மற்றும்

12 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Oct 11, 2025, 5:49:48 AM (6 days ago) Oct 11
to மின்தமிழ்
ராஜாவும் சுந்தரியும் தம்பதியர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகின்றனர்.
ராஜா செய்திதொகுப்பாளர். அதாவது செய்திகளை எழுதித்தருகிறவர்.
சுந்தரி செய்தி வாசிப்பாளர்.
அவர்கள் வீட்டுக்குள் உரையாடிக்கொள்வதை நான் ஒட்டுக்கேட்க நேர்ந்தது.
இதோ, அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
--------------------------------------------------------------
ராஜா: சுந்தரிம்மா, இன்னக்கி காலைல என்ன டிபன்?

சுந்தரி: இட்லி மற்றும் சாம்பார்.
ரா: என்னம்மா, தினம் இட்லி மற்றும் சாம்பார்தானா?
சுந்: இல்லையே. நேற்று மற்றும் முந்தாநாள் மட்டும்தான் இட்லி மற்றும் சாம்பார் செய்தேன். அதுக்கு முன்னால பொங்கல் மற்றும் வெங்காயக்குழம்பு வைக்கலியா?
ரா: அப்ப ஒண்ணு செய். நாளைக்கி மற்றும் நாளைக்கழிச்சுக்கு தோசை மற்றும் சட்னி செய்யேன்.
சுந்: அப்படியே செஞ்சுரலாம். உங்களுக்கு மற்றும் எனக்கு நல்லதாப்போச்சு.
ரா: சுந்தரிம்மா, இன்னக்கி நீ மற்றும் நான் வேலைக்கு வெள்ளென போகணும். அதனால நீ முதல்ல குளிச்சிரு. அப்புறம் எனக்கு துண்டு மற்றும் பனியன் எடுத்துவச்சுரு.
சுந்: சரிங்க.
சற்று நேரம் கழித்து.
சுந்: இந்தாங்க நான் குளிச்சுட்டேன். நீங்க போய்க் குளிங்க.
ரா: சரி. நான் குளிச்சுட்டு வந்ததும் போட்டுக்க, சட்டை மற்றும் பேண்ட் எடுத்து வச்சுரு.
அன்று இரவு. படுக்கப்போகும் முன்.
சுந்: இந்தாங்க, இந்த செய்தி தொகுப்பு மற்றும் வாசிப்பு வேலையா நான் மற்றும் நீங்கள் விட்டுடலாமா?
ரா: ஏன்’மா? உனக்கு மற்றும் எனக்கு வேற வேலை கிடைக்குமா?
சுந்: அது கிடைக்கும்போது கிடைக்கட்டும். இந்த ‘மற்றும்’ தொல்லை தாங்கல.
ரா: அது சரித்தான். அப்பத்தான் நான் மற்றும் நீ இயற்கையாப் பேசலாம்.
சுந்: நானும் நீயும் இயற்கையாப் பேசலாம்’னு சொல்லுங்க.
சிரிப்புச் சத்தம்
ப.பாண்டியராஜா மற்றும் அவர் மனைவி உங்களை வாழ்த்துகிறார்கள்.
(இப்போது எனக்கு ‘அது’ தொற்றிக்கொண்டது)
Reply all
Reply to author
Forward
0 new messages