ஆவணி முதலா விவ்விரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே

32 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 12, 2025, 4:20:01 AM (5 days ago) Oct 12
to மின்தமிழ்
ஆவணி முதலா விவ்விரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே

-- தேமொழி 


ஆவணியே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதற்கு இன்று மேலும் ஒரு சான்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' (பக்கம்: 242) என்ற நூலில் கிடைத்தது.

mayilai.jpg

"அணியியல்" என்பது ஒரு மறைந்து போன ஒரு நூல்; இந்த நூல் தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

யாப்பருங்கலம், ஒழிபியலில், 'மாலைமாற்றே' என்னும் சூத்திர உரை மேற்கோள் கொடுக்கு பொழுது;

"இனி, இருது ஆவன:
      'காரே கூதிர் முன்பனி பின்பனி
      சீரிள வேனில் வேனி லென்றாங்
      கிருமூ வகைய பருவ மவைதாம்
      ஆவணி முதலா விவ்விரண் டாக
      மேவின திங்க ளெண்ணினர் கொளலே.'

      இந்த இருது வருணனை அணியியலுட் காண்க."
என்ற மேற்கோள் யாப்பருங்கல உரையாசிரியரால் அணியியல் நூலில் இருந்து கொடுக்கப்படுகிறது.

"ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே" ;
இதன் பொருள்:  ஆவணி மாதம் தொடக்கமாக ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்பட்டது என்று யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார். (11 ஆம் நூற்றாண்டில் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலின் உரை ஆசிரியர்)

      ஆவணி, புரட்டாசி - கார்காலம்
      ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம்
      மார்கழி, தை - முன்பனிக் காலம்
      மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
      சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்
      ஆனி, ஆடி - முதுவேனிற் காலம்
என ஆவணி  தொடக்கமாகக் கொண்டு காலம் கணக்கிடப்பட்டது.


பார்க்க:
மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி
பக்கம்: 242
TVA_BOK_0008131 மறைந்துபோன தமிழ் நூல்கள்.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Oct 13, 2025, 12:36:29 AM (4 days ago) Oct 13
to mint...@googlegroups.com
தேமொழி அம்மையே! கொஞ்சம் கவனம் தேவை. கார், கூதிர் ஆகிய ஆறு பருவங்களுக்கு ஆவணி முதலாக இரண்டிரண்டு மாதங்கள் கொள்ளவேண்டும் என்றுதான் இந்நூற்பா குறிப்பிடுகிறதேயொழிய, ஆண்டின் தொடக்கம் கார் காலம் அல்லது ஆவணி என்று கூறவில்லை. இந்த வரிசை முறையை வைத்து ஆண்டின் தொடக்கம் கார் அல்லது ஆவணி என்பதை நாம் infer பண்ணவே முடியும்.
ப.பாண்டியராஜா
குறிப்பு: கார், கூதிர் ஆகியவை ஆவணி தொடங்கி இரண்டிரண்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பல நிகண்டுகள் கூறுகின்றன. பார்க்க : நிகண்டுகளுக்கான என் தொடரடைவுகள். அங்கும் பருவங்களின் வரிசையில் கார் முதலில் கூறப்படுகிறது. இருப்பினும் ஆண்டின் தொடக்கம் கார் என்று எங்கும் கூறப்பட்டதாக எனக்கு நினைவில்லை. 
எனக்கென்னவோ, ஒரு நாளின் தொடக்கம், ஓர் ஆண்டின் தொடக்கம் என்பதைப் பற்றிச் சங்கமக்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது.
 காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும் இன்றி - என்ற சங்கப் பாடலை வைத்து காலைதான் நாளின் தொடக்கம் என்று சிலர் கூறுவர். (இங்கு ஐந்து பொழுதுகள்தான் குறிப்பிட்ப்படுகின்றன - எற்பாடு இல்லை - அது வேறு குழப்பம்) 6 am - 10 am காலை. அது இன்றைய நாளின் தொடக்கம் என்றால் , 2 am - 6 am என்பது விடியல் என்கிறோமே அது முந்தின நாள் விடியலா? அதுவும் இன்றைய விடியல்தானே!
ஒரு வட்டத்தைப் போட்டு அதை ஆறாகப் பகுத்திருக்கிறார்கள். அந்த வட்டத்தின் தொடக்கம் எது? What's the beginning of the circumference of  circle? அதைப்போலத்தான். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d6e7bca8-d40c-4265-9a4f-05ae0a3bc4d4n%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 13, 2025, 2:03:55 AM (4 days ago) Oct 13
to மின்தமிழ்
On Sunday, October 12, 2025 at 9:36:29 PM UTC-7 Pandiyaraja wrote:
//////தேமொழி அம்மையே! கொஞ்சம் கவனம் தேவை. கார், கூதிர் ஆகிய ஆறு பருவங்களுக்கு ஆவணி முதலாக இரண்டிரண்டு மாதங்கள் கொள்ளவேண்டும் என்றுதான் இந்நூற்பா குறிப்பிடுகிறதேயொழிய, ஆண்டின் தொடக்கம் கார் காலம் அல்லது ஆவணி என்று கூறவில்லை. இந்த வரிசை முறையை வைத்து ஆண்டின் தொடக்கம் கார் அல்லது ஆவணி என்பதை நாம் infer பண்ணவே முடியும்./////

கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
தொடர்ந்து இது குறித்து எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் விரித்துரைக்காமல்  விட்டிருக்கிறேன். மன்னிக்க. இதைக் கவனக் குறைவு என்று கொள்ளலாம்.

ஆனால் ஆவணிதான் ஆண்டின் தொடக்கம் என்பதை நான் அறிந்து கொண்டது  நச்சினார்க்கினியர் தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுதிய உரையின் அடிப்படையில்தான்.  
என்னுடைய வேறு ஒரு கட்டுரையிலிருந்து இங்கே  வெட்டி ஒட்டுகிறேன்.  

நச்சினார்க்கினியர் எழுதிய
தொல்காப்பிய உரை:
      “காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
      கூதிர் யாமம் என்மனார் புலவர்”     – (அகத்திணையியல், நூ. 6)
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் . . .  

"இக்காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார்.  அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின்.   காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று உரை எழுதியுள்ளார்.

இதன் பொருள்; உலக வழக்காக யாவரும் அறிந்த செய்தி என்பதால் தொல்காப்பியர் சிறப்பாகப் பொருள் கூற முற்படாமல் பொதுவான வழக்காற்றை அவ்வாறே நூற்பாவாகச் சொல்லிச் சென்றுள்ளார்.  இதன் விளக்கம் யாதெனில், ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித் திங்கள்),  திங்களின் ஆட்சி வீடாகிய  கற்கடகவோரையின் இறுதி (ஆடித்திங்கள்) வந்து முடியும்வரை ஓர் ஆண்டாகும்.  இதனை முறையாக ஆறு பருவங்களாகப் பகுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்கள் உரியதாக்கினார் என்று நச்சினார்க்கினியர் மிகத் தெளிவாக விளக்கம் உரைக்கிறார்.  அத்துடன் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால்  'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்றும் குறிப்பிடுகிறார்.  

"" காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்"" என்னளவில் எனக்கு  இதுதான் முதன்மை ஐயா. தெளிவாக சிம்ம ஓரையில் ஆவணியில் ஆண்டு தொடக்கம் என்கிறார்  நச்சினார்க்கினியர்.  
 
year.jpg

"" காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்"" இதற்குத் துணை செய்யும் சான்றுகளாகவே மற்ற சான்றுகளையும் நிகண்டுகள் தரும் சான்றுகளையும் கொள்கிறேன்.
 
மேலும்; சூடாமணி நிகண்டு
 ஆவணி முதல்‌ இரண்டிரண்டு மாதம்‌
          ஆகிய அறுவகைப்‌ பருவம்‌

          பரவிய காரே, கூதிர்‌,
          முன்‌, பினிற்‌ பனிகளோடு,
          விரவிய இளைய வேனில்‌,
          விரைந்திடு முதிர்ந்த வேனில்‌,
          மருவும் "ஆவணியே ஆதி"
          மற்று இரண்டு இரண்டு மாதம்‌
          பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து
          பார்த்திடின்‌ வாய்த்த பேராம்.  (6 பெயர்கள்‌) (95)

ஆண்டின் தொடக்கம் என்பதை "ஆவணியே ஆதி"  என்ற சொற்றொடரின் மூலம் 
16 ஆம் நூற்றாண்டின்  சூடாமணி நிகண்டு அறுதியிட்டுக் கூறுவதைக் காணமுடிகிறது.  

 14/15 ஆம் நூற்றாண்டு  நச்சினார்க்கினியர் -  அதற்கடுத்த கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, சூடாமணி நிகண்டு கொடுத்த  மண்டல புருடர் ஆகிய இருவரும் சொல்வது தெளிவாக்குகிறது 

1500 களில் சித்திரையை நோக்கி தமிழர் நகரத்  தொடங்கி இருக்கக் கூடும் அதனாலேயே  "ஆவணியே ஆதி"  வலியுறுத்தும் தொனி நிகண்டில் இடம் பெற்றதாக நான் எடுத்துக் கொள்கிறேன்.  

நன்றி ஐயா. 

----------
தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர்
https://groups.google.com/g/mintamil/c/uGCsWBbctjs/m/FvjbQ7RABgAJ

தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்
https://groups.google.com/g/mintamil/c/nYe-wvXckMo/m/1vhoh6EtAgAJ

அறிவியல் நோக்கு: காலவுரிமை எய்திய ஞாயிறு
https://groups.google.com/g/mintamil/c/ndazUFS1RSY/m/A36e-lAfAwAJ
----------

தேமொழி

unread,
Oct 13, 2025, 2:14:28 AM (4 days ago) Oct 13
to மின்தமிழ்
///எனக்கென்னவோ, ஒரு நாளின் தொடக்கம், ஓர் ஆண்டின் தொடக்கம் என்பதைப் பற்றிச் சங்கமக்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது.
 காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும் இன்றி - என்ற சங்கப் பாடலை வைத்து காலைதான் நாளின் தொடக்கம் என்று சிலர் கூறுவர். ////


கதிரவன் தோற்றமே நாளின் தொடக்கம் என்பது நம் வழக்கம் ஐயா,  பாரதியார் இறந்தநாள்  எது என்பதில் இதனால்தான்  குழப்பம் நேர்ந்தது என்பதைச்  சென்ற நூற்றாண்டிலும் நாம் காண்கிறோம்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (பொழுதுகண்டு இரங்கல் - குறள்  - 1227)

இக்குறள் சொல்லும் அடிப்படையில் நான் விடியலை (பெயரே சொல்கிறது நாளின் தொடக்கம் இது என்பதை !!!)  நாளின் தொடக்கம் என்றும் , அதன் அடிப்படையில் குறள்  கருத்தும்  இருப்பதாகக் கொள்வேன்.

நன்றி ஐயா 

அன்புடன்  

தேமொழி  
 
On Sunday, October 12, 2025 at 9:36:29 PM UTC-7 Pandiyaraja wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages