TODAY'S POST- VISHWAVASU-DAKSHINAYANAM-VARSHA RUDHU-KANYA-SHUKLA-POORNIMA-INDHU-UTHRAPROSHTAPADHA

6 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Oct 8, 2025, 8:06:26 PM (11 days ago) Oct 8
to

!cid_ii_199b4a9bd5a143dc1ae2

வழிகாட்டும் 'தேசிகர்'-தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

இப்படி ஸ்வாரஸ்யத்திற்காகச் சுற்றி வளைத்து ட்ராமா போட்டு லக்ஷணம் சொல்லாமல் Factual -ஆக டீச்சருக்கு லக்ஷணம் கொடுக்கும் ஒரு டெஃபனிஷனும் இருக்கிறது:'திசதி வித்யாம் இதி தேசிக:' கல்வியைத் தருவதுதானே டீச்சரின் லக்ஷணம்? அதை நேராக, சுருக்கமாக இந்த வாசகம் தெரிவிக்கிறது. 'வித்யாம்' - கல்வியை, 'திசதி' - தருகிறார், 'இதி' - என்பதால், 'தேசிகர்' - தேசிகன் எனப்படுகிறார். இங்கே குரு என்று பொதுப்படச் சொல்கிறவருக்கு உள்ள அநேகப் பெயர்களில் 'தேசிக' என்பது வந்துவிடுகிறது.

வேதோபநிஷதங்களில் (வேதத்திலும் உபநிஷத்திலும்) 'தேசிகர்' என்ற வார்த்தை போடாவிட்டாலும், 'தேசிக'பத டெஃபனிஷன் எந்தக் கார்யத்தை, function -ஐ அவருக்குக் கொடுத்திருக்கிறதோ அதையே குருவின் கார்யமாக, function -ஆகச் சொல்லியிருக்கும் இடங்கள் அவற்றில் உண்டு.

'தேசிக' என்பதற்குள்ள டெஃபனிஷன்களில் ஒன்று 'திசை காட்டுபவனே தேசிகன்' என்று தெரிவிக்கிறது. ஆத்ம லக்ஷ்யத்தை அடைய எந்த வழியில் போகணும் என்று திசை காட்டும் கார்யம். குரு வழிகாட்டுகிறவர், சிஷ்யன் அவரைப் பின்தொடர்ந்து போகிறவன் என்பது பொதுவாகவே சொல்லும் விஷயந்தானே?

உபநிஷத்தில் 'வழிகாட்டி' குரு

வழி தெரியாதவனுக்கு அதைச் சொல்பவர் என்பதைக் கதாரூபமாகவே ஒரு உபநிஷத் கொடுத்திருக்கிறது- சாந்தோக்யோபநிஷத். 'கண்ணைக் கட்டிக் காட்டிலே விடறது' என்கிறோமே, அதையே ஸம்பவமாகச் சொல்கிற கதை.

கந்தார தேசம் ( Gandhara ) என்று ஒன்று. காந்தாரம் என்று சொல்வதுண்டு. அந்த தேசத்தைச் சேர்ந்தவன் தான் த்ருதராஷ்ட்ரனின் பத்னியான காந்தாரி - Gandhari ; Kandhari இல்லை. இங்கே நாம் தப்பாக ரீணீ-வை ளீணீ-ஆக்கின மாதிரி அப்புறம் அந்த தேசத்திலேயே பண்ணித்தான் Gandhara -த்தை Kandahar (காண்டஹார்) ஆக்கி விட்டார்கள் என்கிறார்கள். அப்படியானால் அது Partition -க்கு (பாகிஸ்தான் பிரிவினைக்கு) முன்னாலிருந்த முழு இந்தியாவுக்கு வெளியிலே உள்ள ஆஃப்கானிஸ்தான் என்றாகிறது. சில ஆராய்ச்சிக்காரர்கள், அது இல்லை கந்தாரம், தற்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட வடகோடிப் பகுதியான பெஷாவரைச் சுற்றியிருக்கும் பிரதேசந்தான் ஆதி கால கந்தாரம் என்கிறார்கள். அது இருக்கட்டும்.

அந்த தேசத்தில் ஒரு பணக்காரன். அவனை ஒரு கொள்ளைக்காரன் 'கிட்னாப்' பண்ணி அவனுடைய கண்ணைக் கட்டிக் காட்டுக்கு இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளை அடிக்கிறான். கொலை பண்ணாமல் கொள்ளையாடு நிறுத்திவிடுகிறான். அப்புறம் அவனை அந்த நடுகாட்டில் விட்டுவிட்டு ஒடியே விடுகிறான். எந்தப் பக்கம் போனால் ஊர் வரும் என்றே தெரியாத பணக்காரன் - பணத்தைப் பறிகொடுத்து இப்போது 'பாப்ப'ராகி விட்டவன் -நாலு திசையும் திரும்பித் திருப்பி, ஸஹாயத்க்கு யாராவது வரமாட்டார்களா என்று, பாவம், லபோ லபோ என்று கத்துகிறான். "என்னைத் திருட்டுப்பய கண்ணைக் கட்டி இங்கே இழுத்துண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டானே!காப்பாத்த யாருமில்லையா, இல்லையா?" என்று கத்துகிறான்.

அப்போது ஒரு வழிப்போக்கன் அநத்ப் பக்கம் வருகிறான். அவன் அந்த ஆஸாமியுடைய கண்கட்டை அவிழ்த்துவிட்டு, கந்தார தேசத்திற்கு அவன் திரும்பிப் போவதற்கு இன்ன திசையிலே போய் அப்புறம் இன்ன, இன்ன திசையிலே திரும்பணும் என்று தீர்க்கமாக எடுத்துச் சொல்கிறான். அதைக் கேட்டு ஆஸாமியும் வழி தெரிந்து கொள்கிறான்.

அந்தப்படியே போய், காடு முடிந்துவிட்டு நாட்டுப் பகுதியை அடைகிறான். நாட்டுப் பகுதியில் கிராமங் கிராமமாக விசாரித்துக்கொண்டே நடையைக்கட்டி முடிவாக கந்தாரம் போய்ச் சேருகிறான்.

"இந்த மாதிரிதான் ஆசார்யனைப் பெற்ற ஒருவன் அறிவு பெறுகிறான்" என்று உபநிஷத்தல் முடித்திருக்கிறது. "ஆசார்யனைப் பெற்றவன்தான் அறிவு பெறமுடியும்" என்பது உள்ளர்த்தம் என்று தெரிந்துகொள்ளும்படியாக வாசகம் இருக்கிறது.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
1-3

 

 

!cid_ii_199b4a9bd5a143dc1ae2[1].jpg
1-3[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages