கஞ்சி வரதரும், கட்சி கட்டும் தமர்களும்

47 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jun 2, 2026, 3:34:33 AM (7 days ago) Jun 2
to மின்தமிழ்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை தென்கலை சண்டை. கோயிலில் பெருமாள் முன் சண்டை போடுவது அசிங்கம். ஏற்புடையது அல்ல. ஆனால் இதன் பின்னுள்ள சரித்திரம் சுவாரசியமானது.

பிராமணர்களுக்கு அடிப்படை பிரமாணம் வடமொழி வேதம். ஆனால் ஆழ்வார்களின் பாசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அது சாதி, மத வேறுபாடு இல்லாத சமதர்ம நெறி என்பதை வேதமறிந்த பிராமணர்கள் உணர்கின்றனர். எனவே தமிழ் பனுவல்களை திராவிட வேதம் (தமிழ் வேதம்) என்று சொல்லும் புதிய வழக்கு பெரிய எதிர்ப்பிற்கு பின் வருகிறது. இதைத் தீவிரமாக கடை பிடித்த இராமானுஜ முனியை கொல்ல சோழ அரசாணை வருகிறது (அரசர்கள் எப்போதும் தீண்டாமைக்கு சாக்கு). அவ்வளவு எதிர்ப்பு. இருந்தும் ஒரு தமிழ் மரபு இம்மண்ணில் நிலைத்து விடுகிறது. தமிழ் வேதம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆயினும் வட வேதத்தை, வடமொழியை முன்னிலைப்படுத்தும் போக்கும் இருந்து வருகிறது. அதன் மையம் காஞ்சி. காரணம் நகரேஷு காஞ்சி எனப்புகழப்படும் நகரில் பௌத்த, ஜைன, சைவ, வைஷ்ணவ வாக்குவாதம் காலம் காலமாக நடந்து வருவது. அது வடமொழியில்தான் அமையும். ஏனெனில் பெளத்தம், ஜைனம் இரண்டும் ஆரிய மதங்கள். சைவமரபு வடமொழி ஆதரவு தரும் மரபு. அங்கு தமிழ் மரபு இருந்தாலும் தமிழ் வைணவம் போல் ஒரு பிரிவாக வளரவில்லை.

எனவே இந்த சண்டையை தமிழகம் வேறு கோணத்தில் காண வேண்டும். எப்படி இந்தி எதிர்ப்பு ஓர் உணர்வு பூர்வமான தமிழ் எழுச்சியாக காணப்பட்டதோ அது போல் இதைக் காண வேண்டும். இதை சண்டை போடும் ஐயங்கார்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் சண்டை போடுகிறோம் எனும் அரசியல் புரியாமல் சண்டை போடுகிறார்கள். இது சங்கம் தொட்டு எழும் தமிழ் vs வடமொழி மோதல்.

https://www.threads.com/@velmurugan.07/post/DZCFgQUE7bu?xmt=AQG0XdKyBj5emke196gaySWn4tRGhMxeOM0w7YwtbdUI7n_FK-ax-a96L7le0gwY1ZHrJ_sF&slof=1

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Mathan Mohan Thillaiyapillai

unread,
Jun 2, 2026, 11:22:49 AM (6 days ago) Jun 2
to mint...@googlegroups.com
சில வரலாற்றுத் தரவுகளையும் தர்க்கப் பிழைகளையும் (Logical Fallacies) வரலாற்றுப் பார்வையில் காணவேண்டும். 

​1. காலவழுப் போலி (Anachronism Fallacy)

​ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலக் கட்டத்தில் இல்லாத ஒரு நவீன அரசியல்/சமூகக் கருத்தியலை, அப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வின் மீது பொருத்திப் பார்ப்பதே "காலவழுப் போலி"  
​இங்கு வடகலை-தென்கலை மோதலை 20-ஆம் நூற்றாண்டின் "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு" ஒப்பிடுவது வரலாற்று ரீதியாகப் பொருந்தாது. உண்மையான பிரிவினை மொழி சார்ந்தது அல்ல; அது தத்துவக் கோட்பாடு மற்றும் நிர்வாக உரிமை சார்ந்தது. இதைத் மொழிப் போராட்டமாகப் பார்ப்பது தர்க்கரீதியாகச் சரியல்ல.

​2. வரலாற்றுத் தரவுப் பிழைகள்

​இந்தியத் தத்துவ வரலாற்றில் வேத மரபும் (Vedic), பௌத்த/சமண மதங்கள் சார்ந்த சிரமண மரபும் (Sramana)  தங்களுக்குள் தர்க்க ரீதியாக உரையாடி, போட்டி போட்டு வளர்ந்த இணையான தத்துவ அமைப்புகள் (Parallel Systems). வேத மரபு வடமொழியைப் பிரதானப்படுத்திய போது, சிரமண மரபுகள் மக்கள் மொழிகளான பாலி, பிராகிருதம் ஆகியவற்றையே பயன்படுத்தின. தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் தமிழில்தான் தழைத்தோங்கின (எ.கா: சிலப்பதிகாரம், மணிமேகலை).

​சோழர் கால மோதல்: ராமானுஜருக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்ட மோதல் மத மோதலே தவிர, தமிழ் VS சமஸ்கிருதம் என்ற மொழி மோதல் அல்ல.

​3. பகுதிக்கான போலி (Fallacy of Composition)

​ஒரு பிரிவின் பண்பை வைத்து, அதுதான் ஒட்டுமொத்த அமைப்பின் பண்பு என்று முடிவு செய்வது பிழை.
​தென்கலை மரபில் தமிழ் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதைக் கொண்டு இந்த 600 ஆண்டுகாலப் பிரிவினையே "தமிழுக்கானப் போராட்டம்" என்று பொதுமைப்படுத்த முடியாது.

இன்று நடப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இரு பிரிவினரிடையே நடக்கும், தர்க்கப் பார்வை, அதிகாரப் பகிர்வு மற்றும் சடங்கு உரிமை மோதல் மட்டுமே. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH8W6Jftkn__ENmRaafnFUTvC%3D3PDtbzfKKKRGfOGnkiVi97JQ%40mail.gmail.com.

தேமொழி

unread,
Jun 2, 2026, 11:57:50 AM (6 days ago) Jun 2
to மின்தமிழ்
சிறப்பான மறுமொழி.  எந்த நாமம் போடுவது என்பது போன்றவற்றிலும் கருத்து  வேறுபாடு தத்துவக் கொள்கை மாறுபாடுகளும்   இவர்களிடையே உண்டு என்பதால் மொழிப்  போராட்டம் இவர்கள் சச்சரவில் முதன்மை அல்ல.  அடையாளம் காக்கும் தகராறு. 

N. Kannan

unread,
Jun 3, 2026, 12:52:55 AM (6 days ago) Jun 3
to mint...@googlegroups.com

காலவழுப் போலி தான் தமிழகத்தின் உரத்த குரலாக இருக்கிறது. இவர்கள் வள்ளுவரைப் படுத்தும் பாடைக் கண்டால் புரியும். சங்கம் சமயச்சார்பு இல்லாத காலம் என்பதும் காலவழுப் போலிதான். நிற்க.

என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் நமக்கு சமயத்தத்துவ மரபு என்பதில் ஆழங்கால் பட முடியாமல் இங்கு பல மரபுகள் மண்டிக்கிடக்கின்றன. ஆர்வமும் இருப்பதில்லை.

இந்த வடகலை, தென்கலைப் பிரிவின் அடிப்படையே மொழிதான். அந்த மரபு அறிந்தோருக்கு இது புரியும். இந்திப் போராட்ட காலத்தில் இருந்த அதே மொழி உணர்வு தென்னாச்சார்ய சம்பிரதாயத்தில் இருந்தது என்பதை இம்மரபு அறிந்தோர் அறிவர்.. 

அதே போல், ஜைனம், பௌத்தம் பாலியில் வழக்காடப்பட்டது என்பதும் ஓர் போலியான புரிதல்தான். ஏனெனில் பௌத்தத்தின் ஆகச்சிறந்த தத்துவ வெளிப்பாடு (நாகார்ஜுனா, போதி தர்மர்) சமிஸ்கிருதத்தில்தான் இருக்கிறது. சித்தார்த்தன் பாலியில் பேசினான் என்பது வேறு. இதைப் புரிந்து கொள்ள ஒருவர் சீன, கொரிய சரித்தம் அறிய வேண்டும். சீனர்கள் இந்தியா வந்து சமிஸ்கிருதம் கற்று அதன் மூலமே பௌத்தம் அறிந்து அவர்கள் நாடுகளில் பரப்பினர். ஹோச்சோ எனும் கொரிய பிக்கு சீனா வந்து சமிஸ்கிருதம் கற்று பின் இந்தியாவில் பயணப்பட்டு மார்க்கோ போலோவின் நூலுக்கு இணையான நூலை எழுதியிருக்கிறார். எனவே, ஆரிய மதங்கள் பாலியிலும், பிராகிருதத்திலும் சைவ, வைணவ மதங்களோடு தென்னகத்தில் வாதிட்டன என்பது முரண்நகை.

மேலோட்டமாகப் பார்த்தால் உங்கள் புரிதல்கள் சரி. நான் ஆழமாக போகச் சொல்கிறேன். முயல்க!

நாவன்னா கானா

On Tue, 2 Jun 2026 at 21:27, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சிறப்பான மறுமொழி.  எந்த நாமம் போடுவது என்பது போன்றவற்றிலும் கருத்து  வேறுபாடு தத்துவக் கொள்கை மாறுபாடுகளும்   இவர்களிடையே உண்டு என்பதால் மொழிப்  போராட்டம் இவர்கள் சச்சரவில் முதன்மை அல்ல.  அடையாளம் காக்கும் தகராறு. 

On Tuesday, June 2, 2026 at 8:22:49 AM UTC-7 mathan...@gmail.com wrote:
சில வரலாற்றுத் தரவுகளையும் தர்க்கப் பிழைகளையும் (Logical Fallacies) வரலாற்றுப் பார்வையில் காணவேண்டும். 

1. காலவழுப் போலி (Anachronism Fallacy)

Mathan Mohan Thillaiyapillai

unread,
Jun 4, 2026, 7:19:57 PM (4 days ago) Jun 4
to mint...@googlegroups.com
மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டது போல, நாம் மேலோட்டமாகப் பார்க்காமல் இன்னும் ஆழமாகச் சென்று பார்க்கலாம். சில மிக முக்கியமான வரலாற்று முரண்களையும் (Historical Inaccuracies) தர்க்கப் பிழைகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது:

பகுதி 1: தர்க்கப் பிழைகளும் திசைதிருப்பல்களும் (Rhetorics)
ஒரு தர்க்கரீதியான விவாதத்தில் (Logical Debate) ஆழம் என்பது புதிய, தொடர்பில்லாத தலைப்புகளைக் கொண்டு வந்து திணிப்பதில் இல்லை; நாம் முதலில் எடுத்த தலைப்பிற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைப்பதில்தான் உள்ளது. உங்கள் பதிலில் உள்ள சில தர்க்க ரீதியான உத்திகளை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது:

திசைதிருப்பல் (Red Herrings): இந்த விவாதத்திற்குள் திருவள்ளுவரையோ, சங்க காலத்துச் சமயச் சார்பையோ அல்லது கொரிய-சீன வரலாற்றையோ இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. "இவர்கள் படுத்தும் பாடு" என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தொடர்பில்லாத, பொதுப்படையான விஷயங்களைப் பேசுவது முதன்மை விவாதத்தை (வடகலை-தென்கலை மோதல் ஏன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றது?) திசைதிருப்பிவிடும்.

பொதுப்படையான கணிப்பு (Ad Hominem): "நமக்கு சமயத்தத்துவ மரபில் ஆழங்கால் பட முடியாமல் பல மரபுகள் மண்டிக்கிடக்கின்றன, ஆர்வமும் இருப்பதில்லை" என்று மிக எளிதாகக் கடந்துவிட்டீர்கள். இங்கு "நமக்கு" என்பது யாரைக் குறிக்கிறது? என்னையா, உங்களையா, அல்லது ஒட்டுமொத்தத் தமிழகத்தையா? கருத்து வேறுபாடு இருந்தால் அதைத் தரவுகளால் விளக்க வேண்டுமே தவிர, "ஆர்வமும் இல்லை, புரிதலும் இல்லை" என்பது  முறையான நெறி அல்ல.

தகுதிவரை மாற்று (Appeal to Purity / No True Scotsman): தரவுகள் எதையுமே தராமல், "விஷயம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்" என்று கூறுவது தர்க்கரீதியாகப் பிழை. ஒரு வாதத்திற்குப் பின்னே உண்மை இருந்தால், அதை யார் வேண்டுமானாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கலாம். அதற்கு ஆதாரமும் முறையான தர்க்க இணைப்பும் (Logical Connection) மட்டுமே போதும்.

தகுதியற்ற அதிகாரம் (Unqualified Authority Fallacy): "எனவே இந்தச் சண்டையைத் தமிழகம் வேறு கோணத்தில் காண வேண்டும்" என்ற தனிப்பட்ட கருத்தைத் தவிர, அதை நிரூபிக்க வேறு எந்தத் தரவும் இல்லை.

பகுதி 2: விளக்கம் மற்றும் தரவுகள் (Historical Content)
பௌத்த, சமண மதங்கள் குறித்த புரிதல்: பிற்காலத்தில் மகாயான பௌத்தம் தத்துவ விவாதங்களுக்காகச் சமஸ்கிருதத்தைக் கையாண்டதே தவிர, அவற்றின் வேர்கள்  சமஸ்கிருதம்  சார்ந்தவை அல்ல. புத்தருக்கும் நாகார்ஜுனருக்கும் இடையே 600–700 ஆண்டுகால இடைவெளி உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சைவ மரபில் தமிழின் பங்களிப்பு: "சைவ மரபு வடமொழி ஆதரவு தரும் மரபு, அங்கு தமிழ் வைணவம் போல் ஒரு பிரிவாக வளரவில்லை" என்ற கூற்று மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. வைணவத்திற்கு இணையாக பக்தி இயக்கத்தைத் தமிழகத்தில் முன்னெடுத்தது சைவ மரபு. பன்னிரு திருமுறைகள் -  நாயன்மார்களின் தேவார, திருவாசகப் பாடல்கள், மற்றும் பிற்கால சைவ சித்தாந்தங்கள் அனைத்தும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே உருவாகி தழைத்தோங்கியவை.

இராமானுஜர் எதிர்கொண்ட எதிர்ப்பு: இராமானுஜரைச் சோழ மன்னன் துன்புறுத்தியதற்குக் காரணம் "மொழி மோதல்" அல்ல; அது முழுக்க முழுக்க சைவ-வைணவ மதக் கோட்பாட்டு மோதல் (Sectarian conflict). இராமானுஜர் தமிழ் பாசுரங்களை ஓதியதால் மன்னன் அவரை எதிர்க்கவில்லை. மாறாக, வைணவக் கோட்பாட்டைத் தீவிரமாகப் பரப்பியதே காரணம். மேலும், இராமானுஜர் தனது தத்துவ உரைகளான 'ஸ்ரீபாஷ்யம்' போன்றவற்றைச் சமஸ்கிருதத்திலேயே எழுதினார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வடகலை மற்றும் மணிப்பிரவாளம்: வடகலை மரபு தமிழை முழுமையாக நிராகரிக்கவில்லை. வேதாந்த தேசிகர் போன்ற வடகலை ஆச்சாரியர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் இணைத்த 'மணிப்பிரவாளம்' என்ற தனித்துவமான நடையிலேயே தங்களின் வியாக்யானங்களை எழுதினர். வடகலை சமஸ்கிருதம், தென்கலை தமிழ் என்ற இரு துருவ வேறுபாடு காணமுடியாது.

வடகலை-தென்கலை வேறுபாடு: இந்த இரு பிரிவினருக்கும் இடையே உள்ள மோதல்கள் சடங்கு உரிமைகள், தத்துவக் கோட்பாடுகள் (அஷ்டாதச பேதங்கள்), சமூக நடைமுறை முரன் மற்றும் கோயில் நிர்வாக உரிமை ஆகியவற்றிற்காகவே தவிர, மொழிப் சார்ந்த போராட்டம் அல்ல.

பகுதி 3: புதிய  கருத்துக்கு  போதிய தரவு வேண்டும் 
தரவுகள் வலுவாக இருந்தால், ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், பொருத்தமே இல்லாமல் புதிய "உண்மைகள்" உருவாக்கப்படுவதும், பின்னர் அதுவே அதிகாரப்பூர்வ உண்மையாக்கப்படுவதும் இன்று பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு நாம் காரணமாகிவிடக் கூடாது அல்லவா?

Just a gentle nudge to higher responsibility and standards. மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

"முயல்க!" என்ற உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Jun 5, 2026, 3:31:34 AM (4 days ago) Jun 5
to mint...@googlegroups.com
Point to point discussion செய்ய நேரமில்லை. வைணவம் எவ்வளவு புதியது (வை நவம்) என்பதை கீழ்க்காணும் எனது பதிவுகளும் நூல்களும் விளக்கும்:

ஆழ்வார்க்கடியான்:
https://thirumozi.blogspot.com/

நூல்கள்:
தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - பென்சில் பதிப்பகம் 2018
பக்தியின் பன்முகம் - புஸ்தகா வெளியீடு 2020

பாசுர மடல்கள்:
பாகம் 1 - தமிழ் மண் கண்ட தாமரைப் புரட்சி. இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு
பாகம் 2 - சில்லென்று ஓர் அழைப்பு - இந்து சமய அறநிலையத்துறை
பாகம் 3 - வானம் வசப்படும் - இந்து சமய அறநிலையத்துறை
பாகம் 4 - மீட்பர் வருவாரோ? - இந்து சமய அறநிலையத்துறை
(இன்னும் வெளிவரவில்லை, ஆனால் எனது வலைப்பதிவில் இக்கட்டுரைகளை வாசிக்கலாம்))

தமிழ் கண்ட புரட்சித் துறவி: இராமானுச மாமுனி. புஸ்தகா வெளியீடு
மாறன் மனமும், மறந்து போன புரட்சியும் : வைணவத்தின் தமிழ் முகம் - புஸ்தகா வெளியீடு

ATTENTION: PANDEMIC GENERATION
Accessing Ancient Knowledge that Share Holistic Approaches to Stay Safe Mentally and Physically. Pustaka Digital Media

ஏறக்குறைய 1990 களிலிருந்து தமிழ் வைணவத்தில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எழுதியதே அப்பதிவு. அது கவன ஈர்ப்பு அல்ல.

இந்தி எதிர்ப்பை உதாரணம் காட்டியது மொழி உணர்வை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பதற்கே.

தமிழ் வைணவம் தன்னுள் பல இரகசியங்களை வைத்துள்ளது. என் நூல்களில் அவை பற்றிப் பேசுகிறேன். தமிழின் செழுமையான மரபில் தமிழர்களுக்கு இன்னும் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காக எழுதியது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது ஒரு ஆய்வாளனின் குணமாக இருக்காது :-)

நன்றி.

நாவன்னா.கானா


Mathan Mohan Thillaiyapillai

unread,
Jun 5, 2026, 6:50:26 PM (3 days ago) Jun 5
to mint...@googlegroups.com
உங்களை நான் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று எழுதும் ஒரு ஆராய்ச்சியாளராக ஒருபோதும் கருதவில்லை.

திரு. மோகனரங்கன் அவர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். நீங்கள் இக்குழுவிற்குத் திரும்பியதை அவர் வரவேற்ற ஒன்றே, உங்களின் பங்களிப்பை மதிக்க எனக்குப் போதுமானது.  ஒருவேளை, அந்தத் தொடர்புணர்வினால் (familiarity), உங்களின் வாதத்தில் இருந்த முரண்பாடுகளைத் தயக்கமின்றி, உரிமையோடு சுட்டிக்காட்டத் துணிந்திருக்கலாம். தவறாக எண்ண வேண்டாம்.  

புத்தகப் பட்டியல் தேவையில்லை  - அது Credential Fallacy வகை  :-)

உங்களின் நூல்களுக்கும், பணிகளுக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.

வணக்கம்!

N. Kannan

unread,
Jun 6, 2026, 10:01:14 AM (3 days ago) Jun 6
to mint...@googlegroups.com
On Sat, 6 Jun 2026 at 04:20, Mathan Mohan Thillaiyapillai <mathan...@gmail.com> wrote:
உங்களை நான் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று எழுதும் ஒரு ஆராய்ச்சியாளராக ஒருபோதும் கருதவில்லை.

திரு. மோகனரங்கன் அவர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். நீங்கள் இக்குழுவிற்குத் திரும்பியதை அவர் வரவேற்ற ஒன்றே, உங்களின் பங்களிப்பை மதிக்க எனக்குப் போதுமானது.  ஒருவேளை,

அப்படியா? அவரை நீங்கள் அறிவீர்களா? நல்லது.

அந்தத் தொடர்புணர்வினால் (familiarity), உங்களின் வாதத்தில் இருந்த முரண்பாடுகளைத் தயக்கமின்றி, உரிமையோடு சுட்டிக்காட்டத் துணிந்திருக்கலாம். தவறாக எண்ண வேண்டாம்.  

எந்த முரண்பாடும் இல்லை. அவரவர் காட்சி அவரவர்க்கு. உங்களுக்கு அப்படித் தோன்றலாம்! நான் மிகக்கவனமாகத்தான் எழுதினேன். மீண்டும் ஒரு முறை சென்று வாசியுங்கள்.அப்போது வேறு புரிதல் தோன்றலாம்.

புத்தகப் பட்டியல் தேவையில்லை  - அது Credential Fallacy வகை  :-)

உங்களுக்கு ஜார்கன் பிடித்திருக்கிறது! அந்த உசாத்துணை (துணை நூல்கள்) எனது பதிவிற்கான பின்புலம். வேறு யாருக்காவது வாசித்து பின் புரிந்து கொள்ள உதவலாம். 

உங்களின் நூல்களுக்கும், பணிகளுக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.

நன்றி. வரிக்கு வரி கட்சி கட்டி பதில் சொன்ன காலம் போச்சு. பிடித்தால் வச்சுக்கோ, பிடிக்காட்டி விட்டுக்கோ! என்பதெ சமீபத்திய நிலைப்பாடு. அபிப்பிராயங்களை மற்றுவதோ, மாற்ற முயல்வதோ கடினம்.

நா.கண்ணன்

Mathan Mohan Thillaiyapillai

unread,
7:05 PM (4 hours ago) 7:05 PM
to mint...@googlegroups.com

மதம், சித்தாந்தம், ஆன்மீகம் போன்றவைகளுக்கான நிரூபண முறைமை வேறு; மொழி, வரலாறு, அறிவியல் போன்றவைகளுக்கான முறைமை வேறு. மாறுபட்ட பார்வைகளும் கோணங்களும் இருக்கலாம்; ஆனால் அவை போதிய தரவுகளால் நிரூபிக்கப்பட வேண்டும், சக பார்வைக்கு (Peer Review) உட்படுத்தப்பட வேண்டும். தரவுகள் இருக்கும்போதுதான் அகவய இடைவெளி (subjective gap) குறைந்து, வாதங்களின் ஏற்பு விகிதம் அதிகமாகும்.

இதுபோன்ற கூகுள் குழுமங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளங்களுக்கும், முறையான பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் இடைப்பட்ட ஒரு முக்கியமான பகிர்வு வெளி. அதிரடியான ஒரு புதிய கருத்தை முன்வைக்கும்போது அதற்கான குறைந்தபட்ச ஆதாரங்களையும் தர்க்க வாய்ப்புகளையும் எதிர்பார்ப்பது முறைமைதானே.

நோக்கம் உங்களுடன் 'கட்சி கட்டி' வாதிடுவதோ அல்லது அபிப்பிராயங்களை மாற்றுவதோ அல்ல. பதிவில் இருந்த கால முரண்களையும், தரவுக் குறைவுகளையும் எந்தவிதக் குறைத்து மதிப்பிடுதலும் இன்றி, மரியாதையோடு சுட்டிக்காட்டினேன்.

இந்தத் தலைப்பில்  இதுவே என் இறுதிப் பதிவு.

நன்றி.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages