சினிமா என்பது
எதார்த்தை சொல்கிறது என்பதே மிக சிக்கலான ஒரு பார்வையாகும் -சினிமாவில் அரசியல் இருக்கிறது முக்கியமாக சாதி
அரசியல் இருக்கிறது.
சினிமாவில் தேவர்
சாதி அரசியல் கவுண்டர் சாதி அரசியல் மற்றும் ஆதிக்க சாதி அரசியல் என்பது மிகுந்த கவனத்துடன்
ஊடாட விடப்படுவது மட்டுமின்றி சினிமாவில் அவை சேர்க்கப்படுவதுடன் சமூகத்தின் அதன் விளை
பயனை அடைகிறோம் .
தேவர் மகன் , வெயில்,
பருத்தி வீரன் , கொம்பன் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை வீரர் புருசர்களாகவும்
அதன் எதிர்முகமாக மற்ற சாதியினர் அவர்களின் அடிமைகள் அல்லது பயந்தவர்கள் என சொல்லாமல்
சொல்கிறது .
இத்தகைய சினிமாக்களை
எதிர்த்து மிக நெடிய போராட்டம் என்பது நடத்தப்பட வேண்டி உள்ளது.
சாதி என்கிற நிலபிரபுத்துவ
விழுமியம் மெல்ல கலைந்து வர்க்கமாக மக்கள்
திரளுவதை தடை செய்யும் முகமாக இன்றைய சினிமாக்கள் அமைந்தது எதார்த்தமான விசயமல்ல .
1990 களுக்கு பிறகு
சமூகத்தில் சாதி அடையாளங்களுடன் கட்சிகள் தோன்றியதும் அவை தமிழகத்தின் அரசியல் கோரிக்கைகள்
என்கிற எதுவும் இன்றி எந்த கொள்கை முழக்கமும் இன்றி சாதிய அணி திரட்டலுடன் மக்களை சேர்த்து
ஓட்டு வங்கிகளை உருவாக்க தொடங்கின.
சாதியை எதிர்த்த
இன ஒற்றுமையை வலியுறுத்தி பேசிய திமுக அதிமுகவுமே வன்னிய சாதிக்கும் தேவர் சாதிக்கும்
சில இடங்களில் முக்கியதுவம் தரத்தொடங்கின.
இவற்றின் மழை தற்போது
குறைய தொடங்கி விட்டது என சொல்லலாம்
ஆனால் இன்னும்
முடியவில்லை .
எதார்த்தம் என்ற
பெயரில் சாதிய அடையாளங்களையும் சாதிய வீண் பெருமைகளையும் பேசியே காசு பார்த்துவிட முடியும்
என்கிற கலை மனதை படைத்தோர் உருவாக ஆரம்பித்தது நமது சமூகத்தின் சாபக்கேடு
அப்படி பட்ட ஒரு
படம்தான் சுந்தரபாண்டியன்.
படத்தின் மையம்
என்னவோ –காதலாக இருந்தாலும் அதன் அடிசரடு சாதிய விழுமியத்தை காட்டுவதே மற்றப்டி நண்பனின்
துரோகம் மீளாத காதல்
காவிய காதல் என்பதெல்லாம்
மேல் பூச்சு வேலையே.
பருத்தி வீரன்
என்ற படத்திலும் சாதிய விழுமியங்களே எதார்த்தமானதாக காட்டப்படுவதும் – படத்தின் கடைசி
டிவிஸ்டில் மட்டும் நியாய தர்மங்களின் விளைவு பற்றி பேசுவதும் பொதுமக்களை ஏமாற்றவே.
கிராமங்களில் சாதி
என்பது நெகிழ்ச்சியாகி மக்களின் வாழ்நிலையில் இருந்து சாதியை மக்கள் தூக்கி எறியும்
நிலையில் .
அவர்களின் உற்பத்தி
உறவுகளில் சாதி இல்லாமல் இருக்கும் நிலையில்
பருத்தி வீரன்களும்
, சுப்பரமணிய புரமும் , சுந்தரபாண்டியும்
ஒட்டாமல் நிற்கிற
கதைகளே.
அணைந்து போன தீயை
ஊதி ஊதி பெருசாக்கினால் இவர்களுக்கு லாபம்
கிடைக்கலாம்
பதவி அந்தஸ்து
பணம் சம்பாதிக்க சாதியை சினிமாக்காரர்கள் கையில் எடுப்பது இருபக்கமும் கூர் உள்ள கத்தியை
கையில் எடுப்பது போலத்தான்.
நடிகர் சிவக்குமார் இதை கவனித்தாரான்னு தெரியலை ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஒரு சாதியின் வீரனாக (அவர் சொந்த சாதி அல்ல) காட்டி சினிமா புகழ் அடைவது மற்றவர்கள் மனதில் பெரிய கேள்விகளை உருவாக்குகிறது .
இதில் என்ன காமெடி என்றால் சினிமாவில் எந்த சாதி ஆதிக்க படங்களில் வேண்டுமானாலும் நடித்து கொண்டு வெளியே மேடைகளில் சாதி எதிர்ப்பை மேடை பேச்சுக்காக பேசுவார்களாம்.
இதைத்தான் முகநூல் போன்ற இடங்களில் விமர்சிக்கிறார்கள்.
சினிமா +சாதி = அரசியல் என்கிற கலவை பார்முலாவை அனைவரும்
அறிந்து வைத்திருக்க வேண்டும் .
சினிமாவின் அரசியல் என்பது சாதியை தூண்டி விடும் அரசியல் என்பதையும் அது மக்களை பிரிக்கும் முயற்சி என்பதையும்
நடிகர்கள் தெரிந்து வைக்கவும் அத்தகைய கதைகளை தவிர்க்கவும் வேண்டும் .
கொக்க கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு சுதேசின்னு பேசினால் எப்படி
அம்மாதிரி நடிகர்கள் - சமூக சிந்தனை உடையவர்களாக மாற அவர்களின் வயது 70 அல்ல .
தற்போதிருந்தே மாற முயற்சிக்கனும் .