முனைவர் ஸ்ரீரோகிணி படைப்பில் "அமீரகமே பாரதமே" பாடல் வெளியீடு
அமீரகத்தில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த அமீரக வாழ் தமிழர் முனைவர் ஸ்ரீ ரோகிணி அவர்களின் படைப்பில் அன்னை மொழி அறிவோம் குழுவினருடன் அமீரகமே..பாரதமே..
என்ற பாடலை துபாய் தூதரகத்தில் கல்வியாளர் மேதகு அலி அல் மாசீம் மற்றும் இந்திய தூதரக அதிகாரி திரு.ராம் குமார் அவர்களால் வெளியிட்டப்பட்டது.
இந்தப் பாடல் இந்தியா- அமீரகத்தின் சகோதரத்துவம் பற்றி வெகுசிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் முத்தமிழ் இசையமைப்பில் கவிஞர் பத்மஜா மற்றும் முனைவர் ஸ்ரீரோகிணி பாடலாசிரியராகவும்,சுர்முகி மற்றும் இசையமைப்பாளர் முத்தமிழ் குழுவினர் பாடலைப் பாடியுள்ளனர்.இந்தப் பாடலை அரபு மொழியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் முனைவர் ஜாகிர் ஹுசைன்.