2 views
Skip to first unread message

Manickam Nadeson

unread,
Nov 21, 2009, 3:05:50 AM11/21/09
to Tamiz...@yahoogroups.com.au, AllTam...@googlegroups.com
கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக் கலை இலக்கிய அரசியலில் தவிர்க்க முடியாத குரல்! வெண்கலத் தாம்பாளத்தில் தங்கப்பழம் வைத்துத் தந்ததுமாதிரி தன் வெண்கலக்குரலில் தங்கத்தமிழ் கொடுத்தவர் டி.எம்.எஸ். இத்தனைக்கும் அவர் தாய் மொழி தமிழ் இல்லை.

மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னருக்குப் பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொள்வதில் மட்டுப்படாத ஆசை. அதனால் பட்டு நெசவு செய்யும் தேர்ந்த குடும்பங்களைக் கூர்ஜரத்திலிருந்து (குஜராத்) கொண்டு வந்து கோயிலைச் சுற்றிக் குடியமர்த்தினார்.

அவர்கள் சௌராஷ்ட்ர சமூகத்துப் பெருமக்கள். அப்படிப் பட்டுநெசவு செய்யும் கூட்டத்திலிருந்து பாட்டு நெசவு செய்ய வந்தவர் டி.எம்.எஸ்.

அன்று கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரின் தீவிர பக்தர் சௌந்தரராஜன். அவரது தொடக்ககாலப் பாடல்களில் தியாகராஜபாகவதர் பாணியை விட்டு முற்றும் விடுதலையாக முடியவில்லை அவரால். �தூக்கு தூக்கி�, மந்திரிகுமாரி _ மலைக்கள்ளன் _ மதுரை வீரன்�வரைக்கும் பாகவதரின் நகலாகவே பாடினார் டி.எம்.எஸ். அதில் வியப்புமில்லை; பிழையுமில்லை. தியாகராஜ பாகவதரைப் போல முன் நெற்றியில் முடி ஏறி இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக்கால ரசிகர்கள் சுவரில் உரசித் தலையைத் தேய்ப்பார்களாம். பாகவதரைப் போலப் பாடவேண்டுமென்று தன் இயல்பான கம்பீரக்குரலில் மூக்கொலி கலந்து பாடிய டி.எம்.எஸ். ஐம்பதுகளின் இறுதியில் அதிலிருந்து விடுபட்ட போது அசல் டி.எம்.எஸ். அவதரித்தார்.

எம்.ஜி.ஆர். _ சிவாஜி என்ற இரு துருவ நட்சத்திரங்களுக்கும் தன் குரலை அவர் பொருத்திக் காட்டியபோது இவரும் ஒரு நட்சத்திரமானார்.

மனிதக்கூட்டம் கடந்துபோகும் சகல உணர்ச்சிகளின் மீதும் டி.எம்.எஸ்.ஸின் அடர்ந்த குரல் ஆளுமை செய்திருக்கிறது.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இப்போது கேட்டாலும் மனசு பதினாறு வயது நோக்கிப் பயணம் போகிறது. அச்சம் என்பது மடமையடா போருக்குப் போ மகனே என்று புலன்களைத் திருகிவிடுகிறது. உள்ளம் என்பது ஆமை _ மயக்கம் எனது தாயகம் _ அண்ணன் காட்டிய வழியம்மா _ போன்ற பாடல்களில் தண்ணீரில் மிதக்கும் தாமரைகளைப் போல டி.எம்.எஸ்.ஸின் கண்ணீரில் மிதக்கின்றன வார்த்தைகள். உலகம் பிறந்தது எனக்காக நலிந்த மனதுக்கு நம்பிக்கையூட்டுகிறது.

ஆரபி _ கானடா _ சாருகேசி மோகனம், கல்யாணி, சிந்துபைரவி போன்ற ராகங்களை உழைக்கும் மக்களின் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது அவர் குரல்.

தமிழில் அரைமாத்திரைகூட தேயாத உச்சரிப்பு _ நடிகர்களின் பாவனைக்கு ஏதுவாக ஏற்பாடு செய்து கொடுக்கும் பாவம் _ தனக்குள்ளிருக்கும் நடிகனைக் குரலுக்குள் கொண்டுவரும் ரசவாதம் _ நடிகர்களின் உடலுக்கும் முகத்துக்கும் ஏற்பத் தன் குரலின் அலைவரிசையை மாற்றிக் கொள்ளும் அற்புதம் _ இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகியல் அறியாத குழந்தை அவர் என்பதால் அவரைக் கண்டு சற்றே ஒதுங்குதல் சரியாகாது.

இப்படியொரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை !


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

N Krishnamoorthy

unread,
Nov 23, 2009, 4:49:04 AM11/23/09
to alltam...@googlegroups.com
முற்றிலும் உண்மை. அவர் பாடிய variety யாரும் பாடியதில்லை.
N கிருஷ்ணமூர்த்தி

 
2009/11/21 Manickam Nadeson <nade...@yahoo.com>

--

You received this message because you are subscribed to the Google Groups "Tamil songs" group.
To post to this group, send email to alltam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to alltamilsong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/alltamilsongs?hl=.

vancheeswaran gopal

unread,
Nov 23, 2009, 2:04:49 PM11/23/09
to alltam...@googlegroups.com
டி. எம். எஸ்ஸுக்கு ஒரு "மாணிக்க" மகுடம் !  மாணிக்கம் ஐயா!  உங்கள் புகழ் மாலை  மிகவும் சிறப்பாக உள்ளது.

என்ன சொல்லி என்ன,  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வாழ்ந்த காலத்தில்,  அவர்கள் ஏற்ற புகழ் மாலைகளுக்குப்  பெரிதும் காரணமாய் இருந்த  அந்த இன்னிசை வேந்தருக்கு 
ஒரு விழா கூட எடுக்கவில்லையே,  அதை எங்கே முறையிடுவது ?  காலம் கடந்து வாழும் அந்தக் குரல்  தமிழ் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்! 

அந்த இசை மாமன்னருக்கு எல்லாம் வல்ல இறைவன் தீராத ஆயுளை என்றும் தர வேண்டும் என்பதே என் போன்றோரின் அவா !

அன்புடன்,
வாஞ்சி
 

--- On Mon, 23/11/09, N Krishnamoorthy <kris...@gmail.com> wrote:


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

RADHAKRISHNAN IYER

unread,
Nov 24, 2009, 1:35:06 AM11/24/09
to alltam...@googlegroups.com
மாணிக்கம் அவர்களே,
நூற்றுக்கு நூறு உண்மையை நம்முடைய குழுவுக்கு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.  நன்றி.  டி எம் எஸ் நூறாண்டு காலம் வாழவும், நோய் நொடி இல்லாமல் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  என்றும் இசை வாழ்வில்.,
 
ராதாகிருஷ்ணன்


 
2009/11/21 Manickam Nadeson <nade...@yahoo.com>

--

N RAMANATHAN n ramanathan

unread,
Nov 24, 2009, 2:59:37 AM11/24/09
to alltam...@googlegroups.com, Tamiz...@yahoogroups.com.au
Mr Manickam
 
TMS ஒரு பேட்டியில் சொன்னது :
நான் நான்கு பேரை எனக்கு முன் மாதிரியாக கொண்டு திரைப்படங்களில் பாடினேன்
1) குரல் இனிமைக்கு தியாகராஜ பாகவதர்
2) நல்ல உச்சரிப்புக்கு K B சுந்தராம்பாள்
3) உள்ளார்ந்த பாவத்துக்கு M S சுப்புலட்சுமி
4) ஜன ரஞ்சகமான முறைக்கு மதுரை மணி ஐய்யர்
அவரது ஒவ்வொரு பாடலை கேட்டாலும் இது முற்றிலும் உண்மை என்று தெரிய வரும்.

N Ramanathan



2009/11/23 N Krishnamoorthy <kris...@gmail.com>



--
N RAMANATHAN
Reply all
Reply to author
Forward
0 new messages