வஞ்சிக்கொடி:----------------------------சென்னைப் பேரகராதியில் வஞ்சிக்கொடி என்பதற்கு முள்கள் நிறைந்த ரத்தன் (< அரதனம்) செடியைக் குறித்துள்ளனர். அது தவறு என்றும், சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் உள்ள பழைய செய்திகளால் வஞ்சிக்கொடி என்றால் என்ன என்பதும் ஆராய்வோம். முதலில் ஸம்ஸ்கிருத அகராதிகளில் ஹம்சம் என்பதற்கு Swan எனத் தவறாகப் போட்டுவிட்டனர். அதனால், அன்னம் என்பதற்கும் Swan என்று சென்னைப் பேரகராதி தருகிறது. இது பிழை. சங்க இலக்கியங்களில் உள்ள அன்னம் Bar-headed geese என்று முன்னர் விரிவாகப் பார்த்தோம். அதே போல, வஞ்சிக் கொடி என்றால் பெப்ரீசியஸ் இலங்கையில் கேட்டுச் சொன்ன தகவலைப் பார்த்தால், சென்னைப் பேரகராதியில் வஞ்சிக்கொடி என்ன எனத் தெளியலாகும்.ஆவுடையார், இலிங்க வழிபாடு குறித்த தந்திரயான சமயம் பற்றியும் பேசலாம். இலிங்கத்தை காக்கும் அரவு, நாகலிங்கம்.வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறைவரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’
நா. கணேசன்