A raging debate has been unfolding since yesterday as to how Smriti Irani, who is just a high school pass-out, could be made the Minister of Human Resources Development (HRD) in the Modi Cabinet. Ministry of HRD as we all know deals with primary and secondary education, adult education, literacy, university education, scholarship etc. In fact, till 1985 it used to be called the Education Ministry. So the big question is why did Narendra Modi hand over such an important ministry to someone who clearly doesn’t have the desired qualifications for it?
As it happens, several people dug up all sorts of tid-bits about Smriti Irani and her past as part of this ongoing controversy, some of which was unfortunately used as part of a highly sexist commentary on social media. What seems to be a bigger controversy in offing is that Smriti Irani’s declared educational qualifications as part of her sworn affidavits in the 2004 and 2014 elections do not match. While in 2004, she declared herself to be a 1996 batch B.A. pass-out from Delhi University, in 2014 that has magically changed to 1994 batch B.Com Part 1 from Delhi University. Her 2004 affidavit can be accessed here while a zipped version of her 2014 affidavit can be accessed here at serial no 3. We are showing here excerpts of her affidavits which clearly shows that she has lied on sworn affidavits.
Clearly, it is an embarrassment for the country when the Education Minister lies about her own education. Will Narendra Modi act or would he just let this issue be a never-ending embarrassment for India?
Posted Date : 10:30 (01/06/2014)Last updated : 12:42 (01/06/2014)
ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே 33 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். |
முரண்பாடான கருத்துக்களின் மோதலில்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் வைக்கப்படும். ஜனநாயகத்தில் முரண்பாடான கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். விளம்பரம் என்றால் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் ஆட்சியாளர்கள், தங்களை நோக்கி விமர்சனம் என்று வரும்போது அதிகாரத்தின் துணையோடு அதன் குரல்வளையை நெரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் அந்த அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளன.
கோவாவில் வசித்துவரும் மும்பை இளைஞர் அவர். பெயர் தேவு சோடன்கர். இவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்துள்ளார். அதில் ஒன்று, 'மோடி அதிகாரத்துக்கு வந்துவிட்டார். இனி சர்வநாசமும் அதிகாரத்துக்கு வந்துவிடும்’ என்பது. அவரின் தொடர் தாக்குதல்களால் எரிச்சலடைந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த அதுல் பைகானே என்பவர், தேவு சோடன்கர் மீது போலீஸில் புகார் செய்தார். கோவாவில் இப்போது பி.ஜே.பி ஆட்சியில் இருக்கிறது. புகார் கொடுத்தவர் ஆளும் கட்சிக்காரர். பிரதமருக்கு ஆதரவாகக் கொடுக்கப்பட்ட புகார் வேறு. கேட்கவா வேண்டும்? விரைந்து செயல்பட்ட கோவா போலீஸார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம்... என பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ், தேவு சோடன்கர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இரண்டு சம்மன்கள் தேவு சோடன்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தலைமறைவான அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் தேவு சோடன்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மங்களூரைச் சேர்ந்த சையது வக்கார் என்ற எம்.பி.ஏ பட்டதாரியும் இதேபோல் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்-அப்பில் இவர் அனுப்பிய குறுஞ்செய்தியே இந்தக் கைதுக்கு காரணம். 'அப் கி பார் மோடி சர்க்கார்’ என்பதை கொஞ்சம் மாற்றி 'அப் கி பார் அந்திம் சன்ஸ்கார்’ என்று எழுதி அனுப்பியிருந்தார். இதன் அர்த்தம், 'இந்த முறை மோடி ஆட்சி என்பதற்கு பதிலாக’, 'இந்த முறை இறுதி அஞ்சலி’ என்பதாகும். அத்துடன் அதில் அனுப்பியிருந்த படத்தில் மோடியின் இறுதிச் சடங்கில் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொள்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்கள் மத்தியில் லேசான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ''இந்த இரண்டு சம்பவங்களையே முன்மாதிரியாக வைத்து மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் காலம் தொலைவில் இல்லை'' என்கிறார் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
மேலும் அவர், ''முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் இன்று விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளன. அரசியல், சமூகம், பொருளாதாரம், பொழுதுபோக்கு என்று அதன் எல்லைகள் பரந்து விரிந்துள்ளன. எதைப்பற்றியும் யாருடனும் விவாதிக்கலாம் என்ற சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தகவல்களையும் தரவுகளையும் விரைந்து பகிர்ந்துகொள்ளவும் வழிவகை செய்கிறது. அப்படிப்பட்ட ஊடகத்தில் தங்களுக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகும்போது ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். அப்போது சட்டத்தைக் காட்டி மிரட்டவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் செய்கின்றனர். பொய்யான தகவலைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கலாம். அது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், தங்களின் கருத்துக்களைத் தைரியமாகக் கடுமையான வார்த்தைகளால் தெரிவிப்பவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்து மிரட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இப்படி ஒருசிலரைக் கைதுசெய்வதன் மூலம் எல்லோரையும் பயமுறுத்தி, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது'' என்கிறார்.
புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சனம் செய்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்டது நினைவில் இருக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சூழலை படிப்படியாக உருவாக்கி வருகிறார்கள். சமூக வலைதளங்களே முடக்கப்படும் நிலைமை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்கால், தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66-ஏ வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவர் தன்னுடைய மனுவில், இந்தச் சட்டப்பிரிவு முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆட்சேபணைக்கு உரியவை எவை என்பதில் தெளிவில்லாமலும் இருக்கிறது. எனவே இதை தகுந்த முறையில் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதான் இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட முதல் வழக்கு.
அந்த மனு அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனு பற்றி கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ''முகநூல் கருத்துகள் தொடர்பான சர்ச்சைகள் கைது நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதை நீதிமன்றமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து ஒரு வழக்குக்கூட இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது எங்களுக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நாங்களே தன்முனைப்பாக அப்படி ஒரு வழக்கை எடுத்து நடத்தலாம் என்றுகூட நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
சட்டப்பிரிவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உடனடி நடவடிக்கையாக, யார் இதுபோன்ற புகார்களில் கைது செய்ய அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மத்திய அரசு வரையறுக்கப்போவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது'' என்று கூறினார்.
அதன் படிதான் முகநூல் தொடர்பான புகார்களில் கைதுசெய்யும் அதிகாரம் ஊரக மற்றும்நகர்ப்புறங்களில் காவல் துறை துணை ஆணையர் அளவில் உள்ள அதிகாரிகளுக்கும், பெருநகரங்களில் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதுபோன்ற கைது நடவடிக்கைகளைப் பற்றி கேட்டபோது சென்னை மாநகர சைபர் க்ரைம் உதவி கமிஷனரான ஜான் ரோஸ், ''ஒரு தனிமனிதன் தன் கருத்துகளை தெரிவிப்பதற்கு சட்டம் எந்தத் தடையும் செய்யவில்லை. ஆனால், கருத்துகள் என்ற பெயரில் ஒருவரைப்பற்றி பொய்யான தகவல்களை பதிவுசெய்தால், அந்த நபர் கைதுசெய்யப்படுவார். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அது பொய்யாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தகவலைப் பதிவுசெய்த நபரைக் கைதுசெய்ய முடியும். ஆபாசமான வார்த்தைகள், சாதி, மதத்தைச் சொல்லி இழிவுபடுத்தும் கருத்துகளைப் பதிவுசெய்தால், அவரும் கைதுசெய்யப்படுவார். மற்றபடி சட்டம் எதனையும் தடை செய்யவில்லை'' என்றார். சட்டம் அப்படிச் சொன்னாலும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களை விமர்சிப்பவர்கள் மீதே இப்படிப்பட்ட சட்டம் பாய்கிறது என்பதுதான் வெளிப்படை.
மக்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம் என்ற தொனியில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை விதைப்பதும் அதிகமாகி வருகிறது. பொறுப்பை உணர்ந்து பொதுமக்களும் கருத்தின் ஆழத்தை உணர்ந்து ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் முகநூல், இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!
- ஜோ.ஸ்டாலின்
'சட்டத்தில் தெளிவான வரையறைகள் இல்லை!''
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துருவிடம் இந்த வழக்குகள் பற்றி கேட்டோம்.
''தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிரிவு 66-ஏ சமூக வலைத்தளங்கள், செல்போன்கள் மூலம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் தெளிவான வரையறை எதுவும் இல்லை. மற்ற தண்டனைச் சட்டங்களில் உள்ள சரத்துக்களை சற்று விரிவாக்கி இதில் தந்துள்ளனர் அவ்வளவுதான். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், 66-ஏ வில் எரிச்சல், சுகவீனம், ஆபத்து, தடுப்பு, நிந்தை, ஊறு செய்தல் மற்றும் மிரட்டல் விடுத்தால் அப்படிச் செய்தவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில் எரிச்சல் ஏற்படுத்தினால் எப்படி? என்பதில் தெளிவான வரையறை இல்லை. ஒருவர் மற்றொருவரை உற்றுப் பார்த்தால் கூட சமயங்களில் எரிச்சல் ஏற்படும். அதற்காக பார்ப்பவரை கைது செய்ய முடியுமா? இதுவரை 66-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. அப்படி யாராவது தண்டிக்கப்பட்டு, அவர்கள் அந்தப் பிரிவை எதிர்த்து வழக்குத் தொடுக்கும்போது இந்த சட்டப்பிரிவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. மற்றபடி இப்போது இந்தச் சட்டப்பிரிவு அதிகாரத்துக்கு எதிராக முகநூலில் எழுதுபவர்களை கைது செய்யவும் அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படும்.
மேலும், வலைத்தளங்களை சமூக விரோத சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு கருத்துச் சுதந்திரவாதிகளை கவலைகொள்ள வைக்கிறது. சமீபத்தில் உ.பி.யில் உள்ள முசாபர்பூர் நகரில் நடந்த வகுப்புக் கலவரப் பின்னணியில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விஷமப் பிரசாரங்களும் காரணம் என்று தெரியவருகிறது. எனவே இந்த சட்டத்தை திருத்தும்போது, சமூக வலைத்தளத்தில் தீய சக்திகளின் செயல்களைத் தண்டிப்பது உறுதியாக்கப்படுவதோடு நியாயமான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்''
ஆபாச எஸ்.எம்.எஸ், முகநூலில் தவறாக செய்தி அனுப்பிய குற்றங்களுக்காக இதுவரை பலர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சில கைதுகளின் விபரம்...
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது இரண்டு நாட்கள் மும்பை ஸ்தம்பித்தது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்போது மும்பையைச் சேர்ந்த ஷாகின் தாதா என்ற கல்லூரி மாணவி, ''இந்த பந்த் பயத்தால் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்று பதிவிட்டார். அதற்கு அவருடைய தோழி ரேணு லைக் பதிவு செய்திருந்தார். இதையடுத்து சிவசேனாக் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். ஷாகின் தாதாவின் உறவினருக்குச் சொந்தமான மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது.அதற்கு மறுநாள் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பற்றி முகநூலில் கருத்து தெரிவித்த மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
தமிழகத்தில் பாடகி சின்மயி மற்றும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த 6 பேர் தன்னை பல மாதங்களாக உளவியல் ரீதியில் துன்புறுத்தி வருவதாக புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கல்லூரிப் பேராசிரியர் சரவணக்குமார், கோவை அவினாசியைச் சேர்ந்த ராஜன் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
மம்தா பானர்ஜியை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததாக கல்லூரி பேராசிரியர் அம்பிகேஷ் மகோபத்ரா கைதுசெய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் பற்றி தனது டூவிட்டர் பக்கத்தில் அவதூறாக எழுதினார் என்று புதுச்சேரியைச் சேர்ந்த ரவி ஸ்ரீனிவாசன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டார். டூவிட்டர் பக்கத்தில் எழுதியதற்காக இந்தியாவில் செய்யப்பட்ட முதல் கைது அது.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=95516
"ரேப் செய்வது சில சமயம் சரி, சில சமயம் தவறு" என கூறி வாங்கிகட்டிகொண்டு உள்ளார் மத்திய அமைச்சர் பாபுலால் கவுர்.
எந்த மாதிரி சமயத்தில் ரேப் செய்வது சரியான விஷயம் என அவர் தெரிவிக்கவில்லை.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
செல்வன் ஜீ, மத்திய அமைச்சர் அல்ல; மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்.
"கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை, சிறைக்கு போங்கள்"- எம்.பிக்களுக்கு மோடி எச்சரிக்கை
இதை அவரின் கட்சியிலிருந்தோ , அவரின் கூட்டணி கட்சியிலிருந்தோ கூட மோடி ஆரம்பிக்கலாம்..
According to the analysis done by ADR, a candidate with criminal cases had 13% chance of winning in the 2014 Lok Sabha election whereas it was 5% for an aspirant with a clean record.
Of the 186 new members, 112 (21%) have declared serious criminal cases, including those related to murder, attempt to murder, causing communal disharmony, kidnapping, crimes against women, etc.
Party wise, the largest numbers 98 or 35% of the 281 winners from the BJP have in their affidavits declared criminal cases against themselves.
Eight (18%) of the 44 winners from the Congress, six (16%) of the 37 winners from the AIADMK, 15 (83%) of the 18 winners from the Shiv Sena, and seven (21%) of the 34 winners fielded by Trinamool Congress also have disclosed criminal cases against themselves.
Posted Date : 14:13 (17/06/2014)Last updated : 14:13 (17/06/2014)
புதுடெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் அளித்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இதுகுறித்த இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டண உயர்வுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ள போதிலும், பயணிகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தப்படுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், ஆனாலும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என பிரதமர் அலுவலகத்திடம் ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
செய்தி: இன்சூரன்சில் 100 சதம் வரை FDI வாய்ப்பு கொண்டு வர பிஜேபி திட்டம்!
1999 ல், இன்சூரன்ஸ் சட்டத் திருந்த்த மசோதா கொண்டு வந்து, அதில் 26 சதம் வரை FDI வாய்ப்பு என்ற முறையைக் கொண்டுவந்தது என்னமோ பிஜேபிதான், அதிலும் முக்கியக் காரணம் யஸ்வந்த் சின்கா தான்!
2008 ல், இன்சூரன்சில் 49 சதம் வரை FDI வாய்ப்பு என்று காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பொழுது, திட்டத்தை நிலைக்குழுவுக்கு அனுப்பியபோது, காப்பீட்டுத்திட்டத்தில் FDI வாய்ப்பு என்பது, இந்தியாவின் சேமிப்பு வெளிநாட்டிற்கு போகும் வாய்ப்பு இருக்கும் என்ற காரணத்தினால் அதை உயர்த்தக் கூடாது என்று அதே யஸ்வந்த் சின்கா தலைமையிலான நிலைக்குழு போராடியது!
இப்பொழுது மீண்டும் 100 சதம் வரை FDI வாய்ப்பு என்கிறது பிஜேபி அரசு!
# தட் அது போன மாசம், இது இந்த மாசம் மொமண்ட்!
இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு போராடும் இஸ்லாமிய அமைப்புகள், ஏன் ஈராக்கில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏன் போரடவில்லை என்ற அறிவுப்பூர்வமான கேள்வி எழுப்பினார்!
சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை- உள்துறை அமைச்சகம் முடிவு..
நல்லவேளை கட்டாயம்னு சொல்லலை. சொல்லியிருந்தா ஸ்பெவின் படையில் சேர வேண்டியதுதான்.
மராட்டி, கன்னடாக்காரங்க எல்லாம் நம்மள விட மொழி வெறியனுங்க. அவங்க ரெஸ்பான்ஸ் என்ன?
--
இனி சிவசேனாவுக்கு மராட்டியர்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். ;-)
பூனே, மும்பையைத் தாண்டி இருக்கும் மராத்தியர்கள்தான் அதிகம். பாப்போம். மோடி அலை வீசத் தொடங்கிடுச்சி. நாசூக்கா கையாளாம கட்டுச் சோத்தை கூட்டத்துல பிரிக்க ஆரம்பிச்சிட்டாரு மோடி.
ஏற்கனவே கம்பெனில ஹிந்தி தெரியலைன்னாலே வெளிநாட்டுக் காரன் ரேஞ்சுல பாக்குறானுங்க. இனி சட்டம்லாம் போட்டா ரவுசு தாங்காதே.
--
எத்தனை வருஷத்துக்காம்?
மாதந்தோறும் கேஸ் விலை ரூபாய் 10 உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.அதாவது ஓவ்வொரு வருடமும் சிலிண்டருக்கு 120 உயர்த்த படும்.
--
மத்திய அரசின் முடிவால் சர்க்கரை விலை உயருகிறது
இறக்குமதி வரி 40 சதவீதமாக அதிகரிப்பு
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
அன்போடு
மோரு
;)
ஒருவேளை இன்னிக்கு நைட்டு தூங்கும்போது அவர் கருத்தை நினைச்சு அவரே சிரிச்சிட்டு தூங்கலாம் ;)
--
அவ்வ்வ்வ்வ்...
சரக்கு விலையும் உயருமா?
--
'இவிய்ங்கல்லாம் ரொம்ப நல்லவங்கடா, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்கடா'
--
#ModiWatch new Attorney General, Mukul Rohatgi has a credential of dealing with corporate and communal cases.
Mukul Rohatgi represented Modi government in the Supreme Court in many cases including:
- the 2002 Gujarat riots
- fake encounter.
- the Best Bakery
- Zahira Sheikh cases.
Rohatgi has also represented:
- Anil Ambani in the apex court in the gas dispute case between the Ambani brothers.
- the Italian embassy in the apex court in a case relating to two Italian marines involved in killing two fishermen off the Kerala coast in 2012.
- appearing on behalf of big corporates in the 2G scam trial.
Mukul Rohatgi is son of former Delhi High Court judge Justice Awadh Behari Rohatgi.
(input from FIRST POST)-Thiru Yo
Posted Date : 18:43 (24/06/2014)Last updated : 19:15 (24/06/2014)
சென்னை: ரயில்வேதுறை அறிவித்த பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டண உயர்வு நாளை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மும்பை பா.ஜனதா- சிவசேனா எம்.பி.க்களின் வலியுறுத்தல் காரணமாக உயர்த்தப்பட்ட புறநகர் ரயில்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம், ஓரளவு குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதம், சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், இது வருகிற 25 ஆம் தேதி ( நாளை) முதல் அமலுக்கு வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் புறப்படும் ரயில்களில் இக்கட்டண உயர்வு அமலாகிவிடும். முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்துவதற்கு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகரிடமும் கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம். சிறப்பு கவுன்டர்கள் தமிழகத்தில் சென்னை சென்ட்ரலில் 2 சிறப்பு கவுன்டர்களும், எழும்பூரில் ஒரு சிறப்பு கவுன்டரும் திறக்கப்படுகிறது. இவை நாளை முதல் செயல்படும். முன்பதிவு செய்த பயணிகள் சிறப்பு கவுன்டர்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து முன்பதிவு மையங்களிலும் கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம். பயணத்தின்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் பழைய மற்றும் புதிய கட்டணத்திற்கான வித்தியாச தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். சீசன் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் தேவையில்லை சீசன் டிக்கெட் பயணிகளை பொறுத்தவரை அவர்கள் எந்த காலத்திற்கு எடுத்திருக்கிறார்களோ அதுவரை அதே கட்டணத்தில் பயணம் செய்யலாம். அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. நாளை முதல் புதிதாக சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே புதிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த ரெயில் நிலையங்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தலாம். தொலைதூர ரயில்கள் கட்டண உயர்வு விவரம் தொலைதூர ரயில்களை பொறுத்தவரை, சென்னை-நெல்லை 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.340-லிருந்து ரூ.385 ஆக உயர்த்தபட்டுள்ளது. 3 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ. 880-லிருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1245-லிருந்து ரூ.1410 ஆக உயர்த்தப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள முன்பதிவு அல்லாத பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி செல்ல ரூ.97 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.111 ஆகவும், மதுரை மற்றும் கோவை செல்ல ரூ.131 ஆக இருந்த கட்டணம் ரூ.150 ஆகவும், திருநெல்வேலி செல்ல ரூ.162 ஆக இருந்த கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்தால், மேற்கண்ட கட்டணத்துடன் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் கட்டணம் புறநகர் மின்சார ரயில் கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி, மாதாந்திர சீசன்டிக்கெட் ஆகியவற்றிற்கு புதிய கட்டணம் விவரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை– மாம்பலம் இடையே தற்போது ரூ.5 வசூலிக்கப்படும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முதல் வகுப்பு கட்டணம் ரூ.43–ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடற்கரை–தாம்பரம் இடையே (30 கிலோ மீட்டர்) இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்த்தப்படவில்லை. ஆனால் முதல் வகுப்பு கட்டணம் ரூ.108–ல் இருந்து ரூ.124 ஆக உயர்ந்துள்ளது. கடற்கரை–வேளச்சேரிக்கு 2–ம் வகுப்பு கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. முதல் வகுப்பு கட்டணம் ரூ.80–ல் இருந்து ரூ.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ஒரு நேர பயண கட்டணத்தை 15–ஆல் பெருக்கி வரும் தொகையை மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு நேர பயண கட்டணத்தை 30–ல் பெருக்கி வரும் தொகையை மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. உதாரணமாக கடற்கரை– மாம்பலம் இடையே ஒருநேர பயணத்துக்கான புதிய கட்டணம் ரூ.5–ஐ ரூ.30–ஆல் பெருக்கி ரூ.150 மாதாந்திர சீசன் டிக்கெட்டாக வசூலிக்கப்பட உள்ளது. அதுவே முதல் வகுப்பு கட்டணமாக இருந்தால் மாதாந்திர சீசன் கட்டணத்தை நான்கால் பெருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் புதிய கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். மும்பை பா.ஜனதா - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு இந்நிலையில் ரயில் கட்டண உயர்வால் மும்பை புறநகர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம், மகாராஷ்ட்ரா மாநில பாஜக மற்றும் சிவசேனா எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர். மகாராஷ்ட்ராவின் மும்பை மற்றும் தானே பகுதிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள், டெல்லியில் அமைச்சர் சதானந்த கவுடாவை இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, ரயில் கட்டண உயர்வின் காரணமாக மும்பை புறநகர் ரயில்களின் கட்டணம் இரு மடங்கு வரை உயரும் வாய்ப்புள்ளதாகவும், இது மும்பை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சரிடம், எம்.பி.க்கள் கூறியதாக தெரிகிறது. சீசன் ரயில் கட்டணம் குறையலாம் இதனிடையே ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டபோதிலும், புறநகர் ரயில் பயணிகளின் சுமையை ஓரளவு குறைக்க, புறநகர் ரயிலுக்கான கட்டண உயர்வை சற்று தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், இருப்பினும் இதுகுறித்த இறுதி முடிவை பிரதமர் மோடியே எடுப்பார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
எவனுக்கோ வந்த வியாதிக்கு நாமதான் மருந்து சாப்பிடணுமா...
முக்கியமா தட்டவேண்டிய இடங்களை விட்டுட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏத்துறாங்க. மத்த இடங்கள்ள தட்டினா எதிர்விளைவு வரும். பொதுமக்கள்தான் ஈஸி டார்கெட்.
மோடி சர்க்கார், ப்ளாக் மனி கப் ஆரஹாஹை?
துவண்டு போன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நாம் தான் கசப்பு மருந்து சாப்பிடணுமாம். பேசாம வேற நாட்டில பிறந்திருக்கலாம்.
Posted Date : 13:12 (25/06/2014)Last updated : 13:12 (25/06/2014)
சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான கட்டண உயர்வை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை- நெல்லை 2ஆம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.340லிருந்து ரூ.385 ஆக உயர்த்தபட்டுள்ளது. 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.880லிருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1245லிருந்து ரூ.1410 ஆக உயர்த்தப்படுகிறது. |
Posted Date : 17:11 (26/06/2014)Last updated : 19:00 (26/06/2014)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில், அவரது ஆரம்ப நடவடிக்கைகள் பாராட்டுக்களை பெற்று தந்த போதிலும், ஆட்சியில் அமர்ந்து ஒருமாதம் முடிவதற்குள்ளாகவே ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட சாமான்ய மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதியன்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த ஒரு மாத காலத்தில் தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் மோடி, அவர்களது ஆடம்பர செலவுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். |
மாதந்தோறும் கேஸ் விலை ரூபாய் 10 உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.அதாவது ஓவ்வொரு வருடமும் சிலிண்டருக்கு 120 உயர்த்த படும்.
2019 ல அம்மா பிரதமர்னு உறுதியாயிடுமோ ?
Posted Date : 13:38 (01/07/2014)Last updated : 15:10 (01/07/2014)
சென்னை: கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அரசின் கொள்கையை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டு முந்தைய கச்சத்தீவு பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த அதே கொள்கையையே, நரேந்திர மோடி அரசும் பின்பற்றுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், ராமேஸ்வரம் வந்த பா.ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், கச்சத்தீவில் மீன் பிடி உரிமையை மீட்டுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அதற்கு மாறான நிலைப்பாடை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். |
Posted Date : 13:20 (01/07/2014)Last updated : 13:27 (01/07/2014)
புதுடெல்லி: மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ. 16.50 உயர்த்தப்பட்டுள்ளது. |
Posted Date : 19:09 (30/06/2014)Last updated : 19:09 (30/06/2014)
புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று ( திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ. 16.50 உயர்வு!
Posted Date : 13:20 (01/07/2014)Last updated : 13:27 (01/07/2014)
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
Posted Date : 19:09 (30/06/2014)Last updated : 19:09 (30/06/2014)
:))))
இதையே தான் அந்த டெய்லரும் சொன்னான்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது நீதித்துறை விஷயத்திலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நான்கு பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்து. அதில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை தன்னிச்சையாக நீக்கி, மற்ற மூன்று பெயர்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
இந்திய அரசமைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படத் தகுதி வாய்ந்தவர் எவர் என ஷரத்து 124(3)-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து வருடங்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி வகித்தவர்களும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களும், குடியரசுத் தலைவரின் கருத்தில் ஒரு நீதிவல்லுநர் எனப்படுபவரும் அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம். ஆனால், கடந்த 64 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதிகள் தவிர மற்ற பிரிவினரில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவே இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கோபால் சுப்பிரமணியம், ரோஹின்டன் நாரிமன் என்ற இரு மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களை, இப்போது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஆர்.எம்.லோதா, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் ஒப்புதலுடன் பரிந்துரைத்தார். பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக வழக்கறிஞர்கள் பிரிவில் இருந்து உச்ச நீதிமன்ற பதவிக்கு இரண்டு பெயர்களை தலைமை நீதிபதி பரிந்துரைத்ததை நாடே வியப்புடன் பார்த்தது.
1993-ம் வருட நியமன நடைமுறைப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் நியமனத்துக்குத் தகுந்த பெயர்களை தேர்ந்தெடுத்து, ஐந்து மூத்த நீதிபதிகளின் (கொலிஜியம்) கருத்துக்களைப் பதிவுசெய்து, பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அந்தப் பெயர்களை பரிசீலனை செய்து தனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவரின் ஆணைக்கு அனுப்பலாம். ஏதேனும் ஒருவருடைய தகுதி பற்றி அரசுக்கு வேறு கருத்து இருந்தாலோ (அ) அந்த நபரைப் பற்றிய உளவுத்துறையின் குறிப்புகளையும் உச்ச நீதிமன்றத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவருக்குக் கீழேயுள்ள நான்கு மூத்த நீதிபதிகளின் கருத்தை அறிந்து அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மறுபடியும் பரிந்துரைத்தால், அந்தப் பெயரைக் கட்டாயமாக மத்திய அரசு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அப்படி ஒரு நபர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுவிட்டால், அவரைப் பதவியில் இருந்து நீக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை.
கடந்த 20 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் அநேகமாக எவ்வித பங்கையும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றது பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் கட்டுரைகள் மற்றும் சுயசரிதைகள் வாயிலாக, கொலிஜியம் நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரூமா பால் தனது கட்டுரை ஒன்றில் கொலிஜிய நியமன நடைமுறையில் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மத்திய அரசின் சட்ட ஆணையத் தலைவராகவுள்ள நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்து திறமையாகப் பணியாற்றியும், அகில இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலில் முதலில் இருந்தும்கூட, உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரது பெயரை பரிந்துரைக்க மறுத்துவிட்டது. அதே சமயத்தில் கொலிஜியத்தின் பரிசீலனையில் இருந்த மற்றொருவரான நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் கொலிஜியத்தில் இருந்த நீதிபதிகள் மாற்றத்தினால் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் பெயர் மறுபடியும் பரிந்துரைக்கப்பட்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆக்கப்பட்டார். இதைப்பற்றி கடுமையான விமர்சனத்தை இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர் பாலி நாரிமன் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்படி 1993-ம் வருட உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திய நீதிபதி நியமனங்களின் நடைமுறை, கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருவதை எதிர்கொள்ளும் விதமாக, அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி நீதிபதி நியமன ஆணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினர். அதன்படி நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்துகொள்ளும் நடைமுறையை மாற்ற முயற்சித்தனர். அதற்கு வழக்கறிஞர் அமைப்புகளில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததாலும், அன்றைய எதிர்க்கட்சியான பி.ஜே.பி சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, மறைமுகமான ஆதரவளித்தனர்.
இன்று உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின் 20 ஆண்டுகள் நடைமுறை இன்றைக்கு பலதரப்பினர்களுடைய அதிருப்திகளைத்தான் சம்பாதித்துள்ளது. இதற்கு மாற்று என்ன? அமெரிக்காவில் உள்ள நடைமுறை மாற்றாகுமா?
நீதிபதியாக நியமிக்கப்படுபவர்களின் தகுதியைப் பரிசீலிக்க வேண்டும். அமெரிக்காவில் நீதிபதியாக யார் நியமிக்கப்படுகிறார்களோ அவர்களை செனட் துணைக் குழு உறுப்பினர்கள் முதலில் விசாரிப்பார்கள். தொலைக்காட்சியில் மூன்று, நான்கு நாட்கள் அவர்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்கள். அவர்களது அரசியல், பொருளாதார, சமுதாய அறிவை சோதிப்பார்கள். அதே நேரம் பத்திரிகைகள் அவர்களின் குடும்பத்தினர், பள்ளி வட்டாரத்தினர், பழகிய நண்பர்/ நண்பிகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள். இவ்வாறு உள்ளேயும் வெளியேயும் விசாரணை நடந்தபின் செனட்டில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ஒருவர்தான் நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள்.
நம் நாட்டிலோ நீதிபதிகளைப் பற்றிய முழு விவரத்தையும் விசாரிப்பது இல்லை. திரைமறைவிலேயே நியமனம் நடைபெறுகிறது. பத்திரிகைகள்கூட யூகமாகத்தான் அதைப்பற்றி எழுதுகின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் படித்தபோது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்கான பிடிவாரன்ட், அவர் நீதிபதியான பின்னரும் இருப்பில் இருந்தது.
கோபால் சுப்பிரமணியத்தின் நியமன விவகாரத்தில் மூன்று விதமான கருத்துக்கள் வெளியே வந்துள்ளன. அவரது பெயரை பட்டியலில் இருந்து தவிர்த்து மற்ற பெயர்களை குடியரசுத் தலைவரது ஆணை வேண்டி மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியுமா என்பது ஒன்று. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தான் ரஷ்ய நாட்டில் பயணத்தில் இருந்தபோது தன்னை கலந்தாலோசிக்காமலேயே பட்டியலில் இருந்து பெயரை மத்திய அரசு தவிர்த்தது தவறு என்று குறிப்பிட்டிருப்பது ஒன்று. அதே சமயத்தில் கோபால் சுப்பிரமணியம் அவசரப்பட்டு தனது பெயரை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதால் இந்த விஷயத்தில் வேறெதுவும் செய்ய முடியவில்லை என்று தனது பங்கை முடித்துக்கொண்டது சோக வரலாறு. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யரும், எம்.என்.வெங்கடாசலய்யாவும் தனது விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததை நினைத்து கோபால் சுப்பிரமணியம் திருப்தியடைந்து விட்டதால் 'ஆளை விடுங்க சாமி’ என்று ஒதுங்கிக் கொண்டார். இதனால் இவ்விஷயத்தில் முழு உண்மை இனி வெளிவராது.
ஆக மொத்தம் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக வழக்காடிய கோபால் சுப்பிரமணியம் நீதிபதியாக முடியாததால் மோடி அரசுக்குத்தான் வெற்றி. தலைமை நீதிபதி லோதா தன் பங்குக்கு ஆதங்கத்தை தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டதும், கோபால் சுப்பிரமணியம் தன் பெயருக்கு மேலும் களங்கமேற்படாமல் கரையேறியதும் நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வி.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96742
கார்பொரேட்களுக்கு எழுதப்பட்ட 'மொய்' ! - சாய்நாத் சொல்கிறார்..
***************************************************************************************
இந்த ஆண்டு பட்ஜெட் வெளியிடப்பட்ட அன்று நான் எழுதிய குறிப்பில், கார்பொரேட்களுக்கு இந்த நிதி ஆண்டில் அளிக்கப்படும் வரி பாக்கி ரத்து ரூ 5 இலட்சம் கோடிக்கு மேல் எனக் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது குறித்து விரிவாக எழுதியுள்ள சாய்நாத்தின் குறிப்பு கீழே.
துல்லியமாகச் சொல்வதானால் இந்த அறிக்கையில் கார்பொரேட்களுக்கு எழுதப்பட்ட 'மொய்' 5.32 லட்சம் கோடி என்கிறார்.
2005 - 06 ம் ஆண்டிலிருந்து இவ்வாறு எழுதப்பட்ட மொய் 36.5 ட்ரில்லியன் கோடி. அப்படீன்னா 36.5 லட்சம் கோடி. அப்டீன்னா ரூபாய் 36500000000000 !
இந்த ஆண்டு எழுதப்பட்ட மொய் மட்டும் எழுதப்படாமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தி கிராமப் புற வேலைத் திட்டத்தை இன்னும் 30 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தலாம். இன்னும் நாலரை ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்திருக்கலாம்...
தொடர்ந்து படித்துப் பெருமூச்சு விடுங்கள். வேறென்ன செய்யப் போகிறோம்.
The revenues foregone in 2013-14 could fund the rural jobs scheme for three decades or the PDS for four and a half years.
By P. Sainath,
It was business as usual in 2013-14. Business with a capital B. This year’s budget document says we gave away another Rs. 5.32 lakh crores to the corporate needy and the under-nourished rich in that year. Well, it says Rs. 5.72 lakh crores but I’m leaving out the Rs. 40 K crore foregone on personal income tax since that write-off benefits a wider group of people. The rest is mostly about a feeding frenzy at the corporate trough. And, of course, that of other well-off people. The major write-offs come in direct corporate income tax, customs and excise duties.
If you think sparing the super-rich taxes and duties worth Rs. 5.32 lakh crores is a trifle excessive, think again. The amount we’ve written off for them since 2005-06 under the very same heads is well over Rs. 36.5 lakh crore. (A sixth of that in just corporate income tax). That’s Rs. 36500000000000 wiped off for the big boys in nine years.
With Rs. 36.5 trillion – for that is what it is – you could:
Fund the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme for around 105 years, at present levels. That’s more than any human being could expect to live. And a hell of a lot more than any agricultural labourer would. You could, in fact, run the MNREGS on that sum, across the working lives of two generations of such labourers. The current allocation for the scheme is around Rs. 34,000 crore.
Fund the Public Distribution System for 31 years. (current allocation Rs. 1,15,000 crores).
By the way, if these revenues had been realized, around 30 per cent of their value would have devolved to the states. So their fiscal health is affected by the Centre’s massive corporate karza maafi.
Even just the amount foregone in 2013-14 can fund the rural jobs scheme for three decades. Or the PDS for four and a half years. It is also over four times the ‘losses’ of the Oil Marketing Companies by way of so-called ‘under-recoveries’ in 2012-13.
Look at some of the exemptions under customs duty. There’s a neat Rs. 48,635 crore written off on ‘Diamonds and Gold.’ Hardly aam aadmi or aam aurat items. And more than what we spend on rural jobs. Fact: concessions on diamonds and gold over the past 36 months total Rs. 1.6 trillion. (A lot more than we’ll spend on the PDS in the coming year). In the latest figures, it accounts for 16 per cent of the total revenue foregone.
The break-up of the budget’s revenue foregone figure of Rs. 5.72 lakh crore for 2013-14 is interesting. Of this, Rs. 76,116 crore was written off on just direct corporate income tax. More than twice that sum (Rs.1,95,679 crore) was foregone on Excise Duty. And well over three times the sum was sacrificed in Customs Duty (Rs. 2,60,714 crores).
This, of course, has been going on for many years in the ‘reforms’ period. But the budget only started carrying the data on revenue foregone around 2006-07. Hence the Rs. 36.5 trillion write-off figure. It would be higher had we the data for earlier years. (All of this, by the way, falls within the UPA period). And the trend in this direction only grows. As the budget document itself recognizes, “the total revenue foregone from central taxes is showing an upward trend. “
It sure is. The amount written off in 2013-14 shows an increase of 132 per cent compared to the same concessions in 2005-06.
Corporate karza maafi is a growth industry, and an efficient one.
வரி ரத்துக்கு என்ன காரணம்னு யாராவது சொல்லியிருக்காங்களா?
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பொன்னேரியில் எனக்கு அரை கிரவுண்ட் நிலம் இருக்குப்பா :-))
அண்ணாச்சி, நானு சாலிட் ப்ளாக் கல்லு தாரேன் , நீங்க நிலம் கொடுங்கள் சேர்ந்து வீடு கெட்டிடலாம் ;-)
அண்ணாச்சி, நானு சாலிட் ப்ளாக் கல்லு தாரேன் , நீங்க நிலம் கொடுங்கள் சேர்ந்து வீடு கெட்டிடலாம் ;-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உன்னை காய்ச்சுறதுக்கு முன்னால ஓடிப் போயிடுலே :-)பால் காய்ச்ச நான் வர்றேன்...:)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உன்னை காய்ச்சுறதுக்கு முன்னால ஓடிப் போயிடுலே :-)பால் காய்ச்ச நான் வர்றேன்...:)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
--
சிபிஎஸ்சி பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரை!!!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பயன்பாட்டிலேயே இல்லாத சமஸ்கிருதம் வளர்த்த வேண்டிய அவசியம் என்ன?
ஏற்கனவே இருக்கும் மொழி பிரச்சினைகள் போதாதுன்னு இப்போ இது வேறயா?
பயன்பாட்டிலேயே இல்லாத சமஸ்கிருதம் வளர்த்த வேண்டிய அவசியம் என்ன?
ஏற்கனவே இருக்கும் மொழி பிரச்சினைகள் போதாதுன்னு இப்போ இது வேறயா?
தேவர்களின் டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டு உறுதி பண்ணாங்களா தேவ பாஷைன்னு?
--
மூலம்: அருண் ஷோரி – இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை
தமிழில்: ராஜசங்கர்
கற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார். நாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். அவர்கள் உடைத்த சிலைகள் எல்லாம் புத்தரை போல் செய்யப்பட்டவை. ஆனால் நாலந்தா கொஞ்ச நாட்களில் அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே கொலைகார்கள் வந்து அதை அழிக்க தொடங்கினார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.
மின்ஹாஜ்-உத்-தின் இன் கொள்ளைகளும் திருட்டு வழிப்பறிகளும் வெகுவான பொருட்களையும் பணத்தையும் கொண்டுவந்தன, எவ்வளவு என்றால் தனியாகவே கொள்ளைக்கூட்ட தலைவனாகும் அளவுக்கு இருந்தன, இதனால் அப்போதைய ஆட்சியாளர்களான குதுப்-உத்-தின் அபாக் போன்றவர்களிடம் மின்ஹாஜ்-உத்-தின் மதிப்பு உயர்ந்தது. ”மின்ஹாஜ்-உத்-தின் செயல்கள் சுல்தான்(மாலிக்) குதுப்-உத்-தின் ஐ அடைந்த பொழுது சுல்தான் மதிப்புமிக்க உடையயும் அந்தஸ்தையும் பரிசாக அனுப்பினார் என வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார். உயரமான சுவர்களும் பெரிய கட்டிடங்களும் கொண்ட நாலந்தா நல்ல பாதுகாப்பு கொண்டகோட்டையாக இக்தியார்-உத்-தின் இன்னுக்கும் அவனுடைய படைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் இருநூறு குதிரைகள் கொண்ட படையும் வந்து தீடீரென தாக்கியதாக எழுதுகிறார்.
அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், மேலும் அங்கிருந்த அனைத்து பிராமணர்களில் எல்லோருமே தலையை மொட்டையடித்து இருந்தார்கள், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அங்கே அதிகளவிலான புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் முஸ்லீம்களின் கவனத்திற்கு வந்த பொழுது முஸ்லீம்களுக்கு அதை பற்றி தகவல்களை தருவதற்காக இந்துக்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த இந்துக்களும் முழுமையாக கொல்லப்பட்டனர். புத்தகங்களை பற்றிய தகவல்களை அறிந்த பொழுது அந்த மொத்த வளாகமும் ஒரு கல்லூரி எனவும் இந்துக்களின் மொழியில் அதை பிகார் (விகாரை) என அழைத்தார்கள் என எழுதுகிறார்.
வெற்றியடைந்த பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை மின்ஹாஜ் உத் தின் எழுதும் போது , முகமது இ பகட்யார் பெரும் கொள்ளை செல்வத்துடன் திரும்பினான், சுல்தானான குதுப்-உத்-தின் இபாக் முன்பு வந்த பொழுது உயரிய மரியாதையும் செல்வாக்கையும் பெற்றான். அது எவ்வளவு என்றால் அங்கிருந்த அரசவையின் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு இருந்தது. இவ்வளவும் பொது வருடம் 1197 இல் நடந்தது.
இப்போது மார்க்சிய பதிவில் இந்த வரலாறு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம். 2004 இல் டி. என் ஜா என்பவர் இந்திய வரலாற்று கான்கிரஸின் தலைவராக இருந்தார். டி. என். ஜாவின் தலைமை உரையை பார்ப்பது இந்த மார்க்சிய அறிவுஜீவித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். அந்த உரையில் அவர் பவுத்த விகாரைகளின் அழிப்பு பற்றி பொதுவாகவும் நாலந்தா பற்றி குறிப்பாகவும் சொல்கிறார்
ஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.
இந்து குண்டர்கள்? இந்த சொற்றொடர் வித்தியாமாக இருக்கிறதல்லவா? 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும்? மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா? எனவே இந்த திபெத்திய நூல் எது? அது என்ன சொல்கிறது? அதை டி என் ஜா படித்திருக்கிறாரா?
பாக் சாம் ஜான் ஜங் எனும் நூல் சுமபா கன் போ யேஸ் பால் ஜார் என்பவரால் எழுதப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் 1704-88 அதாவது நாலந்தாவின் அழிப்பிற்கு 500 வருடங்களுக்கு பின்பு.
இது தான் முதல் தவறாக படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இடிப்பு நடந்த காலத்து எழுதப்பட்ட தபாக்ட் இ நசாரி எனும் நூலை விட்டுவிட்டு ஏன் 500 வருடம் கழித்து எழுதப்பட்ட நூலை ஏற்கவேண்டும்? அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா? ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்ட் அதிலே எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளை நம்பமுடியுமா?
பாக் சாம் ஜான் ஜங் நூலை பதிப்பதித்தவரும் மொழிபெயர்த்தவருமான சரத் சந்திர தாஸ் நாலந்தா அழிவு பற்றி அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தருகிறார்:
நாலந்தாவில் மகத அரசின் அமைச்சரான காகுத சிதா அமைத்த கோவிலில் ஒரு சமய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம் புத்த பிக்குகள் கைகழுவிய அழுக்கு நீரை இரண்டு தீர்திக பிச்சைக்காரர்கள் மீது வீசினர். கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் தர்ம கனஞ்சா எனப்படும் நாலந்தாவின் பவுத்த பல்கலைகழகத்தில் இருந்த மூன்று புனித இடங்களை எரித்தனர். அவை ரத்ன சாகரம், ரதன் ராஜாகா, ஒன்பது மாடி கட்டிடமான ரத்னாதாதி எனப்படும் புனித நூல்களை கொண்ட நூலகம. (பக் 92)
இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?
மேற்சொன்ன வரிகள் சரத் சந்திர தாஸ் அவருடைய நூலில் அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் வரிகள் ஆகும் அவை முழுமையான சித்திரம் அல்ல. அது வெறும் அட்டவணையில் இருக்கும் சுருக்கப்பட்ட கருத்து தான் அப்படியானால் முழுமையான நிகழ்வுகள் இன்னும் பெரியதாக இருக்கும் அல்லவா? அப்படியானால் அந்த விளக்கம் இந்த நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி என்ன சொல்கிறது?
நூலின் ஆசிரியர் பவுத்த தர்மம் எப்படி மூன்று நடத்தப்பட்ட அழிவுகளில் இருந்து காப்பாற்றபட்டது என்பதை விளக்குகிறார். முதல் முறை நடந்தது , கவுகுனிமாமஸ்தா எனும் தாகிஸ்க் (துர்க்கிஸ்தான்) நாட்டு அரசனுக்கும் தர்ம சந்தரா எனும் நியு யோக் எனும் நாட்டு அரசனுக்கும் நடந்த பிரச்சினைகளால் ஆகும். தர்ம சந்திரா தன்னுடைய பரிசாக கவுகுமாமஸ்தாவுக்கு அனுப்பியவற்றை கெட்ட மந்திரம் என சொல்லி கவுகுனிமாஸ்தா, துருகா வின் மீது படையெடுத்து மகதத்தின் மூன்று அடிப்படைகளான பௌத்த தங்குமிடங்கள், நூல்கள், ஸ்தூபிகளை அழித்தான். கவுகுனிமாஸ்தா பவுத்த துறவிகளை துரத்தியடித்தான். தர்மசந்திராவின் சிற்றப்பா சீனாவிற்கு அதிக பவுத்த துறவிகளை அங்கு அறிவை பரப்ப அனுப்பினார். அதற்கு பதிலாக தங்கம் அனுப்பட்டபட்டது. அதைக்கொண்டு சிறிய அரசுகளை விலைக்கு வாங்கி கவுகுனிமாஸ்தாவின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். பின்பு மூன்று அடிப்படைகளையும் திரும்ப கட்டினார். இடிக்கப்பட்ட எல்லா புனித தலங்களும் கட்டப்பட்டதுடன் புதிதாக 84 தலங்களும் கட்டப்பட்டன. எனவே தர்மம் வாழ்ந்தது.
அடுத்த முறையில் பவுத்த நூலான பரஞ்சனபரமிதா வை 20 ஆண்டுகள் கற்பித்து வந்த ஆசிரியர் துராகவில் இருந்த திருடர்களால் கொல்லப்பட்டார். அவருடைய குருதி பாலாக மாறியது, அவருடைய உடலில் இருந்து பல பூக்கள் எழுந்தன. அவர் வானத்திற்கு பறந்து போனார்.
இப்போது நாம் டி என் ஜா சொல்லிய பகுதிக்கு வருகிறோம். இங்கே கேஷே டோர்ஜி டாம்டுல் எழுதிய மொழிபெயர்ப்பு முழுமையாக தரப்படுகிறது
மறுபடியும் அந்த நேரத்தில் முட்டிட பாதாரா எனும் அறிவாளர் இருந்தார் அவர் ஸ்தூபிகளை புதுப்பிப்பதையும் புதிதாக கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் பொழுது அவருக்கு போதிசத்துவ சமாந்தபாதார வின் தோற்றம் கிட்டியது. போதிசத்துவ சமாந்தபாராவின் துணியை கொண்டு அவர் லில்யூல்க்கு பறந்து சென்றார். அங்கு அவர் உயிர்களுக்கு நன்மையளிப்பதும் தர்மத்தை வளர்ப்பதுமான பல விஷயங்களை செய்தார். தர்மத்தை வளர்த்ததால் மத்திய நிலங்களில் (மகதம்?) தர்மம் 40 வருடங்களுக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் நாலாந்தாவில் அரசனிடம் அமைச்சராக இருந்த காகுஸ்திதா கட்டிய கோவிலில் ஒரு கொண்டாட்டம் நடந்தது. அப்போது குறும்பான இளம் துறவிகள் பாத்திரம் கழுவிய நீரை அங்கிருந்த இரண்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களில் மேல் தெளித்தார்கள், கூடவே அவர்கள் இருவரையும் கதவு இடுக்கில் வைத்து அழுத்தினார்கள். இதிலே ஒருவருக்கு உதவியாளனாக செயல்பட்ட பிச்சைக்காரன், ஆழமான குழியில் சூரியனின் சக்தியை பெறும் தவத்தை 12 வருடங்களுக்கு செய்தான். சூரியனின் சக்தி கிடைத்தபின்பு, யாகத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நாலந்தாவில் இருந்த 84 பவுத்த தலங்களின் மீது தூவினான். அவைகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக நாலந்தாவின் மூன்று தர்ம காஞ்சா ஆன புனித நூல்களை கொண்டிருந்த கட்டிடங்கள் எரிந்தன. அவைகள் எரியும் பொழுது ரத்னதாடி இன் 9 ஆம் மாடியில் இருந்த குஹ்யசாமஜா மற்றும் பிரஞ்சபராமிதா எனும் புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக பெருகி ஓடியது அதனால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டன. அரச தண்டனைக்கு பயந்து இரண்டு பிச்சைக்காரர்களும் ஹசமா எனும் இடத்திற்கு ஓடிப்போனார்கள். அங்கு இருவரும் தானாக எரிந்து சாம்பலாயினர்.
எந்த ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்டும் இதிலே சொல்லப்பட்டிருக்கும் ஒரு அதிசியத்தைக்கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ஆனால் இங்கே இரண்டு இருக்கிறது ஒன்று சித்திகளை பெற்று அதன் மூலம் கட்டிடங்கள் மேல் தீ வீசுவது இரண்டு புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது.
ஆனால் நாம் அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. டி என் ஜாவின் உரையிலேயே இதற்காக குறிப்பு இருக்கிறது. அவர் திபெத்திய உரையை மேற்கோள் கட்டவில்லை. அவர் எல்லா மார்க்சிஸ்டுகளும் செய்வதை செய்கிறார். அது திபெத்திய நூலை மேற்கோள் காட்டும் இன்னோர் மார்க்சிஸ்டின் நூலை மேற்கோள் காட்டுவது. டி என் ஜா என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள அவருடைய வரிகளை கவனமாக பார்க்க வேண்டும். இது தான் டி என் ஜா சொல்வது
ஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.
டி என் ஜா தன்னுடைய மேற்கோளாக பி. என். எஸ் யாதவா எழுதிய 12 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் சமூகமும் பண்பாடும் எனும் நூலை மேற்கோள் காட்டுகிறார். அதிலே யாதவா என்ன எழுதியிருக்கிறார்? : திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி கர்னா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த புனித இடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் என.
ஜா இதை அப்படியே எடுத்தாள்கிறார். ஆனால் அடுத்த வரியை விட்டுவிட்டார். அது ‘ இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது மிகவும் கடினம் ‘ . இந்த வரிகளை டி என் ஜா கவனமாக விட்டுவிட்டார்.
மேலும் யாதவா எழுதுகிறார், ‘ ஆனால் நமக்கு கொடூரங்களை பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன ‘ . அவர் இரண்டு கல்வெட்டுகளையும் ஒரு புராண தொடர்பையும் தருகிறார். பின்பு அவர் இந்த திபெத்திய நூலுக்கு வருகிறார். இந்த இடத்தில் டி என் ஜா சொல்லியது என்ன? ‘ திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நலாந்தாவில் இருந்த நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது பற்றி பேசுகிறது என்பது
இப்போது நாம் யாதாவா எழுதிய பாப்போம். ‘ இந்த திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது (இங்கு ஒரு வார்த்தை விடுபட்டுள்ளது) நம்பிக்கையான நாலந்தா பல்கலைக்கழகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது எனப்து.
அப்படியே எழுத்துக்கு எழுத்து காப்படியடிக்கப்பட்டுள்ளதல்லவா? பொறுங்கள், இங்கே பார்க்கவேண்டியது இரண்டு இந்து பிச்சைக்காரர்கள் சொல்லப்படும் போது இந்து குண்டர்களாக மாற்றப்பட்டனர். இரண்டு இந்து குண்டர்கள் என டி என் ஜா சொல்வது ஏதோ அந்த திபெத்திய நூலின் ஆசிரியர் சொல்வது போல் சொல்லியது உண்மையிலேயே இன்னோர் மார்க்சிஸ்டான யாதாவா எழுதியது. இப்போது நாம் யாதாவா எழுதிய முழு வாக்கியத்தையும் பார்ப்போம் : திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது சந்தேகத்திற்கு உரிய நம்பிக்கையான நாலந்தாவின் நூலகத்தை சில இந்து குண்டர்கள் எரித்தார்கள் என சொல்கிறது .
டி என் ஜா இந்த வாக்கியத்தை, – இது எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது கடினம் – என்பதை விட்டுவிட்டது போல -சந்தேகத்திற்கு உரிய – என்ற வாக்கியத்தையும் விட்டுவிடுகிறார். இவ்வளவும் இந்திய வரலாற்று காங்கிரஸுன் தலைமை உரையில் இருக்கிறது.
தொகுத்து பார்த்தால், நாலந்தா இடிப்புக்கு பிறகு 500 வருடங்கள் கழித்து ஒரு திபெத்திய நூல் எழுதப்படுகிறது. சரத் சந்திர தாஸ் அதைப்பற்றி எழுதும் போது தொகுப்பில் முழுமையான பக்கத்தை விட்டுவிடுகிறார்.
யாதாவா அந்த தொகுப்பை மட்டும் படித்துவிட்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களை இந்து குண்டர்கள் என மாற்றி எழுதுகிறார்.
யாதாவா அதிலே சந்தேகத்திற்கு உரிய என வார்த்தையை உபயோகிக்கிறார்.
டி என் ஜா அதிலே இருக்கும் சந்தேகத்திற்கு உரிய எனும் வார்த்தையை விட்டுவிடுகிறார்.
இதை இந்திய வரலாற்று காங்கிரஸில் தலைமை உரையாக படிக்கிறார்.
நாம் பலமுறை பார்த்தது போல் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்.
யாதாவா எழுதிய நூலில் கடைசி முடிவாக இப்படி சொல்கிறார்:
பவுத்தத்திற்கு மிகப்பெரிய அடி துருக்கிய படையெடுப்பினாலேயே தரப்பட்டது. துருக்கியர்கள் வங்காளத்திலும் மகதத்திலும் இருந்த பவுத்ததின் கொண்டாடப்பட்ட புனித தலங்களை அழித்து ஒழித்தார்கள். பெரும்பலான பவுத்தர்கள் திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் தப்பி ஓடினார்கள்.
“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின…
இலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் ! போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ?…
வெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள்…
- ஜடாயு எழுதிய நாலந்தாவின் மரணம் கட்டுரையிலிருந்து
This response to Arun Shourie by DN JHA is the complete original, of which a shorter version was published in The Indian Express today.
Ruins of Nalanda University
I was amused to read ‘How History was Made up at Nalanda’ by Arun Shourie who has dished out to readers his ignorance masquerading as knowledge – reason enough to have pity on him and sympathy for his readers! Since he has referred to me by name and has charged me with fudging evidence to distort the historical narrative of the destruction of the ancient Nalandamahavihar, I consider it necessary to rebut his allegations and set the record straight instead of ignoring his balderdash.
My presentation at the Indian History Congress in 2006 (and not 2004 as stated by Shourie), to which he refers, was not devoted to the destruction of ancient Nalanda per se – his account misleads readers and pulls wool over their eyes. It was in fact focused on the antagonism between the Brahmins and Buddhists for which I drew on different kinds of evidence including myths and traditions. In this context I cited the tradition recorded in the 18th century Tibetan text, Pag-sam-jon-zang by Sumpa Khan-Po Yece Pal Jor,mentioned by B N S Yadava in hisSociety and Culture in Northern India in the Twelfth Century (p.346) with due acknowledgement, though in his pettiness, Shourie is quick to discover plagiarism on my part! I may add that “Hindu fanatics” are not my words but Yadav’s which is why they are in quotes. How sad that one has to point this out to a Magsaysay awardee journalist!
In his conceit Shourie is disdainful and dismissive of the Tibetan tradition which, has certain elements of miracle in it, as recorded in the text. Here is the relevant extract from Sumpa’s work cited by Shourie : “While a religious sermon was being delivered in the temple that he [Kakut Siddha] had erected at Nalanda, a few young monks threw washing water at two Tirthika beggars. (The Buddhists used to designate the Hindus by the term Tirthika). The beggars being angry, set fire on the three shrines of Dharmaganja, the Buddhist University of Nalanda, viz.— Ratna Sagara, Ratna Ranjaka including the nine-storeyed temple called Ratnodadhi which contained the library of sacred books” (p.92). Shourie questions how the two beggars could go from building to building to “burn down the entire, huge, scattered complex.” Look at another passage (abridged by me in the following paragraph) from the History of Buddhism in India written by another Tibetan monk and scholar Taranatha in the 17th century:
During the consecration of the temple built by Kakutsiddha at Nalendra [Nalanda] “the young naughty sramanas threw slops at the two tirthika beggars andkept them pressed inside door panels and set ferocious dogs on them”. Angered by this, one of them went on arranging for their livelihood and the other sat in a deep pit and “engaged himself in surya sadhana” [solar worship] , first for nine years and then for three more years and having thus “acquired mantrasiddhi” he “performed a sacrifice and scattered the charmed ashes all around” which “immediately resulted in a miraculously produced fire”, consuming all the eighty four temples and the scriptures some of which, however, were saved by water flowing from an upper floor of the nine storey Ratnodadhi temple. (History of Buddhism in India, English tr. Lama Chimpa & Alka Chattopadhyaya, summary of pp.141-42).
If we look at the two narratives closely, they are similar. The role of the Tirthikas and their miraculous fire causing a conflagration are common to both. Admittedly one does not have to take the miracles literally but it is not justified to ignore their importance as part of traditions which gain in strength over time and become part of collective memory of the community. Nor is it desirable or defensible to disregard the element of long standing antagonism between the Brahmins and Buddhists which may have given rise to the Tibetan tradition and nurtured it till as late as the 18th century or even later. It is in the context of this Buddhist-Tirthika animosity that the account of Sumpa assumes importance; it also makes sense because it jibes with Taranatha’s evidence. Further, neither Sumpa, nor Taranatha, ever came to India. This should mean that the idea of Brahminical hostility to the religion of the Buddha traveled to Tibet fairly early and became part of its Buddhist tradition, and found expression in the 17th-18th century Tibetan writings. Acceptance or rejection of this kind of source-criticism is welcome if it comes from a professional historian and but not from someone who flirts with history as Shourie does.
Of the two Tibetan traditions, the one referred to by me has been given credence not only by Yadava (whom Shourie, in his ignorance, dubs a Marxist!) but a number of other Indian scholars like R K Mookerji (Education in Ancient India), Sukumar Dutt (Buddhist Monks and Monsteries of India), Buddha Prakash (Aspects of Indian History and Civilization), and S C Vidyabhushana who interprets the text to say that it refers to an actual “scuffle between the Buddhsit and Brahmanical mendicants and the latter, being infuriated, propitiated the Sun god for twelve years, performed a fire- sacrifice and threw the living embers and ashes from the sacrificial pit into the Buddhist temples which eventually destroyed the great library at Nalanda called Ratnodadhi” (History of Indian Logic, p516 as cited by D R Patil, The Antiquarian Remains in Bihar, p.327). Scholars named above were all polymaths of unimpeachable academic honesty and integrity. They had nothing to do, even remotely, with Marxism: which is, to Shourie in his bull avatar, a red rag.
Now juxtapose the Tibetan tradition with the contemporary account in the Tabaqat-i-Nasiriof Minhaj-i -Siraj, which Shourie not only misinterprets but also blows out of proportion. Although its testimony has no bearing on my argument about Brahmanical intolerance, a word needs to be said about it so as to expose his “false knowledge”, which as G B Shaw said, is “more dangerous than ignorance.” The famous passage from this text reads exactly as follows:
“He [ Bakhtiyar Khalji] used to carry his depredations into those parts and that country until he organized an attack upon the fortified city of Bihar. Trustworthy persons have related on this wise, that he advanced to the gateway of the fortress of Bihar with two hundred horsemen in defensive armour, and suddenly attacked the place. There were two brothers of Farghanah, men of learning, one Nizamu-ud-Din, the other Samsam-ud-Din (by name) in the service of Muhammad-i-Bakht-yar ; and the author of this book [ Minhaj] met with at Lakhnawati in the year 641 H., and this account is from him. These two wise brothers were soldiers among that band of holy warriors when they reached the gateway of the fortress and began the attack, at which time Muhammad-i-Bakhtiyar, by the force of his intrepidity, threw himself into the postern of the gateway of the place, and they captured the fortress and acquired great booty. The greater number of inhabitants of that place were Brahmans, and the whole of those Brahmans had their heads shaven; and they were all slain. There were a great number of books there; and, when all these books came under the observation of the Musalmans, they summoned a number of Hindus that they might give them information respecting the import of those books; but the whole of the Hindus were killed. On becoming acquainted (with the contents of the books), it was found that the whole of that fortress and city was a college, and in the Hindui tongue, they call a college Bihar” (Tabaqat-i-Nasiri, English tr. H G Raverty, pp.551-52).
The above account mentions the fortress of Bihar as the target of Bakhtiyar’s attack. The fortified monastery which Bakhtiyar captured was, “known as Audand-Bihar or Odandapura-vihara” (Odantapuri in Biharsharif then known simply as Bihar). This is the view of many historians but, most importantly, of Jadunath Sarkar, the high priest of communal historiography in India (History of Begal, vol. 2, pp.3-4). Minhaj does not refer to Nalanda at all: he merely speaks of the ransacking of the “fortress of Bihar” (hisar-i-Bihar). But how can Shourie be satisfied unless Bakhtiyar is shown to have sacked Nalanda? Since Bakhtiyar was leading plundering expeditions in the region of Magadha, Shourie thinks that Nalanda must have been destroyed by him – and, magically, he finds ‘evidence’ in an account which does not even speak of the place. Thus an important historical testimony becomes the victim of his anti-Muslim prejudice. In his zeal, he fudges and concocts historical evidence and ignores the fact that Bakhtiyar did not go to Nalanda; it “escaped the main fury of the Muslim conquest because it lay not on the main route from Delhi to Bengal but needed a separate expedition” (A S Altekar in Introduction to Roerich’sBiography of Dharmasvamin). Also, a few years after Bakhtiyar’s sack of Odantapuri, when the Tibetan monk Dharmasvamin visited Nalanda in 1234, he “found some buildings unscathed” in which some pandits and monks resided and received instruction from Mahapandita Rahulshribhadra. In fact, Bakhtiyar seems to have proceeded from Biharshrif to Nadia in Bengal through the hills and jungles of the region of Jharkhand, which, incidentally, finds first mention in an inscription of 1295 AD (Comprehensive History of India, vol IV, pt. I, p.601). I may add that his whole book, Eminent Historians, from which the article under reference is excerpted, abounds in instances of cavalier attitude to historical evidence and peddles a perverse perception of the Indian past.
It is neither possible nor necessary to deny that the Islamic invaders conquered parts of Bihar and Bengal and destroyed the famous universities in the region. But Shourie’s laboured effort to associate Bakhtiyar Khalji with the destruction and burning of the university of Nalanda is a glaring example of the wilful distortion of history. Certainly week-end historians like Shourie and others of his ilk are always free to falsify historical data but this only reveals the lack of any serious historical training.
Shourie had raised a huge controversy by publishing his scandalous and slanderous Eminent Historians in 1998 during the NDA regime and now, after sixteen years, he has issued its second edition. He appears and reappears in the historian’s avatar when the BJP comes to power, tries to please his masters and keeps waiting for crumbs to fall from their table. His view of the past is no different from that of the Vishwa Hindu Parishad, Rashtriya Swayamsevak Sangh and their numerous outfits consisting of riffraff and goons who burn books that do not endorse their view, vandalize art objects which they consider blasphemous, present a distorted view of Indian history, and nurture a culture of intolerance. These elements demanded my arrest when my work on beef eating was published, and censured James Laine when his book on Shivaji came out. It is not unlikely that Shourie functions in perfect harmony with them and persons like Dina Nath Batra who targeted A K Ramanujan’s essay emphasizing the diversity of the Ramayana tradition; Wendy Doniger’s writings, which provided an alternative view of Hinduism; Megha Kumar’s work on communalism and sexual violence in Ahmedabad since 1969; and Sekhar Bandopadhyaya’s textbook on modern India which does not eulogize the RSS.
Arun Shourie seems to have inaugurated a fresh round of battle by reproducing in a second edition his faked, falsified and fabricated historical evidence, thus providing grist to the reactionary mill of Batras and their ilk.
D N Jha is Former Professor and Chair, Department of History, University of Delhi. His important publications include Early India and The Myth of the Holy Cow.
Posted Date : 22:40 (19/07/2014)Last updated : 22:40 (19/07/2014)
பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன். அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். ‘தொழில்வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயத்துக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் வேலையை மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்தார், தற்போது அதை படுவேகமாக முடித்து வைக்கும் வேலை மோடி சிரமேற்கொண்டுவிட்டார் என்பதைத்தான் அதில் சுட்டிக் காட்டியிருந்தேன். இதற்கு பின்னூட்டம் போட்ட நண்பர்களில் சிலர், நான் என்னவோ மோடிக்கு எதிரி போலவும், 'வளர்ச்சி'க்கு எதிரி போலவும் சித்தரித்தார்கள். சிலரோ... மோடி இப்போதுதானே வந்திருக்கிறார் என்று வக்காலத்தும் வாங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'வந்த வேகத்திலேயே பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளின் உத்தரவுகளை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்' என்று மோடி காட்டி வரும் வேகம் துளிகூட புரியவில்லையா... அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. நண்பர்களே... நான் எந்த சார்பும் இல்லாமல், இயற்கை சார்பு, உயிரின சார்பு ஆகிய நிலைகளை மட்டுமே எடுத்துக் கொண்டுதான் இதையெல்லாம் எழுதுகிறேன் என்பதை முதலில் தங்களுக்குத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எனக்கு காவி, கதர், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று எந்தக் கலரும் இல்லை. நான்... பச்சை, மஞ்ச, ஒயிட், ரோஸ், சிவப்பு, பிங்க இப்படி எந்தத் தமிழனும் இல்லை. இந்த பூமியில் வசிக்கும் ஏதோ ஒரு ஜந்து என்பதோடு முடித்துக் கொள்ளுங்கள். இதை எதற்காக வலிந்து சொல்கிறேன் என்றால், சொல்கிற விஷயத்தில் இருக்கும் உண்மையை மட்டுமே பாருங்கள். இவனுடைய பின்னணி என்ன... இவன் எதற்காக இதைச் சொல்கிறான்... இவன் இந்தக் கலர் ஆளாக இருப்பானோ... என்றெல்லாம் மூளையைத் திருப்பி சிந்திக்க ஆரம்பித்து, முக்கியமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். சரி விஷயத்துக்கு வருகிறேன். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக ஆயிரம் அநியாயங்களை செய்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் என்கிற ஒன்றின் மூலமாக... ஓரளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதிப்படுத்தவே செய்தார் மன்மோகன் சிங். 'விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தும்போது, கிராமப்புறங்களில் சந்தை விலையில் 4 மடங்கும்... நகர்ப்புறங்களில் 2 மடங்கும் விலையாகக் கொடுக்கப்பட வேண்டும்' என்பதுதான் அந்த உத்தரவு. 'இதை உடைத்தே தீருவது' என்று பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரும் தொழிலதிபர் கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அப்போதே திரிந்தது. ஆனால், விவசாயிகளின் ஓட்டு வங்கி மீதான அன்பு காரணமாக, தொழிலதிபர்களின் நெருக்கடிக்கு பணியாமல் போக்குக் காட்டினார் மன்மோகன் சிங். தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வந்தமர்ந்திருக்கும் நிதின் கட்கரி, மூச்சுக்கு முந்நூறு தடவை இந்த சட்டத்தை திருத்துவோம்... என்றே பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது, இதில் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு, பன்னாட்டு... இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்களைச் செய்வதுதான் அவருடைய ஒரே குறிக்கோள். இதற்கான வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறார் நிதின் கட்கரி. இதுவாவது, விவசாயிகளின் வாழ்க்கையைத்தான் அழிக்கும். ஆனால், இந்திய விவசாயத்தையே அழிக்கக் கூடிய வேலைக்கு இன்றைய தினம் அனுமதியை அள்ளி வழங்கிவிட்டது 'வளர்ச்சி நாயகன்' நரேந்திர மோடியின் அரசு. ஆம், பி.டி எனும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பரிசோதனைக்கு இத்தனை காலமாக நீடித்த தடைகளையெல்லாம் மீறி, தற்போது 15 விதமான உணவுப் பயிர்களில் இந்தப் பரிசோதனையைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பயிரில்லாத பருத்தியில் மட்டுமே இதுநாள் வரை இந்தியாவில் பி.டி.ரகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்தை குஜராத் மாநிலத்தில்தான் அதிகம் விளைவிக்கிறார்கள். இந்த பருத்தியைப் போட்டால், பொன்னே விளையும் என்றெல்லாம் புளுகிப் புளுகித்தான் விவசாயிகளின் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ. இதற்கு அந்த மாநிலத்தை ஆண்ட மோடியும் ஏக சப்போர்ட். இதேபோலத்தான் இந்தியா முழுக்கவே பல்வேறு மாநில அரசுகளும் ஆதரவளித்துக் கொண்டுள்ளன. ஆனால், இந்த பி.டி பருத்தி பல் இளிக்க ஆரம்பித்துவிட்ட சங்கதி குஜராத்திலிருந்தே சில மாதங்களுக்கு முன் வெடித்து வெளிர ஆரம்பித்தது. பி.டி பயிருக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால்கூட இதை மறைக்க முடியவில்லை. மீடியாக்களில் இந்த விஷயம் வெளிச்சம் போடப்பட்டது. இந்நிலையில், அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 18 விதமான உணவுப் பயிர்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது மோடி அரசு. பருத்தியாவது, பஞ்சாக மாறி ஆடையாக வந்து தோலில்தான் அமரும். ஆனால், உணவுப் பயிர்கள்? இதுகாலம் வரை இங்கே உரம், பூச்சிக்கொல்லி என்று தெளிக்கப்பட்ட ரசாயனங்களில் விளைந்ததைத் தின்றதற்கே... புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் இந்த மனிதகுலம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், உணவுப்பயிர்களின் விதைக்குள்ளேயே பூச்சிகளுக்கு எதிரான விஷ மரபணுவைப் புகுத்தும் தொழில்நுட்பத்தில் விளைந்த மரபணுமாற்று விதைகளில் விளையும் உணவுப் பயிர்கள் வந்தால்... நாம் என்னென்ன கதிக்கு ஆளாகப் போகிறோமோ?! இந்த பயத்தால்தான் ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த மரபணு மாற்று உணவுப் பயிர் உற்பத்திக்கு தங்கள் நாடுகளில் தடைவிதித்துள்ளன என்பதை மறந்துவிட் வேண்டாம். 'கேட்டால்... கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு போட்டு வைத்திருந்ததைத்தான் நாங்கள் அமல்படுத்தியிருக்கிறோம்' என்று ரயில் கட்டண உயர்வு, இந்தித் திணிப்பு போன்ற விவகாரங்களில் பல்டி அடித்தது போலவே இதிலும் மோடி பல்டி அடிப்பார். கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு அடிபோட்டு வைத்தது உண்மைதான். ஆனால், சூழல் ஆதரவாளர்கள், இயற்கை விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளை அடுத்து காங்கிரஸ் அரசு கொஞ்சம் அடங்கியே இருந்தது. 'இந்தியாவில் போதுமான பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டுதான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கறாராகக் கூறியிருக்கிறது. இதுமட்டுமா, கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விவசாயக் குழு கூட, 'இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையே இல்லை. இதை பரிசோதிப்பதற்கு போதுமான ஆய்வகங்களோ... ஆய்வாளர்களோ இங்கில்லை' என்றே அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆகக்கூடி, ஒரு எமனை இழுத்து வருவதற்குத்தான் காங்கிரஸ் அரசு கடந்த காலத்தில் அத்தனை பிரயத்தனம் செய்தது. 'காங்கிரஸ் செய்த தவறுகளைச் செய்ய மாட்டோம். அதற்கு தீர்வுகளைக் காண்போம்' என்று சூளுரைத்த மோடி, பிறகு எதற்காக காங்கிஸ் அரசு செய்த அதே தில்லுமுல்லு திருகுதாளங்களைச் செய்ய வேண்டும்? உண்மையில் கதர் கால அநியாயங்களைத் துடைக்க வேண்டும் என நினைத்தால், ஓயாமல் இந்திய பாரம்பர்யம் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கும் பிஜேபியும், அதன் பிரதமர் மோடியும் என்ன செய்திருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதைகளின் மூலமே பன்னாட்டு வீரிய விதைகளை மிஞ்சிய மகசூலை அள்ளும் விவசாயிகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டுமாடுகள் மூலமாகவே போதுமான இயற்கை உரத்தைப் பெற முடியும் என்பதை நிருபித்துக் கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளையெல்லாம் பார்த்து பாடம்படித்து, எங்களுக்கு அந்நிய தொழில்நுட்பமான மரபணு மாற்று விதைகள் தேவையில்லை என்று பாரம்பரிய விதைகளை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும். பன்னாட்டு மாடுகள் தேவையில்லை, உள்நாட்டு மாடுகளே போதும் என்று அவற்றை பெருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லையே! கேட்டால், '120 கோடி இந்தியர்களுக்கு உணவு புகட்ட, பாரம்பரிய விவசாயத்தால் முடியாது' என்று பசுமைப் புரட்சியின் அப்பாக்களும் அம்மாக்களும் முப்பது நாற்பது ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே வாந்தியை மறுபடி மறுபடி எடுக்கிறார்கள், விஞ்ஞானிகள் என்கிற பெயரில் திரியும் அஞ்ஞானிகள் சிலர். இங்கே திருமணங்களிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும், லட்சக்கணக்கான உணவு விடுதிகளிலும் தினம் தினம் சமைக்கப்பட்டு, உண்ணாமல் வீணடிக்கப்படும் உணவைக் கணக்கிட்டால், இன்னும் ஒன்பது இந்தியாவுக்கு உணவிட முடியும். இப்படி வீணடிப்பதைக் கட்டுப்படுத்தினால், வெட்டிச் செலவுகளும் மட்டுப்படும். இதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ! இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ! வாலு போய் கதி வந்தது...டும் டும் டும்...
'இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம் நிலங்களை மொத்தமாக அடகு வை' என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் மறைமுக உத்தரவு. இதை கடைசி வரை மன்மோகன் சிங் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் இதைக் கையில் எடுத்துவிட்டார் மோடி. -ஜூனியர் கோவணாண்டி |
மோடி வந்தால் வளர்ச்சி வரும் என்று இணையத்தில் இடைவிடாமல் கரடியாய் கத்திய கோயிந்துகள் விரக்தியில் ஓடி ஒளிந்து கொள்ளும் வகையில் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு.
அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டியை பொருத்தப் போவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, தென்னக ரயில்வேயின் பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் தயாரிப்பதை முழுமையாக நிறுத்தி விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மாற்றப்பட வேண்டிய நிலை வரும் போது அவை நீக்கப்பட்டு, குளிர்பதன பெட்டிகள் சேர்க்கப்படும்.
ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், தேவையான நிதியை திரட்ட இந்த முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. இந்த நவீனப்படுத்தலில் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வசதிகளை ஒழித்துவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டும்தான் ரயில் பயணம் என்பதை மோடி கும்பல் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
அரசுக்குத் தேவையான நிதியை திரட்ட ‘முதலாளிகளுக்கு வரியை உயர்த்தினால் அவர்கள் எல்லாம் வரி ஏய்ப்பு செய்வார்கள், அல்லது வேறு நாட்டுக்கு ஓடிப் போய் விடுவார்கள், நாடு வளராது’ என்று கார்ப்பரேட் வரிச்சலுகைகளை நியாயப்படுத்துகிறார்கள் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள். உண்மைதான், எவ்வளவு சுமையை இறக்கினாலும், ரயில் பயணத்தை குறைத்துக் கொண்டு, அல்லது பயணிப்பதையே நிறுத்திக் கொண்டு அடங்கிப் போகும் நடுத்தர வர்க்கத்தை மோடி தலைமையில் பிழிந்து எடுக்கப் போகிறது ஆளும் வர்க்கம். வேண்டுமானால், ‘இந்தியா ராக்கெட் விட்டது, லார்ட்ஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது’ என்று தேசப் பெருமிதத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்வது மட்டும்தான் நடுத்தரவர்க்கத்துக்கு எஞ்சியிருக்கும்.
இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ஒழித்துக் கட்டும் இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எர்ணாகுளம்-நிஜமுதீன்(டெல்லி) மங்களா எக்ஸ்பிரசில் ஒரு இரண்டாம் வகுப்பை பெட்டியை நீக்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த ரயிலில் ரூ 925 செலவில் 2-ம் வகுப்பில் டெல்லிக்கு பயணம் செய்தவர்கள் அதே பயணத்துக்கு ஏ.சி பெட்டியில் போக ரூ 2,370 செலவழிக்க வேண்டியிருக்கும்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை முதல் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 பெட்டி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது 10 ஆக குறைந்து, ஏசி பெட்டிகள் 4 ஆக உயர்ந்திருக்கின்றன; 72 டிக்கெட்டுகள் ஏசி கட்டணத்துக்கு மாறியிருக்கின்றன. படிப்படியாக 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 0 ஆகி, 3 ஏசி பெட்டிகள் 14 ஆக மாற்றப்படும்.
அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது. “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே பெட்டியில் இடம் ஒதுக்க முயற்சி செய்யப்படும்” என்று ஒரு அதிகாரி சமாதானம் கூறியிருக்கிறார். முன்பதிவு சுழற்சிக் காலம் (60 நாட்கள்) முடிவது வரை கூட பொறுக்காமல் மக்கள்மீது உடனடியாக தாக்குதலை இறக்கும் மோடியின் வேகம்தான் பன்னாட்டு/இந்திய முதலாளிகளின் விருப்பம்.
சென்னை எழும்பூரிலிருந்து மங்களூர் சென்டிரல் போகும் வண்டி எண் 16859-ல் எஸ்-7 என்ற பெட்டி ஒழித்துக் கட்டப்படுகிறது, மங்களூர் சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வண்டி எண் 16860ல் எஸ்-9 என்ற பெட்டி இனிமேல் இணைக்கப்படாது. அவற்றுக்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏசி சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் வண்டிகளில் இருந்து நீக்கப்படும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் நடு படுக்கையை அகற்றி விட்டு அவற்றை இருக்கை பயணிகள் மட்டும் செல்லும் ரயிலில் பயன்படுத்த போவதாக ரயில்வே கூறியிருக்கிறது.
மோடியின் வளர்ச்சி என்பது டாடாவுக்கும், அதானிக்கும், அம்பானிக்கும்தான், உழைக்கும் மக்கள் மீதும், நடுத்தர வர்க்கம் மீதும் அது பெரும் சுமையாக இறங்கும் என்பதை மறைத்து ‘ஆட்டோ ஓட்டுபவர்களும், இளநீர் வெட்டுபவர்களும், ஐ.டி துறையினரும் என சாதாரண மக்கள் பெருவாரியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்‘ என நடுத்தர வர்க்க வாசகர்களை நம்பவைக்க முயன்ற கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இப்போது ரயில் கட்டண உயர்வு குறித்தோ, 2-ம் வகுப்பு ஒழிப்பு என்ன சொல்வார்? வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இனி வெக்கையின்றி ஏசியில் ‘மக்கள்’ பயணம் செய்யலாம், வேர்வையின் கஷ்டங்கள் இல்லை என எழுதுவாரோ?
மேலும் ரயில் நிலையங்களில் ‘அங்கேயே கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம்’ என்றெல்லாம் இனி ‘பிளடி இந்தியாவை’ சலித்துக் கொண்டு அவர் எழுத வேண்டியதில்லை. ஏனெனில் இனி நம்மைப் போன்ற பரதேசிகளும், நடுத்தர வர்க்கமும் கூட ரயில்வே நிலையத்திற்கு போகவே மாட்டோம். உடை கலையாத கனவான்கள் மட்டும் வந்து போகுமிடமாக ரயில் நிலையங்கள் மாறிய பிறகு பத்ரி அவர்களின் கனவு ரயில் நிலையம் அமுலுக்கு வரும்.
மோடியின் ஆட்சியில் இத்தகைய சாதாரண மக்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் புல்லட் ரயில்களில் அல்லது ஏசி பெட்டியில் பயணிக்கும் கனவான்களுக்கென, ஸ்பெசல் நடைபாதை, பூங்காக்கள், நட்சத்திர விடுதி ஓய்வறைகள், சிறு மல்டிபிளக்சுகள், ஷாப்பிங்மால்கள், கிளப்புகள், ரயில்களையே மாளிகைகளாக்கும் திட்டம் எல்லாம் அமல்படுத்தலாம். இதற்கெல்லாம் நிதி வேண்டுமென்றால் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகளை ஒழிக்க வேண்டும் என்பது சரிதானே?.
ஏ.சி பெட்டியில் போக வசதியற்ற உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஏசி பெட்டிகளுக்கு பின் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பெட்டிகளில் கூட்டமாக தொங்கிக் கொண்டே வருவது பணக்காரர்களின் கண்களில் படாமல் தவிர்க்க அவர்களுக்கென தனி நடைமேடையை ஸ்டேசனுக்கு வெளியே அமைக்கவும் மோடி அரசு ஏற்பாடு செய்து தரும்.
தப்பித் தவறி கனவான்களின் நடைபாதையில் சாதாரண மக்கள் வந்து விட்டால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கும் ரயில்வே வழிகாட்டுகிறது. கடந்த 25-ம் தேதி மும்பை புறநகர் ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருந்த 65 வயது பெண் பயணி ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியிருக்கிறார். பயணச் சீட்டை பரிசோதித்த பெண் பரிசோதகர்கள் இருவர் அவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். தன்னிடம் ரூ 25 மட்டும் இருப்பதாக பயணி சொல்லவே, அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டு அவமானப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், சட்டங்களும், விதிமுறைகளும் உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு கறாராக அமல்படுத்தப்படும் என்பதற்கு டெல்லி போக்குவரத்துத் துறையும் வழிகாட்டுகிறது.
1973-ம் ஆண்டு ஒரு பயணிக்கு 15 பைசா சீட்டுக்கு பதிலாக 10 பைசா சீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் ரன்வீர் சிங்-ஐ எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் 40 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக பணியாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் பணியாளர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு சொன்னது. அதற்குள் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டிருந்த ரன்வீர் சிங்குக்கு முன் தேதியிட்ட ஊதியம், ஓய்வுக்கால சலுகைகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம்.
‘சட்டத்தை எல்லாம் ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணணும் சார்’ என்று டிராஃபிக் ராமசாமிகள் பேசும் வீரம் இது போன்ற வயதான ஏழை பெண்களிடமும், ரன்வீர் சிங் போன்ற தொழிலாளர்களிடம் பாய்ச்சப்படுகிறது. இந்திய அரசுக்கு இயற்கை எரிவாயு எடுத்து தர காண்டிராக்ட் எடுத்து, பல மடங்கு விலை உயர்த்தி வாங்க பிளாக் மெயில் செய்யும் அம்பானி, அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற சதி செய்த டாடா, மிட்டல் போன்ற முதலாளிகளிடம் இந்த சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மட்டுமல்ல, தேவைப்பட்டால் வளைந்து கொடுத்தோ இல்லை புதிதாக வேறு வடிவில் பிறந்தோ காப்பாற்றும்.
எந்த மக்களை ஓட்டுப் போட வைத்து ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாறாக காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காக ஆறுவழிச்சாலைகள், புல்லட் ரயில்கள், நவீன நகரங்கள் என்று திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொடுக்கின்றன.
ரயில் கட்டண உயர்வு, மானிய விலை சமையல் வாயு ரத்து, மாதம் தோறும் டீசல் விலை உயர்வு, சேவை வரி மூலம் மக்களை சுரண்டுதல் என்று அடுத்தடுத்து மோடி அரசு தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதைத் தவிர உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வேறு வழியே இல்லை.
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடையாது என்பதை ஏற்கப் போகிறீர்களா? இல்லை மோடிக்கு எதிராக களம் இறங்குவீர்களா?
- அப்துல்
http://www.vinavu.com/2014/07/29/second-class-sleeper-coaches-to-be-replaced-with-ac-coaches/
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
1973-ம் ஆண்டு ஒரு பயணிக்கு 15 பைசா சீட்டுக்கு பதிலாக 10 பைசா சீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் ரன்வீர் சிங்-ஐ எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் 40 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக பணியாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் பணியாளர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு சொன்னது. அதற்குள் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டிருந்த ரன்வீர் சிங்குக்கு முன் தேதியிட்ட ஊதியம், ஓய்வுக்கால சலுகைகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அவர்பக்கம் நியாயமிருந்தால், அவருக்குக் கொடுப்பதுதானே நியாயம் .... இரண்டு இடங்களில் அவருக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் ..அவர் பக்கம் தவறில்லை / நிர்வாகத்தவறாக இருக்கவே வாய்புகள் அதிகம் (அப்படி தவறிழைத்தோர்தானே தண்டிக்கப் பட வேண்டும் ...என்றுதானே நீங்கள் சொல்லி இருக்கவேண்டும் ...அதைவிடுத்து .உங்களின் இந்தக் கோணம் எந்த அளவிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை .....அசெல்வன் அவர்களே
2014-08-02 23:55 GMT-05:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
அவர்பக்கம் நியாயமிருந்தால், அவருக்குக் கொடுப்பதுதானே நியாயம் .... இரண்டு இடங்களில் அவருக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் ..அவர் பக்கம் தவறில்லை / நிர்வாகத்தவறாக இருக்கவே வாய்புகள் அதிகம் (அப்படி தவறிழைத்தோர்தானே தண்டிக்கப் பட வேண்டும் ...என்றுதானே நீங்கள் சொல்லி இருக்கவேண்டும் ...அதைவிடுத்து .உங்களின் இந்தக் கோணம் எந்த அளவிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை .....அசெல்வன் அவர்களே
துரை ஜி
15 பைசா டிக்கட்டுக்கு பதில் 10 பைசா டிக்கட் கொடுத்தது தவறு.
ஒரு தவறுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது நிர்வாகத்தின் உரிமை. சில சமயம் தண்டனை முதலாளியை பொறுத்து கடுமையா இருக்கும்,
சில சமயம் சில ரொம்பவும் நல்ல முதலாளிகள் போயிட்டு போ என விட்டுவிடுவார்கள். என்னை பொறுத்தவரை ஐந்து பைசாவுக்கு வேலைநீக்கம் அதீதம். ஆனால் சின்ன தவறுக்காக பணிநீக்கம் செய்யும் முதலாளி கம்பனியில் யாரும் வேலைக்கு சேரமாட்டார்கள். நல்ல கம்பனிகளுக்கு போய்விடுவார்கள்.
தண்டனை இப்படி சுதந்திரமாக் சந்தை மூலம் தான் கிடைக்கவேண்டுமே ஒழிய
லேபர் கோர்ட்டில் இதை எல்லாம் ஒரு வழக்கு என எடுத்து விசாரிப்பதே தவறு.
முதலாளிக்கு பிடிக்கவில்லையெனில் தொழிலாளிகள் வீட்டுக்கு போகவேண்டியதுதான் நியாயம். வேலை பார்த்த நாளுக்குன்டான சம்பளம், பிஎப் இத்யாதிகளை பெற்றுகொண்டு வீட்டுக்கு போய்வ்டவென்டும்.
ஐடியில் திடிரென கூப்பிட்டு பிங் ஸ்லிப் கொடுப்பார்கள். எதுவும் பேச முடியாது. போயிட்டே இருக்கவேண்டியதுதான். அரசு வேலை என்பதால் தான் இப்படி 30 வருஷம் கேஸ்போட்டு 30 வர்ச சம்பளம் கேட்பது எல்லாம் நடக்கும். இதனால் தான் எல்லா அரசு கம்பனிகளும் நஷ்டத்தில் ஓடுகின்றன. ஐடி கம்பனிகள் லாபத்தில் ஓடுகின்றன
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com