ஹ்ம்ம்ம்ம்..2013/11/9 சென்ஷி <me.s...@gmail.com>
ஸ்பெ, இங்க அந்தரங்கம்னு நீங்க எழுதாம சினிமான்னு டிஸ்கியிட்டிருந்தாலும் நான் இதேதான் கேட்டிருப்பேன். :)2013/11/9 ஸ் பெ <stalinf...@gmail.com>
கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள கேட்க்கிறேன் சென்ஷி.. இதுவரை இணையத்தில் அரசியல்வாதிகளின் அந்தரங்களை பற்றி எங்காவது எழுதி இருக்கிறேனா? அப்படி எழுதி இருந்தால் தனிமடலில் சுட்டிக்காட்டுங்கள்..பண்புடனில் அப்படி எழுதி இருந்தால் முன்கூட்டிய மன்னிப்புகள்... :-(2013/11/9 சென்ஷி <me.s...@gmail.com>
//ஸ்.பெ. வா இப்படி சொல்றது?? :)
டிஸ்கி: தயவு செய்து அவரது அந்தரங்க விவகாரங்களை இந்த இழையில் எழுத வேண்டாம்... அரசியல்ரீதியாக மட்டும் எம்ஜிஆரை அணுகும் முயற்சி மட்டுமே..//
----
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--- senshe
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--- senshe
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
விடுதலைபுலிகளுக்கு உதவியது தவிர்த்து அவரை பற்றி பேச ஒன்னும் இல்லை, ஒரு நாட்டமை மாதிரிதான் ஆட்சி செய்தார் என்றுதான் நினைக்கிறேன், இவரை ரோல் மடலாம வைத்துதான் ஜெ.,வந்தாங்க, விஜயகாந்த் வளர்ந்துகிட்டு இருக்காரு
---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
விடுதலைபுலிகளுக்கு உதவியது தவிர்த்து அவரை பற்றி பேச ஒன்னும் இல்லை, ஒரு நாட்டமை மாதிரிதான் ஆட்சி செய்தார் என்றுதான் நினைக்கிறேன்,
இவரை ரோல் மடலாம வைத்துதான் ஜெ.,வந்தாங்க, விஜயகாந்த் வளர்ந்துகிட்டு இருக்காரு.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஓம்பிரகாஷ் ஜி,
ஆரணி ரவுடி முட்டம் ரவுடியெல்லாம் கல்விதந்தையானது கூட பெரிசா தெரியலை.
இதயகனில எம்ஜிஆர் அசிஸ்டென்டா வரவன் அவன்லாம் கல்விதந்தைனும் போதுதான்
எம்ஜியார் தலையிலே நறுக்னு ஒரு கொட்டு வைக்கனும்னு தோணும்.
ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஆரம்பப்புள்ளி என்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எடுக்கலாம். அப்போது ஆட்சியில் இருந்தது எம்ஜிஆர்... மத்தியில் ராஜிவ் கூட்டணியில்...
அன்டன் பாலசிங்கம் , 'உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுங்கள்' என்று எம்ஜிஆர் சொன்னதாய் சொல்கிறார் , கூடவே டெல்லி 'சில ஏற்பாடுகளை செய்திருப்பதாய்' சொன்னதாகவும் சொல்கிறார்...ஆனால் , கடைசிவரை ஒபந்தத்தை முழுமையாக கூட படிக்க கொடுக்காமல் , அவசர அவசரமாய் , கிட்டத்தட்ட சிறைவைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் விருப்பம் இல்லாமலேயே கையெழுத்து வாங்கப்படுகிறது...அந்த ஒபந்தம் முடியும் வரை பிரபாகரன் அவர்களின் கூடவே இருப்பது எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ரூட்டி ராமச்சந்திரன்!!!
ஆரம்பப்புள்ளி இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்று வைத்துக்கொண்டால் , தெரிந்தோ தெரியாமலே ஈழத்தமிழர்களின் விடயத்தில் எம்ஜிஆர் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு...அந்த ஒப்பந்தத்துக்கு துணைப்போனது...
--
//அவர் பெயர் ஐசரி கணேசன் ,கொஞ்சம் நாகேஷின் சாயலில் கெச்சலான தோற்றத்திலிருப்பார். ஒரு படத்தில் அதுசரி அதுசரி என வசனம் பேச அதுசரி கணேசன் என்றாகிப் பின் அது மருவி ஐசரி கணேசன் ஆகிப் போனார். அவரது மகன் ஐசரி வேலன் தான் வேல்ஸ் கல்லூரி நடத்துறார் //இது தவறு என நினைக்கிறேன். ஐசரிவேலன் தான் சினிமாவில் நடித்தவர். அவரது மகன் ஐசரி கணேசன் என நினைக்கிறேன். ஐசரி வேலன் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.
ஆரம்பப்புள்ளி இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்று வைத்துக்கொண்டால் , தெரிந்தோ தெரியாமலே ஈழத்தமிழர்களின் விடயத்தில் எம்ஜிஆர் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு...அந்த ஒப்பந்தத்துக்கு துணைப்போனது...
சத்தியமா தெரியாமத்தான் கேட்க்கறேன் என்னேன்ன செஞ்சார்?
மல்லூக்களுக்கு அள்ளி வழங்கியது உண்மைதான்அம்பிகா ராதாவுக்கு வளசரவாக்கத்தையே கொடுத்தார் தலைவர்நல்லவேளையாக இரண்டு பேர்தான் :-)
இன்றைய பிரச்சனைகளின் அடிநாதம் இந்த ஒப்பந்தம்தான் , அதில் ராஜிவ் செய்த அரசியல்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகிறேன்..
என்ன ஆகி இருக்கும் , நீங்களே சொல்லுங்களேன்?!
அது நந்தா அண்ணனா ஸ்பெ அண்ணனா...பாவம் ப்ரியன்ஜியே கொழம்பிட்டாரு போல...:)))வடிவேலுவின் இந்த திரைத்துளி இருந்தால் பகிரவும் துரை ஐயா...
1. விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான பேச்சுவார்த்தை அன்றோடு முடிஞ்சிருக்கும்.2. இந்தியாவிலிருந்து புலிகளுக்கு எந்த அரசியல் உதவியோ, பொருளாதர உதவியோ கிடைச்சிருக்காது.
3. 2008ல நடந்த உக்கிர போர் அன்றைக்கே நடந்து முடிஞ்சிருக்கும்.அதைத்தான் எம்.ஜி.ஆர் தடுத்தார்.
அதை நானே பார்த்து சரி பண்ணிட்டேனே , பிரசாத்! ;)
அதைத்தான் எம்.ஜி.ஆர் தடுத்தார்.முன்னமே பண்ருட்டியாரைப் பற்றி பேசும்போது இதையே நான் சொன்னதா ஞாபகம்.
படிச்ச புத்தகங்கள் இழையில்.
1. விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான பேச்சுவார்த்தை அன்றோடு முடிஞ்சிருக்கும்.
2. இந்தியாவிலிருந்து புலிகளுக்கு எந்த அரசியல் உதவியோ, பொருளாதர உதவியோ கிடைச்சிருக்காது.
3. 2008ல நடந்த உக்கிர போர் அன்றைக்கே நடந்து முடிஞ்சிருக்கும்.அதைத்தான் எம்.ஜி.ஆர் தடுத்தார்.
1. விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான பேச்சுவார்த்தை அன்றோடு முடிஞ்சிருக்கும்.
2. இந்தியாவிலிருந்து புலிகளுக்கு எந்த அரசியல் உதவியோ, பொருளாதர உதவியோ கிடைச்சிருக்காது.
3. 2008ல நடந்த உக்கிர போர் அன்றைக்கே நடந்து முடிஞ்சிருக்கும்.
அதைத்தான் எம்.ஜி.ஆர் தடுத்தார்.முன்னமே பண்ருட்டியாரைப் பற்றி பேசும்போது இதையே நான் சொன்னதா ஞாபகம்.
படிச்ச புத்தகங்கள் இழையில்.
புத்தகம் பேரு ”விடுதலை” ஆன்ரன் பாலசிங்கம் எழுதியது.
நான் புரிந்துக் கொண்ட வரையில்..* சுதந்திர இந்தியாவில் 'திராவிட' கோட்பாடு இந்தியாவுக்கு அரசுக்கு மிகபெரிய தலைவலியாக இருந்தது; இன்று திராவிட அரசியல்வாதிகளால் கேலிக்கூத்தாகி இருக்கும் திராவிட கோட்பாடை கீழ் இழுத்து விட்ட லிஸ்டில் எம்.ஜி.ஆருக்கும் சரிசமமான பங்கு உண்டு.
* எம்ஜிஆர் -ஐ அரசியலில் வளர்த்து விட்டதில் இந்தியாவின் பங்கு மிக பெரியது (அகில இந்திய..)..
* புலிகளை அவர் ஆதரித்து பணம் கொடுக்கும் வரையில், புலிகள் யார் என்ற பெரிய புரிதலே அவருக்கு இல்லை.
* நிஜ திரைமறைவு அரசியல் வாழ்க்கையில் மிக பெரிய பிடிவாதகாரராய் இருந்திருக்கிறார்..ஏறக்குறைய ஒரு பாசிஸ்டை போல (தொண்டர்கள் கையில் கட்சிக் கொடியை பச்சை குத்த வைத்தது)
* இன்று மெரினாவில் முளைத்திருக்கும் 'பறக்கும் குதிரை' போல, அன்று மாணவர் விடுதியில் 'எம்.ஜி.ஆர். -லதா' என்று பெயர் பொறிக்கப்பட்ட சாப்பாடு தட்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று..
*இடஒதுக்கீடு நிலைப்பாடு?!?
*ஊழல் - கைலாசம் கமிஷன்
*மண்டைக்காடு கலவரம்- எம்ஜிஆரின் ஒருதலைபட்சமான பார்வை.
cont...
--தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இப்போ இருக்குற மாதிரி தமிழக அரசு ஈழத்திற்கு ஆதரவாகவும், இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் அன்றே இருந்திருக்கும்.
அதனால ராஜிவ் இலங்கையுடன் ஈழத் தமிழர்களும் சுமூகமா பேசி தீர்த்து ஒரே நாட்டுடனே வாழவைப்பதற்கு ஆசைப்பட்டார். அரசியல் தீர்வுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனாலதான் இந்திரா மாதிரி முடிவெடுக்காம அரசியல், பேச்சுவார்த்தை, அதிகாரப் பகிர்வுன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.
ராஜிவ் , ஈழ மக்களை இலங்கையுட் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு எல்லாம் கொண்டுவரவில்லை...இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் அவ்வளவே...ஒப்பந்ததை செய்ய முக்கிய காரணம் போபர்ஸ் ஊழலில் அவருடைய செல்வாக்கு வெகுவாக சரிந்திருந்ததும்...
ஆன்டன் பாலசிங்கம் - போரும் சமாதானமும் புத்தகத்தில் சொன்னதை வைத்து எழுதினேன் , விடுதலை கட்டுரை தொகுதியை படித்ததில்லை.
ராஜிவ்காந்தி, பிரபாகரன், நான், பண்ட்ருட்டி ராமச் சந்திரன், நான்கு பேரும் கலந்துகொண்ட உரையாடலின் போது பிரதமர் அவர்கள்( ராஜிவை பிரதமர் என்றே ஆன்டன் குறிப்பிடுகிறார்)மிக்க உற்சாகத்துடனும், அயர்சியின்றியும் எதையோ சாதித்த பெருமித உணர்வுடனும் காணப்பட்டார்.பிரபாவிடம் பிரதமர் " நாம் உங்களின் எல்லா ஆயுதங்களையும் கையளித்துவிடச் சொல்லவில்லை மிகக் குறைந்த அளவில் முன்னறே இந்தியா தந்தவற்றில் சிலவற்றை கொடுத்தால் போதும். அதே போல் உங்களின் கெரில்ல படையணியையும் கலைத்திட சொல்லவில்லை அது வடகிழக்கின் பகுதியில் இருக்க இந்திய ராணுவத்தின் கண்கானிப்பில் இலங்கை அரச படைகள் தங்களின் இடத்தில் அடைந்து கிடப்பார்கள் , உங்களின் ஆயுதம் அளிக்கப் படுவது சர்வதேச ச்முதாயத்தில் புலிகள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனும் வாதத்திற்கு வலு சேர்க்கும்" என்றார்...இதற்று பதிலேதும் சொல்லாத பிரபாவிடம் பன்ட்ருடி ராமச் சந்திரன் அவர்கள் " நல்ல பயன்பாட்டில் இருக்கும் ஆயுத்ங்கள்கூட வேண்டாம் இந்தியா தந்த பழைய உதவாத ஆயுதங்களின் சிறு பகுதியை கொடுக்கலாமே?" என்றார்.பிரபாகரன் அதற்கு கிண்டலாக அவர்கள் கொடுத்ததெல்லாமே பயன்படாத ஆயுதங்கள் தானே என்றார்.தமிழில் நடந்த இப் பேச்சை அப்படியே பிரதமருக்கு அமைச்சர் பன்ட்ருட்டி மொழிபெயர்த்தார். இதை தலையசைத்து ஆமோதித்தார் பிரதமர்.இரவு இரண்டு மணி அளவிலும் பிரதமர் மிக்க உற்சாகத்துடன் இருந்தார்... ஒரு உடன்பாடு எட்டப் பட்டவுடன் காலை ஒன்பது மணி விமானத்தில் கொழும்பு சென்று மூன்று மணி மதியத்துக்கு இலங்கை இந்திய ஒப்பந்ததில் கைச்சாத்திட வேண்டும்.நான் அமைச்சரிடம், "இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக்கொண்டவற்றை ஒரு ஒப்பந்தமாக்கி அதில் கைச்சாத்திட்டால் என்ன அது மேலும் உடன்பாட்டுக்கு வலு சேர்க்குமே?" என்றேன்.அப்படியே அவர் முகம் வாடிப் போனது " நாங்கள் ஏற்கனவே ஆயுதங்கள் மற்றும் மாதம் ஐம்பது லட்சம் கருப்புப் பணமாக உங்களுக்கு கப்பம் கட்ட சம்மதித்திருக்கிரோம் இதை ஒப்பந்தமாகினால் இந்திய அரசியலில் பெரும் குழப்பம் உண்டாகும்" என்றார்.பிரதமரும் இது ஒரு ஜென்டில் மேன் அக்ரீமெண்ட்டாகவே இருக்கட்டும் நான் நிச்சயம் வாக்கை காப்பாற்றுவேன் என்றார்.காலப் போக்கில் பிரதமரின் வாக்குறுதி குப்பைக்கூடையில் வீசப் பட்டது
இக்கட்டுரையில் வரும் சில வார்த்தை விவரிப்புகளின் மீது எனக்கு அபிப்பிராய பேதம் இருந்தாலும், கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு பதிவாக கருதுவதால் இங்கே பகிர்கிறேன்..
எம்.ஜி. ஆர் : ஒரு பாசிஸ்டின் மரணம்
அது நந்தா அண்ணனா ஸ்பெ அண்ணனா...பாவம் ப்ரியன்ஜியே கொழம்பிட்டாரு போல...:)))வடிவேலுவின் இந்த திரைத்துளி இருந்தால் பகிரவும் துரை ஐயா...
2013/11/12 ப்ரியன் <mailt...@gmail.com>
நந்தா வோட டிஸ்கி ,
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இதுல மபொசி ய ஒட்டுண்ணிய என குறிப்பிட்டுருப்பதை பத்தி ஸ்பெ கருத்து என்னவோ
ஆவூன்னா பாசிச பாயாசம் விக்க கிளம்பிடுவாங்க போல எதுக்கெடுத்தாலும் பாஸிச ,நாஸிச,சேடிஸ் இன்னும் பல இஸ.........டாஸ்மாக்ல சரக்க போட்டுட்டு வெளில வந்து இடுப்புல இருக்க துணிய எடுத்து தலைல கட்டிக்கிட்டு வாந்தி எடுத்தா எப்படி இருக்குமோ அது மாதிரி இல்ல இருக்கு.இதுல மபொசி ய ஒட்டுண்ணிய என குறிப்பிட்டுருப்பதை பத்தி ஸ்பெ கருத்து என்னவோ
--
பண்புடனின் அநேகமான இழைகள் வெவ்வேறு தலைப்புகளில் வந்தாலும் எப்படியோ ஈழத்தமிழர் தலையில் தான் வந்து நிற்கிறது.... :) ஆளாளுக்கு ஈழத்தமிழரைப் பற்றி சொல்லும் கருத்துகளைப் படிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் என் வீட்டுக்குள் வந்து நான் இதை தான் சாப்பிட வேண்டும், எந்தளவுக்கு சுவாசிக்க வேண்டும், எதுவரை கால் நீட்டிப் படுக்கலாம் என்பதையெல்லாம் நிர்ணயிப்பது போலவே இருக்கிறது...
கூடவே இந்த ஒரு வசனம் சேர்த்திருக்க வேண்டும்...விடுபட்டுவிட்டது...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
Appo Jayalalitha sonnathu sarithan. SriLankan Tamils pirachinai is there internal problem, why should we interfere
Sorry for EnglishAppo Jayalalitha sonnathu sarithan. SriLankan Tamils pirachinai is there internal problem, why should we interfere
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.
‘தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.
இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.
எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி. கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
இறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.
திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.
சந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.
காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!
அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்!
கருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.
இடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமாப் பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.
“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.
இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.
தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.
மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.
“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”
எம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர் மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.
பாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.
அதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
மீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
தனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.
பத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.
தொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்!
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.
தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.
அரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்!
பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! நக்சல்பாரிகள் நரவேட்டை!
“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!
- ஆர்.கே.
(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
http://www.vinavu.com/2014/12/24/mgr-led-tamilnadu-politics-to-degradation/
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
;-)தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ
கருணாநிதி அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே ஜெயலலிதா சமச்சீர் கல்வியை இந்தப் பாடுபடுத்துகிறாரே?
-சு. செந்தில்சமச்சீர் கல்வி என்கிற பெயரில் இருக்கிற பொதுப் படத்திட்டத்தைத் தவிர்ப்பதற்காக, ‘அதிமுகத் தொண்டர்களை’ ஏமாற்றுவதற்கு அது ஒரு சாக்கு.
‘திமுக அரசு கொண்டுவந்த ‘சமச்சீர்’ பாடத்திட்டத்தைவிட, பழைய பாடத்திட்டமே சிறப்பாக இருக்கிறது’ எனறு புரட்சித்தலைவி அரசு சொல்கிறது.
அது உண்மையானால், அந்தப் பழைய பாடத்திட்டத்தையே சமச்சீர் கல்வியாக அறிவித்து, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் இந்தக் கல்வியாண்டே அதை அமல்படுத்த வேண்டியதுதானே, யார் தடுக்கப் போகிறார்கள்?
ஆக, அவர்களின் நோக்கம் சமச்சீரை தடுப்பதுதான்.
இது ராஜாஜி பாணி அரசியல் என்றாலும், எம்.ஜி.ஆர் பாணியும் இதற்கு எதிரானதல்ல.
1960 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த காமராஜர், ‘ஆண்டு வருமானம் 1200 ரூபாய்க்குக் கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவசம்’ என்று அறிவித்தார். பிறகு 1962ல் ‘அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி’ என அதை மாற்றினார். 1978 வரை அந்த நிலையே நீடித்தது.
1962 ஆம் ஆண்டு, கட்டண கல்விமுறையை ஒழித்தார் காமராஜர். 1978 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., முதல் வேலையாக நெடுஞ்செழியன் துணையோடு கமாராஜர் திட்டத்தை ஒழித்தார். மீண்டும் கட்டண கலவிமுறை வந்தது. ( மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக எம்.ஜி.ஆர் திட்டத்தை ஒழிக்கவில்லை)
போன தலைமுறை தமிழர்களின் கல்வியில் எம்.ஜி..ஆர் வைத்த தீ, இந்தத் தலைமுறையிலும் பற்றி எரிகிறது. ஆரம்பக் கல்வி முதல், உயர்க்கல்வி வரை தீவிர வணிகம் ஆனது அவர் ஆட்சியில்தான்.
மருத்துவக் கல்வியைத் தனியாருக்குக் கொடுத்தது. (ராமச்சந்திரா) பொறியியல் கல்வியைச் சூதாட்டமாக்கியது வரை அவர் சாதனைகள்தான்.
அவர் ஆட்சியில், மந்திரியாக, வாரியத் தலைவராக, சாராய வியாபரியாக இருந்த பலரும் இன்று கல்வி வியாபாரிகளாக இருப்பதே அதற்குச் சாட்சி.
ஏ.சி. சண்முகம், ஜி. விஸ்வநாதன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஐசரி வேலன், ஆர்.எம். வீரப்பன் இப்படி ஒரு கும்பல் கிளம்பி இன்றுவரை கல்வியைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கரின் அடிப்படை கொள்கையான இலவசக் கல்வித் திட்டத்தில் தீ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
ஆக, புரட்சித்தலைவி அரசு புரட்சித்தலைவர் பாணியில்தான் பயணிக்கிறது.
‘சமச்சீர் கல்விக்குத் தடை’ திமுகவிற்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அதிமுகவின் இயல்பு. அதுதான் அதிமுக.
பாணியில்தான் பயணிக்கிறது.
‘சமச்சீர் கல்விக்குத் தடை’ திமுகவிற்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அதிமுகவின் இயல்பு. அதுதான் அதிமுக.
ஏ.சி. சண்முகம், ஜி. விஸ்வநாதன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஐசரி வேலன், ஆர்.எம். வீரப்பன்
இதெல்லாம் அவதூறு ஹாஜா.. தனியார் மேல் இருக்கும் வயற்று எரிச்சலால் தான் இது போல இடதுசாரிகள் எழுதுகிறார்கள்.. ஏ.சி. சண்முகம், ஜி. விஸ்வநாதன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஐசரி வேலன், ஆர்.எம். வீரப்பன் போன்ற வள்ளல்களை உருவாக்கியது புரட்சி தலைவரின் பண்பு. ;-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இப்பிடி சப்பைக் கட்டு கட்டுவதாக இருந்தால், இதோ பாருங்கள் டாஸ்மார்க் இருப்பதால் தான் வருமானம் வருகிறதுஅதனால் தான் பொருளாதாரம் உயர்கிறது.. இல்லையேல், தமிழ்நாடு பாதாளத்தில் போய் இருக்கும் என்று கூட நாளை இன்னொருவர் சப்பைக்கட்டலாம்..
தான் பேரு கெடாம தன்னாலான எல்லா வேலையும் செஞ்சிருக்காங்க இந்த அரசியல்வாதிகள்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
'தமிழ்நாட்டையே குடிக்க வைத்துக் கெடுத்தார்’ எனக் குற்றம் சாட்டப்படும் மு.கருணாநிதி, 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார். தமிழ் மக்களின் நவீன 'அம்மா’வாக அவதாரம் எடுத்திருக்கும் ஜெயலலிதா இதைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம்காப்பது மட்டும் அல்லாமல், இன்னும்... இன்னும் புதுப்புது மதுக் கடைகளைத் திறப்பதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக இவரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த அஸ்திரத்தை எடுக்கக்கூடும். கருணாநிதி அறிவித்திருப்பதும், ஜெயலலிதா அறிவிக்க இருப்பதும் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல. 'பழைய மொந்தையில் புதிய கள்’ அவ்வளவுதான்!
அந்த மழை நாளில்...
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட நாள்: 30.8.1971
23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி... அப்போது ஏக இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. 'மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார். 'தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கருணாநிதி கேட்டார். 'இது மதுவிலக்கைப் புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ எனப் புதிய விளக்கம் சொன்னார் இந்திரா. காங்கிரஸை வீழ்த்திவிட்டுவந்த கருணாநிதிக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். நிதி தராத மத்திய அரசுக்குப் பாடம் கற்பிக்கவே மதுவிலக்கு ரத்து என அறிவித்தார் கருணாநிதி.
கோவை தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மதுவிலக்கு ரத்து என அறிவிக்கப்பட்டது. மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சென்னை முழுக்கக் கடுமையான மழை. போக்குவரத்து இல்லை.
93 வயதான ராஜாஜி, மதுவுக்கு எதிரான போராட்டத்தை தனது வாழ்நாளில் இளமை முதல் நடத்திவந்த ராஜாஜி... தனது காரை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். 'தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். 'வேறு வழி இல்லை; நிதி நெருக்கடியில் இருக்கிறது அரசு’ என விளக்கம் அளித்தார் கருணாநிதி. 'மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் தான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார் ராஜாஜி; கருணாநிதி ஏற்கவில்லை. வீடு திரும்பினார் ராஜாஜி; மதுவிலக்கை வழியனுப்பினார் கருணாநிதி.
'நம்பிக்கையுடன் அல்ல; மனச் சஞ்சலத்துடன்தான் வீடு திரும்பினேன்’ என ராஜாஜி அன்று சொன்னதாக அவரது பேரன் எழுதுகிறார். ராஜாஜி மனதை இது அதிகமாகப் பாதித்தது. 'உயிர் வாழ வேண்டும் என்கிற மனோபலத்தை நீங்கள் இழந்துவிட்டீர்களா?’ என கல்கி சதாசிவம் கேட்டபோது, 'இல்லை! ஆனால் ஒருவர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?’ எனச் சொன்ன ராஜாஜி, நாடு முழுக்க சாராயக் கள்ளுக்கடைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடினார்!
காரணம் கருணாநிதிதானா?
'கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடுஎத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?’ -தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம் இது. தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற மாநிலங்களில் எல்லாம் மது இருக்கும்போது, மது இல்லாமல் தமிழ்நாடு மட்டும் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி. இதைச் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்துசெய்தார்; பழியைச் சுமக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை கருணாநிதி ரத்துசெய்தார் என்பது உண்மை. ஆனால், தமிழ்நாட்டுக்கு சாராயத்தையே அவர்தான் காட்டினார் என்பது உண்மையா..? இல்லை!
மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மையை உணர முடியும். 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்துசெய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் சிக்கி இருக்கிறார்கள்.
1961 - 1,12,889 பேர்
1962 - 1,29,977 பேர்
1963 - 1,23,006 பேர்
1964 - 1,37,714 பேர்
1965 - 1,65,052 பேர்
1966 - 1,89,548 பேர்
1967 - 1,90,713 பேர்
1968 - 2,53,607 பேர்
1969 - 3,06,555 பேர்
1970 - 3,72,472 பேர்
இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் எம்.ஜி.ஆர். 'ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இதை எடுத்துப்போட்டார்.
குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கருணாநிதி செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
திரும்பிய திசை எங்கும் மதுக் கடைகள்!
'ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி, 1971-ம் ஆண்டில். தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக் கடைகளும் 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு லிட்டர் கள் 1 ரூபாய், 1 லிட்டர் சாராயம் 10 ரூபாய். தாலுகாவுக்கு ஒரு சாராய வியாபாரி என, தமிழ்நாட்டில் 139 மொத்த வியாபாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்குவார்கள்.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,304 கள்ளுக் கடைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 643 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. குறைவான கடைகள் இருந்தது சென்னையில்தான். 56 கள்ளுக் கடைகள், 52 சாராயக் கடைகள்.
அன்றைய தமிழ்நாடு அரசுக்கு வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 210 கோடி ரூபாய். போதையில் இருந்து மட்டும் கிடைத்தது
26 கோடி ரூபாய் என்றால், எவ்வளவு பெரிய தொகை எனப் பாருங்கள்.
ஆனாலும் கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஆண்டு ஒன்றுக்கு 29 கோடி ரூபாய் தர வேண்டும் என, கருணாநிதி கோரிக்கை வைத்துப் பார்த்தார். பணம் வரவில்லை. மீண்டும் மதுவிலக்கை ரத்துசெய்தார். நிதியைக் காரணம் காட்டியே மதுவிலக்கைத் தவிர்ப்பதும் கொண்டுவருவதும் தொடங்கியது... தொடர்ந்தது. இதை பணமாகவே பார்த்தார்கள். குணமாக அன்றும் பார்க்கவில்லை; இன்றும் பார்க்கவில்லை.
எம்.ஷி.ஆரை வெளியேற்றிய மது!
மது... குடும்பங்களை அல்ல, கட்சிகளையும் உடைக்கும்!
மதுவிலக்கை ரத்துசெய்யும் அதிகாரத்தை கருணாநிதிக்கு வழங்கிய தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்தும், மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பேற்றும் இருந்த எம்.ஜி.ஆர்., இரண்டு ஆண்டுகள் கழித்து தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-வில் இருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. 'பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டார்கள். மறுத்தார் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கப்பட்டார். எனவே தி.மு.க உடைந்ததில் மதுவுக்கும் பங்கு உண்டு.
எம்.ஷி.ஆர் போட்ட பல்டிகள்!
சினிமாவில் அடித்த ஸ்டன்ட் களைவிட மதுவிலக்கில் எம்.ஜி.ஆர் அடித்த ஸ்டன்ட்கள்தான் அதிகம்!
'என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
1.5.1981-ல் தமிழ்நாட்டில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை. நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்தது. சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாறியது அப்போதுதான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்தச் சாராய அதிபர்களுக்கு ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் போகிறது எனப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார். 'இவை எல்லாம் அந்த ஒன்பது குடும்பங்களுக்குப் போகிறதா அல்லது இவை எல்லாம் பினாமியாக ஒரே குடும்பத்துக்குப் போய்ச் சேருகிறதா?’ எனக் கேள்வியையும் போட்டார்.
மதுவிலக்குக் கொள்கையில் அளவுக்கு அதிகமாக ஐந்து அவசரச் சட்டங்களைப் போட்டதும் எம்.ஜி.ஆர் அரசுதான். 'மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் ஒருமுறை பிடிபட்டால், 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால், 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால், நாடு கடத்தப்படுவார்கள்’ என்பதும் ஓர் அவசரச் சட்டம்.
'சர்வாதிகார நாட்டில்தான் இப்படி ஓர் அவசரச் சட்டம் இருக்கும்’ என கருணாநிதி எதிர்க்கும் அளவுக்குப் போனார் எம்.ஜி.ஆர்.
தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க மதுவிலக்கு என்றும், கள்ளச் சாராயத்தால் காசும் உடல்நலமும் பறிபோகிறது எனத் தாய்மார்கள் கண்ணீர் விடுவதால் மதுவிலக்கு ரத்து என்றும், இரண்டுக்கும் தாய்மார்களின் கண்ணீரையே காரணங்களாகக் காட்டித் தப்பிக்க முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.
கருணாநிதி சொன்னபடி நடந்த ஜெ !
மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகமாக வருவதைக் கவனித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் நல்ல லாபம் வரும் என யோசனையும் சொன்னார். (தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.3.1983 அன்று பேசியது) 'இப்போது அரசே எடுத்து நடத்துவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை’ என லைசென்ஸ் வழங்கினார் கருணாநிதி. அவர் 1983-ம் ஆண்டில் சொன்னதை 2003-ம் ஆண்டில் அமல்படுத்தினார் ஜெயலலிதா.
நல்ல கல்வியை தனியாருக்கும், நல்ல மருத்துவத்தை தனியாருக்கும் தாரைவார்த்துவிட்டு நல்ல மதுவை அரசு வழங்கும் நெறிபிறழ்ந்த செய்கையை 'அம்மா’ தொடங்கிவைத்தார். மறைவான இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் கடை நடத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, அரசு அதிகாரிகள் கேட்பதால் பள்ளிகளுக்குப் பக்கத்தில், குடியிருப்புகளுக்கு உள்ளே, கோயிலுக்குப் போகும் வழியில் எல்லாம் கடைகள் திறக்கப்பட்டன. தம்பி தவறு செய்தால் தட்டிக்கேட்டார்கள். 'அம்மா’வே செய்தால் யாரால் கேட்க முடியும்?
குடியைக் கட்டாயப்படுத்திய அரசு!
இன்று சாராய வருமானம் 30 ஆயிரம் கோடி. இதை 32 ஆயிரம் கோடியாக எப்படி ஆக்குவது? அரசின் கவலை இதுதான். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் அதிகப்படுத்திக் காட்டியாக வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இலக்கு நிர்ணயித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு விற்காவிட்டால், விற்பனையாளர்களுக்கு மெமோ தரப்படும். வேலை நீக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் குடிக்க வேண்டும் என அவசரச் சட்டம் போடுவதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிதியை வைத்துத்தான் அரசு நிர்வாகம் செயல்படுவதுபோல போலி பிரமையை உருவாக்குகிறார்கள். இது உண்மை அல்ல. நாய் விற்ற காசு குரைக்காது. ஆனால், சாராயம் விற்ற காசு கொல்லும். தமிழ்நாட்டைக் கொன்றும்வருகிறது.
அதிபர்களை அதிகப்படுத்திய மு.க.!
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடங்கப்பட்டது. பாலாஜி டிஸ்டீலரீஸ், எம்.பி.டிஸ்டீலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டீலரீஸ், சிவாஸ் டிஸ்டீலரீஸ், சாபில் டிஸ்டீலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தார்கள். மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. இதை உடைத்து 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். அதன் பிறகுதான் டாஸ்மாக் மூலமே மதுபானக் கடைகளை நடத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைக் கண்டித்த கருணாநிதி, 2006-ம் ஆண்டில், தான் ஆட்சிக்கு வந்ததும் மது விற்பனையை அரசு செய்யும் முடிவைத் தொடர்ந்தார்.
இதைவிட இன்னொரு சாதனையையும் செய்தார் கருணாநிதி. எஸ்.என்.ஜே.டிஸ்டீலரீஸ், கால்ஸ் டிஸ்டீலரீஸ், எலைட் டிஸ்டீலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின் (பி) லிட்., கிங் டிஸ்டீலரீஸ் போன்ற புதிய சாராய ஆலைகளை அனுமதித்தார் கருணாநிதி. இதன் பொறுப்பாளர்கள் அவரோடு பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்கள். கருணாநிதி ஆட்சியில் மிடாஸ் ஆலையில் இருந்து மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியின் நெருக்கங்களின் ஆலையில் இருந்து, மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோபத்தால் ஒதுக்குபவர்கள், மது ஆலைகளை லாபத்தால் அரவணைக்கிறார்கள்!
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108702
1972 ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அன்றிலிருந்து ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தின் பெரிய கட்சி என்கிற நிலையில் இருந்து அதிமுகவை யாரும் அசைக்க முடியவில்லை. தற்போது இருக்கிற அதிமுக இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்கிற விமர்சனம் எதிர்தரப்பிலிருந்து காட்டமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் அதிமுகவின் தொடக்கம் முதல் தற்போது உள்ள சூழல் வரை அரசியல் சமூக பகுப்பாய்வு அவசியமாகிறது.
1972 ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தபோது, மு.க.முத்துவை திட்டமிட்டு வளர்த்தது, கட்சியில் கணக்கு கேட்டது போன்ற காரணங்களால்தான் எம்ஜிஆர் கட்சியை விட்டு விலகினார் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இது ஒருபுறமிருந்தாலும்,எம்ஜிஆர் கட்சி தோற்றுவிக்க காங்கிரசுதான் காரணம் என்கிற நுட்பமான பார்வையும் அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது. திமுகவினர் பலர் எம்ஜிஆர் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்கிற திறனாய்விற்கு செல்லுவதற்கு முன் எம்ஜிஆரின் இயல்பை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
எம்ஜிஆர் திமுகவில் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்டபோதே காமராசரை தன் வழிகாட்டி என அறிவித்தார். அந்த சர்ச்சை கழகத்தில் சில நாட்கள் நீடித்து அதன் பிறகு அடங்கிவிட்டது. திமுகவில் அண்ணா கலைஞர் போன்றோர்களுக்கு இருந்த பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்கிற முத்திரை எம்ஜிஆருக்கு இல்லை. இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆருக்குக்கு கூட அந்த முத்திரை இருந்த்து. ஆனால் எம்ஜிஆருக்கு அந்த முத்திரை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுநபர் என்கிற அடையாளம் தனக்கு வேண்டும் என்பதில் எம்ஜிஆர் தெளிவாக இருந்தார். திமுகவின் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் திரைப்படங்கள் உதவியாக இருந்தன. தான் நடிக்கும் படங்களில் உதயசூரியன் என்கிற பெயர் வருமாறு பார்த்துக் கொள்வார் .அன்பே வா படத்தில் “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்கிற வரி வரும். அன்றைய காங்கிரசு அரசு உதயசூரியன் என்கிற வரியை தணிக்கை செய்து புதிய சூரியன் என்று வெளியிட்டது. நம் நாடு படத்தில் “காரிருள் மறையுதுங்க சூரியன் உதிக்குதுங்க” என்று ஜெயலலிதா பாடுவார்.
இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்ல்லாம். 72 வரை அவருடைய அனைத்து படங்களிலும் “அண்ணாவும்” “உதயசூரியனும்” குறியீடுகளாக தவறாமல் இடம்பெறும். 72 க்கு பிறகு,அண்ணா மட்டுமே தவறாமல் இடம்பெற்றார்.
எம்ஜிஆரால் திமுக வளர்ந்த்தா? திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா? என்றால், இரண்டுமே சரிபாதியாக நிகழ்ந்த்து. “முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு” என்று அண்ணா சொன்ன வாசகம் திமுகவில் எம்ஜிஆருக்கு இருந்த வசீகரத்தை காட்டியது. திமுகவில் சிறு பிணக்கு ஏற்பட்ட சமயம் ‘என் கடமை’ படம் வெளியானது. படம் படுதோல்வியடைந்த்து. இந்த தோல்வி எம்ஜிஆரின் வெற்றிக்குப் பின்னால் திமுகவின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது.
எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இருந்த்தா? இல்லையா? என்று தெரியவில்லை. எந்த திரைப்படங்களிலும் கடவுளை வணங்கியதாக காட்சி இல்லை. கதாநாயகியை கடவுளை வணங்க சொல்லிவிட்டு அமைதியாக நிற்பார். ஒருமுறை இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தன் தாயைத்தான் கடவுளாக வணங்குவதாக தெரிவித்தார். ஆனாலும்,ஆன்மீகவாதிகள் அனைவரும் விரும்பத்தக்க தலைவராகத்தான் எம்ஜிஆர் இருந்தார். திமுகவின் மீது ஆன்மீகவாதிகளுக்கு இருந்த அதிருப்தி எம்ஜிஆரிடம் இல்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிருபானந்தவாரியார் சம்பவத்தை சொல்ல்லாம்.
“கடவுள் இல்லை என்று சொல்பனுக்கே அமெரிக்காவிற்கே சென்று மருத்துவம் பார்த்தாலும் மரணம்தான்” என்று கிருபானந்தவாரியார் கூறினார். (அண்ணாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சையளித்தும் பலனிக்கவில்லை என்பதை மறைமுகமாக கிருபானந்தவாரியார் சுட்டிகாட்டுகிறார்). இது திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர் உட்பட பலரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. பல இடங்களில் கிருபானந்தவாரியார் உரை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் பதற்றம் ஏற்பட்டது. உடனே,எம்ஜிஆர் தலையிட்டு, கிருபானந்தவாரியாரை சமதானபடுத்தினார். அதன்பிறகு,கிருபானந்தவாரியார் தலைமையில் எம்ஜிஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. “பொன்மனச்செம்மல்” என்கிற பட்டமும் எம்ஜிஆருக்கு கிருபானந்தவாரியாரால் வழங்கப்பட்டது.
அதிமுக எம்ஜிஆர்
72 ல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அவருக்கு கைகொடுத்த காரணிகள் இரண்டு
திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்
திமுகவிற்கு அப்பாற்பட்டு எம்ஜிஆரை நேசித்த அமைப்புகள் ,சமூகங்கள்,மாற்று கருத்தாளர்கள்
72 ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி எம்ஜிஆர் பின்னால் திரண்டவர்கள் யார் என்பதை காண்பிக்கும் தேர்தல். 77 லில் எம்ஜிஆரை கோட்டைக்கு அனுப்பியது அருப்புக்கோட்டை. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக 80 ல் மதுரை மேற்கு, 84 ல்ஆண்டிப்பட்டி என தென்மாவட்டங்களையே தனக்கான களமாக கருதினார். திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையையோ, வடதமிழகத்தையோ, காவிரி கடைமடைபகுதிகளிலுள்ள ஏதேனும் தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால்,எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த்தோ திமுகவிற்கு பெரிய வெற்றிவாய்ப்புகளை தந்திராத தென்மாவட்டங்களைத்தான். திமுகவில் இருந்தபோது 67 மற்றும் 71 ஆகிய இரண்டு தேர்தலைகளை சந்தித்தார். அப்போது பரங்கிமலைத் தொகுதியில்தான் நின்றார். அதாவது திமுகவிற்கு சாதகமான தொகுதி. ஆனால்,தனியாக கட்சி ஆரம்பிக்கும்போது தென்மாவட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.
எம்ஜிஆர் பின் அணிதிரண்ட சமூகங்கள்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணசட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆரின் பின்னால் அணி திரண்டன. குறிப்பாக பிரான்மலை கள்ளர்,கொண்டைய கொட்ட மறவர் ,கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.
பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர்,வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்த்தியர்கள் அப்படியே எம்ஜிஆர் பக்கம் சாய்ந்தனர்.
தமிழகத்தில்,எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் எந்த சாதியும் சொந்தமும் கிடையாது பந்தமும் கிடையாது. அதுவே, எம்ஜிஆருக்கு சாதகமான அம்சமாகிவிட்டது. எம்ஜிஆர் திண்டுக்கல் இடைத்தேர்தலில் காமராசரிடம் ஆதரவு கேட்டார். காமராசர், அதிமுக திமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என கூறி ஆதரவு தர மறுத்துவிட்டார்.அந்த கோபத்தை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்தில் காண்பித்தார். “முதுகளத்தூர் கலவரத்தின்போது ,காமராசர் தேவர் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொண்டார்” என்று காமராசருக்கு எதிராக குற்றம்சாட்டினார். பெரும்பாலும் சாதியைப் பற்றி பேசாத எம்ஜிஆர், திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது காமராசரை எதிர்ப்பதற்காக சாதியை சொல்லி பேசினார்.
எம்ஜிஆரும் நடுவண் அரசின் செயல்பாடும்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்திரா காந்தி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தார்.
தமிழகத்தில் நெருக்கடி காலத்தில் இந்திரா காங்கிரசை ஆதரித்த ஒரே மாநில கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும்தான். நெருக்கடி நிலையை ஆதரித்த இந்திய பொதுவுடைமைக் கட்சி கூட பின்னாளில் இந்திரா ஆதரவு நிலை எடுத்தமைக்காக, வருத்தம் தெரிவித்த்து. இமயம் தொலைக்காட்சிக்கு எனக்களித்த நேர்காணலில், தா.பாண்டியன் இது குறித்து விரிவாக பதிவு செய்திருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்ததற்கு இதுவரை அதிமுக வருத்தம் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு இந்திரா காந்திக்கு ஆதரவாக எம் ஜி ஆர் நடந்து கொண்டார்.
ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது,மொரார்ஜி தேசாய் மத்தியில் பிரதமரானார். உடனே, சுதாரித்துக் கொண்டு மொரார்ஜியை முழுமையாக ஆதரிக்க ஆரம்பித்தார். மொரார்ஜி ஆட்சிக்குப்பிறகு சரண்சிங் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் பொம்மை அரசு என்று கூட சரண்சிங் விமர்சிக்கப்பட்டார். அந்த ஆட்சியில் மத்திய அமைச்சரைவயில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றனர். திராவிட ஆட்சியில் மத்தியில் பங்கு வகித்த முதல் அமைச்சர்கள் என்கிற பெருமையை அதிமுக வழங்கியது..அதிலும் சத்தியவாணிமுத்து என்கிற ஒடுக்கப்பட்டோர் அரசியல் உணர்வுடைய ஆதிதிராவிட பெண் முதன் முறையாக மத்திய அமைச்சரவைக்குச் சென்றார்.
இவ்வாறாக,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,சரண்சிங் என யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவே விரும்பினார். இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு ராஜீவ் காந்தியுடன் எம்ஜிஆர் நல்லுறவுடன் இருந்தார். 84 தேர்தலில் இந்திரா காந்தி சாவுக்கு ஒரு ஓட்டு,எம்ஜிஆர் நோவுக்கு ஒரு ஓட்டு என்கிற வாசகம் மிகவும் பிரசித்திப்பெற்றது .அந்த தேர்தலில்தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே எம்ஜிஆர் வெற்றிப் பெற்றார்.
67ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றிப் பெறுவேன் என்று அண்ணாவிடம் சவால் விட்டவர் காமராசர். ஆனால்,உண்மையில் படுத்துக் கொண்’டே வெற்றிப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்ஜிஆர்தான்.
மத்திய அரசை எதிர்கொண்ட வித்த்தில் எம்ஜிஆர் அண்ணாவின் அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அண்ணா எழுதிய நல்ல தம்பி போல் நடந்து கொண்டார்.
ஜெயலலிதா வருகை
89ம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இல்லாமலே ஜெயலலிதா என்கிற தனிப்பட்ட வசீகரத்திற்கு வாக்களித்தனர் கொங்கு நாட்டு மக்கள்.அந்த கொங்கு நாட்டு கவுண்டர் மற்றும் அருந்த்திய சமூக மக்களின் வாக்குகளே ஜெயலலிதா அரசியல் பிரவேசத்திற்கு அச்சாணி போட்டது. ஏற்கனவே எம்ஜிஆருக்கு முக்குலத்தோர் ஆதரவு இருநத்து, ஜெயலலிதாவிற்கு கவுண்டர் செல்வாக்கும் இணைந்து ஜெயலலிதா அரியணை ஏற உதவியது. அன்றிலிருந்து அதிமுக, முக்குலத்தோர்+கவுண்டர் ஆதரவு கட்சியாகவே இருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையைக் கவனித்தால் இந்த உண்மை நமக்குத் தெரியும்.
திராவிட இயக்கத்தில் ஜெயலலிதா ஆட்சி
91 ல் அதிமுக காங்கிரசு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ராஜீவ் படுகொலை ஜெயலலிதாவின் வெற்றிக்கு கூடுதல் காரணியாயிற்று. திராவிட இயக்க வரலாற்றில் ஆரியத் தலைமையா? என்கிற விமர்சனம் எழுந்த்து. சட்டசபையில் “ஆமாம் நான் பார்ப்பார்த்திதான் “ என்று ஜெயலலிதா பகிரங்கமாக சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அதே சமயம் தமிழகத்திற்கான 68 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை பாதுகாத்து தந்தவர் ஜெயலலிதாதான். திராவிடர் கழகம் சமூக நீதி காத்த வீராங்கணை என்கிற பட்டம் தந்து மகிழ்ந்த்து. முதன் முதலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அங்கீகரித்தவர் ஜெயலலிதா. அதே போன்று உடனடியாக வாஜ்பாயி ஆட்சியை கவிழ்த்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரும் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவிற்கு இருந்த்து இந்து மதப்பற்று என்று சொல்வதை விட வைணவப்பற்று என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். பல பாலாஜிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த்தற்கு, ஜெயலலிதாவின் வைணவபற்றும் ஒரு காரணம்.
கோவிலில் ஆடு மாடு வெட்டக்கூடாது சட்டம் கொண்டு வந்தவரும் ஜெயலலிதாதான். சங்கராச்சாரியாரை கைது செய்தவரும் ஜெயலலிதாதான். திராவிட இயக்கத் தன்மையிலிருந்து ஜெயலலிதாவை முற்றிலும் விலக்கியும் பார்க்கமுடியாது,முற்றிலும் ஆதரித்தும் பார்க்கமுடியாது.
நடுவண் அரசும் ஜெயலலிதாவும்
ஈழத்தமிழர் விவகாரம்,காவிரி பிரச்சனை,முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் கடுமையான அழுத்த்த்தை நடுவண் அரசிற்கு கொடுத்தார். 2009 க்குப் பிறகு, ஈழஆதரவாளர்கள் பலருக்கு கருணாநிதி மீது இருந்த கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா.ஆரம்பத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஜெயலலிதா கடைசிகாலத்தில் ஈழத்தாயாக உருவகப்படுத்தப்பட்டார்.
தேசிய வளர்ச்சிக் குழு மாநாட்டில் தனக்கு பேச கூடுதல் நேரம் ஒதுக்கவில்லை என்பதற்காக இந்திய வரலாற்றிலே முதன்முறையாக வெளிநடப்பு செய்து இந்தியாவையே அதிர வைத்தார். காங்கிரசு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த்து.
2014 ல் மோடி பிரதமரானபோது, அதிமுக வலிமையான கட்சியாக தமிழகத்தில் இருந்த்து.. நீட் தேர்வு, ஜிஸ்டி வரி போன்ற விவகாரங்களில் மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் ஜெயலலிதா திண்ணமாக இருந்தார்.
2016 ல் மீண்டும் வெற்றிப்பெற்றபோது, அந்த வெற்றி கொண்டாடத்தக்க வெற்றியாக இல்லை. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக உருப்பெற்றிருந்த்து. மத்தியில் பலம் வாய்ந்த அரசு,மாநிலத்தில் பலமான எதிரக்கட்சி இந்த இரண்டையும் ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதை நமக்கு பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
எடப்பாடியார் அதிமுக
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்பது முழுக்க முழுக்க நடுவண் அரசின் கையடக்கமான ஆட்சி. நீட்,ஜிஎஸ்டி என எல்லாம் மத்திய அரசின் ஆணைக்கிணங்க செயல்படும் அரசாகவே நீடிக்கிறது. ம்க்கள் செல்வாக்கு இல்லாத ஆளுமைகள் என்பதால் மத்திய அரசை துணிச்சலாக எதிர்க்கும் துணிச்சல் இல்லை. ஜெயலலிதாவின் 91,2001,2011 மூன்று ஆட்சிக் காலங்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தார். எதிர்க்கட்சி மிகச் சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த்து. ஆக,மத்திய அரசிடம் மோதிப் பார்க்கும் துணிச்சல் இருந்த்து.
. எம்ஜிஆர் ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமான நட்பை விரும்பினார். இருந்தாலும்,தனது ஆட்சியை கவிழ்த்தபோது,”ஆட்சியை கவிழ்த்துவிட்டார்கள் நான் என்ன குற்றம் செய்தேன்” என்பதையே மக்கள் மன்றத்தில் கேள்வியாக வைத்து, தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை எம்ஜிஆர் பெற்றார்.
தற்போது மோடி அரசு எடப்பாடி அரசை கவிழ்த்துவிட்டால்,மக்களை சந்தித்து வெற்றிப் பெறும் மக்கள் செல்வாக்கு இல்லை. ஆகவே.அவர்கள் அனுசரித்து போகவேண்டிய நிலையில் உள்ளனர். வருமான வரி சோதனையைக் காட்டி மத்திய அரசு மிரட்டுவதாக சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் ஆட்சியிலும் ஊழல் வழக்குகள் இருந்தன. ரே கமிசன்,பால் கமிசன் போன்ற கமிட்டிகளெல்லாம் 80 களில் மிகவும் பிரபலம். ஜெயலலிதா ஆட்சியின் மீதும் ஊழல் வழக்குகள் இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதா மத்திய அரசோடு சமர் புரிந்த்தற்கு காரணம் அவருக்கு இருந்த ம்க்கள் செல்வாக்கு(crowd pulling personality).
எம்ஜிஆர் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். ஜெயலலிதா சமர் புரிந்தார்.எடப்பாடியார் மத்திய அரசின் சொல்படி கேட்டு நடக்கும் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட கட்சி இன்று மத்திய அரசின் கட்சி என்று வெளிப்படையாக விமர்சிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.
- ஜீவசகாப்தன்
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33475-2017-07-18-04-53-38கிராம நிர்வாக பொறுப்புகளில் பாராம்பரியாமாக இருந்த குடும்பங்கள் மட்டுமே வரவேண்டும் என்கிற முறையை ஓழித்து அனைத்து சமூகங்களும் வருவதற்கு வாய்ப்பளித்தவர் எம்ஜிஆர்.
தெருக்களில் இருந்த சாதிப் பெயரை நீக்கி அரசாணை பிறப்பித்தவர் எம்ஜிஆர்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழர் பக்கம் இருக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தவர்.
பெரியாரின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடி பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை அங்கீகரித்தவர்
்அய்ந்தாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற முறையை கொண்டு வந்து எளிய மக்களுக்கு ஆரம்பக் கல்வியை எளிதாக்கியவர்
கிறித்தவ நாடார்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து இடஓதுக்கீடு கிடைக்க வழிவகை செய்தவர்
எம்ஜிஆரை தமிழ்சமூகம் நினைவில் கொள்ள இது போன்ற விசயங்கள் இருக்கின்றன.ஆனால்,பெரும்பாலானோர் இது போன்ற விசயங்களை வெளிக்கொண்டு வருவதில்லை...