மாஸ்லோ...மாஸ்லோன்னு ஒரு ஆள் இருந்தாரு..
அவரு இன்னா சொன்னாருன்னா, ஒவ்வொரு மனுசனுக்கும் தேவைகள் இருக்கும்.
அந்த தேவைகளை நோக்கிய பயணத்தைத்தான் அவன் தேடுவான்னாரு...
இதுக்கு Maslow's Hierarchyன்னு பேரு வச்சிக்கினாரு..
அதுல கடைசியா, Self Actualisationன்னு ஒன்னு சொல்லுவாரு... அந்த லெவல்ல இருக்குறவங்க தான் நகைச்சுவை எழுத்தாளர்கள். மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு நினைச்சிக்கிட்டு எழுதிட்டு இருந்தா, நம்ம கடமை தீராது. நாம எழுதிட்டு போய்ட்டே இருப்போம்.
வாழும்போதெல்லாம் கண்டுக்காம, கடைசில “மாண்டு போனான் மகாகவி” அப்படின்னு ஒரு கவிதை எழுதி இருப்பாரு வைரமுத்து...
அப்படி போய்ட்டே இருக்கணும் ;))
நாம யாருக்கு எழுதுறோம்? Self Actualisation. அப்புறம் எதுக்கு அடுத்தவங்க பாராட்டணும்னு நினைக்கணும்???