TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-HEMANTHA-MAKARA-SHUKLA-DWADASI-BIRUGU-ARUDRA

8 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Jan 30, 2026, 4:16:36 AM (4 days ago) Jan 30
to
மதக் கொள்கைக்கு முரணான சட்டங்கள் கூடாது -
தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

அதாவது எல்லா மதங்களுக்கும் ஒரே போல் ஆதரவளிப்பதான சரியான செக்யூலரிஸமோ, எம்மதத்திலும் சம்பந்தம் கொள்ளாத தவறான செக்யூலரிஸமோ, எதனை அரசாங்கம் ஏற்கின்ற போதிலும் அரசியலாரின் சமூகக் கொள்கைகளுக்குப் பொருந்தும் வகையில் மதங்களில் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாகச் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசாங்கம் கைக்கொள்ளலாகாது. எம் மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்ற தவறான செக்யூலரிஸத்தை மேற்கொண்ட பின்பும் எதிர்மறை சம்பந்தமாக மத விதிகளில் இவ்வாறு துர்பிரவேசம் மட்டும் செய்யலாம் என அரசாங்கம் கருதுமேயாகில் அதனை நாம் ஏற்பதற்கில்லை.

மதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்.

எனினும் தவிர்க்க முடியாமல் அவ்வாறான ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள நேரிடின், அப்போது ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறோம். அதாவது மத விதிக்கு முரணாகவும் தமது சமூகக் கொள்கைக்கு ஏற்பச் சட்டமியற்றலாமென ஓர் அரசாங்கம் கருதுகையில் இக்கருத்தை நாட்டின் சகலப் பிரஜைகள் குறித்தும் ஒரே போல் அமல் செய்து, அதாவது நாட்டில் வழங்கும் எல்லா மதங்களின் விதிகளையும் கருதாது சமமாக அமல் செய்து, பிரஜைகள் அனைவருக்கும் சம cF வழங்குதல் என்ற ஆதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

சில மதஸ்தரின் மத விதிகளில் மட்டும் புகுந்து மாற்றுவது, மற்றவர்களைத் தொடாமல் விடுவது எனப் பாரபட்சம் செய்தால் ஜனநாயகக் குடியரசு என்பதன் அஸ்திவாரக் கொள்கையிலேயே ஒன்றான சகலருக்கும் சம cF என்பதை அரசாங்கமே முறித்த மாபெரும் தவறாகும்.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
 

WITH PRANAMS 

 

TIRUPUR RAMANATHAN-63816 83335
 

 
Reply all
Reply to author
Forward
0 new messages