நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்.
இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது..
ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும். '
'நாலு வேலி நிலம் ' பற்றி இதுவரை நான் அறியாத தகவல் ஒன்றை நண்பர் கொடுத்தார். அது இதுதான் -
படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
கருடன் (கருளன்/கலுழன்) இன்னொரு பெயர் உவணம், சங்க இலக்கியச் சொல். ஸுபர்ண > உவண- என்பார் வையாபுரிப்பிள்ளை.செம்பருந்து - இரணியவதைப் பரணி பாடல் காட்டினேன். பதிப்பாசிரியர்: நா. வரதராஜுலு நாயுடு அக்கௌண்ட்டிங்கில்இந்தியாவில் உயர்பதவி வகித்தவர். எல் ஐ சி பில்டிங் மற்ற ஊர்களுக்குப் போகாமல் சென்னை வர அவர் முயற்சி காரணம்.அவரது பாட்டனார் முத்துநாயுடு (வேணுகோபாலநாயுடு) இரணியவதைப்பரணி, மாறனகப்பொருள், ஆண்டாள் பிள்ளைத்தமிழ், .... போன்றனஏட்டிலிருந்து பதிப்பித்தவர். நா. வ. குடும்பத்தை நன்கறிவேன். கடைசியாய் கோவைப்புதூரில் இருந்தார். தமிழிசை அறிஞர்குடந்தை ப. சுந்தரேசனாரை ஆதரித்தவர். அவரால், நா. மகாலிங்கத்துக்கு குடந்தையார் சினேகம் கிடைத்தது. தெய்வசிகாமணிக்கவுண்டரிடம் ஏடுகள் வாங்குவது கடினம்: நா. ம. சாதித்தார், குடந்தை சுந்தரேசனாரை வைத்து “பஞ்சமரபு” பதிப்பித்தார்.கிருஷ்ணன்(விஷ்ணு) வாஹனம் எனவே, கிருஷ்ணப்பருந்து (மலையாளத்தில்).செம்பருந்து - கருடனின் தமிழ்ப் பெயர்:இரணியவதைப்பரணிவெம்பகைஞர் உடல்உகுசெம் புனலூடு ஆடி
வெள்நிணமும் பசுந்துளவும் விரவி நாறச்
செம்பருந்து விருந்தாரச் சிறைவண்டு ஆர்க்கும்
தெய்வநெடுஞ் சுடர்வடிவாள் சிந்தை செய்வாம்:எருவை - செம்பருந்து (எரி போன்ற நிறத்தால் வரும் ஆகுபெயர்) - பாவாணர் கருத்துஎருவை = செம்பருந்து (கருடன்) என்பதற்கு இலக்கியச் சான்று சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் பாடல்.உவேசா பதிப்பின் பின்னர் சுன்னாகப் பெரும்புலவர் கருத்துக்கள் எழுதுவார், இரண்டாம் பதிப்பில்உவேசா அவற்றைக் கையாண்டிருக்கிறார்.தமிழாசான் ஜோசப் விஜு சுண்ணாகம் புலவரின் பாடல் - நான்கே அடிகளில் இராமாயணம் - தந்துள்ளார்:தாதையார் சொலராமன் காடு போதல்சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்சீதையார் பிரிவுஎருவை மரணம் பானுசேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!எருவை = செம்பருந்து (கருடன்), தழலெரி போலும் வண்ணத்தான் வந்த ஆகுபெயர் எருவை.எல்லா பருந்து, கழுகு, வல்லூறு வகைகளும் எருவை எனச் சொல்லமுடியாது.எரி நிறத்தில் உள்ளவை, பிரதானமாக கருடன், எருவை எனலாம்.சங்கப்பாடல்களில் எருவைப்புள்[தொகு]
- எருவை ஒரு புலால் உண்ணி.[1]
- எருவையின் மூக்கு வளைந்திருக்கும்.[2]
- கழுகு வேறு. செஞ்செவி எருவை வேறு.[3]
- எருவை வேறு, பருந்து வேறு. எருவைக்குத் தலை பெரிதாக இருக்கும்.[4]
- இரத்த நிறம் கொண்ட எருவை ஒருவகை.[5]
- இதனைக் குருதி நிறம் கொண்ட எருவை என்னும் பொருள் படும்படிக் குருதி எருவை எனக் குறிப்பிடுவர். [6]
- கழுத்து வெள்ளையாய் இருக்கும் எருவை இனமும் உண்டு.[7] இதனை இக்காலத்தில் கருடன் என்கின்றனர்.
- பெண்-எருவையின் கழுத்தில் புள்ளிச் சிறகுகள் இருக்கும். ஆண்-எருவை எழால் என்னும் புல்லூறு-பறவையோடு சேர்ந்து பறப்பது உண்டு.[8]
- எருவை உயிருள்ள மனிதர்களையும் தாக்கும்.[9]
- காட்டு வழியில் செல்வோர் எருவையிடம் கவனமாக இருக்க வேண்டும். [10]
- ஆண்-எருவையைச் சேவல் என்பர்.[11]
- எருவையின் சிறகு வலிமையானது.[12]
- பறையொலி கேட்டால் எருவை பறந்து ஓடும்.[13]
- போர்க்களங்களில் இறந்தவர்களின் பிணத்தைத் தின்பதற்காக வானில் வட்டமிடும்.[14]
- போர் வெற்றியின் அடையாளமாக நடப்படும் வெற்றித் தூணை எருவை தன் இருக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும். [15]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ நிணன் அருந்து செஞ்செவி எருவை - புறம் 373
- ↑ கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை - அகம் 3
- ↑ கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும் - புறம் 370
- ↑ கொலைவில் ஆடவர் போலப், பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அஞ்சுரம் – அகம் 97
- ↑ நெய்த்தோர் அன்ன செவ்விய எருவை - ஐங்குறுநூறு 335
- ↑ குரூஉச்சிறை எருவை குருதி ஆர - பதிற்றுப்பத்து 67
- ↑ வால்நிற எருத்தின் அணிந்த போலும் செஞ்செவி எருவை - அகம் 193
- ↑ புள்ளி எருத்தின் புன்புடை எருவைப்பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய - பதிற்றுப்பத்து 36
- ↑ தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர செஞ்செவி எருவை அஞ்சுவர இறுக்கும் - அகம் 77
- ↑ இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் (வம்பலர்) - அகம் 285
- ↑ எருவைச் சேவல் - நற்றிணை 298
- ↑ எருவை இருஞ்சிறை இரீஇய - அகம் 291
- ↑ சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் - அகம் 297
- ↑ பறந்தலை விசும்பு ஆடு எருவை - புறம் 64
- ↑ எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் - புறம் 224
(நன்றி: தமிழ் விக்கி)