--நூல்
***
பாண்டிய தேசத்துப் பைங்கிளி யென்றாகி
மாண்புறு சக்தியும் வந்தனள் - காண்பர்
வியக்கின்ற வண்ணமாய் மீனாட்சி ஆனாள்
தயவென்று கொள்வாம் தலை! (1)தலையினில் கொண்டையும் தன்கையில் கிள்ளையும் தாங்கிநிற்கும்
கலையுடை மங்கை கனக மணிதவழ் கண்ணுடையாள்
நிலையெனப் பாண்டி நிகழ்ப்பதி ஆண்டிட நின்றவளைத்
தலையெனப் போற்றிடத் தாயருள் செய்குவள் தண்ணருளே! (2)தண்ணருள் சேர்க்கும் தயாபரி எங்களின்
எண்ணத்தில் நிற்கின்ற ஏந்திழை - கண்ணெழில்
மிக்குடை நாயகி மீனாட்சி நம்பிய
பக்தரைக் காப்பாளைப் பாடு! (3)பாடிடும் பாவலர் பாட்டிலும் எண்ணும் பதத்தினிலும்
கூடிடும் தேவியைக் கோயில்கொண் டாளும் குமுதத்தினை
நாடிடும் அன்பரின் நன்மையும் தீமையும் நன்கறிந்து
தேடிடும் முத்தியின் தேசளிப் பாளந்தத் தெய்வதமே! (4)தெய்வமென்று கொண்டார்க்குத் தீதிலை மாசக்தி
மெய்நிலை சிந்திக்க மேன்மையே - துய்யநல்
உள்ளத்தில் வந்துறை உத்தமி சுந்தரேசன்
உள்ளக் கனியையே ஓர்! (5)ஓர்ந்தேன் எவரும் ஒழுகா முறையை ஒழுக்கத்தினால்
தீர்ந்தேன் துயரமும் திக்கினில் சூளும் தினப்புகழ்தான்
சேர்ந்தேன் மயக்கம் செயுதெனும் மாயம் தெரிந்துகொண்டேன்!
சார்ந்தேன் மதுரையின் சங்கரி தாளில்லை சங்கடமே! (6)சங்கரன் வாமத்திற் சார்ந்தாளை அண்டமாய்
எங்கணும் ஆனாளை எண்ணுக - மங்களம்
கூட்டுவள் மாமதுரைக் கோட்டை யமர்ந்தவள்
காட்டுவள் சாலங்கள் காண்! (7)காணுதற் கன்பள் கவலைக்கு வம்பள்! கமழ்திலக
வாணுதற் பெண்ணவள் வார்குழல் சேர்மலர் வாசத்தினாள்
பூணுதற் குச்சப் புகழுல கேறிப் புரப்பவளை
மாணுயர் தேவியை மங்கலை யைத்தொழ மாசிலையே! (8)சிலையேந்தி வென்றனள் திக்கெட்டும் கைலை
மலையேறிக் கொண்டனள் மாட்சி - நிலையொன்று
கொள்ளவென் றெண்ணும் குழந்தைக்குத் தாயவள்
அள்ளித் தருவாள் அருள்! (9)அருளெனக் கேட்டிட அன்பரின் பாச மறுத்துடனே
தெருளெனும் ஞானத் திரட்டினை நல்கும் திறனுடையாள்
பொருளெனும் செல்வமும் போகமும் ஆகிப் பொறைகுணத்தால்
உருளுமெம் ஆவி உயிர்ப்பவ ளாமெம் உமைவடிவே (10)உமையவள் ஓங்காரி ஒப்பில் அரசை
அமைத்தாள் மதுரையில் அன்று - சுமைகூடி
வாட்டமுற்றுச் சொல்கின்ற வார்த்தை அவளிடம்
கேட்டுடனே சொல்லும் கிளி! (11)கிளியும் அரியும் கிடக்குமெட் டானையும் கீழ்முதலாய்
நெளியும் கரம்வரை நேருடன் தாங்கிடும் நேர்த்தியினாள்!
வளியும் நெருப்பும் வளப்பெரும் நீரும் வசப்படுவான்
வெளியும் வணங்கிட வேவந்து நல்குவள் வேண்டுவதே! (12)வேண்டு வதவளருள் வேறிலை ஆயினும்
வேண்டுதல் ஆசை வினைப்பிறப்பால்! - வேண்டுந்
தவப்பலன் ஆன தடாதகைத் தாயைச்
சிவனுடன் எண்ணுவதே சித்து!சித்தரும் மாலும் சிவனும் பிரம்மனும் சிந்தைசெயும்
புத்தரும் பானவள் பூமி படைத்தவள் பூமுகத்தில்
சித்திரக் கோலம் சிரித்திட நிற்பவள் சீருடனே
பத்தரைக் காக்கும் பணியுடை யாளிப் பரிமளையே! (14)பரிநரி யாக்கியோன் பக்கத் திருப்பாள்
அரியவன் தங்கையென் றானாள் - இருவிழி
யாலெமைப் பார்க்கட்டும் அச்சங்கள் போக்கட்டும்
மூலவளால் ஓடிடும் மூன்று! (15)மூன்று தனத்தொடு மூண்டிருந் தங்குப்பின் முக்கணனை
ஊன்றி மனத்தில் உயிர்த்தது நீக்கிய உத்தமிதாள்
ஆன்ற சிரத்தையும் அன்பும் நிறைந்திட அண்டிவிட்டால்
தோன்று மிருட்டினில் துன்பறப் பாய்ச்சுவள் தூயொளியே! (16)ஒளிர்விழி அன்னையை உள்ளாழக் காண்போம்!
தளிர்மலர் ஏற்றிடும் எம்தாய் - உளத்தில்
மலைத்திடும் பக்தி மலரையும் ஏற்பாள்
கலைமுகம் மீன்பங் கயம்! (17)கயலுறு கண்களும் காட்சிக் கமைந்து கமழ்திருக்கப்
புயமுறு மாலைகள் பொன்னணி யாவும் புனைந்திருக்க
நயமுறு கிள்ளை திருப்புகழ் காதில் நலங்கொடுக்க
செயமுறும் வண்ணம் செபிப்பவர்க் கீவாள் செழுமைகளே! (18)செழித்திடும் வாழ்வொடு சீர்மேவும் ஏற்றம்
அழிந்திடும் புன்மை அவளால் - இழிவுத்
தவற்றினைச் செய்யாத் தகைமையு மண்டும்
கவலை நமைநெருங் கா! (19)காவி லிருப்பவர் கந்தரு வர்வெண் கமலமெனும்
பூவி லிருப்பவர் பூமி அழிப்பவர் புற்றரவில்
மேவி இருப்பவர் மேலவர் யாவரு மேவணங்கும்
தேவி இருப்பது தேசுடைப் பாண்டிய தேசத்திலே!! (20)நூற்பயன்
***
தொழுதெழும் அன்பரின் துக்கம் அகற்றிடும் தூமணியாள்!
பழுதெழும் பாவம் பவம்பொடி யாக்கிடும் பார்வதியாள்!
எழிலெழும் அங்க எடுப்புடை யாள்நாம் எடுத்துவைக்கும்
வழியெழும் தாயை வழுத்துத லேபயன் வாழ்வினுக்கே!!ஆக்கம்
***
நேரிசை வெண்பா : நிறோஷ் ஞானச்செல்வம்
கட்டளைக் கலித்துறை : விவேக்பாரதி"ஓம் சக்தி"விவேக்பாரதி9750588007
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-11-21 22:40 GMT-08:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:குடமுழுக் காடிடும் மீனாட்சி யம்மைமுன் கூத்திடுவான்நடமிடக் கண்டிடும் பேரிலாந்த் ஹூஸ்டன் நகருறைவார்,கடவுளின் நல்லருள் வல்லமை யாலே களிப்புடனேஉடல்நலம் உள்ளொளிச் செல்வமும் பெற்றிவண் ஓங்குவரே!நிகழ்ச்சி அமைப்பைக் கண்டேன். சிறப்புறக் கட்டியம் கூறுகிறேன்!சிவாச்சார்யப் பெருமக்களுக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் என் வணக்கம் பல!அன்புடன் புலவர் இராமமூர்த்தி.