வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) என்பது வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 57-இற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம்வகிக்கின்றன. https://fetna.org/member-tamil-sangams/ தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்காகும். இச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-ல் மாநாடு மற்றும் ஒன்றுகூடல் நடாத்துகின்றது. 2008 இல் தனது ஆண்டு விழாவை பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவாக இச்சங்கம் கொண்டாடியது. 2019-ல் சிகாகோவில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைப் பேரவைக்குழு சிகாகோ மாநகரில் நிகழ்த்தியது.தமிழர் சென்று கடல் வாணிகம் செலுத்திய நாடுகளில் எல்லாம் “ஆடு தலையாக” என்று சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் சூரியன் மேட இராசியில் அரங்கேறும் சித்திரையை வருடப்பிறப்பு நாளாக இந்தியாவில் எல்லா சமயங்களைப் பின்பற்றுவோரால் கொண்டாடப்பெறுவது சங்ககாலத் தமிழர்களின் பழைய வானியல் இது. ஆடு கோட்பாட்டுச் சேரல் ஆதன் என்பது இக்கோட்பாட்டைத் தமிழகத்தில் கொணர்ந்த (அ) நிலைநிறுத்திய சேர மன்னனின் பெயர். இந்தியா முழுமையும் வாழ்வாங்கு வாழ்ந்த தொல்தமிழ் மொழியினரின் 4700 ஆண்டுக்கு முந்தைய வானியல் பற்றி இக் கட்டுரையில் அறியலாம்: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html . பௌத்தர்கள், சமணர்கள், இந்துக்கள் என மூன்று சமயத்தவர்க்கும் தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதல் திங்கள் சித்திரை என இலங்குகிறது. இதனை இலங்கை, கம்போடியா, லாவோஸ், ... போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூடக் காணலாம்.தமிழர்க்குத் திருவள்ளுவர் தொடராண்டு தைப் பொங்கல் (தை 1) தினத்தில் அமைந்துள்ளது. கலி அப்தம், சக அப்தம் எனப் பழைய முறைகள் தொடராண்டாகக் தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்தாலும், அரசாங்க ஆணைக மூலமாக, திருவள்ளுவர் ஆண்டு கணக்குமுறையே தமிழக அரசால் பின்பற்றப்படுகிறது. திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலில் அமைந்துள்ளது போல, தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் எனக் கொண்டாட வேண்டும் என வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ( FETNA) முன்னெடுக்கிறது. முப்பெரும்விழாவாக தொல்காப்பியர் திருநாள் (ஏப்ரல் 14, 2021 = சித்திரை 1), மற்றும் ஹூஸ்டன், டொராண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர் பீடம் நிறுவ நிதிசேர் பெருவிழா வரும் ஏப்ரல் 10-தேதியில் பேரவை கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றி. பேரவைக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் பேரவை அழைக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் (பல தொலக்காட்சி அமைப்பாளர்) இசையமைப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக விளங்குவார்.தொல்காப்பியத்தை வாழ்நாள் முழுதும் கற்பித்துவரும், பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக விளங்கும் பேராசிரியர்கள் செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து, கு. சிவமணி, ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி, முனைவர் ப. பாண்டியராஜா, ... கட்டுரைகள், கவிதைகள் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1) அமெரிக்கப் பேரவைச் சிறப்பிதழுக்கு (அருவி இதழிகை) அனுப்பியுள்ளனர். கவிஞர் இனியன் தொல்காப்பியர் திருநாள் பதிகம் பாடியுள்ளார். திருச்சிப் புலவர் இராமமூர்த்தியின் தொல்காப்பியர் திருப்புகழ், மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து வண்ணம் (கவிமாமணி இலந்தை) இவ் இரண்டு பாடல்களும் யாழ். தவசஜிதரன் இசையமைப்பில் வெளிவர உள்ளது. மணியம் செல்வன் அவர்கள் பெட்னா பேரவையின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (2021) மலருக்கு அட்டைப்பட ஓவியம் வரைகிறார். இம்மலருக்கு உங்கள் கவிதை, கட்டுரை வெளியாக விரும்பினால், naa.g...@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தொல்காப்பிய இலக்கணம் பற்றியதாகப் பொருண்மை இருக்கவேண்டும். யூனிக்கோட் என்னும் ஒருங்கு குறியீட்டு எழுதுருவில் வேண்டும். தமிழண்ணல், கு. சிவமணி போன்ற தமிழறிஞர்கள் பரிந்துரையின் பேரில் தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் என அறிவிக்க தமிழ்நாட்டு அரசாங்கத்தினை அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் அணுகியுள்ளன. நன்றி.தமிழக முதல் அமைச்சருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) தலைவர், செயலர் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1) பற்றிய கடிதம்.உலகத் தாய்மொழி நாள், 2021-ல் தினமணி பத்திரிகையில் வெளியான தொல்காப்பியர் திருநாள் கட்டுரை:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.htmlநா. கணேசன்பொருளாளர், ஹூஸ்டன் தமிழ் இருக்கை