திருமந்திர சித்தர் - நங்கநல்லூர் J.K. SIVAN
ஆன்மிகம் என்பது இப்போது சிலருக்கு கிள்ளுக்கீரையாகி விட என்ன காரணம்? ஆன்மீகத்தைப் பற்றிய சரியான விஷயங்கள் போதிய அளவு பரவாதது. ஆரவாரம் அமைதியற்ற ஆக்ரோஷம், விஷயம் புரியாத எதிர்ப்பு, இவற்றை அடையாளம் கண்டுகொண்டவர்களுக்கு மட்டுமே ஆன்மிகம் புரியும். தங்களை ஆன்மீக வாதிகளாக பிரபலப்படுத்திக் கொள்பவர்களால் தான் ஆன்மீகத்துக்கே இழுக்கு. ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை. அது ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் அன்பால், பண்பால் வளர்வது.. ஆன்மிகம் வாழ்வை சீர்படுத்தவே அன்றி ஒரு பிழைக்கும் வழியானது சந்தர்ப்பவாதிகளால் தான். ஆன்மீகம் வருமானம் ஈட்ட அல்ல. இருப்பதை அள்ளிக் கொடுக்கும் மனத்தை வளர்க்க. உண்மையான ஆன்மீக குருமார்களுக்கு இடையே வேறுபாடு, வித்யாசம், சர்ச்சைள் என்றும் நெருங்காது. சுயநலம் உள்ளே இருப்பவர்களுக்கிடையே தான் யுத்தம்.
காற்று வாக்கில் இது இப்படி தான் இருக்கப்போகிறது என்பது ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. ஒரு குருவை நாம் ஏற்றுக் கொள்வதானால் அவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும். எவரை நாம் குரு வென சுவீகரிக்க வேண்டும் என்று தெளிவாக ஒரு திருமந்திரத்தில் அழகாக எளிமையாக நல்ல உதாரணத்தோடு கூறுகிறார் பாருங்கள்.
திருமூலர் எப்போதுமே பளிச்சென்று எதையும் சொல்பவர். அஞ்ஞானத்தில் தான் உழன்றுகொண்டு, அதுவே புரியாமல் அடுத்தவனுக்கு அஞ்ஞானத்தை போக்க முயலும் ஒருவன் குருவா? இப்படிப்பட்ட குருவை ஒருவன் அடைவது எது போலவாம்? ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டப் போய் ரெண்டு குருடும் சேர்ந்து வழியில், ஒரு குழியில் விழுந்தது மாதிரி என்கிறார்.
''குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே''
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்று கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தத்தை திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.
''அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே
கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுராந்தகனின் மூன்று வலிமையான கோட்டைகளை எரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்.. சிவன் இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும்? என்று வியக்கிறார் திருமூலர்.
கடைசியாக ஒன்று.
'ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே''
இ ந்த மந்திரம் சொல்லும் உண்மை: சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறார்.அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான். ஹரன் தான் ஹரி, எப்பெயரிலும் இருப்பவன் அவன் ஒருவனே.
ஆன்மிகம் என்பது இப்போது சிலருக்கு கிள்ளுக்கீரையாகி விட என்ன காரணம்? ஆன்மீகத்தைப் பற்றிய சரியான விஷயங்கள் போதிய அளவு பரவாதது. ஆரவாரம் அமைதியற்ற ஆக்ரோஷம், விஷயம் புரியாத எதிர்ப்பு, இவற்றை அடையாளம் கண்டுகொண்டவர்களுக்கு மட்டுமே ஆன்மிகம் புரியும். தங்களை ஆன்மீக வாதிகளாக பிரபலப்படுத்திக் கொள்பவர்களால் தான் ஆன்மீகத்துக்கே இழுக்கு. ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை. அது ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் அன்பால், பண்பால் வளர்வது.. ஆன்மிகம் வாழ்வை சீர்படுத்தவே அன்றி ஒரு பிழைக்கும் வழியானது சந்தர்ப்பவாதிகளால் தான். ஆன்மீகம் வருமானம் ஈட்ட அல்ல. இருப்பதை அள்ளிக் கொடுக்கும் மனத்தை வளர்க்க. உண்மையான ஆன்மீக குருமார்களுக்கு இடையே வேறுபாடு, வித்யாசம், சர்ச்சைள் என்றும் நெருங்காது. சுயநலம் உள்ளே இருப்பவர்களுக்கிடையே தான் யுத்தம்.
காற்று வாக்கில் இது இப்படி தான் இருக்கப்போகிறது என்பது ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. ஒரு குருவை நாம் ஏற்றுக் கொள்வதானால் அவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும். எவரை நாம் குரு வென சுவீகரிக்க வேண்டும் என்று தெளிவாக ஒரு திருமந்திரத்தில் அழகாக எளிமையாக நல்ல உதாரணத்தோடு கூறுகிறார் பாருங்கள்.
திருமூலர் எப்போதுமே பளிச்சென்று எதையும் சொல்பவர். அஞ்ஞானத்தில் தான் உழன்றுகொண்டு, அதுவே புரியாமல் அடுத்தவனுக்கு அஞ்ஞானத்தை போக்க முயலும் ஒருவன் குருவா? இப்படிப்பட்ட குருவை ஒருவன் அடைவது எது போலவாம்? ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டப் போய் ரெண்டு குருடும் சேர்ந்து வழியில், ஒரு குழியில் விழுந்தது மாதிரி என்கிறார்.
''குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே''
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்று கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தத்தை திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.
''அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே
கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுராந்தகனின் மூன்று வலிமையான கோட்டைகளை எரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்.. சிவன் இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும்? என்று வியக்கிறார் திருமூலர்.
கடைசியாக ஒன்று.
'ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே''
இ ந்த மந்திரம் சொல்லும் உண்மை: சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறார்.அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான். ஹரன் தான் ஹரி, எப்பெயரிலும் இருப்பவன் அவன் ஒருவனே.