TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-HEMANTHA-MAKARA-KRISHNA-ASHTAMI-INDHU-SWATHY

2 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Feb 9, 2026, 11:03:17 PM (3 days ago) Feb 9
to

IMG-20260207-WA0156

பிரசாரமும் துஷ்பிரசாரமும் --

தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

இப்பிரசார விஷயத்தில்தான் ஒருவர் தமது விருப்பப்படி ஒரு மதத்தைத் தேர்ந்தெடுப்பதில் மதமாற்றம் என்ற விஷயம் வருகிறது. பிரசாரம் என்பதைக் கூர்ந்து கவனத்துடன் கண்குத்திப் பாம்பாகக் கவனித்து, துஷ்பிராசாரமாகாமற் காப்பாற்றுவதற்கான விஷயம்.

பிரசாரம் செய்கையில், ஒரு மதக் கொள்கைகள் முதலியன அனைவருக்குமான பொதுச் சமுதாயத்தின் முன் வைக்கப்படுகின்றன. ஒரு மதத்தின் நூல்கள், சொற்பொழிவுகள் முதலியவற்றைப் பிற மதத்தினரும் படித்தும் கேட்டும் அதனைப் பற்றி அறிய முடிகிறது. அவ்வாறு அறிந்ததில் அம்மதத்தின் கொள்கைகள், அநுஷ்டான முறைகள் முதலியவற்றில் சுயமாக விருப்பம் ஏற்பட்டு பிற மதஸ்தர் ஒருவர் அதில் சேர்வதுதான் உண்மைத்தன்மை உடையதாகும். ஒருவருடைய சுயமான விருப்பம் ஒன்றின் மீது மட்டுமேதான் அவ்வாறு தாய் மதத்திலிருந்து பிற ஒன்றுக்கு மாறுவது உண்மைத்தன்மை உடையது.


தவறான உபாயங்களுக்குத் தடை, தண்டனை

உண்மைகளையே உரிமையாக்கித் தரத்தான் தர்மம். தர்மத்தை அமல் செய்யத்தான் சட்டம். எனவே சட்ட பூர்வமாக மதச் சுதந்திர உரிமை அளிக்க அரசாங்கம் முற்படுகையில், 1. சுய விருப்பம் ஒன்றின் மீதேயும், 2. ஒரு மதத்தின் கொள்கை, நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றில் மட்டுமே அச்சுய விருப்பம் இருக்கும் போதும்தான் மதமாற்றம் நடைபெறுகிறது என்ற உறுதிப்பாட்டை உண்டாக்குவதற்கு உதவியாகவும் ஒரு சட்டவிதி இயற்றுதல் அவசியமாகிறது. மத சம்பந்தமேயில்லாத உபாயங்களால் மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் பொருட்டே இவ்வுறுதிப்பாடு அவசியமாகிறது.

மதப் பிரசாரம் என்பது ஒரு மதத்திலுள்ளோருக்கே அதனை நன்கு பிரகாசப்படுத்திப் பற்றுதலை வளர்த்துக் கொடுக்கும் நோக்கத்திற்காக இன்றி, பிற மதத்தினரையும் அதற்கு மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தால் துஷ்பிரசாரமேயாகும். துஷ்பிரசாரம் என்பது பொய்மையே, சட்டப்படி குற்றமே. குற்றத்திற்கு இடமளிக்காமல் தண்டனை விதிக்கவே சட்டம். எனவே பிரசாரம்ட என்பதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தில் சேருமாறு அழைப்பு விடுவதை, மத மாற்றப் பிரசாரம் செய்வதை, அரசியல் நிர்ணயச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாக்குதல் வேண்டும்.

மதச் சுதந்திரத்தின்படி பிரசாரவுரிமை அளிக்கப்பட்டுள்ளதே என இதற்கு ஆட்சேபணை செய்வது நிற்காது. ஏனெனில் மதப் பிரசாரம் என்பது அம்மதத்தின் கொள்கை முதலான மதாம்சங்களுக்கு விளக்கமாகவே மட்டும் முடிந்து, அதனாலேயே பிற மதத்தினரும் தானாகக் கவரப்பட்டு அதைத் தழுவுவதற்குத்தான் மதச் சுதந்திரம் இடமளிக்குமேயழிய, தமது கொள்கைகளை விளக்கி அதனால் பிறரை அம்மதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்கல்ல.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
Untitled

IMG-20260207-WA0156[1].jpg
Untitled[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages