலி  என்கிற  ராக்ஷசன் ரசாதலத்திலிருந்து  வெளிப்பட்டு தன்  அழகிய மகள்   கைகசி யுடன் பூவுலகிற்கு வரும்போது  குபேரன்  அவர்களைச் சந்தித்தான்.

''மகளே  நீ  முன் செய்த வினைப்பயனால்  இந்த  நற்குணம் பொருந்திய  சிறந்த  செல்வங்கள் கொண்ட  வைஸ்ரவணன்  என்ற  முனிவனை  மணப்பாய்.  அவன்   மூலமாக  உனக்கு தோன்றும்  புத்ரர்கள் திரண்ட செல்வத்தோடு கூட   மிக்க  பலம்  பொருந்தியவர்களாகவும் அமைவர் என்று சொன்னான்  குபேரன் .

வைஸ்ரவணன் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது  சிறந்த  அழகியான கைகசி அவன் எதிரில்  நின்றாள்.  யார் அவள்,  எதற்கு  அனுப்பப்பட்டிருக்கிறாள் யார்  அனுப்பியது  போன்ற  நடந்த அனைத்தும்  ஞானதிருஷ்டியால்  முனிவன் அறிந்தான். நீ  என்னை  சந்தித்து  மணமுடிக்க  நினைத்த  இந்த  வேளை  மிகவும்  கொடியது.  எனவே  உனக்கு  இரண்டு  ராக்ஷசர்கள்  தான்  பிள்ளைகளாக  என்  மூலம் பிறப்பார்கள்''  என்றான்  வைஸ்ரவணன்.

''முனிவரே உங்களுக்குமா  இத்தகைய  கொடிய   ராக்ஷச புத்ரர்கள் ஜனிப்பார்கள்?'' என்று கேட்டாள்  கைகசி. 

''ஆமாம்  அதுவே விதி.   அவர்களுக்கு  அடுத்ததாக பிறக்கும் மகன்  சிறந்த விஷ்ணு பக்த  பாகவதனாக  செல்வச் செழிப்பு கொண்டவனாகவும், குணவானாகவும் பிறப்பான். ''

உரிய காலத்தில்  கைகசி  பத்து  தலைகளும்  இருபது கைகளும்  கொண்ட அஞ்சத்தக்க உருவம் கொண்ட  ஒரு  மகனைப் பெற்றாள். ராவணன்  என  பேர் வைத்தார்கள்.  அந்த  அரக்கன் பிறந்த கணமே  பூமண்டலம் நடுங்கியது.  அழிவைக் காட்டும்  நிமித்தங்கள்  தோன்றின.  

அடுத்ததாக  மேருமலை  போன்ற ஒரு  அரக்கன் கும்பகர்ணன் எனும் பெயர் கொண்ட  மகனாக  பிறந்தான்.  அடுத்து  ஒரு  அரக்கி சூர்பனகை என்ற  பெயரில்  பெண்ணாக தோன்றினாள் .  கடைசியில்  சாந்த ஸ்வரூபமாக  அழகிய தோற்றம் கொண்ட  வேத விற்பன்னனாக, ஞானவானாக  விபீஷணன்  தோன்றினான். 

கும்பகர்ணன் அதிக  பசி கொண்டவனாக  அலைந்து  காட்டில்  தென்பட்ட  முனிவர்களையும்  ரிஷிகளையும்  கொன்று தின்றான்.  ராவணன் மிக்க  பலம்  கொண்டவனாக  அனைவரையும்  கொன்று   அடக்குவாரின்றி  கொடுஞ்செயல்கள்  புரிந்து  உலகின் அழிவுக்கே  காரணனாக  வளர்ந்தான்.''

''அகஸ்தியர்  இவ்வாறு  ராமன் ஒன்றுமே  அறியாத  மானுடன்  போல்  தான் சொல்வதை முதன் முதலாக  கேட்பது போல்  காட்டிக்கொண்டாலும்  திரிகாலமும் அறிந்த  பரம்பொருள்  என்று  அகச்தியருக்குத் தான்  தெரியுமே ''  என்று  பார்வதியிடம்  பரமேஸ்வரன்  ராவணனின்  பிறப்பு பற்றிய  விவரங்களைக்  கூறினார்.  

மேலும்  ராக்ஷச வம்சம் இலங்கையில்  கொடிய ஆட்சி  செய்தது பற்றி கூற  ஆயத்தம்  செய்துகொண்டார்.  காத்திருப்போம். 



sree krishna

unread,
Feb 21, 2015, 8:08:12 PM2/21/15
to jks...@vsnl.com
அத்யாத்ம ராமாயணம்   உத்தரகாண்டம்  ஸ ர்கம் 2
                                                     
                                                                                      சில  பழங்கதைகள் 
                                                                
''நாதா,   அப்புறம்  அகஸ்தியர்  ராவண வம்சத்தை பற்றி   ராமருக்கு  சொன்னதை  எனக்கு  சொல்கிறேன்  என்றீர்களே''   என்று  உமை ஞாபகப்  படுத்த  மகாதேவன்  தொடர்ந்தார்.

''சொல்கிறேன் கேள்.   ஒரு தடவை குபேரன் தனது  புஷ்பக  விமானத்தில் ஏறி சென்றுகொண்டிருந்ததை  கைகசி  என்கிற  ராக்ஷசி  பார்த்தாள் . அவள் அருகே அவள்   பத்து  தலை  புதல்வன்  ராவணன்  இருந்தான்.  அவனை  அணைத்துக்கொண்டு ''அதோ பார் அவன் தான்  குபேரன். எவ்வளவு செல்வத்துக்கு  அதிபதி, பிரகாசமாக  இருக்கிறான்  பார். நீயும்  அவனைப் போல் பேரும் புகழும் பெற வேண்டும் என  எனக்கு  ஆசை''  என்றாள் .

''இவன்  என்னம்மா, இவனை விட  அதிக செல்வம்  சேர்க்கிறேன்.  வெகு விரைவில் செய்து காட்டுகிறேன் பாருங்கள்'' என்றான்  ராவணன். நற் பயனைத் தரக்கூடிய  புண்ய ஸ்தலமான  கோகர்ணத்துக்கு தனது தம்பிகளோடு  ராவணன்  தவம்  செய்யச் 
சென்றான். பத்தாயிரம்  ஆண்டுகள் உக்ரமாக  தவம் செய்தார்கள்.  விபீஷணன்  ஐந்தாயிரம்  ஆண்டுகள்  ஒற்றைக்காலில்  நின்று கொண்டு தவம்  புரிந்தான். (மகாபலிபுரம்  செல்லாதவர்கள்  கட்டாயம்  அங்கு  ஒரு நாள்  சென்று  பல்லவர் காலத்திய  பாறைகளில்  செதுக்கிய சிற்பங்களில்  பகீரதன்  சிலையைப்  பார்த்து  மார்பு எலும்புகள் எத்தனை தெரிகிறது  என்று  எண்ண வேண்டும்.  முகத்தின்  சுருக்கம்.  ஒத்தைக்காலில்  நிற்கும்  balance, ஜடாமுடி  எல்லாம்  எவ்வளவு  தத்ரூபம் என்று புரியும்.   மேலும்  பகீரதனை  ரசிப்பதை  விட்டு விட்டு  அதன்  பக்கத்திலேயே  ஒரு  குரங்கு  தனது  காதலியின் அருகில் பாந்தமாக  அமர்ந்து அவள்  தலையில்  பேன்  பார்க்கும்  அழகில் உங்கள்  கண் போனால் ஒரு  தப்பும்  இல்லை. அதையும்  கண்டு  ரசிக்கவும்.)

தேவர்கள்  கணக்குப்படி ஓராயிரம்  வருஷங்கள். அன்ன ஆகாரம் ஜலம்  இன்றி,  யாகத்தீ  மூட்டி  தவம் செய்தான்  ராவணன்.  ஆயிரம்  வருஷத்துக்கு  ஒன்று  என்று தனது பத்து  தலைகளில்  ஒன்பது தலைகளை வெட்டி  அக்னியில்  சமர்ப்பித்து  ஆஹூதி செய்தான். ஒன்பதாயிரம்  ஆண்டுகள்  ஆகிவிட்டன. மும்முரமாக நடந்த  தவம்  பத்தாயிரமாவது ஆண்டு  முடியும் போது  ராவணன் தனது  10வது  தலையையும் வெட்டி  வேள்வித்தீயில் போடும் சமயம்  பிரம்மா தோன்றினார்.

''மகனே  ராவணா, மிக்க  மகிழ்ச்சி.  உனது  சிறந்த  தவத்தை  மெச்சினேன். நீ  விரும்புவதைக் கேள்  தருகிறேன்''
 என்று  வரம் கொடுத்தார்.
 
''பிரம்ம தேவா, எனக்கு  மரணம் இல்லாமை என்கிற  வரம்  தாருங்கள்.  என்னை  எந்த கருடனாலும், நாகத்தாலும், யக்ஷனாலும்,  தேவர்கள்  தேவதைகளாலும், அசுரர்களாலும் வெல்ல, கொல்லமுடியாத  தன்மையைக்  கொடுங்கள்.  மனிதர்களைப் பற்றி  நான்  சொல்லவில்லை.  ஏனென்றால் அவர்கள்  புல்லுக்குச் சமானம் எனக்கு ''  என்று கேட்டான்.

''ததாஸ்து.   அப்படியே நடக்கும். மேலும்   யஞத்தில் நீ  ஆஹூதி செய்த  உனது  பத்து தலைகளும்  திரும்பப் பெறுவாய்''   என்று வரமளித்தார்  பிரம்மதேவன்.   

அருகே இருந்த  விபீஷணனை மெச்சி  ''குழந்தாய்,   நீ என்ன  வரம்  கேட்கப்போகிறாய்  என்றார்  பிரம்மா.''

''தெய்வமே,  எக்காலத்திலும் என்னுடைய  அறிவு  நிரந்தரமாக  தர்மத்திலேயே  நிலைக்கவேண்டும். எந்த  காலத்திலும்,  நேரத்திலும்  என் மனம் ஒருபோதும்  அதர்மத்தில்  ஆசை கொள்ளக் கூடாது''

''விபீஷணா,  நீ  அறவழியில் நடந்து கொண்டிருப்பவன். அவ்விதமே  என்றும்  நடப்பாய்.  நீ  கேட்காவிட்டாலும்  நானே  உனக்கு ஒரு  வரம்  தருகிறேன். நீ என்றும்  அமரத்வம் பெறுவாய்.''  என்று  ஆசி வழங்கினார் பிரம்மா. விபீஷணன்  சிரஞ்சீவியாக  இன்றும்  உள்ளான்.  அவனது உயர் பண்பு வெகுவாக அனைவரால் புரிந்து கொள்ளப்படவில்லை. அறியாதவர்களால் துரோகி என்ற பட்டம் தவம்  புரியாமலேயே  பெற்றுவிட்டான். 

அடுத்ததாக  '''கும்பகர்ணா,  நீ  என்ன  வரம்  கேட்கப்போகிறாய்?''  என்றார்  பிரம்மா.  அபோது  அவன்  வாக்தேவி  சரஸ்வதியின்  பிடியில்  இருந்ததால்  வருஷத்தில்  ஆறு மாதம்  எனக்கு  உறக்கம் வேண்டும்.  எழுந்து  ஒருநாள்  உணவு சாப்பிடவேண்டும்.'' என்றான்  என்று  அத்யாத்ம  ராமாயணம் கூறுகிறது.  

வேறு ஒரு கூற்றுப் பிரகாரம்  பிரமனிடம்  கும்பகர்ணன்  ''தேவர்களே  இருக்கக்கூடாது (பிரமனையும் சேர்த்து தான் )  என்ற பொருள் படியாக  சமஸ்க்ரிதத்தில்   'நிர்தேவஸ்ய:''  என்று கேட்கப்போய்  சரஸ்வதி  அவன்  நாவில் அமர்ந்து  ''நித்ரேவஸ்ய''  (நித்ரையைக் கொடு)  என்று நாக்குழறி கேட்டுவிட்டான்.  அதனால்  தூங்குமூஞ்சியாகி விட்டான்  என்று வரும்.   

சரஸ்வதி நம்மை  லட்சியம் பண்ணி  நாக்கில் வராதபோதே,   நாம் உளறுவதில்லையா ?  ''ராத்திரி லேட்டா  நாய்கிட்டேஇருந்து வரும்போது  வழியிலே ஆபிஸ் கடிச்கவந்துது ''  நாம்  சொல்லவந்தது  ஆபிஸ்லெருந்து வரும்போது நாய்  துரத்திக்கொண்டு கடிக்க வந்ததை'.  சீக்ரம் போய் அடுப்பிலே செக்கைப் போட்டுட்டு வா  பாங்க்லே கொழம்பு கொதிச்சிண்டிருக்கு'' .  உண்மையான  அர்த்தம்  அடுப்பில்  குழம்பு கொதிக்கிறது. விர்ரென்று போய்  பாங்கில்  இந்த  செக்கை அக்கௌண்டில் போட்டுவிட்டு வா''.

எனவே  கும்பகர்ணன்  கேட்ட வரம்  பெற்றான். தேவர்களுக்கு  மிக்க  மகிழ்ச்சி.  சரஸ்வதியின்  பிடி  நீங்கிய  பிறகு கும்பகர்ணன் யோசித்தான்.  ''அடடா  என்ன  தவறு செய்துவிட்டேன். நான் தூக்கத்தில்  கூட  எண்ணிப் பார்க்காத  வரம்  எனக்கு  தூக்கமாகவே  கிடைத்து விட்டதே''  என்று  நொந்தான். 

 ராமாயணத்தில்  கும்பகர்ணன்  தூங்கிக்கொண்டே  இருக்கிறான்.  அவனை எழுப்ப,    வரம் கொடுத்த  பிரமன்  பெயரால் வரும்  ''பிரம்மப்  பிரயத்தனம்''   செய்யவேண்டி வரும்.  யானைகள்  அவன்  காதை பிடித்து  திருகும்.  கொதிக்கும்  நீரை அவன்  முகத்தில்  ஊற்றுவார்கள்.  நெருப்பால்  அவன்  அங்கங்களை சுடுவார்கள். ஈட்டிகளாலும்   கூறிய ஆயுதங்களாலும்  அவனைக் குத்தினாலும் உலகமே  நடுங்கும்  ஓசையை  அவன்  காதில் ஒலிப்பார்கள்.  ''ஹுஹும்''  எழுந்திருக்க மாட்டான்.   இவ்வளவு உபசாரங்கள் பெற்றும்  தூக்கத்தில்  அவன்  சற்று புரண்டு படுப்பான். 


ராவணன்  பெற்ற வரம் அறிந்த  சுமாலி,   ப்ரஹஸ்தன் போன்ற ராக்ஷசர்கள் இப்போது  தைரியமாக  ரசாதலத்திலிருந்து வெளியே  வந்தார்கள்.  யாராலும்  ராக்ஷச வீரன்  ராவணனை வெல்ல முடியாது என்ற சந்தோஷம் அவர்களுக்கு.  சுமாலி ராவணனைக் கட்டி  தழுவி '' செல்வமே,  எவ்வளவு  பெரிய  பாக்கியம்  உன்னால்.  என்  விருப்பம்  நிறைவேறியது. விஷ்ணுவைக்  கண்டு  பயந்து  நாங்கள்  அனைவரும்  இலங்கையை விட்டு  ஓடி  ரசாதலம் சென்றோம். இனி அந்த  அச்சம்  உன்னால்  தீர்ந்தது.   எவராலும்  இனி  நம்மை  வெல்லமுடியாது.  நீ  இருக்கும்வரை.'' 

ப்ரஹஸ்தன்  குறுக்கிட்டு ''ராவணா,  நான்  சொல்வதைக் கேள், இலங்கை  குபேரன் வசம் உள்ளது.  நீ அவனிலும்  செல்வம் படைத்தவன்  இப்போது.  ராஜ  தர்மம், நீதி சாஸ்திரம் எல்லாமே  வளையக் கூடியவை தான். வீரன் யார்  என்று  வரும்போது அண்ணனோ  தம்பியோ அங்கு  கிடையாது.  பலம் தான் முக்கியம்.  தேவைகளைப்  பார்.  கச்யப முனிவரின் புத்ரர்களான  தேவர்களும்  அசுரர்களும்  தம்முள் சதா  சண்டையிட்டுக்கொண்டு தானே  இருக்கிறார்கள். தேவர்கள் நம் மீது கொண்ட  பகைமை புதிதல்ல. 

ராவணனுக்கு  பெருமையும்  கர்வமும்  இப்போது 10 தலைக்கு மேலேயும்  ஏறிவிட்டது.  கண்கள் சிவக்க இலங்கையை தேவர்களிடமிருந்து மீட்க  திருகூட மலை  சென்றான்.  அங்கு  ஆட்சி புரிந்த குபேரனை மிரட்டினான்.  குபேரன் ராவணன் புகழ், பெருமை, பெற்ற வரத்தின்  சக்தி, செல்வம்  அனைத்தும்  அறிவான்.  ராவணனோடு மோதுவது, ஜெயிப்பது  முடியாத  காரியம்  என உணர்ந்தான். அனைவரோடும்  இலங்கையை விட்டு  வெளியேறினான்.  ராவணன்  தனது ராக்ஷச மந்திரிகளோடு  இலங்கையை ஆக்ரமித்து ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 

குபேரன் இமயமலை சென்று சிவபெருமானை நோக்கி  தவம் செய்ந்தான். அவர்  அருளால்  விஸ்வகர்மாவின் உதவியோடு தனக்கென  அளகாபுரி  என்ற  நகரம் அமைத்துக் கொண்டான்.  வடதிசைக்  காவலனாக நியமிக்கப் பட்டான். 

ராவணனின் அதிகாரம் வர வர  அதிகரித்து,  தேவர்களைத் துன்புறுத்த  ஆரம்பித்தது.  சகோதரி  சூர்பனகையை மகா மாயாவி வித்யுத் ஜிஹ்வன் என்கிற ராக்ஷசனுக்கு  மணம் செய்வித்தான்.  மயன்  ராக்ஷசர்களின் அற்புதக்  கட்டிடக் கலைஞன். அவன்  தனது  அழகிய  புதல்வி மண்டோதரியை  ராவணனுக்கு திருமணம்  செய்து கொடுத்தான்.  மகாபலியின்  பெண் வயிற்றுப்  பேத்தி  வ்ருத்ரத்ஜ்வாலா கும்பகர்ணன்  மனைவியானாள்.  ராக்ஷச  குடும்பங்கள் இணைந்தன.  அசுர பலம் அதிகரித்தது.  கந்தர்வர்கள் தலைவன் சைலூஷன் தனது மகள் ஸரமாவை  விபீஷணுக்கு  மணமுடித்தான்.  

ராவணனுக்கு பிள்ளை பிறந்தது.  பிறக்கும்போது  வானத்தில் பேரிடிகள் ஒலித்தன. எனவே  அவன்  ''மேகநாதன்''  என்ற   பெயர் பெற்றான். 

பாவம்  மேருமலை போன்ற தம்பி  கும்பகர்ணன்  சதா தூங்கிக்கொண்டே  இருப்பதால், அவனுக்கு  விஸ்தாரமான ஒரு  குகை அமைத்துக்  கொடுத்தான்  ராவணன் .  கொஞ்சம் கொஞ்சமாக  விடாமல் தேவர்களைத் துன்புறுத்தி  அவர்கள்  யாகங்களை  அழித்து, அவர்கள்  பொருள்களை சூறையாடி, கொன்று தின்று தேவலோக சிறப்பையும்  செழிப்பையும்  கெடுத்தான்.  எந்த  அறிவுரையும்  அவன் 20 காதுகளில்  ஒன்றிலுமே  ஏறவில்லை.  அளகாபுரி  சென்று  குபேரனை வென்று  அவன் செல்வம், புஷ்பக விமானம் எல்லாவற்றையும் கவர்ந்தான். யமனையும் வருணனையும் வென்றான்.  இந்திரனைக் கொல்ல   தேவலோகம் சென்றான்.  தேவர்கள்  இந்திரன்  தலைமையில் ஒன்று  சேர்ந்து ராவணனை  எதிர்க்க  பெரும் தேவாசுர யுத்தம்  நிகழ்ந்தது.   இந்திரன்  ராவணனைப்  பிணைத்து கட்டினான்.  இதை அறிந்த  மேகநாதன்,  கடும்போர்  புரிய,  தேவர்கள் தோற்றனர். தனது தந்தை ராவணனை விடுவித்து,  இந்திரனைச்  சிறைப் பிடித்து  இலங்கைக்கு  இழுத்துச் சென்றான். இந்திரனை ஜெயித்ததால்  இந்திரஜித் என்று  பேர்  பெற்றான். 

எல்லோரும்  பிரம்மாவிடம் சென்று  கதறினார்.   பிரம்மாவால்  என்ன செய்யமுடியும்?  அவருக்குத்  தெரிந்தது வரம் கொடுப்பது தானே.  மேகநாதனுக்கு வரங்களை வாரி  வீசி  ஒருவாறு  இந்திரனை  சிறை மீட்டார்.  ஈரேழு பதினான்கு உலகங்களையும்  ஒவ்வொன்றாக  வென்று  தன்  வசத்தில் கொண்டு வந்தான் ராவணன்.  கைலாசம்  பாக்கியிருந்தது.  அதை அப்படியே  பெயர்த்து  சிவபெருமானையும்  தன் ஆதிக்கத்தில்  கொண்டுவர  முயற்சித்தான். கால்  கட்டைவிரலால் கைலாச மலையை  அழுத்தி  அவனை நசுக்கினார்  சிவன். 

நந்திகேஸ்வரர் பார்த்துக்கொண்டிருப்பாரா.  ''அடே  ராவணா  உனக்கு  முடிவு  வரப்போகிறது.  வானரர்களாலும் மானிடர்களாலும்  தான்  உன்  அழிவு''  என்று  சாபமிட்டார்.   வானரர்  மானிடர்  பற்றி  கொஞ்சமும்  கவலையின்றி  ராவணன் ஒருமுறை  கிஷ்கிந்தை சென்று  வாலியிடம் மோதினான்.  அவனை  வாலி  தனது வாலினால் கட்டி  கடல் கடலாக  தோய்த்து துன்புறுத்தி  உயிர் தப்பி  ஓடுமாறு  உதறி எறிந்தான்,  அது முதல்  வாலி  என்ற  பெயரே  ராவணனுக்கு  வியர்த்துக் கொட்டியது. வாலி  தன்னை விட  பல மடங்கு  பலசாலி  என்று  அனுபவம்  புரிய வைத்தது. அவனுடன்  நட்போடு  பழகினான்.''

இவ்வாறு   ராவணனின்  வம்சாவளி  ஆட்சி பற்றி ராமருக்குச்  சொல்லிக்கொண்டிருந்த  அகஸ்தியர், ''ஸ்ரீ  ராமா  இப்படிப்பட்ட  வலிமை வாய்ந்த  ராவணனையும் இந்த்ரஜித்தையும்  நீ  கொன்று  தேவர்களுக்கு  நிம்மதி  தந்தாய்''    நீயே  மூல காரணன். செல்வமனைத்திற்கும் அதிபதி.  உன்னிடமிருந்து  பிரம்மா  உதயமாகி  உலகத்தின்  படைப்பை  உன்னால்  நியமிக்கப்பட்டு  ஏற்றி நடத்தி வருகிறார்.  நீ   நாராயணன்.  விராட் புருஷன்.  மூவுலகும் தேவாதிதேவர்களும்  உலகின்  ஜீவராசிகளும்  உன்னிலிருந்தே உன் சங்கல்பத்தால்  தோன்றிய தல்லவோ?   நாராயணா. சுருங்கச்  சொல்லுவதானால்  
பாலில்  எப்படி தயிர், மோர்,  வெண்ணை  நெய்  மறைந்துள்ளதோ  அதைப் போல்  உன்னில்  எல்லாமே  மறைந்திருக்கின்றன. தனித்து ஒவ்வொன்றாக நீ  மாயத் தோற்றம் கொண்ட போதிலும் அனைத்திலும்  நீ  உள்ளிருப்பவன் .  எனவே  தான்  யோகிகள்  ரிஷிகள்  முனிவர்கள்  கண்களை  மூடி  உள்ளே  மனம் செலுத்தி  உன்னை  தன்னிலேயே தரிசித்து பூஜித்து வழிபடுகிறார்கள். இது  அறியாத  அஞ்ஞானிகள்  தான்  உன்னை உணராது  எங்கோ எதிலோ  தேடி  அவதியுறுகிறார்கள்.  உன்  எதிரில் நான் ஏதேதோ  பேசுகிறேனே. என்னை  மன்னித்தருள்வாய்''  என்று  அகஸ்தியர் ராமனைபோற்றி  புகழ்ந்தார்.  


''பரமேஸ்வரனே,  ஹரனே,  உத்தரகாண்டத்தில்  வரும் சம்பவங்கள்,  ராமாயணத்தின்  உபகதைகளாக ,  விட்டுப்போன  விவரங்களாக,   வெகு  அழகாக  ஜோடிக்கப்பட்டு ராமாயணத்தை  பலப்படுத்துகிறது.  மேலும்   இனி  தங்களது  திருவாக்கில் இராமாயண  சம்பவங்களை  கேட்க  ஆவலாக  காத்திருக்கிறோம்.   

sree krishna

unread,
Feb 22, 2015, 7:46:01 PM2/22/15
to jks...@vsnl.com
அத்யாத்ம ராமாயணம்  உத்தர காண்டம்  ஸர்கம் 3

                                     ''ராவணன்  எண்ணம்'' 

ஹிந்துக்களின்  இரு  கண்கள்   ராமாயணமும்  மகாபாரதமும்  என்பார்கள். ஒன்றை ஒன்று  மிஞ்சும்  இரு  அற்புத காவியங்கள். காலத்தால்  அழியாதவை.  இறைவனை நம்மோடு  பிணைப்பவை. கேட்கக்  கேட்க,  படிக்கப்  படிக்க,  அலுக்காத, சலிக்காத, என்றும்  சுவை கூடிக்  கொண்டே போகும்  இனிய விருந்து.

''பார்வதி,   இன்று  மேலும் அகஸ்தியர்  ராமருக்குச்  சொன்னதை  உனக்குக்  கூறுகிறேன்''  என்று  கைலாயத்தில்  பரமேஸ்வரன்  துவங்கினார்.

ராமர்  ஒரு  சாதாரணன்  போலே  அகஸ்தியரைப்  பார்த்து  ''ஏன்  முனிவரே,  சூரியனும்   இந்திரனும்  தான்  வாலி  சுக்ரீவனாக  அவதரித்தவர்கள்  என்பது உண்மையா?'' என கேட்கிறார்.

''ராமா,   மேரு  பர்வதத்தில் நூறு யோசனை அகலத்தில்  பிரம்மாவின்  சபா  மண்டபம் உள்ளது. ஒரு முறை  பிரம்மா  அங்கு அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தபோது  கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி அதன் ஒரு  துளி  அவர் கையில் விழுந்து கீழேயும் சிதறியது..  அடுத்த கணமே  அது  ஒரு பெரிய  வானரமானது. அவரை வணங்கியது. ரிக்ஷராஜன்  என்று  பெயர் பெற்றது.'' என்னுடனேயே சில  காலம்  இரு'' என்றார்.  

ஒருநாள்  அந்த  பர்வதத்தில்  கனி காய்  கிழங்குகளைத் தேடி  ரிக்ஷ ராஜன்  அலையும்போது ஒரு  தடாகம் அதன் கண்ணில் பட்டது. தாகம் தீர்க்க  அதன் அருகில்  சென்றபோது  தெளிந்த நீரில் தன்  உருவம்  தெரிந்ததை  வேறு  ஒரு  வானரம் என்று  கருதி நீரில் குதித்தது. என்ன ஆச்சர்யம்? நீரில்  இப்போது  மற்றொரு வானரம் தெரியவில்லை ஆனால்  நீரை விட்டு  வெளியேறிய ரிக்ஷ ராஜன் ஒரு அழகிய பெண்ணாக  மாறியிருந்தது. 

அந்த வழியாக  இந்திரன் வழக்கம் போல் பிரம்மாவுக்கு  பூஜை செய்து விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவனை  அந்தப் பெண் வணங்கி  தன்னை  ஏற்றுக்கொள்ள வேண்டி  அவன் மூலம் பிறந்தவன்  வாலி.   இதே போல்  சூரியனையும் வேண்டி சுக்ரீவன்  அவள் மகனானான்.  இரண்டு புதல்வர்களுடன்  ரிக்ஷராஜன் மீண்டும்  பழைய வானர ரூபம்  பெற்று  பிரம்மாவை வணங்க  அவர்  விஸ்வ கர்மாவினால் படைக்கப்பட்ட  கிஷ்கிந்தைக்கு  அவர்களை  அனுப்பினார்.  சப்த  த்வீபங்களிலும் இருந்து  வானரர்கள்  அங்கே குடியேறுவார்கள். ''உன் மகனை அந்த  திவ்ய  நகரத்தின் அரசனாக பட்டாபிஷேகம் செய்.  த்ரேதா யுகத்தில்  ஸ்ரீ  நாராயணன் அங்கு மானிட  அவதாரம் கொண்டு பிரவேசம் செய்யும்போது  வானரர்களின் சேவையை ஏற்றுக்கொள்வார்.''  என்றார்  பிரம்மா. 

''ஸ்ரீ  ராமா,  வாலி சுக்ரீவர்களின்  விருத்தாந்தம் சொன்னதைத் தொடர்ந்து இன்னொரு  கதையும்  சொல்கிறேன் கேள்''  என்று  அகஸ்தியர்  ராமனுக்கு  மேலும் சுவையான ஒரு சம்பவத்தை  நினைவூட்டினார்.    

''முன்னொரு காலத்தில்,  க்ருத யுகத்தில், பிரம்மாவின்  மானச புத்ரர் சனத்குமாரர்  தவத்தில்  ஆழ்ந்து  கொண்டிருக்கும்போது  அவர் எதிரே  ராவணன்  வந்து நின்றான்.  அடக்கத்தோடு வணங்கி நின்றவன்  அவரிடம் ''ரிஷி ஸ்ரேஷ்டரே,   உலகில் தேவர்களைக் காட்டிலும் யாருக்கு பலம்  அதிகம்? எப்படி  தேவர்கள்  யுத்தத்தில் எதிரிகளை  வெல்ல முடிகிறது? அந்தணர்கள்  யாரை அனுதினமும் வணங்குகிறார்கள்?  யோகிகள்  யாரை  தியானம் செய்கிறார்கள்?'' என்று  விளக்கம்  கேட்டான். 

அவன்  மனதில் தோன்றியவைகளை ஞானதிருஷ்டியால்  உணர்ந்துகொண்ட  சனத் குமாரர், ''ராவணா,  எக்காலத்திலுமே, சர்வ ரக்ஷகன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே சகலராலும்  வணங்கப் படுபவர்.''

''முனிவரே, விஷ்ணு  சர்வ  வல்லமை பொருந்தியவர்  என்கிறீர்களே,  அவரால்  கொல்லப்படும்  அசுரர்கள், தானவர், ராக்ஷசர்கள்  எந்த  உலகம் அடைகிறார்கள்?''

''சாதாரண தேவதைகளால் மரணம் எய்துபவர் சுவர்க்கத்தை அடைவர்.  புண்ணிய பலன் குறைந்தபின்  புண்ய பாவ  பலன்களுக்கு ஏற்ப மீண்டும்  மண்ணுலகில்  பிறந்து மடிவார்கள்.  விஷ்ணுவால்  மரணம் அடைபவர்கள்  மறு பிரவியின்றி விஷ்ணுவின்  பரம பதத்தையே அடைவார்கள் ''

எதிர்பார்த்த  விஷயம் அறிந்துகொண்ட ராவணன்  தனக்குள் ''விஷ்ணுவோடு யுத்தம் செய்வேன்'' என்று  தீர்மானித்தான். 

அவன்  மனம் அறிந்த  சனத்குமாரர்  ''ராவணா, உன் எண்ணம் விரைவில்  நிறைவேறும்,  விஷ்ணு உருவற்றவர். அதே சமயம் மாயையால்  நாம்  காணும்  வேறு வேறு  வஸ்துக்கள், ஜீவராசிகளிலும் உள்ளிருப்பவர். காணும்  யாவும், யாரும், அவரே.  அவரை உணர்பவர்களால்  மட்டுமே  அறியப்படுபவர். எவர்  உள்ளும் புறமும் அந்த  நாராயணனுக்கே அர்ப்பணித்து சரணடைகிறார்களோ, மனதில் அவர் சிந்தனையை நிரப்பி மாசு நீங்கப் பெற்று, பக்தியுடன் அணுகுகிறார்களோ, அவரிடம்  காண்பவர்  தான் அந்த நாராயணன். த்ரேதா யுகத்தில்  இக்ஷ்வாகு  வம்சத்தில் தசரத புத்ரனாக  அவதரிப்பார்'' என்றார் முனிவர்.
++

அகஸ்தியர்  ''ஸ்ரீ  ராமா,  உன்னோடு  யுத்தம்  பெரிய  தீர்மானித்த  ராவணன் தன்னை  அதற்கு  தக்கவாறு  பலப்படுத்திக்கொள்ள  ஆரம்பித்தான். அந்த  எண்ணத்தோடு தான்  சீதையைக்  கவர்ந்து சென்றான்''
++

''எதையுமே  நீட்டி சொல்வதை  பூலோகத்தில்  ''என்ன  பெரிய  ராமாயணம் சொல்கிறாய் '' என்கிறார்கள்.  ஆனால்  நீண்ட  ராமாயணத்தையே நீங்கள்  சுருக்கமாக  அழகாக  எதையும்  விடாமல்  சொல்வது  மிக்க  சந்தோஷத்தையும்  மனதுக்கு  பலத்தையும்  தருகிறது என்பதும்  அந்த  ராமனின்  அருளே  என்பதில்  சந்தேகமில்லை''  என்ற பர்வத வர்த்தனியின்  பேச்சில்  நியாயம் இருக்கிறதே. 


 
Reply all
Reply to author
Forward
0 new messages