இதோ அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள்.... தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.

1,482 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
May 4, 2021, 11:53:08 PM5/4/21
to Abridged Recipients
Inline image
🏵️🙏🏵️🙏🏵️🏵️🙏🏵️🙏🏵️🌷🏵️🏵️🙏🏵️🙏🏵️🙏 *நற்பவி என்றால் என்ன*?

நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு அற்புத மூல ஜப மந்திரம்.

இதன் பொருள் 
நற் – நல்லது, 
பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும்
என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது.

சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இது அஸ்திரமாக இருந்து வரும்.

புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழியா பேரின்ப நிலையை அடைய "நற்பவி" என்ற மந்திர ஜெபம்  பேருதவியாக இருக்கும் என மகரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.

இதை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். கணக்கு கிடையாது. ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்.

 இந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்க்கு இணையானது என்பதால் இதை எல்லோரும் கார், வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்று கொள்ளலாம்.


கருணைமலை காகபுஜண்டர் அருள் வாக்கு " நற்பவி"

இது நிர்விகல்ப சமாதியிலிருந்து கிடைத்த ஒரு மோகன அஸ்திரம்.

இதை சப்தத்தோடு உச்சரிக்க எல்லா தீமைகளும் ஓடோடி போகும் அல்லது ஒடுங்கி போகும்.

இதன் அர்த்தம் நல்லது பலிக்கட்டும் அல்லது நல்லது உண்டாகட்டும் என்பதே!

ஆதலால் இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி எங்கெங்கும் எவ்வெவர்க்கும் நன்மையே உண்டாகும்.

மேலும் அவரவருடைய உஸ்வாசத்தை புருவ மத்தியிலுள்ள ஏழு சூஷ்ம திரைகளையும் கடந்து  செல்லுமாறு செய்து ஆங்கு பிரம்மரத்தித்திலுள்ள அழியாதனத்தை அடையச்செய்து அழியாததும் மாறததுமான இந்திர போகத்தையும் அளித்துதவும்.

இப்பக்கத்தை சிரமபட்டு தேடி கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுக்க கூடியது, முயற்சி செய்து பாருங்கள்.

நற்பவி! 
நற்பவி!! 
நற்பவி!!!  

என்று சொன்ன ஷணத்தில் இருந்து மகரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலேயே அறியப்படுகிறது.

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான்.

பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். 

நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர்.

இதோ அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள்....

தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள்.
பாவங்கள் தொலையும். 
நன்மைகள் விளையும்.

நற்பவி! 
நற்பவி! 
நற்பவி!

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி.
****************************

  1. ஓம் புஜண்ட தேவாயச
   வித்மஹே,
   த்யான ஸ்தீதாய தீமஹி,
   தந்நோ பகவான்
   ப்ரசோதயாத்.

  2. ஓம் காக ரூபாய
      வித்மஹே
      தண்ட ஹஸ்தாய   
      தீமஹி,
      தந்நோ புஜண்ட           
      ப்ரசோதயாத்.

  3.  ஓம் காக துண்டாய
        வித்மஹே
        சிவசிந்தாய தீமஹி,
        தந்நோ யோகி 
        ப்ரசோதயாத்..

   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி
   சமேத ஸ்ரீ காக புஜண்ட
   தேவாய நம

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

நற்பவி! 
நற்பவி! 
நற்பவி!

*இறைவனின் பரிபூரண அருளை பெறுவீர்*

           - சித்தர்களின் குரல்
              படித்ததில் பிடித்தது🙏🙏🙏

*🚩சர்வம் சிவமயம்🚩*


*தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!*🏵️🙏🏵️🏵️🙏🏵️🙏🏵️🙏🏵️🙏🏵️🙏🏵️🙏🏵️

Reply all
Reply to author
Forward
0 new messages