Fwd: [GCT84] "மனைவியிடம் பேசுங்கள்"

2 views
Skip to first unread message

ganesh . N

unread,
Sep 21, 2014, 9:48:46 AM9/21/14
to MBA


VERY IMPORTANT ONE ..........APPLIES 99% TO HUSBANDS & 1% TO WIVES.....MESSG IS 100%TRUE.


APPLIES TO NEWLY WEDS AND YET TO GET MARRIED ONES .......

I THINK THIS IS ONE OF THE BEST MAILS I RECVD IN A LONG TIME...











>
> திரு திருச்சி சிவா,MP -
> நன்றி விகடன்!(சில
> நாட்களுக்கு முன்
> அவரது 49 வயதான மனைவி
> நோயினால்
> இறந்துவிட்டார், தன்
> மனைவியோடு நேரம்
> செலவழிக்காமல்
> இருந்ததை
> எண்ணி வருந்தி இந்த
> நிலை யாருக்கும்
> ஏற்படக்கூடாது என்று
> இதை எழுதியுள்ளார்)
>
> பன்னிரெண்டாம்
> வகுப்புப் படிப்பை
> பாதியோடு
> விட்டுவிட்டு, பதினேழு
> வயதில் என்னை
> மணமுடித்து, 32 ஆண்டுகள்
> வாழ்ந்து, 49 வயது
> முடியும் நேரத்தில்
> என்னை தனி மனிதனாக
> தத்தளிக்க விட்டு என்
> மனைவி போய் விட்டாள்.
> அவளுடைய முழு
> ஒத்துழைப்பு, வாழ
> விரும்பி நடத்திய
> போராட்டம்,
> மருத்துவர்களின்
> முயற்சி, இத்தனையும்
> மீறி இன்னும் வளர்ந்து
> நிற்கும்
> மருத்துவத்திற்கு
> கட்டுபடாத நோய் ஒன்று,
> எல்லோரையும்
> தோற்கடித்து விட்டு
> அவளை கொண்டு போய்
> விட்டது. இதுநாள் வரை
> என் வாழ்வில், கடந்த
> காலத்தில் நான் செய்த,
> அல்லது செய்யத் தவறிய
> எதையும் எண்ணி
> வருந்தியதேயில்லை.
> காரணம் எல்லாம்
> தெரிந்தே,
> தெளிந்தே செய்ததுதான்.
> ஆனால் கடந்த ஒரு வார
> காலமாக ஒரு குற்ற
> உணர்ச்சி என்னை வாட்டி
> வதைக்கிறது. வாழ்வின்
> எல்லா நிலைகளிலும்,
> வசந்தம்
> எட்டிப்பார்க்காத
> ஆரம்ப காலத்திலும்,
> வளம் குறைந்திருந்த
> நாட்களிலும்
> மகிழ்ச்சியோடு
> என்னோடு வாழ்ந்தவள்
> அவள். பொன் நகைகளை
> கழட்டிக் கொடுத்து
> விட்டு, புன்னகையோடு
> மட்டும் வலம் வந்த
> நாட்கள் உண்டு. அரசியல்
> வெப்பம் தகித்தபோதும்,
> தனிமனித
> வாழ்வின் துன்பங்கள்
> சூழ்ந்தபோதும், என்
> அருகே ஆறுதலாய்,
> ஆதரவாய் இருந்தவள்.
> எந்த நிலையிலும் தலை
> தாழ்ந்து வாழ்ந்திட
> கூடாது என்கின்ற என்
> குணத்திற்கு இயைந்து,
> இணைந்து நடந்தவள்.
> சுயமரியாதையை
> காப்பதில் என்னையும்
> தாண்டி நின்றவள்.
> மூன்று குழந்தைகளும்
> பிறக்கும் நேரத்தில்,
> இடைத்தேர்தல் பணி,
> பிரச்சாரப்பணி,
> போராட்டங்கள் என்று
> அவள் அருகே இருக்காமல்
> சுற்றி கொண்டு
> இருந்தபோதும்
> சிறிதும் முகம்
> சுளிக்காதவள். 1982 செப் 15
> முரசொலியில் ' என்
> கண்கள் உன்னை
> தேடுகின்றன ' என்று
> கலைஞர் எழுதிய கடிதம்
> உங்களுக்காகவே என
> சொல்லி நிறைமாத
> கர்ப்பிணியாக
> இருந்தும் என்னை
> பெரியகுளம்
> இடைத்தேர்தலுக்கு
> அனுப்பிவிட்டு செப்-17
> குழந்தை பிறந்து,
> இரண்டு நாட்கள் கடந்து
> 19 - ந்தேதி நான் பார்க்க
> வந்தபோது ஒரு சிறிதும்
> முகம் சுழிக்காமல்
> ஒருமணி நேரத்திலயே
> என்னை மீண்டும்
> தேர்தல் களம் அனுப்பி
> வைத்த கற்பனை செய்ய
> முடியாத குணம் கொண்ட
> குலமகள். இரண்டாவது
> குழந்தை பிறந்து
> மருத்துவமனையில்
> இருந்து நேராக அப்போது
> ஒரு போராட்டத்தில்
> கலந்து கொண்டு போலீஸ்
> நிலையத்தில் காவலில்
> இருந்த இடத்தில் வந்து
> பிள்ளையை காட்டி
> விட்டு பத்திரமாக
> இருங்கள் என்று சொல்லி
> விட்டு போன
> இலட்சியவாதியின்
> சரியான துணை.
> விருந்தோம்பல் ,
> உபசரிப்பு,
> இன்முகம், எண்ணைக்கான
> வருவோர் அத்தனை
> பேருக்கும் அன்னபூரணி.
> இரவு இரண்டு மணிக்கு
> எழுந்து சுடச்சுட
> தோசையும்,
> குளிர்சாதனப்
> பெட்டியில் வைத்த பழைய
> துவையலை ஒதுக்கி
> புதிதாக அரைத்து
> பசியாற்றி பின்னர்
> சுருண்டு உறங்கும்
> அன்பு தெய்வம், தாய்
> போன துயரம் தெரியாமல்,
> தாயின் இடத்தையும்
> நிரப்பி, ஒருபொழுதும்,
> எதன் பொருட்டும் முகம்
> வாடுவது பொறுக்காமல்
> துடிக்கும் உள்ளம்
> கொண்ட உத்தமி, பொது
> வாழ்க்கையில் நான்
> நெறி பிறழாமல்
> நடப்பதற்குப்
> பெரிதும் துணையாய்,
> ஊக்கமாய், பக்கபலமாய்,
> இருந்தவள்.
> பண்டிகைகளும்,
> திருநாள்களும்,
> கோலாகலமாய், கூட்டம்
> கூட்டமாய்
> கொண்டாடுவதற்கு அவள்
> எடுத்துக் கொள்ளும்
> முயற்சிகளும்,
> காட்டும் ஆர்வமும்
> அளவிடற்கரியவை. இத்தனை
> கருத்துக்களை அவள்
> மீது நான்
> கொண்டிருந்ததை
> ஒருநாளும் வாய்விட்டு
> வார்த்தையில்
> சொல்லியதேயில்லை. ஆண்
> செருக்கு என்பார்கள்,
> நிச்சயமாக அது இல்லை.
> இருந்திருந்தால் இந்த
> உறுத்தல்
> வந்துருக்காது.
> நேரம்இல்லை
> என்பார்கள், பொய் 32
> ஆண்டுகளில் பத்து
> நிமிடம் கூடவா
> கிடைக்காமல்
> போயிருக்கும். தானாகவே
> புரிந்து கொள்வார்கள்
> என்பார்கள். என்றால்
> மொழி எதற்கு? மொழியின்
> வழியில் ஒரு
> பொருளுக்கு பல சொற்கள்
> எதற்கு?
> பேசுவதற்குதானே?
> உணர்துவதற்குதானே? ஒரு
> சொல்
> ஓராயிரம்
> புரியவைக்குமே. காலம்
> கடந்து
> பயன்படுத்தினால்
> பயனத்துப்போவது
> பதார்த்தங்கள்
> மட்டுமா?
> வார்த்தைகளும் தானே.
> சரியான நேரத்தில்
> வெளிபடுத்தாவிட்டால்,
> 'மன்னிப்பு, 'நன்றி'
> ' காதல் ' என்ற எந்த
> சொல்லுக்கும் உயிர்
> இருக்காது. விளையும்
> இருக்காது. இத்தனை
> கற்றும் கடமை
> தவறியதாகவே
> கருதுகிறேன். ஒரு நாள்
> ஒரே ஒரு தடவை தனியாக
> அவளிடம், உன்னால் தான்
> உயர்வு பெற்றேன் என்று
> கூட
> அல்ல, உன்னால்தான்
> இந்த பிரச்சனை
> தீர்ந்தது, உன்
> துணைதான் இந்த
> துன்பமான நேரத்தை
> கடக்க வைத்தது. உன்
> ஆலோசனைதான் என்
> குழப்பத்திற்கு
> தீர்வு தந்தது. என்
> வேதனையை பகிர்ந்து
> கொண்டு என்னை
> இலேசாக்கினாய் என்று
> ஒருமுறையாவது
> கூறியிருந்தால்
> எவ்வளவு
> மகிழ்ந்திருப்பாள்.
> கோடிரூபாய்
> கொட்டிகொடுத்தாலும்
> கிடைக்காத உற்சாகத்தை
> அடைந்திருப்பாளே.
> ஊட்டிக்குப்
> பொதுக்கூட்டத்திற்கு
> சென்றிருந்த
> நேரத்தில் அவளின் உடல்
> நலம் மோசமடைந்ததாக
> செய்தி கிடைத்தது
> வரும் வழியெல்லாம்
> இப்படியே யோசித்து
> இன்று அவளிடம்
> எப்படியும் உள்ளத்தை
> திறந்து இத்தனை நாள்
> சேர்த்து வைத்து
> இருந்ததை எல்லாம்
> கொட்டிவிட வேண்டும்
> என்று வந்து
> பார்த்தால்
> முற்றிலும்
> நினைவிழந்து
> மருத்துவமனையில்
> படுத்திருக்கிறாள்.
> நினைவு திரும்ப
> வாய்ப்பேயில்லை என
> மருத்துவர்கள்
> உறுதியாக சொன்னபிறகு,
> மெல்ல அவள் காதருகே
> குனிந்து 'மும்தாஜை'
> ஷாஜகான் 'தாஜ்' என்று
> தனிமையில்
> அழைத்ததைபோல
> தேவிகாராணியை 'தேவி'
> என அழைத்தபோது ,
> மூன்றாவது அழைப்பில்
> மருத்துவத்தை கடந்த
> அதிசயமாக புருவங்கள்
> இரண்டும் 'என்ன'
> என்று கேட்பது போல மேலே
> உயர்ந்து வலது
> விழியோரம் ஒரு துளி
> கண்ணீர்
> உருண்டோடியபோது நான்
> உடைந்துபோனேன்.
> பேசியிருக்க வேண்டிய
> நாட்களில்
> மனதில் கொள்ளையாய்
> இருந்தும் பேசாமலே
> வீணாக்கி, உணர்வுகள்
> இழந்து கிடந்தவளிடம்
> அழுது, இன்று அவள்
> படத்திற்கு முன்
> உட்கார்ந்து
> கதறுகிறேன்.
> வருகிறவரிடமெல்லாம்
> அவள் உயர்வுகளை
> நாளெல்லாம்
> உணர்கிறேன். ஒரே
> ஒருமுறை, அவள்
> கம்பீரமாய் உலவிய
> நாட்களில் உட்கார
> வைத்து பேசி
> இருந்தால்........... இவர்
> நம்மை முழுதாக
> புரிந்து கொண்டாரோ,
> இல்லையோ என்ற
> குழப்பத்திலேயே போய்
> இருப்பாளோ
> என்று நாளும்
> துடிக்கிறேன். எனக்கு
> ஆறுதல் கூறவந்த
> திரு.இ.வி.கே.எஸ்.
> இளங்கோவன்,
> "வருத்தப்படாதீர்கள்
> இதெல்லாம்
> அவர்களுக்கு
> சொல்லாமலே
> புரிந்திருக்கும் "
> என்று சமாதானப்
> படுத்தினார். நான்
> அவரிடம் கேட்டேன் , "
> நீங்களோ நானோ
> பொதுக்கூட்டத்தில்
> பேசுகிறபொழுதே,
> நம்முடைய பேச்சு
> சிறப்பாக இருந்ததோ
> இல்லையோ, என்பதை
> கூட்டத்தில் எழும்
> கரவொலி மூலம், முகக்
> குறிப்பின் மூலம்,
> ஆதரவாளர்களின் மூலம்
> உணர்ந்து கொள்ள
> முடிகிறது. ஆனாலும்,
> நிகழ்ச்சி முடிந்து,
> காரில் ஏறியவுடன் உடன்
> பயணிப்பவர்கள் அந்த
> உரை குறித்து ஏதாவது
> சொல்லவேண்டும் என ஏன்
> எதிர் பார்க்கிறோம்.
> பாராட்டினால்
> பரவசமடைகிறோம் .
> அதுபற்றி எதுவுமே
> பேசாமல் கூட
> வருபவர்கள் அமைதி
> காத்தால் கோபம்
> கொள்கிறோமே ஏன்? அது
> போலதான் வீட்டில்
> இருக்கிற பெண்களும்
> தங்கள்
> செயல்களுக்கும்,
> சேவைகளுக்கும்,
> பணிகளுக்கும், ஒரு
> வார்த்தை அன்பாக ,
> கனிவாக, பாராட்டு
> சொல்லாக, கணவன்
> சொன்னால்
> மகிழ்வார்கள். இதில்
> நாம் இழப்பது எதுவுமே
> இல்லையே என சொன்னேன்.
> ஏழு நாட்களுக்கு
> மேலாகி விட்டது, அவள்
> படத்தை
> பார்க்கிறபோதெல்லாம்
> நெஞ்சிலே இருந்து எதோ
> ஒன்று கிளம்பி
> கண்களில் நீராய்
> முட்டுகிறது.காலங்கடந்து
> நான் உணர்கிறேன்.
> தோழர்களே! தயவு செய்து
> மனைவியிடம் பேசுங்கள்.
> அவர்களின் துணையினை,
> அன்பினை, பொறுப்பினை,
> பொறுமையினை,
> பெருமையினை,
> வாய்விட்டு
> வார்த்தைகளால்
> சொல்லுங்கள். என்
> மனைவிக்கு என்னை
> உணர்த்தாமலே, என்
> உள்ளத்தை திறக்காமலே,
> பேச்சையே தொழிலாக
> கொண்டவன் பேசி மகிழ
> வைக்காமலேயே அனுப்பி
> வாய்த்த கொடுமை இனி
> வேறெங்கும்
> நிகழவேண்டாம்.. வேண்டி
> கேட்கிறேன்
> உங்களுக்காகவே உங்கள்
> பிள்ளைகளை, உங்கள்
> பிரச்சனைகளை, உங்கள்
> உறவுகளை, சுமந்து
> உங்கள் தேவைகளைப்
> புரிந்து தீர்த்து,
> எல்லாவற்றையும்
> பகிர்ந்து கொண்டு,
> பொருள் தேடி, புகழ்தேடி
> நாம் வெளியே
> சுற்றுகிறபோதேல்லாம்,
> காவல் தெய்வமாய்
> குடும்பத்தைக்
> காக்கும் அந்த பெண்களை
> புரிந்து கொண்டோம்
> என்பதன் அடையாளமாய்,
> அங்கிகாரமாய் நாலு
> வார்த்தைகள் தயவு
> செய்து பேசுங்கள்! நான்
> சந்தித்து
> கேட்டவர்களில் 95
> விழுக்காட்டினர்
> என்னைப் போலவே
> பேசுவதில்லை என்றே
> சொன்னார்கள். இது
> மாறட்டும்... என்
> மனைவியின் பிரிவு
> தரும் வேதனையை விட இந்த
> உறுத்தல் தரும் வேதனை
> மிக அதிகமாக
> இருக்கிறது. என்
> அனுபவம் சிலருக்காவது
> உதவட்டும் என்றே இதை
> எழுத முனைகிறேன். சில
> வீடுகளாவது
> நிம்மதியில்,
> மகிழ்ச்சியில்
> நிலைக்கட்டும். என்
> வேதனை, நான் படும்
> துயரம்
> வேறெவெர்க்கும்
> எதிர்காலத்தில் வர
> வேண்டாம் அவளோடு
> வாழ்ந்த நாட்களின்
> இனிமையான தருணங்களின்
> நினைவுகளே துணையாக
> அந்த நினைவுகளே
> சுமையாக வாழ்ந்து
> கொண்டிருக்கிறேன்.............
> இதனை இப்போது சொல்லும்
> நான் வாழ்ந்த
> நாட்களில் ஒரு நாள் கூட
> வாய்விட்டு
> வார்த்தைகளில்
> ஒருமுறை கூட
> சொன்னதில்லை எனபது
> வெட்கப்படவேண்டிய
> ஒன்று.

Thiruchelvan Venkidusamy

unread,
Sep 23, 2014, 5:27:14 AM9/23/14
to PSGMBAPAR...@googlegroups.com

A very good message...

Great sir...

--
You received this message because you are subscribed to the Google Groups "MASTERS" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to PSGMBAPARTTIME2...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages