மாட்டிறைச்சி தடை பண்பாட்டு, ஆரோக்கிய, பொருளாதார, சமூகரீதியில் நியாயமானதா?- 2
ஆரோக்கியம்:
மிக, மிக அரிதாக கிடைக்கும் கருங்குரங்கு ரத்தம், சீல் போன்ற பொருக்ட்ளை எல்லாம் விட்டுவிட்டு கமர்சியலாக கிடைக்கும் உணவுகளை எடுத்தால் உலகின் மிக, மிக ஆரோக்கியமான உணவு மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும்தான் (எருமை, பைசன் உட்பட). அடுத்த நிலையில் லேம்ப், ஆட்டிறைச்சி வரும். சுவை என எடுத்துக்கொண்டால் நபரை பொறுத்தும், டேஸ்டை பொறுத்தும் சுவை மாறுமெனினும் உலகின் மிக சுவையான உணவுகளில் ஸ்டேக்கும், பேகனும் முதன்மை இடம்பெறும். ஆனால் பேகனுக்கு ரசிகர்கள் அதிகம் :-)
அதனால் தான் உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சியில் முதலிடம் மாட்டிறைச்சிக்கும், மிக க்ளோஸ் ஆன இரண்டாமிடம் பன்றி இறைச்சிக்கும் இருக்கிறது. மாட்டிறைச்சியை விட ஆரோக்கியமான உணவை (புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்) அடிப்படையில் தேட ரொம்ப சிரமப்படவேண்டும். ஆக உடல்நலம் எனும் ரீதியில் பார்த்தால் உலகின் மிக, மிக ஆரோக்கிய உணவுகளில் ஒன்றுக்கு தடை விதிப்பது மிக, மிகப் பிழையானது.
ஜீவகாருண்யம்- கோமாதா- பால் தரும் பசு: வாதங்கள்
விவசாயகுடிமக்கள் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். பொங்கலன்று மாட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள். மாடு என்றால் செல்வம் என்றே பொருள். ஆக பசுமாடு விவசாயபெருங்குமக்களுக்கு புனிதமானது எனும் வாதத்தை எடுப்போம்.
பசு விவசாயிகளுக்கு மிக முக்கியமான மிருகம், செல்வம். பசுக்களை அழிப்பது நாட்டின் செல்வத்தை அழிப்பதற்கு ஒப்பானது. அதனால் தான் மதுரையை எரித்த கண்ணகி கூட பசுவை அழிக்கவேண்டாம் என தீயிடம் கூறுகிறாள். அதே சமயம் பசு "வழிபடத்தகுந்தௌயிரினம், தாய்க்கு சமமானது" என சிலம்பிலோ, குறளிலோ, சங்க இலக்கியத்திலோ, ஏன் பக்தி இலக்கியங்களிலோ கூட இல்லை
"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்" என பசுக்களை நாட்டின் வளத்தின் ஒரு பகுதியாக, மக்களின் வாழ்க்கைமுறையில் கொண்டாடும் விதங்களில் தான் நம் இலக்கியங்கள் கூறுகின்றன. பசுவிற்கு மரியாதை அளிக்கபட்டது, கொன்டாடபட்டது, செல்வத்தின் அறிகுறியாக கருதபட்டது. ஆனால் தெய்வமாக அல்லது தாயாக கருதபடவில்லை. வணங்கப்படவில்லை. இந்த வேறுபாடு மிக முக்கியமானதாகும்.
"கோமாதா எங்கள் குலமாதா" எல்லாம் மிக, மிக பிற்காலம். கோமாதாவில் வரும் மாதா தமிழ் சொல் அல்ல. கோமாதாவுக்கு ஒப்பான பசுத்தாய், ஆவன்னை என்பது போன்ற எந்த சொல்லும் தமிழில் இல்லை. பசுவை தாயாக, தெய்வமாக மதிக்கும் மரபு தமிழ்மண்ணில் இல்லை. அதை உயர்ந்த செல்வமாக, வளமையின் அறிகுறியாக, அன்புக்குகந்த ஒரு பிராணியாகவே கருதினார்கள். ஆனால் பசு தாய்க்கு ஒப்பானது என சொல்பவர்கள் தமிழ்மரபில் இல்லாத ஒரு விசயத்தைதான் சொல்கிறார்கள். தாய்க்கு எப்படி ஒரு பிராணி ஈடாகமுடியும்? அது என்னதான் செல்லபிராணியாக இருப்பினும்?
பசு விவசாயிகளின் வாழ்வில் முக்கிய அங்கம். விவசாயிகளின் வாழ்க்கையை அறிந்த யாரும் பசுக்களை போற்றும், பொங்கல் கொன்டாடும் அதெ விவசாயி அதை விற்கவும் செய்வான் என்பதை உணர்வார்கள். விற்பதால் பசு கொல்லபடும் என்பதை விவசாயி அறிந்தே இருக்கிறார். இத்தனை நாள் வளர்த்த மாடு விற்க்கபடும் நாள் விவசாயிகளின் வீட்டில் ஒரு துயரமான நாள். மனதிற்குள்ளாவது அழுது, கண்ணீர் வடித்தபடிதான் அவர்களும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் பசுக்களை விற்பார்கள். அவர்களை பொறுத்தவரை அது அப்பசு இறக்கும் நாள். வீட்டில் இறந்த வயதான பெரியவர்களை வழியனுப்பி வைப்பதுபோல் தான் அது. பிறப்பும், இறப்பும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகள். இப்படி ஒரு தத்துவார்த்தமான விதங்களில் தான் மக்கள் அடிமாடாக பசு விற்கபடுவதை பிராக்டிக்கலாக எடுத்துகொண்டார்கள்.
செல்வம், சொத்து என்கையில் சொத்தை விற்பதும், வேறு ஒரு சொத்தை வாங்குவது போல் தான் இதுவும். வாழும்வரை தாத்தா,பாட்டி இருந்த வீடு என வீட்டை கொன்டாடி மகிழ்கிறோம். அதை ஒரு சமயம் விற்றுவிட்டு வேறுவீட்டில் குடியேறத்தான் செய்கிறோம். அதுபோல் தான் இதுவும்.
குடியானவர்களின் பொருளாதாரமே இப்படி மாடுகளை வாங்கி, பயனுள்ளவரை வைத்திருந்து, அதன்பின் விற்பதில் தான் அடங்கி உள்ளது. 50 வருடம் வைத்திருந்த மெசின் என சொல்லி எந்த கம்பனியிலாவது பழைய எந்திரங்களை விற்காமல் அப்படியே வைத்திருக்கிறார்களா? இயந்திரங்கள் ஓடும்வரை ஆயுதபூஜை எல்லாம் கொன்டாடி, எண்ணெய் போட்டு துடைத்து வைப்பார்கள். விற்பது என்றால் அந்த சென்டிமெண்ட்டை பார்க்காமல் விற்கத்தான் செய்வார்க்ள். விவசாயிகளும் அப்படித்தான். அவர்களுக்கு மாடு தொழில் செய்ய பயன்படும் ஒரு உயிருள்ள இயந்திரம். உயிர் என்பதால் சற்று செண்டிமெண்ட் பார்க்கிரார்கள். ஆனால் அதையே பலவீனமாக பயன்படுத்தி அவர்களை குற்ற உனர்வுக்குள் தள்ள முயல்வது அத்தொழிலையே நசித்துபோக செய்துவிடும். பால் அருந்தும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் இந்த உணவுசங்கிலியில் அடங்கவே செய்கிறோம்.
பிராக்டிக்கலாக பார்த்தால் காளைக்கன்றுகளை விற்பதும், பால் கறப்பு நின்று போன மாடுகளை அடிமாடுகளாக விற்பதும் விவசாயதொழிலில் அவசியம். அதை செய்யகூடாது என்றால் மாடுகளுக்கு தீனி போட்டு கட்டுபடி ஆகாமல் அவர்கள் பிழைப்பு படுத்துவிடும். கோசாலைகளில் கொண்டுபோய் விடலாம் என சொல்லவேண்டாம். இந்தியாவில் உள்ள மாடுகளின் எண்ணிக்கைக்கும், கோசாலைகள் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் கோசாலைகளில் சேர்க்கும் மாடுகளும் வயது முதிர்ந்து, வியாதி முற்றி, சிகிச்சை இன்றி இறக்கத்தான் செய்கின்றன. அங்கெயும் நோய் முற்றிய மாடுகளை கருணைக்கொலை என்பது போல செய்யத்தான் செய்கிரார்கள். என்ன வெட்டிகொல்வதில்லை. அதற்கு பதில் தீவனம் போடாமல், சிகிச்சை அளிக்காமல் சாகவிடுகிறார்கள்.
மனிதனை அன்றி உலகில் எந்த உயிரினத்துக்கும் வயது ஆகி மரணம் அடைவது எனும் நிலை இல்லை. அனைத்து உயிரினங்களும் கொல்லபட்டு, இன்னொரு உயிரினத்துக்கு உணவாகி இறக்கவே செய்கின்றன.
மாட்டிரைச்சியை தடுத்தால் பால்வளம் பெருகுமா?
இப்படி சொல்கிறவர்கள் பால்வளம் மிகுதியாக இருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தான் மாட்டிரைச்சியும் அதிகமாக உண்ணபடுவது எப்படி என்பதை விளக்கவேண்டும்.
விவசாயிகள் முட்டாள்கள் அல்ல. பால்தரும் பசுமாட்டை பைத்தியகாரன் கூட விற்கபட்டான். காளைக்கன்றுகள், அடிமாடுகள் அல்லது இறைச்சிக்கென்றே பிரத்யெகமாக வரும் மாடுகள் மட்டுமெ சந்தைக்கு வருகின்றன. வெகு, வெகு அரிதாக சில பசுக்கள் வரலாம். அவை வரகாரணமும் எலும்புமுறிவு, பால் சரியாக சுரக்காதது போன்றகாரணமாக இருக்கலாம். ஆக ஒட்டுமொத்தமாக பால்வளத்தை காக்கவே மாட்டிரைச்சி தடை என்பது பொருந்தாத வாதம். பால்வளத்தை பெருக்க மாட்டுவணிகம் நல்லபடி நடப்பது அவசியம்.
மற்றபடி:
அரசியல்ரீதியில் இது நோ-பிரெய்னர். தமிழ்நாடு, கேரளாவில் இதை எதிர்த்தாலும் அந்த இரண்டுமாநிலங்களும் தற்போதைய மத்திய அரசுக்கு ஆட்சி அமைக்க அவசியமற்றவை. வடக்கே நானறிந்தவரை மாட்டிரைச்சி என்பது அரசியல் பிரச்சனையே அல்ல. முலாயம் சிங்க் யாதவின் மருமகள் ட்விட்டரில் மாட்டை கொல்பவர்கள் சாத்தானுக்கு ஒப்பானவர்கள் என்ப்து போல ட்விட்டர் அனுப்பியிருந்தார். லாலுபிரசாத் யாதவ் பீகார் தேர்தல் சமயம் மாட்டிரைச்சி உண்பது சரி என்பது போல சொல்லிவிட்டு பின் 'சாத்தான் என் வாயில் புகுந்து அப்படி சொல்ல்வைத்துவிட்டது' என மன்னிப்பு கேட்டார். காரணம் இவர்களின் சாதியினரான "யாதவ்கள்" மாடுகளை தெய்வமாக மதிப்பவர்கள்.
டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்த சமயம் டெல்லி காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு பீஃப் உணவாக கொடுக்கக்கபடகூடாது என சட்டம் இயற்றியது. ஆக வடக்கே இது தமிழகம், கர்நாடகாவில் இருப்பது போன்ற பிளவை ஏற்படுத்தும் பிரச்சனையே அல்ல. வடக்கே நிலவும் மரபுகளும், நம்பிக்கைகளும் வேறானவை. அவர்களால் அதைதாண்டி இப்பிரச்சனையை ஒரு பன்முகத்தன்மை கொன்ட பார்வையில் அணுகமுடிவது இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படிப்பட்ட பார்வை இருப்பதே அவசியம். அவர்களும் ஜல்லிகட்டு, இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் கூட தமிழ்க நிலையை புரிந்துகொண்டு உத்தரவுகளை வாபஸ் வாங்கினார்கள். ஆனால் இது அவர்களுக்கு வாபஸ் வாங்கமுடியாத உணர்வுகரமான பிரச்சனை. பெடாவின் லாபியும் இதில் மிகுதியாக இருப்பதாக கருதுகிறேன்.
மற்றபடி இதை வைத்து தேர்தலில் ஆதரவு- எதிர்ப்பு என எப்படியும் பெரிய இம்பாக்ட் இருக்கும் என கணிக்கமுடியாது