இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.
8 அணு - திரசரேணு 8 திரசரேணு - இலீக்கை 8 இலீக்கை - யூகை 8 யூகை - இயவை நெல்லு 8 இயவை நெல்லு - அங்குலம் 24 அங்குலம் - முழம் 4 முழம் - வில்லு 2 வில்லு - தண்டம் 8 (முழம்) 2000 தண்டம் - குரோசம் 4 குரோசம் - யோசனை 64,000 (முழம்)
மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும்.
கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" 2 என்றார் பிறரும்.
இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
On Tuesday, September 20, 2016 at 2:32:49 AM UTC-7, Jalasayanan wrote:
இவண் காதம் என்பது 20 கிலோ மீட்டர் என தெரிகிறது.
கோடிக்கும் வேதைக்கும் காதம்;வேதைக்கும் கள்ளிக்கும் காதம்;கள்ளிக்கும் பூண்டிக்கும் காதம்;பூண்டிக்கும் நாகைக்கும் காதம்;நாகைக்கும் காரைக்கும் காதம்.(கோடி. கோடிக்கரை வேதை. வேதாரண்யம்,கள்ளி.கள்ளி மேடு, பூண்டி-திருப்பூண்டி.இப்படியே காசிவரைக்கும் உண்டு என்பர்.)இவண் காதம் என்பது 20 கிலோ மீட்டர் என தெரிகிறது.
நல்ல சான்று. கிவாஜ அளித்துள்ளார். இன்னும் லட்சம் நூல்கள் பிடிஎப், பக்கம் பக்கமாக மிஷினில் பிரித்து ஓசிஆரில் போட்டால்தமிழ் வளரும். அரசும், அதிகாரிகளும் செய்யவேண்டும். பணம் தர அரசாங்கம் டில்லி, சென்னையில் தயாராக உள்ளது. செய்தற்குஆள் காணோம். இலக்கியப் பயிற்சியும் குறைவாக உளது.---------------------------------கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளால் காதம் = 10 மைல் என சென்னைப் பேரகராதி கொடுத்தாலும்,12 மைல் எனப் பயன்படுத்தி வருகிறேன். உங்கள் காதம் = 20 கிமீ (= 12.5 miles) பொருந்திவருவதூஉங் காண்க. மகிழ்ச்சி.கவுந்தி/காவுந்தி, காவதம்/காதம் என்னும் கன்னட சொற்களை மிகக் கவனமாகத் தேர்ந்து காவிரிநாடு முழுதும் பாடியஇளங்கோ அடிகளும் உரைகாரர்களும் தெளிவாக விளக்கியவற்றை விட்டுவிட்டு அண்மைக் கால உரையைப் பிடித்துக்கொண்டுவரும் மடல்களைப் பார்க்கிறேன். பகுத்தறிவைப் பயன்படுத்தி நாடுகாண் காதையில் பூடகமாய்ச் சொல்லும் இடங்களும்,இரண்டு பழைய உரைகாரர்களும் சீரங்கம் (பட்னம்), திருவரங்கம் வேறுபடுத்திக் தெளிவுபடுத்தியதை குழுமத்தினர் படிக்கவேண்டுகிறேன்.மதுரைக்கு வடக்கே ~360 மைல் தொலைவில் கவுந்தி அடிகள் பள்ளி. அந்த இடங்களில் இளங்கோ அடிகள் சமணம் பற்றிஆழ்ந்து கற்றிருக்கலாம். அல்லது சேரர் தலைநகர் வஞ்சியில் அவர வளர்ந்த அரண்மனையில் ஆசிரியராக வடபெருங்கோட்டு(ஸஹ்யாத்ரியின்) சமணக் குரவர் சமயம், பிராகிருதம், த்ராவிட பாஷைகளின் சிறப்பு பயிற்றி முத்தமிழ்க் காவியம் பாடத்தூண்டியிருக்கலாம். இளங்கோ அடிகளுக்குப் பின்னாலே கங்கக் குரிசில் உவக்க ஜினபுரத்திலே பவணந்தி முனிவர்நன்னூல் யாத்தது நாம் எல்லோரும் அறிவோம். கொங்குவேள் பெருங்கதை செய்தது இளங்கோ அடிகளை முத்தமிழ்க்காப்பியம் செய்யவைத்தது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. பவணந்திக்கு அப்புறம் பொப்பண காங்கேயன் ஆதரவில்அடியார்க்குநல்லார் வருகிறார்.பிற பின்!நா. கணேசன்