--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
தேசிய ஒருமைப்பாடு வாழ்க! புரட்சியும் வாழ்க!
அதே சமயம், போகிற போக்கில் கருத்து சொல்லும் கந்தசாமிகள் நிறைந்த சமூகம் என்பதால், வெள்ளிக்கிழமை மதியம் முதல் இரவு வரை, தேசியமும், புரட்சியும் ஒரே சமயத்தில் பீறிட்டுக் கிளம்பும் பதிவுகள் அதிகம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் குறைவு என்றே தோன்றுவதாக மையம் தெரிவித்துள்ளது.
அதனால்தானோ என்னமோ, இந்திய கிரிக்கெட் அணியும், இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியை மட்டும் விளையாடினால் போதும் என்று இந்திய தேசிய கார்பரேட் நிறுவனமான பிசிசிஐயும் முடிவு செய்திருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களை சற்றேனும் திசை திருப்ப வாலு படம் ரீலீஸ் செய்ய அனுமதித்திருப்பதாகவும், தனுஷ், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களை சேனல்கள் ஒளிபரப்பு செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அம்மையம் தெரிவித்தது!
முதல்ல, வைகோ பையன் சிகரெட் கம்பெனி நடத்துறார்னு சொல்லி டாஸ்மாக் அரசின் செயலை மறைக்கப் பாத்தாங்க!
வைகோவும், அதுக்கு ஏத்தா மாதிரியே, திருமாவையும், காவலர்களையும் திட்டி, கவனத்தை ஈர்த்தாரு!
இத்தனை நாளா சீன்ல இருந்த நம்ம மேல, லைம் லைட் உழுவலியேன்னு யோசிச்ச காடுவெட்டி கோஷ்டி, வழக்கம் போல ஊரைக் கொளுத்துனாங்க!
அதுக்குப்பறமும், அங்கங்க எதுவும் மிச்சம் மீதி பேசாம இருக்கனுங்கிறதுக்காக, இப்ப ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை! ஈவிகேஎஸ்சும், நான் தப்பே செய்யவில்லை எதற்கு மன்னிப்பு என்று, தானும் ரவுடி என்று நினைக்கப் பார்க்கிறார்!
மாணவர்கள் போராடலாமா, வன்முறை செய்யலாமா என்று பேசிய எந்த புனிதர்களும் தற்போதைய அதிமுகவின் செயல்களைப் பற்றி வாயைத் தொறக்கவே இல்லை! சந்திரலேகா, சென்னாரெட்டி, சுப்பிரமணிய சுவாமி, ஜானகி அம்மையார் மேல் குற்றம் போன்ற பிரச்சினைகளையும் வசதியா எல்லாரும் மறந்து விட்டனர்!
வக்கிரம் என்பது இளங்கோவன் சொன்ன வார்த்தைகளில் மட்டுமில்லை! ராஜிவ்காந்திங்கிற அதிமுக ஆளை வைச்சு, ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கைது செய்யனும்னு, அதே சசி பெருமாள் பாணியில் செல்ஃபோன் டவர்ல ஏறி போராட்டம்னு அறிவிக்கிற செயல்களிலும் இருக்கிறது!
இப்ப மது பிரச்சினையும் மறைந்துவிட்டது!. ஜெயலலிதா உண்மையிலேயே ஆக்டிவாக செயல்படுகிறாரா என்கிற கேள்வியும் மறைந்துவிட்டது!
10 நாளா பொறுப்பா நடந்துகிட்டு இருக்குறது கேப்டன் மட்டுந்தான்! ஆனாலும், அவரை மட்டம் தட்டும் செயல்களும், காமெடிக் காட்சிகள் மட்டுந்தான் வெளிய வருது!
நம்மாளுங்களுக்கும், ரோட்டை மறிச்சு பிரச்சினை பண்ணாதான் என்னான்னு பாக்குறாங்க! (அதுவும் பாக்குறது மட்டுந்தான்!)
"உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்...
லாலாலா லாலா லாலா லாலா..."
ஆகஸ்ட் 20.
சட்டசபையில் என்னைப்பற்றி என்னென்னமோ சொல்லியிருக்கார் முதல்வர் ஜெயலலிதா. ஒரு ஆண் மகனை, ஒரு பெண் விமர்சிக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை ஆண்கள் விமர்சிக்க கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே, ஆளுங்கட்சியினர் தற்போது புதிய போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஆகஸ்ட் 19.
அதிமுகவினரை ஜெ. கட்டுப்படுத்த வேண்டும்.
அரசியல் ரீதியான கருத்து விமர்சனத்தில் தனிமனித தாக்குதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.
இதுபோல நீங்கள் பிற கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கின்ற தனிமனித தாக்குதலுக்காக, தேமுதிக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும், அதிமுகவினரைப் போலவே சட்டத்தை கையில் எடுத்தால், காவல்துறை இதுபோல் வேடிக்கைப் பார்க்குமா?
ஆகஸ்ட் 18
ஒருபுறம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் மதுவால் பெண்களின் தாலியை பறிக்கும் செயல் குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுக்கிறது.
ஆகஸ்ட் 16
முதல்வர் சுதந்திர தின உரையில் மக்களுக்குப் பயன்தரும் அறிவிப்புகள் இல்லை. சட்ட மன்றத்தில் எப்படி நடைமுறை படுத்த முடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பாரோ, அதேபோன்று சுதந்திர தின உரையும், சுய விளம்பரத்திற்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, மக்களுக்குப் பயன்தரும் எந்த ஒரு அறிவிப்பும், இந்த சுதந்திரதின உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆகஸ்ட் 14
தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து விஜயகாந்த் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இக்குழுக் கூட்டத்தை அவசர கதியில் ரகசியமாக நடத்தியுள்ளனர். ஆளுங்கட்சிக்கும், அரசுக்கும் செய்த சேவைக்காக அனுகூலம் செய்யும் வகையில் மேற்கண்ட 3 பேரையும் நியமித்துள்ளனர்.
சட்டமன்ற நிகழ்வை ஒளிபரப்ப உரிமைக்கேட்டு மேல் முறையீடும் நடந்திருக்கு கேப்டன் சார்பா.
--
சொல்லி வைத்தாற் போன்று நேத்து எல்லா டிவிகளிலும், சென்சஸ் சொல்லுவது என்ன என்பதுதான் விவாதம்!
புதிய தலைமுறையில், பாஜக ஆதரவாளர்னு (இந்த அடைமொழியை எங்கிருந்து புடிக்கிறாங்க) ஒருத்தர், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கனும்னு ஆர்ப்பாட்டம் பண்ண இஸ்லாமிய க்ரூப்புலருந்து ஒருத்தரு (பேரு மறந்து போச்சு), ஒரு பேராசிரியர் அப்புறம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன்!
கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் எப்பொழுதும் ஏற்படும் பரிதாபம் அப்பொழுதும் அருணன் மேல் வந்தது! இவரு விவாதத்துல ஐடியலிஸ்ட் பாயிண்ட்டுகளோட பேசுவாரே, இப்போதைய ட்ரெண்டுக்கு, அது வெளங்காதேன்னு பாவமா இருந்துச்சு!
இந்துக்களின் அடையாளத்தை முன்னிறுத்துகின்ற அந்த பாஜக ஆதரவாளர்க்கு, க்ரோத்துக்கும், மக்கள் தொகைக்குமே முழு வித்தியாசம் தெரியலை. வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் வெச்சு ஒப்பேத்திட்டிருந்தார், ஆனா தீம் என்னான்னா, நாங்க ஏற்கனவே சொன்னா மாதிரி, முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருக்கிறதுங்கிரது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிட்டிருந்தாரு!
அடுத்து பேசிய இஸ்லாமியரோ சம்பந்தமே இல்லாம இந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரம பிரிவு, ஒருத்தரால இந்துவா மாற முடியாது, ஏன்னா எந்த ஜாதிக்குன்னு மாறுவாங்க, ஆனா தமிழ்நாட்டுலியே பெரியார்தாசன், யுவன் சங்கர் ராஜா, நடிகை மோனிகால்லாம் இஸ்லாமுக்கு மாறுனாங்கன்னு ஆரம்பிச்சாரு!
இரு மதங்களை ரெப்ரசெண்ட் செய்யும் இந்த இருவருமே, இன்னொரு மதத்தைப் பற்றி குற்றம் சொல்லுவதிலே மட்டுமே அதிக கவனம் செலுத்தினர்!
பிஜேபி மதச்சார்பற்ற கட்சி என்று சொன்னால், இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்கள் சிரித்து விடக் கூடிய அளவிற்கு அவர்களுடைய சார்பு நிலை, இன்னொரு மதத்திற்கு எதிராக அவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகள் எல்லாவற்றையும் பலரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்!
ஆனால், பிஜேபி பேச்சாளர்கள் செய்யும் அதே வேலையை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் முன்னெடுக்கும் போது எரிச்சலே மிஞ்சுகிறது.
பொது ஜன சமூகத்தின் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு கருத்தியலை, மனப்பான்மையை பிஜேபி மற்றும் இதர இந்துத்துவா கட்சிகள் முன்னெடுப்பது வேறு விஷயம். ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலையை, செயலை இந்த இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கின்றன!
ஏற்கனவே, அப்துல்கலாமை ஒரு முஸ்லீமாகக் கூட ஏற்றுக் கொள்ளாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் போக்கு செல்லும் திசை கவலையைத்தான் அளிக்கிறது!
இது போன்ற அமைப்புகளினால், மக்களுக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ, அந்த அமைப்புகளுக்கும், பிஜேபிக்கும் கண்டிப்பாக பயன் இருக்கிறது!
ஐநாக்ஸ் தியேட்டர்களில் முன்பெல்லாம் படம் முடிந்த உடன் தேசிய கீதம் போடுவார்கள்! பலர் அதை மதிப்பதில்லை என்ற காரணத்தினால் சில தியேட்டர்களில் அதைப் போடுவதில்லை என்று கேள்வி!
சில தியேட்டர்களில், இதைத் தவிர்க்க படம் போடுவதற்க்கு முன்பே போடுகிறார்கள்! ரெகுலரா, அந்த தியேட்டர்களுக்கு செல்பவர்கள், அதை உணர்ந்து, பாப்கார்ன் இன்ன பிறவற்றை வாங்கி தேசிய கீதம் முடிந்த உடன் உள்ளே வருவர்!
ஒரு மாதத்திற்க்கு முன்பு, எனது குழந்தையின் விளையாட்டு தின நிகழ்ச்சியின் முடிவில், தேசிய கீதத்தின் போது பலர் நிற்கையில், பலர் அந்தத் தருணத்தை பயன்படுத்தி பேருந்தில் இடம் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர்!
கேரள உயர்நீதிமன்றம் என்று நினைக்கிறேன், பள்ளிகளில் தேசியகீதம் கட்டாயமில்லை, அரசும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கிறது!
எந்த கிரிக்கெட் முதலான போட்டிகளின் வழியே தேச பக்தி ஊட்டப்படுகின்றதோ, அந்தப் போட்டிகளில் தேசியகீதம் பாடும் பொழுது, பலரும் ஜாலியாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
பாரிசில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அஞ்சலி செலுத்த ஒன்று கூடிய மக்கள், தன்னிச்சையாக, கண்களில் நீர் வழிய அந்நாட்டு தேசிய கீதத்தை பாடினர்!
கடைசியாக, நம் நாட்டின் தேசிய விலங்கு புலி!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com