எப்போதும் உர்ரென்று முறைப்பவர்கள், தங்கள் வருத்தங்களைக் கோபம் என்ற திரையிட்டு மறைக்கிறார்கள். பதிலுக்குக் கோபப்படாமல் அன்பை மேலும் மேலும் ஊட்டுங்கள். மனத்துள் ஈரமும் இதழில் புன்னகையும் அரும்பக் காண்பீர்கள். (அகமொழி 1031)
உலகில் அடிமை என எவருமில்லை; அதிகாரப் படிநிலைகள் மட்டுமே உள்ளன. (அகமொழி 1032)
உலகில் அடிமை என எவருமில்லை; அதிகாரப் படிநிலைகள் மட்டுமே உள்ளன. (அகமொழி 1032)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தகுதிக்கு மீறி, அதிகமாய் ஆசைப்பட்டதாகச் சொல்லாதீர்கள்; ஆசைப்பட்ட அளவுக்குக் கூர்மையாக, கால எல்லைக்குள் உழைக்கவில்லை எனச் சொல்லுங்கள். (அகமொழி 1033)
தகுதிக்கு மீறி, அதிகமாய் ஆசைப்பட்டதாகச் சொல்லாதீர்கள்; ஆசைப்பட்ட அளவுக்குக் கூர்மையாக, கால எல்லைக்குள் உழைக்கவில்லை எனச் சொல்லுங்கள். (அகமொழி 1033)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அளவில்லாத ஆசை என ஒன்றே கிடையாது. இன்னொரு முறையில் சொல்வதானால், உன்னால் அளவில்லாமல் ஆசைப்படவே முடியாது. (அகமொழி 1034)
--
பல நேரங்களில் மக்களாட்சி என்பது ஒரு புனைகதை, கற்பிதம் மற்றும் ஆடம்பரம்; தாக்கங்களுக்கு மக்கள் ஆட்படுவார்கள் எனில், அது ஒரு மாயை. இந்த அமைப்பில் சர்வாதிகாரிகள் எளிதில் தேர்வு பெறுவார்கள். மக்கள் 'உண்மைகளின்' அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள்; ஆனால், அவர்களை வந்தடைகிற உண்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்; மேலும், அதே தகவல்களுக்கு எப்படியும் விளக்கம் அளிக்கும் மகத்தான 'சுதந்திரமும்' உண்டு. அது முடிவுகளைத் தாமதப்படுத்தும்; எனவே, அவசர காலங்களில் அது அபாயகரமானது. (அகமொழி 1040)
Democracy is a myth, fantasy & luxury in times; if people under influence, it will be an illusion; dictators will easily get elected in this system; people will decide based on 'facts'; but, ways to restrict the data, which they receive; huge 'freedom' is there to interpret the same data; it will delay decisions; so, dangerous in emergencies. (Akamozhi 1040)
பல நேரங்களில் மக்களாட்சி என்பது ஒரு புனைகதை, கற்பிதம் மற்றும் ஆடம்பரம்; தாக்கங்களுக்கு மக்கள் ஆட்படுவார்கள் எனில், அது ஒரு மாயை. இந்த அமைப்பில் சர்வாதிகாரிகள் எளிதில் தேர்வு பெறுவார்கள். மக்கள் 'உண்மைகளின்' அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள்; ஆனால், அவர்களை வந்தடைகிற உண்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்; மேலும், அதே தகவல்களுக்கு எப்படியும் விளக்கம் அளிக்கும் மகத்தான 'சுதந்திரமும்' உண்டு. அது முடிவுகளைத் தாமதப்படுத்தும்; எனவே, அவசர காலங்களில் அது அபாயகரமானது. (அகமொழி 1040)
Democracy is a myth, fantasy & luxury in times; if people under influence, it will be an illusion; dictators will easily get elected in this system; people will decide based on 'facts'; but, ways to restrict the data, which they receive; huge 'freedom' is there to interpret the same data; it will delay decisions; so, dangerous in emergencies. (Akamozhi 1040)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குற்றங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதாகப் புள்ளிவிவரம் வரும்போது, அவை அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கொள்ளவும் இடம் உண்டு.போராட்டங்கள் மிகுதியாக நடைபெறுகையில், சிக்கல்கள் பெருகிவிட்டதாகவோ, முதிர்ந்துவிட்டதாகவோ உடனே கருதிவிடக் கூடாது; போராடுவதற்கான சுதந்திரம் அதிகரித்திருப்பதாகவும் கொள்ளலாம். (அகமொழி 1039)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இங்கே எளிமையானவர்கள் உண்டு. படித்தவர்களும் செல்வந்தர்களும் நாவலர்களும் பட்டறிவு கொண்டோரும் பற்பலர். ஆனால், தலைமைப் பதவிக்கு இந்தத் தகுதிகள் போதா. மகத்தான கனவுகளும் செயல் திறமும் ஆக்கச் சிந்தனைகளும் அசராத உழைப்பும் துணிவும் தொலைநோக்கும் வீறும் உறுதியும் விவேகமும் அர்ப்பணிப்பும் மரபின் மீது மதிப்பும் நவீனத்தின்பால் ஆர்வமும் மக்கள் மீது மாளா அன்பும் தன்னலம் கருதாத தனித்துவமும் கொண்டு, காந்தம் போல் ஈர்க்கும் ஒருவரே சம காலத்தின் தன்னிகரற்ற தலைவர். (அகமொழி 1044)
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
விலை கேட்ட பிறகு, பொருளைத் தேர்ந்தெடு; தேர்ந்த பிறகு விலை கேட்பது, விற்பவருக்கே சாதகமாகும். (அகமொழி 1058)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
ஓயாமல் செய் அல்லது முழங்கு; அப்போதுதான் உன்னைத் திரும்பிப் பார்ப்பார்கள்; உன்னிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்புவார்கள். (அகமொழி 1066)
--