எஸ்கிமோக்களுடன் ஏழாண்டுகள் வசித்த இருவர் அமெரிக்கா வந்து ஏழு ஆண்டுகளும் தாங்கள் முழுக்க இறைச்சி மட்டுமே உண்டதாகவும், ஒரே ஒரு இலை, தழை கூட அந்த பூமியில் இல்லாததால் காய்கறியை தொடவே இல்லை எனவும் கூறினார்கள்.
ஏழாண்டுகள் காய்கறி இல்லாமல் இருந்தால் வைட்டமின் சி தட்டுபாடு வந்து இறந்துவிடுவார்கள் என அப்போது நம்பபட்டது. கொலம்பஸின் கப்பல் மாலுமிகள் வெறும் 3 மாதத்தில் காய்கறிகள் இல்லாமல் வைட்டமின் சி குறைபாடால் பெரி,பெரி வந்து அவதிபட்டார்கள். ஆக இவர்கள் சொன்னது உண்மையா என்பதை அறிய ஒரு ஆண்டு முழுக்க இவர்கள் இருவருக்கும் வெறும் சமைத்த இறைச்சி மாத்திரம் வழங்கபட்டது. வேறு ஏதும் உண்கிறார்களா என்பதை கண்காணிக்க தினமும் பிளட் சுகர் டெஸ்ட் எடுக்கபட்டது.
ஒரு ஆண்டு முடிவில் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். அவர்களில் சொட்டை தலையுடன் இருந்த ஒருவருக்கு தலையில் முடியும் முளைத்துவிட்டது